Wednesday, May 28, 2014

விடைபெற்றார் லோமசர்! - வனபர்வம் பகுதி 175

Lomasa bade adieu! | Vana Parva - Section 175 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கந்தமாதனத்தில் இருந்து இறங்க யுதிஷ்டிரனுக்கு பீமன் அறிவுறுத்தல்; பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட லோமசர் தேவலோகம் சென்றது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "அவ்வீரர்களில் பிரதானமானவன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பின் விரித்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, போர்க்குணமுள்ள அந்தத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} துணையுடன் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்திரனுக்கு நிகரானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனின் துணை கொண்டு, அந்த அழகான அற்புதமான வனத்தில் (உள்ள) கருவூலத்தலைவனின் {குபேரனின்} நந்தவனத்தில் அவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மனிதர்களின் தலைவனான கிரீடி {அர்ஜுனன்}, ஆயுதங்களையே நோக்கமாகக் கொண்டு, கையில் வில்லுடன், மரங்கள் நிறைந்த ஒப்பற்ற இன்பமான நிலங்களை ஆராய்ந்தபடி உலாவினான். மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} அருளால் ஒரு வசிப்பிடத்தை அடைந்த இறையாண்மையின் மகன்கள் {பாண்டவர்கள்}, மனிதர்களின் ஐஸ்வரியத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர்களது (வாழ்வின்) அந்தப் பகுதி அமைதியாகக் கடந்தது. பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துணையாகக் கொண்ட அவர்கள், நான்கு வருடங்களை ஒரு இரவைப் போலக் கழித்தனர். பாண்டவர்கள் (இந்த நான்கு வருடங்களையும்), முன்பே கழித்த ஆறு வருடங்களையும் சேர்த்து பத்து வருடங்களைச் சீராகக் கழித்தனர்.

பிறகு, வாயுத்தேவனின் உணர்ச்சி வேகமுள்ள மகனும் {பீமனும்}, ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல அமர்ந்திருந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்னால் அமர்ந்து, அவனிடம் நன்மையான இனிய வார்த்தைகளைப் பேசினர். "உமது வாக்குறுதியை வாய்க்கச் செய்வதற்கும், உமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமே, ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம்  (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ! மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே} யாதவர்களுடன் கூடிய கிருஷ்ணன் உமது நன்மையில் விருப்பம் கொண்டிருக்கிறான். நானும், போரில் சாதிக்கும் வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவன் ஆகியோரும்} அவ்வாறே இருக்கிறோம். நீர் செல்வம், செழிப்பு, மேன்மை ஆகியவற்றைப் பெறுவதற்காக நாங்கள் எதிரிகளுடன் மோதி அவர்களை அழிப்போம்" என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறம், பொருள் ஆகியவற்றை அறிந்து, அளவில்லா பராக்கிரமத்துடன் இருக்கும், தர்மனின் பெருமைமிக்க அற்புதமான மகன் {யுதிஷ்டிரன்} அவர்களின் நோக்கத்தை அறிந்து, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை வலம் வந்தான். மாளிகைகளிடமும், நதிகளிடமும், தடாகங்களிடமும், அனைத்து ராட்சசர்களிடமும் விடைபெற்ற நீதிமானான யுதிஷ்டிரன், தாங்கள் (ஏற்கனவே) வந்த வழியை நோக்கினான். பிறகு மலையைப் பார்த்தபடி அந்த உயர் ஆன்ம, சுத்த மனம் படைத்தவன் அந்த மலைகளில் சிறந்த மலையிடம், "ஓ! மலைகளில் முதன்மையானவனே, எதிரிகளைக் கொன்று, எனது நாட்டை மீட்டு, எனது காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நான் எனது நண்பர்களுடன் தவம்பயின்று கட்டுப்பட்ட ஆன்மாவுடன் மீண்டும் உன்னைக் காண்பேன்" என்றான். இதை அவன் தீர்மானமாகவும் கொண்டான். தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும், அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்} அதே சாலை வழியே முன்னேறினான். கடோத்கசனும்  அவனைத் தொடர்பவர்களும் அவர்களை மலைமுகடுகளில் சுமந்து சென்றனர். அவர்கள் பயணிக்கத் தொடங்கியதும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலக் கூறிய பெரும் முனிவரான லோமசர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சொர்க்கவாசிகளின் புனிதமான இருப்பிடத்திற்குச் சென்றார். பிறகு மனிதர்களில் முதன்மையான ஆர்ஷ்டிஷேணராலும் அறிவுறுத்தப்பட்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அழகான தீர்த்தங்களையும், ஆசிரமங்களையும், பல பெரிய தடாகங்களையும் கண்ட படி தனியாகச் சென்றார்கள்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்