Thursday, May 29, 2014

துவைதவனம் திரும்பிய பாண்டவர்கள்! - வனபர்வம் பகுதி 176

Pandavas returned to Dwaitabana! | Vana Parva - Section 176 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)



கந்தமாதனத்தில் இருந்து இறங்கிய பாண்டவர்கள் கைலாசத்தைக் காண்பது; பதரியில் தங்குவது; விருஷபர்வாவையும் சுபாகுவையும் மீண்டும் காண்பது; மீண்டும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்த துவைதவனம்  அடைந்து மகிழ்ந்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நீர்வீழ்ச்சிகள் நிறைந்த அழகான மலையில் இருக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான இல்லத்தையும், பறவைகளையும், எட்டு திசைகளின் யானைகளையும் {திக் கஜங்களையும்}, குபேரனின் சேவர்களையும் {கின்னரர்களையும்} விட்டு அகன்ற அந்தப் பாரதக் குலத்தின் மனிதர்களில் முதன்மையானவர்களை மகிழ்ச்சி கைவிட்டது.
குபேரனுக்குப் பிடித்த மலையான மேகங்களைப் போலத் தெரியும் கைலாசத்தைக் கண்டதும், அந்தப் பாரதக் குலத்தின் தலைமையான வீரர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. கத்திகளும் விற்களும் தாங்கிய வீர மனிதர்களில் முதன்மையான அவர்கள், உயரங்களையும், மலைக்கணவாய்களையும், சிங்கங்களின் குகைகளையும், மலைக்குகைகளையும், சில பள்ளத்தாக்குகளையும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளையும் கண்டும், மேலும் எண்ணிலடங்கா மான், பறவைகள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் கானகங்களையும் கண்டு திருப்தியுடன் முன்னேறினர். அழகான வனநிலங்களையும், ஆறுகளையும், தடாகங்களையும், குகைகளையும், மலைப்பொந்துகளையும் அடைந்தனர். இவை அனைத்தும் அந்தப் பெரும் மனிதர்களுக்கு இரவுக்கும் பகலுக்குமான வசிப்பிடங்களாக இருந்தன. அடைய முடியாத இடங்களை அடைந்து வசித்து, புத்திக்கெட்டாத ஆடம்பரம் நிறைந்த கைலாசத்தைக் கடந்த அவர்கள் விருஷபர்வாவின் மிக அழகான அற்புதமான ஆசிரமத்தை அடைந்தனர். மன்னன் விருஷபர்வாவைச் சந்தித்து, அவனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மலைகளில் நேர்ந்த தங்கள் பயணத்தை விரிவாகவும் துல்லியமாகவும் அவனுக்கு {விருஷபர்வாவுக்கு} எடுத்துரைத்தனர்.
பிறகு,


தேவர்களும், பெரும் முனிவர்களும் வந்து போகும் அந்தப் புனிதமான வசிப்பிடத்தில் ஒரு இரவை இனிமையாகக் கடத்திய அந்தப் பெரும் போர்வீரர்கள் விசாலை என்று அழைக்கப்பட்ட இலந்தை மரத்தை வந்தடைந்தனர். பிறகு அந்தத் தயாள மனம் கொண்ட மனிதர்கள் நாராயணனின் இடத்தை அடைந்து, தேவர்களும் சித்தர்களும் வந்து போகும் குபேரனுக்கு விருப்பமான தடாகத்தைக் கண்டு துன்பமற்று வாழ்ந்தனர். அந்தத் தடாகத்தைக் கண்ட மனிதர்களில் முதன்மையான அந்தப் பாண்டு மகன்கள் நந்தனா என்ற நந்தவனத்தில் வசிப்பிடம் கிடைத்த பிரம்ம முனிவர்களைப் போல அனைத்துத் துன்பங்களையும் துறந்து அந்த இடத்தையும் கடந்து சென்றனர்.

அனைத்து வீரர்களும் பதரியில் {Badari} மகிழ்ச்சியாக ஒரு மாதம் வாழ்ந்த பிறகு, கிராதர்களின் மன்னனான சுபாகுவின் நாட்டை நோக்கி, தாங்கள் ஏற்கனவே வந்த வழியிலேயே முன்னேறினர். கடினமான இமாலயப் பகுதிகளைக் கடந்து, சீனம், துஷாரம், தரதம், அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் கொண்டதும், ரத்தினங்களைக் குவியலாகக் கொண்டதுமான குளிந்தம் ஆகிய நாடுகளைக் கடந்த அந்தப் போர்க்குணமிக்க மனிதர்கள் சுபாகுவின் தலைநகரத்தை அடைந்தனர். மன்னர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளுமானவர்கள் தனது நாட்டை அடைந்ததைக் கேள்விப்பட்ட சுபாகு, மகிழ்ச்சியுடன் (அவர்களைச் சந்திக்க) முன்னேறினான். குருக்களில் சிறந்தவனும் {யுதிஷ்டிரனும்} அவனை வரவேற்றான். மன்னன் சுபாகுவைச் சந்தித்து, விசோகனைத் தலைமையாகக் கொண்ட தங்கள் அனைத்து தேரோட்டிகளுடனும் இணைந்து, இந்திரசேனன் முதற்கொண்ட சேவகர்களையும், கண்காணிப்பாளர்களையும், சமையலறைப் பணியாட்களையும் கண்டு அவருகளுடன் இணைந்து ஒரு நாள் இரவை அமைதியாகக் கழித்தனர்.

பிறகு அனைத்துத் தேர்களையும், தேரோட்டிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, கடோத்கசனுக்கும் அவனைப் பின்தொடர்பவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி, யமுனைக்கு அருகே இருந்த மலைகளின் ஏகாதிபதியிடம் சென்றனர். நீரவீழ்ச்சிகளும், சாம்பல் மற்றும் காவி நிறச் சரிவுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்ட அந்த மலைக்கு மத்தியில், சித்திரரத வனத்துக்கு ஒப்பான, காட்டுப் பன்றிகளும், பலதரப்பட்ட மான்களும் பறவைகளும் கொண்ட விசாகயூபம் என்ற கானகத்தைக் கண்ட போர்க்குணமிக்க அந்த மனிதர்கள் அதைத் தங்கள் இல்லமாக்கினார்கள்.

வேட்டையில் மயங்கி, அதையே தங்கள் தலைமைத் தொழிலாகக் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் அந்தக் கானகத்தில் ஒரு வருடம் அமைதியாக வசித்தனர். அங்கே இருந்த ஒரு பெரிய மலைக்குகையில், சஞ்சலமும் துயரமும் பீடித்த இதயத்துடன் இருந்த விருகோதரன் {பீமன்}, பசியால் வெறுப்புற்றிருந்த, மரணத்தைப் போன்று கடுமையாக இருந்த ஒரு பெரும் பலமிக்கப் பாம்பைக் கடக்க நேர்ந்தது. இப்பிரச்சனையில், பக்திமிக்க மனிதர்களில் சிறந்த யுதிஷ்டிரன் தலையிட்டு விருகோதரனை {பீமனைக்} காத்தான். பீமனின் முழு உடலையும் தனது பிடிக்குள் விரைவாகப் பற்றியிழுத்த பாம்பிடம் இருந்து, எல்லையற்ற பலம் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} மீட்டான். கானக பயணத்தின் பனிரெண்டாவது {12} வருடம் ஆரம்பித்ததும், அந்தக் குரு குலத்தின் பிரகாசமிக்கக் கொழுந்துகள் {பாண்டவர்கள்}, தவத்தில் ஈடுபட்டு, வில்வித்தையைத் தலைமையாகப் பயின்று சித்திரரதம் போல இருந்த அந்தக் கானகத்தைவிட்டு, சரஸ்வதியின் {நதியின்} அருகே வசிக்க எண்ணம் கொண்டு மகிழ்ச்சிகரமாகப் பாலைவனத்தின் எல்லைகளுக்கு அருகே வந்து, அந்த நதியின் கரைக்கருகே இருந்த துவைதவனத்தின் தடாகத்தை அடைந்தனர்.

ஐம்பொறிகளை அடக்கி, தர்ப்பையையும், தீர்த்த கமண்டலத்தையும் உடைய, அறச்சடங்கை ஒடுக்கும் பயிற்சிகளால் ஆழ்ந்த தியானம் செய்து, அங்கு வசிக்கும் தவம் பயிலும் தவசிகள், துவைதவனத்துக்குள் பாண்டவர்கள் நுழைவதைக் கண்டு, அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களை நோக்கி வந்தனர். புனிதமான அரசு, ருத்திராட்சம், ரௌஹீதகம், வஞ்சி, இலந்தை, கருங்காலி, வாகை, பிலவம், புங்கை, பீலுவிருக்ஷம், வன்னி, மூங்கில் ஆகிய மரங்கள் அந்தச் சரஸ்வதி நதியின் கரையில் வளர்ந்திருந்தன. யக்ஷர்கள், கந்தர்வர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானதும் தேவர்களின் இல்லம் போன்றதுமான சரஸ்வதியின் {நதியின்} (அருகில்) முழு மனநிறைவுடன் உலவி வந்த அந்த மன்னர்களின் மகன்கள் {பாண்டவர்கள்} அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்