Sunday, July 13, 2014

"துந்துவைக் கொல்!" என்றார் உதங்கர்! - வனபர்வம் பகுதி 201

"Kill Dhundhu!" said Utanka! | Vana Parva - Section 201 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பிருகதஸ்வான் குவலாஸ்வனுக்கு முடிசூட்டி வனத்துக்குப் புறப்பட்ட போது, அதைத் தடுத்து துந்து என்ற அசுரனைக் கொல்ல உதங்கர் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகுவின் {Ikshvaku} மரணத்திற்குப் பிறகு, சசாதன் {Sasada} என்ற பெயர் கொண்ட உயர்ந்த அறம் சார்ந்த மன்னன் அயோத்தியாவின் அரியணை ஏறி இந்தப் பூமியை ஆண்டான். அந்தச் சசாதனின் வழியில் {பரம்பரையில்} பெரும் சக்தி படைத்த ககுதஸ்தன் {Kakutshta} வந்தான். அந்தக் ககுதஸ்தனுக்கு அனேனஸ் {Anenas} என்ற பெயரில் மகன் இருந்தான். அந்த அனேனசுக்கு பிருது {Prithu} என்ற பெயர் கொண்ட மகன் இருந்தான். பிருதுவுக்கு விஷ்வகஸ்வன் {Viswagaswa} என்ற பெயரில் மகன் இருந்தான். விஷ்வகஸ்வனில் இருந்து ஆதிரி {Adri} பிறந்தான். ஆதிரியில் இருந்து யுவனாஸ்வன் {Yuvanaswa} பிறந்தான். யுவனாஸ்வனில் இருந்து சிராவஸ்தன் {Sravastha} பிறந்தான். இந்தச் சிராவஸ்தனே சிராவஸ்தி என்ற நகரத்தைக் கட்டினான். சிராவஸ்தனின் வழியில் பிருகதஸ்வன் {Vrihadaswa} வந்தான். பிருகதஸ்வனில் இருந்து குவலாஸ்வன் {Kuvalaswa} பிறந்தான். இந்தக் குவலாஸ்வனுக்கு இருபத்து ஓராயிரம் {21,000} மகன்கள் இருந்தனர். இந்த மகன்கள் அனைவரும் கடுமையானவர்களாகவும், பலம் வாய்ந்தவர்களாகவும், கற்றலில் நிபுணர்களாகவும் இருந்தனர். அந்தக் குவலாஸ்வன் அனைத்து குணங்களிலும் தனது தந்தையை {பிருகதஸ்வனை} விஞ்சி இருந்தான். நேரம் வந்த போது அவனது தந்தையான பிருகதஸ்வன், வீரமிக்க உயர் அறம் கொண்ட குவலாஸ்வனை அரியணையில் ஏற்றினான். அரசை மகனிடம் {குவலாஸ்வனிடம்} கொடுத்த அந்த எதிரிகளைக் கொல்பவனும், பெரு புத்திகூர்மையுடையவனுமான மன்னன் பிருகதஸ்வன் தவம் பயில்வதற்காகக் கானகம் புறப்பட்டான்"


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அரச முனியான பிருகதஸ்வன் கானகத்திற்குப் புறப்பட்ட போதும், அந்தணர்களில் சிறந்தவரான உதங்கர் அதைக் கேள்விப்பட்டார். பெரும் சக்தியும், அளவிடமுடியாத ஆன்மாவும் கொண்ட உதங்கர், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும் மனிதர்களில் சிறந்தவனுமான அவனை {பிருகதஸ்வனை} அணுகினார். அவனை {பிருகதஸ்வனை} அணுகிய அம்முனிவர் {உதங்கர்}, துறவை கைவிடும்படி வற்புறுத்தினார். உதங்கர், "ஓ! மன்னா {பிருகதஸ்வா}, (மக்களைக்} காப்பதே உனது கடமை. நீ உனது கடமையைச் செய்வதே உனக்குத் தகும். உனது அருளால் நாங்கள் துயரங்களில் இருந்து விடுபட்டிருக்கச் செய். பெரும் ஆன்மா கொண்ட உன்னால் {மகாத்மாவான உன்னால்} காக்கப்பட்டு, இந்தப் பூமி அனைத்து ஆபத்துகளில் இருந்தும் விடுபடட்டும். எனவே, நீ கானகம் புகுவது உனக்குத் தகாது. இவ்வுலகில் மக்களைக் காப்பதே பெரும் தகுதியாகும் {பெரும் பலனைத் தரவல்லது ஆகும்}. அது போன்ற தகுதியைக் கானகத்தில் பெற முடியாது. எனவே, உனது இதயம் அவ்வழியில் செல்லாதிருக்கட்டும்.

பெரும் மன்னா {பிருகதஸ்வா}, பழங்காலத்தில் பெரும் அரசமுனிகள் தங்கள் குடிமக்களைக் காத்து பெற்ற தகுதிக்குச் {பலனுக்குச்} சமமாக எதுவும் காணப்படாது. ஒரு மன்னன் எப்போதும் தனது குடிகளைக் காக்க வேண்டும். எனவே, உனது மக்களை நீ காப்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {பிருகதஸ்வா}, {தற்போது} என்னால் எந்த தவ அர்ப்பணிப்புகளையும் அமைதியாகச் செய்ய முடியவில்லை. எனது ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜாலகம் என்ற பெயரில் அறியப்படும் மணற்கடல் இருக்கிறது. அது நீரற்ற சமதரை கொண்ட நாடாகும். அது பல யோஜனைகள் நீளமும் அகலமும் கொண்டிருக்கிறது. அந்தப் பாலைவனத்தில் துந்து என்ற பெயர் கொண்ட தானவர்களின் தலைவன் வசிக்கிறான்.

மதுவுக்கும், கைடபனுக்கும் மகனான துந்து {Dhundhu} கடுமையானவனும், பயங்கரமானவனும் பெரும் பராக்கிரமம் படைத்தவனும் ஆவான். அளவிடமுடியாத சக்தி படைத்த அந்தத் தானவன், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, பூமிக்கு அடியில் வசிக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, முதலில் அந்த அசுரனைக் கொன்றுவிட்டு, பிறகு நீ கானகத்திற்குச் செல்வதே உனக்குத் தகும். அந்த அசுரன் இப்போது பெரும் துறவை மேற்கொண்டு கடும் தவத்தில் அசையாமல் படுத்துக் கிடக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனது நோக்கம் மூவுலகங்களையும், தேவர்களையும் ஆள்வதேயாகும். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனாக இருப்பவனிடம் {பிரம்மனிடம்} வரத்தைப் பெற்ற அவ்வசுரன், தேவர்கள், தைத்தியர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் கொல்லப்பட இயலாதவனாகிவிட்டான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனைக் கொன்று அருள் பெற்றிரு. இவ்வழியில் {கானகம் செல்வதில்} உனது இதயத்தைத் திருப்பாதே.

அவனைக் கொல்வதால் சந்தேகமற நீ பெரியதை அடைவாய். அதுமட்டுமல்லாமல், நீ அழியாத நித்தியமான புகழை அடைவாய். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், மணலால் மூடப்பட்டுக்கிடக்கும் அந்தத் தீய அசுரன் {துந்து} எழும்பி, மூச்சு விட ஆரம்பிக்கிறான்.
அப்போது, மலைகள், கானகங்கள், காடுகளுடன் கூடிய இந்த முழு உலகமும் நடுங்கத் தொடங்குகிறது.
அவனின் {துந்துவின்} மூச்சு {அங்கிருக்கும்} மணலை மேகமென எழச் செந்து சூரியனையே மறைக்கிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு, எங்கும் நெருப்புப் பொறிகள் பறக்க, புகை சூழ பூமி நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, இவை யாவற்றின் காரணமாக என்னால் எனது ஆசிரமத்தில் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, உலகத்தின் நன்மைக்காக,  அவனைக் {துந்துவைக்} கொல். உண்மையில், அந்த அசுரன் கொல்லப்பட்டால், மூவுலகமும் அமைதியடைந்து மகிழ்ச்சியில் மூழ்கும்.

ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அந்த அசுரனைக் கொல்லத் தகுந்தவன் நீ என நான் முழுமையாக நம்புகிறேன். உனது சக்தியுடன், விஷ்ணு தனது சக்தியை இணைத்து மேன்மையாக்குவான். பழங்காலத்தில், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, எவன் கடுமையான இந்தப் பெரும் அசுரனைக் கொல்கிறானோ அவனை விஷ்ணுவின் சக்தி ஆக்கிரமிக்கும் என்று பழங்காலத்தில் விஷ்ணு வரமளித்திருக்கிறான். அந்த ஒப்பற்ற வைஷ்ணவ சக்தியை உன்னுள் தாங்கி, ஓ! பெரும் மன்னா {பிருகதஸ்வா}, அந்தக் கடும்பராக்கிரமம் கொண்ட அசுரனைக் {துந்துவைக்} கொல். நூற்றுக்கணக்கான வருடங்கள் முயன்றாலும், பெரும் சக்தி படைத்த துந்துவை, சக்தி குறைந்தவனால் உட்கொள்ளவே {எரிக்க} முடியாது. 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்