Tuesday, July 08, 2014

இந்திரத்யும்னன்! - வனபர்வம் பகுதி 198

Indradyumna! | Vana Parva - Section 198 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சொர்க்கத்திலிருந்து விழுந்த இந்திரத்யும்னனை, ஆந்தையிடம் மார்க்கண்டேயர் அழைத்துச் செல்வது; ஆந்தை அவர்கள் இருவரையும் கொக்கிடம் அழைத்துச் சென்றது; கொக்கு ஆமையை அழைத்து "இந்திரத்யும்னன் யார்?" என்பதைக் கேட்பது; இந்திரத்யும்னன் மீண்டும் சொர்க்கமடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்}, முனிவர்களும் மார்க்கண்டேயரிடம், "உம்மைவிட நீண்ட வாழ்நாள் {ஆயுள்} அருளப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா?" என்று கேட்டனர். மார்க்கண்டேயர், "சந்தேகமற நிச்சயம் இருக்கிறார்கள். இந்திரத்யும்னன் என்ற பெயர்படைத்த ஒரு அரசமுனி, அறம் குறைந்ததால், "எனது சாதனைகள் அனைத்தும் தொலைந்தன" என்று கதறியவாறு சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். பிறகு அவன் {அரசமுனி இந்திரத்யும்னன்} என்னிடம் வந்து, "என்னை அறிவீரா?" என்று கேட்டான். நான் அவனிடம் {இந்திரத்யும்னனிடம்}, "அறத்தகுதியை அடையும் ஆவலில் நாங்கள் எங்களை எந்த வீட்டிற்குள்ளேயும் அடைத்து வைத்துக் கொள்வதில்லை. ஒரே கிராமத்திலோ, நகரத்திலோ {அதிகபட்சம்} ஒரு இரவு மட்டுமே வாழ்கிறோம். எனவே, எங்களைப் போன்றோர், உன்னை அறிய முடியாது. நாங்கள் நோற்கும் நோன்புகளும் உறுதிகளும் எங்களை உடலால் பலவீனமடையச் செய்கிறது. அதனால் எங்களால் உலகம் சார்ந்த எந்தக் காரியத்தையும், சொந்தமாக அறிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, எங்களைப் போன்ற ஒருவன், உன்னை அறிந்திருப்பது இயலாது" என்றார் {மார்க்கண்டேயர்}.


பிறகு அவன் {அரசமுனி இந்திரத்யும்னன்} என்னிடம் {மார்க்கண்டேயரிடம்}, "உம்மைவிட நீண்ட நாள் வாழ்ந்தவர் யாருமுண்டா?" என்று கேட்டான். நான் அவனிடம் {இந்திரத்யும்னனிடம்}, "இமயமலையில் பிராவாரகர்ணன் என்ற ஒரு ஆந்தை வாழ்கிறது. அது என்னைவிட முதிர்ந்தது. அது உன்னை அறிந்திருக்கலாம். இமயமலையில் அது வசிக்கும் பகுதி இங்கிருந்து மிகத் தொலைவில் உள்ளது" என்றேன். பிறகு அந்த இந்திரத்யும்னன் குதிரையாக மாறி, அந்த ஆந்தை வாழுமிடத்திற்கு என்னைச் சுமந்து சென்றான். அம்மன்னன் {இந்திரத்யும்னன்} அந்த ஆந்தையிடம், "நீ என்னை அறிவாயா?" என்று கேட்டான். அந்த ஆந்தை ஒருக்கணம் {ஒரு முகூர்த்த காலம் என்றும் சொல்லப்படுகிறது} யோசிப்பது போலத் தெரிந்தது. பிறகு, அது {ஆந்தையானது}, மன்னனிடம் {இந்திரத்யும்னனிடம்}, "நான் உன்னை அறியேன்" என்றது. அதன்பிறகு அந்த அரசமுனி இந்திரத்யும்னன், அந்த ஆந்தையிடம், "உன்னைவிட வயது முதிர்ந்தவர் வேறு யாரும் உள்ளனரா?" என்று கேட்டான். அதற்கு அந்த ஆந்தை, "இந்திரத்யும்னம் என்ற பெயரில் ஒரு தடாகம் இருக்கிறது. அந்தத் தடாகத்தில் நாதீஜங்கம் என்ற பெயரில் ஒரு கொக்கு வசிக்கிறது. அது எங்களை விட முதிர்ந்தது, நீர் அதனிடம் கேட்கலாம்" என்றது {ஆந்தை}.

இதன் பேரில் மன்னன் இந்திரத்யும்னன் என்னையும், ஆந்தையையும் சுமந்து கொண்டு நாதீஜங்கம் என்ற கொக்கு வசித்த தடாகத்திற்குச் சென்றான். நாங்கள் அந்தக் கொக்கிடம், "நீ மன்னன் இந்திரத்யும்னனை அறிவாயா?" என்று கேட்டோம். அதற்கு அந்தக் கொக்கும் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, "நான் மன்னன் இந்திரத்யும்னனை அறியேன்" என்றது. நாங்கள் அந்தக் கொக்கிடம், "உன்னை விட வயது முதிர்ந்தவர் யாராவது இருக்கின்றனரா?" என்று கேட்டோம். அதற்கு அது {அந்தக் கொக்கு}, "இதே தடாகத்திலேயே வசிக்கும் அகூபாரம் என்ற பெயர் கொண்ட ஆமை வசிக்கிறது. அது என்னைவிட முதிர்ந்தது. இம்மன்னனை {இந்திரத்யும்னனைக்} குறித்து அது அறிந்திருக்கலாம். எனவே அகூபாரத்தை விசாரியுங்கள்" என்று சொல்லி, ஆமையிடம் சென்று, "நாங்கள் உன்னிடம் ஒன்றைக் கேட்க நினைக்கிறோம். தயவு செய்து எங்களிடம் வா" என்றது.

இதைக் கேட்ட ஆமையும் தடாகத்தில் இருந்து வெளியே வந்து, நாங்கள் இருந்த கரையின் அந்தப்பகுதிக்கு வந்தது. அது {அகூபாரம் என்ற ஆமையானது} அந்த இடத்திற்கு வந்ததும் நாங்கள் அதனிடம், "நீ மன்னன் இந்திரத்யும்னனை அறிவாயா?" என்று கேட்டோம். அந்த ஆமை சிறிது நேரம் சிந்தித்தது. அதன் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. இதய வருத்தத்துடன் நடுங்கியவாறு தனது உணர்வை இழக்கும் நிலைக்குச் சென்றது. பிறகு அது {அகூபாரம் என்ற ஆமையானது} கூப்பிய கரங்களுடன், "ஐயோ, நான் இவனை அறிய மாட்டேனா? வேள்வி நெருப்புக் கிண்டப்படும்போது ஆயிரம் முறை வேள்விக்குச்சிகளை {யூபஸ்தம்பங்களை} இவன் இங்கு நட்டிருக்கிறான். வேள்வியின் முடிவில் இவன் அந்தணர்களுக்குத் தானமளித்த பசுக்களின் குளம்படிகளால் தோண்டப்பட்டதே இத்தடாகம். நான் அதுமுதல் இங்கேயே வாழ்கிறேன்" என்றது {ஆமை}.

இவையனைத்தையும் ஆமை சொன்ன பிறகு, அங்கே தெய்வீக உலகங்களில் இருந்து ஒரு தேர் வந்தது. வானத்திலிருந்து ஒரு குரல் இந்திரத்யும்னனிடம், "வா, சொர்க்கத்தில் உனக்குத் தகுதியான இடத்தைப் பெறு! உனது சாதனைகள் பெரியன! உனது இடத்திற்கு நீ உற்சாகமாக வா!" என்றது.

இங்கே குறிப்பிட்ட செய்யுட்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன. "அறச் செயல்களில் அறிக்கை உலகத்தில் பரவி சொர்க்கத்தை அடைகிறது. அந்த அறிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் அந்த அறச்செயலைச் செய்தவன் சொர்க்கத்தில் இருப்பான். ஒரு மனிதனின் தீச்செயல்கள் வதந்தியாகப் பரவும்போது, அவன் விழுந்து அந்தத் தீச்செயலின் அறிக்கை நீடிக்கும்வரை தாழ்ந்த உலகங்களிலேயே நீடிப்பான் என்று சொல்லப்படுகிறது. எனவே, சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதன் தனது செயல்களில் அறத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவன் பாவம்நிறைந்த இதயத்தைக் {மனதைக்} கைவிட்டு அறத்திடம் தஞ்சமடைய வேண்டும்" {என்பதே அச்சுலோகங்கள்}

இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {இந்திரத்யும்னன்}, "முதிர்ந்தவர்களான இவர்களை அவர்கள் இருப்பிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் வரை இந்தத் தேர் இங்கேயே நிற்கட்டும்" என்றான். பிறகு என்னையும், ஆந்தையான பிராவாரகர்ணனையும் எங்களுக்கு உரிய இடங்களில் விட்டுவிட்டு, அவன் {மன்னன் இந்திரத்யும்னன்} அந்தத் தேரில் பயணித்து, தனக்குத் தகுதியான இடத்தை அடைந்தான். நீண்ட வாழ்நாள் வாழ்ந்துள்ளதால், நான் இவை அனைத்தையும் சாட்சியாகக் கண்டேன்" என்றார் {மார்க்கண்டேயர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படியே மார்க்கண்டேயர் அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} விவரித்தார். மார்க்கண்டேயர் முடித்ததும், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, "நீர் அருளப்பட்டு இரும்! சொர்க்கத்திலிருந்து விழுந்திருந்த மன்னன் இந்திரத்யும்னனைச் சரியாகச் செயல்படச் செய்து, அவனது இடத்தை மீட்டெடுக்கச் செய்தீர்!" என்றனர். மார்க்கண்டேயர், "தேவகியின் மகனான கிருஷ்ணனும், நரகத்தில் மூழ்கிய நிருகன் என்ற அரசமுனியை இப்படியே எழுப்பி, அவனை {நிருகனை} சொர்க்கத்தை அடையச் செய்தான்!" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்