Friday, January 10, 2014

நளனைத் தீண்டிய கார்க்கோடகன்! - வனபர்வம் பகுதி 66

Karkodaka bit Nala | Vana Parva - Section 66 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தியைக் கைவிட்டு வந்த நளன் ஒரு பெரும் காட்டுத் தீயைக் காண்பது; அந்தக் காட்டுத் தீயில் அகப்பட்ட கார்க்கோடகன் என்ற பாம்பை மீட்பது; அந்தப் பாம்பு கடித்ததால்  நளன் தனது சுய உருவத்தை இழந்தது;

பிருகதஸ்வர் {Vrihadaswa} சொன்னார், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, {தமயந்தியைக்} கைவிட்டு சென்ற நளன், அந்த அடர்ந்த காட்டில் பொங்கி எழும் காட்டுத்தீயைக் கண்டான். அந்தக் காட்டுத்தீக்கு மத்தியில் இருந்து ஏதோ ஒரு உயிரினம், "ஓ நீதிமானான நளனே, இங்கே வா" என்று திரும்பத் திரும்பக் கதறும் ஒலியைக் கேட்டான். அதற்கு மறுமொழியாக "அஞ்ச வேண்டாம்" என்று சொல்லி, அந்த நெருப்புக்கு மத்தியில் நுழைந்து ஒரு பெரும் நாகம் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டான். அந்த நாகமும் தனது கரங்களைக் கூப்பி, நடுங்கிக் கொண்டே நளனிடம், "ஓ மன்னா, நான் கார்க்கோடகன் என்ற பெயர் கொண்ட பாம்பு. நான் உயர்ந்த துறவுத்தகுதியைப் பெற்ற நாரதப் பெருமுனிவரை ஏமாற்றினேன். அதனால் அவர் என்னை கோபத்தால் சபித்துவிட்டார். ஓ மனிதர்களின் மன்னா {நளனே}, அவர் என்னை, "நளன் வந்து உன்னை எடுக்கும் வரை இங்கேயே அசையாதிருப்பாய். அவன் உன்னை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வான். அதன் பிறகு நீ இந்த சாபத்தில் இருந்து விடுபடுவாய்" என்றார். 


அதன்காரணமாகவே நான் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதவனாக இருக்கிறேன். உன் காரியமாக உனக்கு நன்மையானதைச் சொல்வேன். என்னைக் காப்பாற்றுவதே உனக்குத் தகும். நான் உனது நண்பனாக இருப்பேன். எனக்குச் சமமான எந்தப் பாம்பும் கிடையாது. நான் உனது கைகளில் பாரமில்லாதவாறு இருப்பேன். என்னை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து வேகமாகச் செல்" என்றான் {கார்க்கோடகன்}.

இதைச் சொன்ன அந்தப் பாம்புகளின் இளவரசன் {கார்கோடன்}, கட்டைவிரல் அளவு சிறியதானான். அவனைத் தனது கைகளில் எடுத்துக் கொண்ட நளன், நெருப்பில்லாத இடத்திற்கு சென்றான். நெருப்பில்லாத திறந்த வெளிக்கு வந்ததும் நின்று அந்தப் பாம்பைக் கீழே விட எண்ணினான் நளன். அப்போது கார்க்கோடகன், "ஓ நிஷாதர்களின் மன்னா, உனது பாத எட்டுகளை எண்ணிக் கொண்டே இன்னும் முன்னேறு. அதே வேளையில் நான் உனக்கு ஒரு நல்லதைச் செய்கிறேன்" என்றான். நளன் தனது எட்டுகளை எண்ணினான், பத்தாவது எட்டு எடுத்து வைக்கும்போது அந்தப் பாம்பு அவனைக் {நளனைக்} கடித்தான். அப்படி கடிபட்டதும் அவனது {நளனின்} உருவம் விரைவாக மாற்றம் கண்டது.  தனது உருவம் மாறுவதைக் கண்ட நளன் ஆச்சரியம் அடைந்தான். அந்தப் பாம்பு சொந்த உருவத்தை அடைவதையும் அந்த மன்னன் {நளன்} கண்டான்.

அந்தக் கார்க்கோடகன் என்ற பாம்பு, நளனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், "மக்கள் உன்னை அடையாளம் காணாதவாறு, நான் உனது அழகை இழக்கச் செய்திருக்கிறேன். ஓ நளனே, யாரால் வஞ்சிக்கப்பட்டு இந்தத் துயரத்தை நீ அடைந்தாயோ, அவன் {கலி} எனது விஷத்தால் சித்திரவதை செய்யப்பட்டு உன்னுள் வசித்திருப்பான். ஓ ஏகாதிபதி {நளனே}, அவன் உன்னை விட்டுப் போகாத வரை, உனது உடலில் இருந்து, உனது அங்கங்கள் அனைத்திலும் இருக்கும் எனது விஷத்தால் வலியை உணர்வான். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {நளனே}, நீ அப்பாவியாக இருந்தும், தீமைக்குத் தகுதியில்லாதவனாக இருந்தும், உன் மேலுள்ள கோபத்தாலும், வெறுப்பாலும் உன்னை வஞ்சித்தவனிடம் {கலியிடம்} இருந்து நான் உன்னைக் காத்திருக்கிறேன். ஓ மனிதப் புலியே, ஒ மன்னா {நளனே}, எனது அருளால், இனி நீ எந்த மிருகங்களுக்கும், எதிரிகளின் கோரைப் பற்களுக்கும், வேதங்களை அறிந்த அந்தணர்களுக்கும் அஞ்சத்தேவையில்லை. ஓ ஏகாதிபதியே {நளனே}, எனது விஷத்தாலும் நீ வலியை உணர மாட்டாய்.

மேலும், ஓ மன்னர்களில் முதன்மையானவனே {நளனே}, நீ எப்போதும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூடுபவனாக இருப்பாய். ஓ இளவரசனே {நளனே}, நிஷாதர்களின் தலைவனே {நளனே}, இந்த நாளே நீ காண்பதற்கினிய நகரமான அயோத்தியாவுக்குச் சென்று, சூதில் நிபுணனான ரிதுபர்ணன் முன்பு நின்று, "நான் ஒரு தேரோட்டி. எனது பெயர் பாகுகன்" என்று சொல். குதிரைகளைக் குறித்த உனது ஞானத்திற்காக அந்த மன்னன் {ரிதுபர்ணன்} உனக்கு பகடையில் நிபுணத்துவம் கொடுப்பான். இக்ஷவாகு குலத்தில் பிறந்து செழிப்புடன் இருக்கும் அவன் உனக்கு நண்பனாவான். நீ பகடையில் நிபுணனான பிறகு, நீ செழிப்பை அடைவாய். நீ உனது மனைவியையும் குழந்தைகளையும், உனது நாட்டையும் அடைவாய். இதையெல்லாம் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஆகையால், உனது மனம் கவலை கொள்ளாதிருக்கட்டும். ஓ மனிதர்களின் தலைவா {நளனே}, நீ உனது சரியான உருவத்தைக் காண விரும்பும்போது, என்னை நினைவுகூர்ந்து இந்த ஆடையை அணிந்து கொள். இதை நீ அணிவதால் சுய உருவைத் திரும்பப் பெறுவாய்" என்று சொன்னான் {கார்க்கோடகன்}. இதைச் சொல்லிய அந்த நாகன் {கார்கோடன்} நளனிடம் இரண்டு தெய்வீக ஆடைகளைக் கொடுத்தான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி நளனிடம் சொல்லி அவனுக்கு ஆடையைக் கொடுத்த பாம்புகளின் மன்னன் {கார்க்கோடன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போதே அந்த இடத்திலேயே தன்னைத்தானே அரூபமாக்கிக் {கண்ணுக்குப் புலப்படாதவனாக்கிக்} கொண்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்