Sunday, February 23, 2014

சகரனின் தவமும்! சிவனின் வரமும்! - வனபர்வம் பகுதி 106

The penance of Sagara and the boon of Siva! | Vana Parva - Section 106| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பிள்ளைக்காகத் தவம் இருந்த சகரன்; சகரனுக்குச் சிவன் வரமளித்தல்; சகரனின் ஒரு மனைவி அழகான குழந்தையைப் பெற்றெடுக்க, இன்னொரு மனைவி சுரைக்காயைப் பெற்றெடுத்தல்; சகரனுக்கு அசரீரியின் அறிவுரை...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அனைவரும் அப்படி ஒன்றுகூடிய போது, மனிதர்களின் பாட்டனாகிய பிரம்மன் அவர்களிடம், "தேவர்களே, எங்கே உங்களுக்கு இன்பம் கிடைக்குமோ அல்லது இன்பம் உங்களை எங்கு வழிநடத்துமோ அங்குச் செல்லுங்கள். கடல் மீண்டும் தனது கொள்ளளவை எட்ட நீண்ட காலம் ஆகும். பெரும் மன்னனான பகீரதனின் குலத்தவர் மூலம் அச்சந்தர்ப்பம் ஏற்படும்" என்று சொன்னான். (அண்டத்தின்) பெரும்பாட்டனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானவர்கள் (எப்போது கடல் நிரம்பும் என்று எண்ணியபடி) தாங்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.




யுதிஷ்டிரன், "ஓ! தவசியே {லோமசரே}, என்ன சந்தர்ப்பம் அது? பகீரதனின் குலத்தவர்கள் அதை எப்படி நிறைவேற்றினர்? பகீரதரனின் தலையீட்டின் பேரில் கடல் எப்படி நிரப்பப்பட்டது? ஓ தவசியே {லோமசரே}, தங்கள் அறப்பயிற்சிகளையே தங்கள் செல்வமாக நினைப்பவர்கள் யார்? ஓ புரோகிதர்கள் வகையைச் சார்ந்தவரே, நீர் சொன்ன அந்த மன்னனின் சாதனைகள் குறித்து நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அந்தப் பெருந்தன்மைமிக்க அறம்சார்ந்த மன்னனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்ட புரோகிதர் வகை மனிதர்களின் தலைவர் {லோமசர்}, உயர் ஆன்ம {மன்னன்} சகரனின் சாதனைகளை உரைக்க ஆரம்பித்தார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அழகும், பலமும் நிறைந்து, பூமியை ஆண்ட சகரன் இக்ஷவாகு இன குடும்பத்தில் பிறந்திருந்தான். ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அச்சமூட்டும் பெயர் கொண்டிருந்த அவன் {சகரன்} மகனற்று இருந்தான். அவன் ஹைஹயர்களையும் தாலஜங்கர்களையும் {the Haihayas and the Talajanghas}அழித்து மொத்த படையணியினரையும் அடக்கி தனது நாட்டை ஆண்டு வந்தான்.

ஓ பாரதக் குலத்தோன்றல்களில் பெரிதும் புகழப்படுபவனே {யுதிஷ்டிரா}, ஓ பாரதக் குலத்தின் தலைவா, அழகில் கர்வம் கொண்டு இளமையுடன் இருந்த விதரப்ப்ப குல இளவரசியும், சிபியின் அரச பரம்பரையில் வந்த மற்றுமொருத்தியும் அவனது இரு மனைவியராக இருந்தனர். ஓ மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, மேலும் அதே மனித ஆட்சியாளன் {சகரன்}, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு, கடும் தவத்தின் மூலமாகப் பிள்ளை பெற கைலாச மலைக்குச் சென்றான். அங்கே கடும் தவமும் யோகமும் இருந்து, முக்கண்ணனும், திரிபுரன் என்ற பேயை அழித்தவனும், அனைத்து உயிருக்கும் அருள் வழங்குபவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், பிநாகம்யையும் திரிசூலத்தையும் தாங்கியவனும், நித்திய அமைதி கொண்டவனும், கடுமையானவர்களை ஆள்பவனும், பல உருவங்களை எடுக்க வல்லவனும், உமா தேவியின் தலைவனுமான பெருமைமிக்க தெய்வத்தின் {சிவனின்} காட்சியைப் பெற்றான்.

அந்தப் பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன் {சகரன்} வரமருளும் அந்தத் தெய்வத்தைக் {சிவனைக்} கண்டதும், தனது ராணிகளுடன் அவனது பாதத்தில் விழுந்து, ஒரு மகனை விரும்பி வேண்டி நின்றான். அந்தச் சிவ தெய்வமும் அவனிடம் {சகரனிடம்} திருப்தி கொண்டு, இரு மனைவியரால் சேவிக்கப்பட்ட அந்த மனிதர்களின் நேர்மையான ஆட்சியாளனிடம் {சகரனிடம்}, "ஓ மனிதர்களின் தலைவா, என்னிடம் நீ வேண்டிக்கொண்ட கணத்தைக் (வானியல் கணிதத்தைக்) கருத்தில் கொண்டால், உனது ஒரு மனைவிக்கு, பெரும் கர்வமும், வீரமும் மிக்க அறுபதாயிரம் {60,000} மகன்கள் பிறப்பார்கள். ஆனால், ஓ பூமியை ஆள்பவனே, அவர்களை அனைவரும் ஒன்றாகவும் முற்றாகவும் அழிந்து போவார்கள். (இருப்பினும்) உனது இன்னொரு மனைவியிடம் ஒரு வீரமிக்க மகன் பிறப்பான். அவனே உனது குலத்தைத் தழைக்க வைப்பான்" என்றான் {சிவன்}.

இதைச் சொன்ன அந்த ருத்ர தெய்வம் {சிவன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்திலேயே மறைந்து போனான். பிறகு அந்த மன்னன் சகரன் தனது இரு மனைவியருடன் தனது வசிப்பிடத்திற்குப் பெரும் மகிழ்ச்சியுடன் திரும்பினான். ஓ மனுவின் மகன்களில் {மனிதர்களில்} பெரிதும் புகழப்படுபவனே {யுதிஷ்டிரா}, தாமரை இதழ் கண்கள் கொண்ட அவனின் {சகரனின்} மனைவியரான விதரப்ப்ப இளவரசியும் {வதர்ப்பி}, சிபியின் இளவரசியும் {சைப்பியை} விரைவில் பிள்ளையைப் பெற இருந்தனர். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் விதரப்ப்ப இளவரசி சுரைக்காய் உருவத்தில் (ஏதோ ஒன்றை) பெற்றெடுத்தாள். சிபியின் இளவரசி தெய்வீக அழகுடன் கூடிய மகனைப் பெற்றெடுத்தாள்.

பிறகு அந்தப் பூமியின் அதிபதி அந்தச் சுரைக்காயை எறிந்துவிட மனதில் தீர்மானித்தான். அப்போது வானத்தில் இருந்து கடுமையும் உறுதியும் கொண்ட ஒரு குரல், "ஓ மன்னா {சகரா}, உனது அவசரச் செயலினால் குற்றவாளி ஆகாதே; நீ உனது மகன்களைக் கைவிடலாகாது. அந்தச் சுரைக்காயில் இருந்து விதைகளை எடுத்து, சுத்திகரிக்கப்பட்ட நெய் நிரப்பிய ஆவியுடன் கூடிய பாத்திரங்களில் பாதுகாத்து வை. ஓ பாரதக் குலக்வழித்தோன்றலே, பிறகு நீ அறுபதாயிரம் {60,000} மகன்களை அடைவாய். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {சகரா}, பெருந்தெய்வம் {சிவன்} ஏற்கனவே சொன்னவாறு உனது மகன்கள் பிறப்பார்கள். ஆகையால் உனது மனம் வேறு விதமாக ஆக வேண்டாம்" என்றது {அசரீரி}. 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்