Saturday, February 22, 2014

கடலைக் குடித்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 105

Agastya drank up the ocean! | Vana Parva - Section 105| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அகஸ்தியர் கடலைக் குடித்தது; தேவர்கள் காலகேயர்களை மிச்சமில்லாமல் கொன்றது; மறுபடி கடலை நிரைக்க அகஸ்தியரை தேவர்கள் வேண்டிக் கொண்டது; அது தன்னால் இயலாது என்று அகஸ்தியர் மறுத்ததும் அதற்கான வழிகளைக் குறித்துத் தேவர்கள் ஆலோசித்தது...


லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த அருளப்பட்ட புனிதரான வருணனின் மகன் {அகஸ்தியர்} கடலை அடைந்தவுடன் அங்கே கூடியிருந்த தேவர்களிடமும் தவசிகளிடமும், "நான் நிச்சயம் நீர்க்கடவுளின் வசிப்பிடமான இந்தக் கடலைக் குடிக்கப் போகிறேன். நீங்கள் உங்கள் மீது உறைந்துள்ள தயாரிப்புகளை விரைவாகச் செய்யுங்கள்" என்றார்.




இப்படிச் சொன்ன அந்த மித்ராவருண மைந்தன் {அகஸ்தியர்} முழுக் கோபத்துடன், அனைத்து உலகங்களும் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தக் கடலைக் குடிக்க ஆரம்பித்தார். பிறகு இந்திரனுடன் கூடிய தேவர்கள் கடல் குடிக்கப்படுவதைக் கண்டு வியந்து புகழ்ந்து பேசும் வார்த்தைகளால் அவரிடம், "நீரே எங்கள் காப்பாளரும், மனிதர்களைப் பராமரிப்பவரும், உலகங்களை உண்டாக்குபவராகவும் இருக்கிறீர். உமது உதவியால், தேவர்களுடன் கூடிய இந்த அண்ட ம் முழுநாசத்தில் இருந்து தப்பியது" என்று துதித்தனர்.

இப்படித் தெய்வீக கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துச் சூழ்ந்திருக்க தேவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தன்மை கொண்டவர் {அகஸ்தியர்}, தன் மீது தெய்வீக மலர் மாரி பொழிந்த போது அந்த அகன்ற கடலை நீரற்றதாக ஆக்கினார். அந்த அகன்ற கடல் நீரற்றதானதைக் கண்ட தேவர்ப்படை மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் விரும்பிய தெய்வீக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீரமிகுந்த இதயங்களுடன் அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} மேல் பாய்ந்தனர். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பெரும் கர்ஜனை செய்து கொண்டு பலமும் வேகமும் கொண்ட தேவர்களால் தாக்கப்பட்ட அவர்கள் {காலகேய அசுரர்கள்}, தேவ லோக வசிப்பாளர்களின் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் தலைப்பட்டனர்.

தேவர்களால் தாக்கப்பட்டு எருதுகள் போலச் சத்தமாக முக்காரமிட்ட {ம்ம்ம்ம்ம் என்ற ஒலியாக இருக்கலாம்} அந்தப் பேய்கள் {காலகேயர்கள்}, அந்தப் பயங்கரத் தாக்குதலை ஒரு கணம் {முகூர்த்தம்} தான் தாங்கினர். மனதை அடக்கி தங்களை முதிர்ச்சியடையச் செய்து கொண்ட முனிவர்களின் தவச் சக்தியால் முதலிலேயே எரிக்கப்பட்ட அந்த முயற்சியுடைய பேய்கள் தேவர்களால் அழிக்கப்பட்டனர். தங்கப் பதக்கங்களும், காதுகுண்டலங்களும், தோள்வளைகளையும் அணிந்திருந்த அந்தப் பேய்கள் கொல்லப்பட்டபோது கூடப் பூத்துக் குலுங்கும் பலாச மரத்தைப் போல அழகாக இருந்தனர்.

ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, காலகேய குலத்தில் பூமி தேவதையின் பிளவுகளில் பதுங்கி, பாதாளத்தைப் புகலிடமாகக் கொண்டிருந்த மீந்திருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் வித்தியாசமான பேச்சுகளால் அந்தப் பலம்வாய்ந்த புனிதரை {அகஸ்தியரை} இந்த வார்த்தைகளால் துதித்தனர், "ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அகஸ்தியரே}, உயிரினங்களைப் படைப்பவரே, உமது உதவியால் மனிதர்கள் பலம்வாய்ந்த அருளைப் பெற்றிருக்கின்றனர். இரக்கமற்ற பலம் கொண்ட காலகேயர்கள் உமது பலத்தாலேயே கொல்லப்பட்டனர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே (இப்போது) கடலை நிரப்பும். நீர் அருந்திய நீரை விட்டுவிடும்" என்றனர்.

இப்படிச் சொல்லப்பட்ட அருளும் பலமும் நிறைந்த தவசி {அகஸ்தியர்}, "உண்மையில் அந்த நீர் என்னால் செரிக்கப்பட்டது. ஆகையால், கடலை நிரப்ப நீங்கள் விரும்பினால் சூழ்நிலைக்கேற்ற வேறு வழிகள் உங்களால் எண்ணப்பட வேண்டும்" என்று சொன்னார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதிர்ந்த ஆன்மா கொண்ட அந்தப் புனிதரின் பேச்சைக் கேட்ட தேவர்கள் வியப்பாலும், சோகத்தாலும் தாக்கப்பட்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிறந்த பிறவிகளில் பெரும் புனிதரை வணங்கி, தாங்கள் வந்த வழியே திரும்பினர். பிறகு விஷ்ணுவுடன் கூடிய தேவர்கள் பிரம்மனிடம் வந்தனர். பிறகு கூப்பிய கரங்களுடைய அவர்கள் கடலை நிரப்பும் நோக்கத்துடன் திரும்பத் திரும்ப ஆலோசித்துப் பேசிக் கொண்டிருந்தனர். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்