Monday, January 06, 2014

தமயந்தியிடம் காமுற்ற வேடன் - வனபர்வம் பகுதி 63

Huntsman's lust on Damayanti | Vana Parva - Section 63 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

துயில் களைந்த தமயந்தி நளனில்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுவது; நளனைத் தேடி காட்டில் அலையும்போது தமயந்தியை மலைப்பாம்பு வளைத்துக் கொள்வது; எங்கிருந்தோ வந்த ஒரு வேடன் தமயந்தியைக் காப்பது; தமயந்தியின் அழகைக் கண்டு மயங்கி வேடன் அவளை அடைய விரும்புவது; தமயந்தி தனது சாபத்தால் வேடனைக் கொன்றது...

பிருகதஸ்வர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி நளன் சென்ற பிறகு, புத்துணர்ச்சி பெற்ற அழகான தமயந்தி, அந்தத் தனிமையான கானகத்தில் மருட்சியுடன் எழுந்தாள். ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தனது தலைவனான நிஷாதனைக் {நளனைக்} காணாததால் துயரும் வலியும் கொண்டு, பயத்தால், "ஓ தலைவா! ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி! ஓ கணவா, என்னைக் கைவிட்டீரா? இந்தத் தனிமையான இடம் எனக்குப் பயமாக இருக்கிறது. ஓ நான் கெட்டேன், நான் தொலைந்து போனேன். ஓ சிறப்புமிக்க இளவரசே, நீர் அறம் அறிந்து உண்மை பேசுவபவர் ஆயிற்றே. அப்படியிருக்கும்போது, எனக்கு வாக்கு கொடுத்துவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த என்னை இக்கானகத்தில் கைவிடலாமா? உமக்காகத் தன்னை அர்ப்பணித்த உமது மனைவியை நீர் ஏன் கைவிட்டீர்? நான் உமக்கு என்ன தீங்கிழைத்தேன்? மற்றவர்கள் அல்லவா உங்களுக்கு தீங்கிழைத்தனர்?


ஓ மனிதர்களின் மன்னா {நளரே}, லோகபாலர்களின் முன்னிலையில் நீர் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்கு உண்மையாக நீர் நடந்து கொள்வதே தகும். ஓ மனிதர்களில் காளையே {நளரே}, மனிதர்கள் அவர்களுக்குக் குறித்த நேரத்தில்தான் மரணிப்பார்கள் என்பதால்தான் நீர் கைவிட்டபிறகும் உமது மனைவி வாழ்கிறாள்.

ஓ மனிதர்களில் காளையே, இந்த கேலி போதும்! ஓ கட்டுப்படுத்தப்பட முடியாதவரே {நளரே}, நான் பயங்கரமான அச்சத்தில் இருக்கிறேன். ஓ தலைவா, உம்மை வெளிக்காட்டும். நான் உம்மைக் காண்கிறேன்! ஓ மன்னா {நளரே}, நான் உம்மைக் காண்கிறேன்! ஓ நிஷாதரே {நளரே}, நீர் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது தெரிகிறது. ஏன் எனக்கு மறுமொழி கூறமலிருக்கிறீர்? ஓ பெரும் மன்னா {நளரே}, புலம்பிக்கொண்டிருக்கும் என்னை இந்த அவலநிலையில் கண்டும், ஓ மன்னா நீர் என்னை அணுகி ஆறுதல் கூறாமல் இருந்து கொடூரமான செயலைச் செய்கின்றீர். நான் எனக்காகக் கவலைப்படவில்லை, எதற்காகவும் கவலைப்படவில்லை. ஓ மன்னா {நளரே}, நீர் எப்படி தனிமையில் நாட்களைக் கடத்துவீர் என்றே நான் கவலைகொள்கிறேன். மாலைப்பொழுதில் பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் ஒடுக்கப்பட்டு, மரத்திற்கடியில் இருக்கும்போது, என்னைக் காணாமல் எப்படி நீர் இருந்து கொள்வீர்?" என்று உரக்கக் கதறினாள்.

பெருத்த வேதனையுடனும், எரியும் துயருடனும் இருந்த தமயந்தி, துன்பத்துடன் அழுதுகொண்டே அங்கும் இங்கும் ஓடினாள். இப்போது அந்த ஆதரவற்ற இளவரசி எழுந்தாள், இப்போது மயங்கி கீழே மூழ்கினாள். இப்போது பயத்தால் சுருங்கினாள். இப்போது அழுது சத்தமாக ஒப்பாரி வைத்தாள். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த பீமனின் மகள் {தமயந்தி}, கடுந்துயரத்தால் எரிந்து, நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, மயங்கிய நிலையில் அழுது, "எதன் {being = பூதம்} சாபத்தால் பீடிக்கப்பட்ட நிஷாதர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறாரோ, அது {அந்தப் பூதம்} எங்களை விட அதிக துன்பத்தைத் தாங்கட்டும். பாவமற்ற இதயம் கொண்ட நளருக்கு இந்த நிலையைக் கொடுத்த அந்தத் தீயது {தீய பூதம்}, இதைவிட அதிகமான தீங்குகளைக் கொண்ட மோசமான வாழ்வை வாழட்டும்." என்று சொன்னாள். அந்த ஒப்பற்ற மன்னின் {நளனின்} பட்டத்து ராணி இப்படியே புலம்பியபடி, இரைதேடும் விலங்குகள் வசிக்கும் அந்தக் காடுகளில் தனது தலைவனைத் தேடத் தொடங்கினாள். அந்த பீமனின் மகள் {தமயந்தி} அழுதுகொண்டே அங்குமிங்கும் அலைந்து, பைத்தியக்காரி போல, "ஐயோ! ஐயோ! ஓ மன்னா!" என்று கதறினாள். பெண் கடற்புறா {குரரி பறவை} போல சத்தமாக அழுது, துயரடைந்து, தொடர்ச்சியாக இடைவிடாத பரிதாபகரமான ஒப்பாரியிட்டபடி ஒரு பெரும் உருவம் கொண்ட பாம்பின் அருகில் வந்தாள்.

பசித்திருந்த அந்தப் பெரும்பாம்பு, தனது அருகில் வந்து, தனது எல்லைக்குள் இருந்த பீமனின் மகளைத் {தமயந்தியைத்} திடீரெனப் பற்றியது. துயரம் நிறைந்து பாம்பின் சுருளுக்குள் மடிந்து இருந்த போதும் அவள் தனக்காக அழாமல் அந்த நைஷதனுக்காகவே {நளனுக்காகவே} அழுதாள். அவள், "ஓ தலைவா, இந்தக் கைவிடப்பட்ட வனத்தில் யாருடைய பாதுகாப்புமற்ற நான் இந்தப் பாம்பினால் கைப்பற்றப்பட்ட பின்பும், நீர் ஏன் என்னை நோக்கி விரைந்து வராமல் இருக்கிறீர்? ஓ நைஷதரே {நளரே}, நீர் என்னை நினைக்கும்போது இது எப்படி சரியா இருக்கும்? ஓ தலைவா, இன்று இந்தக் கானகத்தில் என்னை ஏன் கைவிட்டுச் சென்றீர்? இந்த நிலையில் இருந்து விடுபட்டு, நீர் உமது மனம், உணர்வுகள், செல்வங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறும்போது, என்னைக் குறித்து சிந்தித்தால் உமக்கு எப்படி இருக்கும்? ஓ நைஷாதரே {நளரே}, ஓ பாவமற்றவரே, நீர் சோர்வுற்று, பசித்து, மயங்கி வரும்போது, ஓ மன்னர்களில் புலியே, உமக்கு யார் ஆறுதல் கூறுவார்?" என்று சொன்னாள்.

அவள் இப்படி அழுது கொண்டிருக்கும்போது, ஆழ்ந்த கானகத்தில் உலவிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட வேடன், அவளது புலம்பல்களைக் கேட்டு, அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். பாம்பின் சுருளுக்குள் இருந்த அந்த அகன்ற கண் கொண்டவளைக் கண்டு, அதனிடம் {பாம்பிடம்} விரைந்து, அதன் தலையைத் தனது கூரிய ஆயுதத்தால் வெட்டி எறிந்தான். அந்த ஊர்வன விலங்கை {பாம்பைச்} சாகடித்து தமயந்தியை விடுவித்தான் அந்த வேடன். அவள் உடல் மீது நீர்த்தெளித்து, அவளுக்கு உணவு கொடுத்து ஆறுதல் சொன்னான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவன் அவளிடம், "ஓ அழகிய இளம் மானின் கண்களைக் கொண்டவளே, யார் நீ? நீ ஏன் இந்த கானகத்திற்கு வந்தாய்? ஓ அழகானவளே, நீ எப்படி இந்தப் பெருந்துயரத்தில் சிக்கினாய்?" என்று கேட்டான்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா} இப்படி அந்த மனிதனால் அணுகி அழைக்கப்பட்ட தமயந்தி, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனிடம் நடந்தது அத்தனையும் சொன்னாள். அழகிய களங்கமற்ற அங்கங்களுடனும், தேன் போன்ற இனிய பேச்சுடனும், வளைந்த இமை முடிகளுடனும், முழு நிலவைப் பிரதிபலிக்கும் முகத்துடனும், உருண்ட இடையுடனும், பருத்த மார்புகளுடனும், அரை ஆடையிலும் இருந்த அந்த அழகிய பெண்ணைக் {தமயந்தியைக்} கண்ட வேடன் ஆசையால் பீடிக்கப்பட்டான். காமதேவனால் தாக்குண்ட அந்த வேடன் வெற்றிக்குரலுடனும், மென்மையான வார்த்தைகளுடனும் அவளிடம் {தமயந்தியிடம்} ஆறுதலாகப் பேசினான்.

கற்புடைய அழகான தமயந்தி, அவனைக் கண்டு அவனது நோக்கத்தை உணர்ந்ததும், அவள் சீற்றத்துடன் கூடிய கோபத்தால் நிறைந்து, அந்தக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தாள். ஆனால், அந்த தீய மனம் படைத்த இழிந்தவன் {வேடன்}, எரியும் ஆசையால் கோபமடைந்து, பலத்தைப் பயன்படுத்தினான். அவள் சுடர்விட்டெரியும் தழலென வெற்றிகொள்ள முடியாதவளாக இருந்தாள். நாட்டை இழந்து, கணவனையும் இழந்து இருந்ததால் ஏற்கனவே துயரத்தில் இருந்த தமயந்தி, சொல்ல முடியாத அந்தத் துயரத்தின் போது, "நான் நைஷதரைத் {நளரைத்} தவிர வேறு எவரையும் நினைத்தவளில்லை. ஆகையால் குறுகிய மனம் கொண்டு துரத்தும் இந்தக் இழிந்தவன், உயிரற்றவனாக விழட்டும்" என்று சபித்தாள். அவள் அப்படிச் சொன்னவுடன், அந்த வேடன், நெருப்பால் உட்கொள்ளப்பட்ட மரமென உயிரற்று தரையில் விழுந்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்