Sunday, January 05, 2014

தமயந்தியைக் கைவிட்ட நளன் - வனபர்வம் பகுதி 62

Nala deserted Damayanti | Vana Parva - Section 62 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன் தமயந்திக்கு ஆறுதல் கூறி உறங்க வைத்த்து; அவளிடம் இருந்து பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு, அவளைக் கைவிட்டுச் சென்றது...

நளன் சொன்னான், "நிச்சயமாக உனது தந்தையின் நாடு என்னுடையது போன்றதே. ஆனால், இப்போது கடைநிலையில் இருக்கும் நான் எந்தக் காரணம் கொண்டும் அங்கு செல்ல மாட்டேன். முன்பொரு காலத்தில் உனது இன்பத்தை அதிகரிக்க நான் அங்கு மகிழ்ச்சியுடன் தோன்றினேன். துன்பத்துடன் இருக்கும் நான், இப்போது உன் வருத்தத்தை அதிகரிக்கும்படி அங்கு எப்படிச் செல்வேன்?" என்று கேட்டான்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "{தனது மனைவியின்} பாதி உடையால் தன்னை மறைத்துக் கொண்டிருந்த மன்னன் நளன், தமயந்தியிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறினான். ஒரே ஆடையை உடுத்தியிருந்த இருவரும், அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பசி மற்றும் தாகத்தால் களைப்படைந்து, கடைசியாக பயணிகளுக்கான ஒரு மண்டபத்தை {சத்திரத்தை} அடைந்தனர். 


அந்த இடத்திற்கு வந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, விதரப்ப்ப நாட்டு இளவரசியுடன் {தமயந்தியுடன்} கீழே வெறுந்தரையில் அமர்ந்தான். தூசி படிந்து அழுக்கடைந்த மெலிந்த ஒரே துணியை அவர்கள் இருவரும் அணிந்திருந்தனர். பெரும் களைப்பால் அந்தத் தரையிலேயே தமயந்தியுடன் அவன் தூங்கிவிட்டான். பெரும் துக்கத்தோடு இருந்த, அனைத்து நற்குறிகளையும் கொண்டு, அப்பாவியாகவும், மென்மையானவளாகவும் இருந்த தமயந்தி, திடீரென ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்படி அவள் நளனுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, இதயமும் மனமும் கலக்கமடைந்திருந்ததால், நளனால் முன்பு போல அமைதியாகத் தூங்க முடியவில்லை.

நாடிழந்து, நண்பர்களை இழந்து, கானகத்தில் துயர்வாழ்வு வாழ்வதைத் தனக்குள் எண்ணி, "எனது இந்தச் செயலால் என்ன பயன் ஏற்படும்? அப்படிச் செயல்படவில்லையென்றால் என்ன பயன் ஏற்படும்? இப்போது மரணம்தான் எனக்குச் சிறந்ததா? அல்லது நான் எனது மனைவியைக் கைவிட வேண்டுமா? என்னிடம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும் அவள், இந்தப் பெரும் துன்பத்தை எனக்காகவே அனுபவிக்கிறாள். என்னிடம் இருந்து பிரிந்தால், அவள் தனது உறவினர்களிடம் செல்ல வாய்ப்பிருக்கிறது. என்மீது கொண்ட அர்ப்பணிப்பால், என்னுடனேயே அவள் தங்கினால், சந்தேகமற அவளைத் துயர் கவ்வும். ஆனால், நான் அவளைக் கைவிட்டால், அவளைத் துயர் கவ்வுவது சந்தேகத்திற்குரியதே. மறுபுறம். அவள் சிலகாலம் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் சாத்தியமில்லாதது இல்லை" என்று நினைத்தான். இதேயே திரும்பத் திரும்ப எண்ணி, திரும்பத் திரும்ப ஆலோசனை செய்து முடிவாக, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தமயந்தியைக் கைவிடுவதே சிறந்த  வழி என்று தீர்மானித்தான்.

அவன் {நளன்} மேலும், "உயர்ந்த புகழும், நற்பேறும், தனது கணவனான என்னிடம் அர்ப்பணிப்பும் கொண்ட அவளுக்கு {தமயந்திக்கு}, அவளது சக்தியின் காரணமாக, அவளது வழியில் யாரும் தீங்கை ஏற்படுத்திவிடமுடியாது." என்றும் நினைத்தான். இப்படியே, தமயந்தியுடன் தங்கியிருந்தபோது, தீய கலியால் தாக்குதலுக்குள்ளான அவனது மனம், அவளைக் கைவிடத் தீர்மானித்தது. தனக்கு ஆடையில்லாதிருப்பதையும், அவளுக்கும் ஒரே ஆடையே இருப்பதையும் சிந்தித்து, தனக்காக அதில் ஒரு பகுதியை அடைய, தமயந்தியின் ஆடையைப் பாதியாக வெட்ட எண்ணம் கொண்டான்.

அதன் பிறகு அவன்,  "எனது அன்புக்குரியவள் {தமயந்தி} காணாமல் {அறியாமல்}, இந்த ஆடையை எப்படிப் பிரிப்பது?" என்று எண்ணினான். இப்படி எண்ணிய அந்த அரசன் நளன் அந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்தான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்குமிங்குமாக நடந்த போது, உறையற்ற ஒரு அழகான வாள் அந்த மண்டபத்தில் கீழே கிடப்பதைக் கண்டான். அந்த எதிரிகளை ஒடுக்குபவன், அந்த வாளைக் கொண்டு, அந்தத் துணியின் ஒரு பாதியை வெட்டி எடுத்து, அந்தக் கருவியை {வாளை} வீசி எறிந்து, உணர்வற்று உணங்கிக்கொண்டிருந்த விதரப்ப்பனின் மகளை {தமயந்தியை} விட்டு {கைவிட்டு} வெளியேறினான்.

ஆனால் அவனது இதயத்திடம் தோற்ற நிஷாதர்களின் மன்னன் {நளன்} மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பிவந்து, தமயந்தியைக் {மீண்டும்} கண்டு, கண்ணீர்விட்டு அழுதான். அவன், "ஐயோ! வாயுத்தேவனோ, சூரியனோ இதற்கு முன்னால் கண்டிராத எனது அன்பானவள், இன்று கேவலமாக வெறுந்தரையில் படுத்து உறங்குகிறாளே. வெட்டப்பட்ட ஆடையுடன், கவனம் சிதறிக் கிடப்பவள் போல இருக்கும் இந்த பிரகாசமான புன்னகை கொண்ட அழகானவள், விழித்தெழும்போது எவ்வாறு நடந்து கொள்வாள்? தனது தலைவனுக்கு {எனக்கு} தன்னை அர்ப்பணித்திருக்கும் பீமனின் இந்த அழகான மகள் {தமயந்தி}, என்னைப் பிரிந்து, விலங்குகளும், பாம்புகளும் வசிக்கும் இந்த ஆழ்ந்த கானகத்தில் எப்படி பயணம் செய்வாள்? ஓ அருளப்பட்டவளே, ஆதித்தியர்களும், வசுக்களும், மருதர்களுடன் கூடிய அசுவினி இரட்டையர்களும் உன்னைக் காக்கட்டும். உனது அறமே உனக்குச் சிறந்த பாதுகாவலாக இருக்கும்" என்று சொன்னான்.

பூமியில் ஒப்பற்ற அழகுடைய தனது அன்பான மனைவியைப் பார்த்து இப்படிச் சொன்ன நளன், கலியால் அறிவிழந்து அங்கிருந்து செல்ல முற்பட்டான். கலியால் ஒரு பக்கமும், காதலால் ஒரு பக்கமும் இழுக்கப்பட்ட மன்னன் நளன், மீண்டும் மீண்டும் புறப்பட்டு, மீண்டும் மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பினான். அந்த இழிவடைந்த மன்னனின் இதயம் இரண்டாகப் பிளந்திருந்தது போலத் தோன்றியது. ஊஞ்சல் போல அவன் மண்டபத்தை விட்டு வெளியேயும் உள்ளேயும் திரும்பித் திரும்பி நடந்தான். நீண்ட நேரம் பரிதாபகரமாக அழுது, கலியால் உணர்விழந்து வாயடைந்து போன நளன், தூங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியைக் கைவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். கலியின் தொடுதலால் அறிவிழந்து, தனித்த காட்டில் தனது மனைவியைத் தனியாக விட்டு, தனது நடத்தையைக் குறித்து எண்ணி துயரத்துடன் சென்றுவிட்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்