Monday, July 14, 2014

மது கைடப வதம்? - வனபர்வம் பகுதி 202

Madhu Kaitabha slained! | Vana Parva - Section 202 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

துந்துவைத் தன் மகன் குவலாஸ்வன் கொல்வான் என்று சொல்லி பிருகதஸ்வன் கானகம் சென்றது; துந்து யார் என்பது குறித்து யுதிஷ்டிரன் மார்க்கேண்டயரிடம் கேட்டது; மார்க்கண்டேயர் மது மற்றும் கைடபன் ஆகியோரின் கதையைச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "உதங்கர் இப்படிச் சொன்னதைக் கேட்ட வெல்லப்பட முடியாத அரச முனி {பிருகதஸ்வன்}, கூப்பிய கரங்களுடன், ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உதங்கரிடம், "ஓ! அந்தணரே {உதங்கரே}, உமது இந்த வரவு வீண்போகாது. ஓ! புனிதமானவரே {உதங்கரே}, குவலாஸ்வன் என்ற பெயரால் அறியப்படும் இந்த எனது மகன் உறுதியும், செயல்பாடும் மிக்கவன். பராக்கிரமத்திலும் இவன் இவ்வுலகில் நிகரற்றவன். இரும்பு கதைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட இவனின் {குவலாஸ்வனின்} மகன்களின் துணையுடன், உமக்கு ஏற்புடைய அனைத்தையும் இவன் {குவலாஸ்வன்} சந்தேகமற சாதிப்பான். ஓ! அந்தணரே, நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன். நான் ஓய்வு பெற்றுச் செல்ல எனக்கு விடை கொடும்" என்று சொன்னான் {பிருகதஸ்வன்}. மன்னனால் {பிருகதஸ்வனால்} இப்படிச் சொல்லப்பட்ட அளவிட முடியாத சக்தி கொண்ட முனிவர் {உதங்கர்}, "அப்படியே ஆகட்டும்" என்றார். பிறகு அரச முனியான பிருகதஸ்வன், தனது மகனை {குவலாஸ்வனை} அழைத்து, உயரான்ம உதங்கரின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் சொல்லி, "இது உன்னால் செய்யப்பட வேண்டும்" என்று பரிந்துரை செய்து, அற்புதமான வனத்திற்குள் நுழைந்தான்" என்றார் {மார்க்கண்டேயர்}.


யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும் சக்தி படைத்த தைத்தியன் {அசுரன் துந்து} யார்? அவன் யாருடைய மகன்? யாருடைய பேரன்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, நான் இந்தப் பலமிக்கத் தைத்தியனைக் {துந்துவைக்} குறித்து இதற்கு முன் கேள்விப்படவில்லை. ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ! துறவுச் செல்வத்தையும் பெரும் ஞானத்தையும் கொண்டவரே, நான் உண்மையிலேயே இவை அனைத்து விவரங்களையும் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன்!" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஓ பெரும் ஞானம் கொண்டவனே, நான் உண்மையில் அதன் விவரங்களைச் சொல்லும்போது, ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, அனைத்தையும் நடந்தவாறே அறிந்து கொள். அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, முழுப் படைப்புகளும் முடிவை அடைந்த போது, உலகம் முழுவதும் நீர்ப்பரப்பு பரந்து விரிந்திருந்தது. அண்டத்தின் ஊற்றுக் கண்ணும் படைப்பாளனுமான மங்காத நித்தியமானவனும், தவ வெற்றி பெற்ற முனிவர்களால் அண்டத்தின் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனும், பெரும் புனிதம் வாய்ந்தவனுமான விஷ்ணு, அளவிலா சக்தி கொண்ட பாம்பு சேசனின் அகலமான உடலில் யோகத் தூக்கத்தில் {யோகநித்திரையில்} கிடந்தான். அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அருள் கொண்டவனும், அழிவை அறியாதவனுமான புனிதமான ஹரி அப்படி முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டு கிடக்கும் அந்தப் பாம்பின் உடலில் கிடந்து, அந்தப் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனின் பிரகாசத்துக்கு இணையான பெரும் அழகு படைத்த தாமரை ஒன்று அவனது தொப்புளில் இருந்து உதித்தது.

சூரியனின் பிரகாசத்துக்கு ஒப்பான அந்தத் தாமரையில்தான், நான்கு கரங்களும், நான்கு முகங்களும், சுய சக்தியுடன் தொடர்ச்சியாக ஒப்பற்றவனாக இருப்பவனும், பெரும் பலமும், பராக்கிரமும் கொண்டவனும், உலகங்களின் தலைவனும், நான்கு வேதங்களுமான பெரும்பாட்டனான பிரம்மன் உதித்தான். பெரும் காந்தியும், கிரீடமும், கௌஸ்துப ரத்தினமும், ஊதா நிற பட்டும் அணிந்து பல யோஜனை நீளத்திற்குப் பாம்பின் உடலாலான அற்புதமான படுக்கையில் நீண்டு கிடப்பவன் {விஷ்ணு}, ஆயிரம் சூரியன்கள் சேர்ந்து ஒன்றாக ஆனது போல இருந்தான். சில காலங்களுக்குப் பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்கள் அவனைக் {விஷ்ணுவைக்} கண்டனர். {அந்தக் கோலத்தில் இருந்த} ஹரியையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டு தாமரையில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனையும் {பிரம்மனையும்} கண்ட மதுவும், கைடபனும் மிகவும் அலைந்த பிறகு, அளவிலா சக்தி கொண்ட பிரம்மனை பயமுறுத்தவும் அச்சுறுத்தவும் செய்தனர். அவர்களது தொடர் முயற்சிகளைக் கண்டு அச்சமுற்ற ஒப்பற்ற பிரம்மன் தனது இருக்கையிலேயே நடுங்க ஆரம்பித்தான். அவன் நடுங்கியதால், அவன் {பிரம்மன்} அமர்ந்திருந்த தாமரையின் தண்டும் நடுங்க ஆரம்பித்தது. தாமரைத்தண்டு நடுங்கியதால் கேசவன் {விஷ்ணு} விழித்துக் கொண்டான்.

துயில் கலைந்து எழுந்த கோவிந்தன் {விஷ்ணு} பெரும் சக்திமிக்க அந்தத் தானவர்களை {மது,கைடபர்களைக்} கண்டான். அவர்களைக் கண்ட அந்தத் தெய்வம் {விஷ்ணு}, "பலமிக்கவர்களே! வருக! நான் உங்களிடம் திருப்தி அடைந்திருக்கிறேன்! எனவே, நான் உங்களுக்கு அற்புதமான வரங்களை அருளுவேன்!" என்றான். இதனால் கர்வமுற்ற அந்தப் பலமிக்கத் தானவர்கள், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிரித்துக் கொண்டே ரிஷிகேசனிடம் {விஷ்ணுவிடம்}, "ஓ! தெய்வீகமானவனே, {நீ} எங்களிடம் வரங்களைக் கேள். ஓ தலைமை தெய்வமே, நாங்கள் வரம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். உண்மையில், நாங்கள் உனக்கு ஒரு வரத்தை அருள்வோம்! எனவே, உனது மனதில் தோன்றும் எதையும் எங்களிடம் கேள்" என்றனர். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, "வீரமிக்கவர்களே {மது,கைடபர்களே}, நான் உங்கள் வரத்தை ஏற்கிறேன். நான் ஒரு வரத்தை விரும்புகிறேன். நீங்கள் இருவரும் பெரும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இணையான ஆண் மகன் வேறு யாரும் இல்லை. ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்டவர்களே {மதுகைடபர்களே}, என்னால் கொல்லப்பட உங்களைக் கொடுங்கள். உலகத்தின் நன்மைக்காக நான் சாதிக்க விரும்புவது அதையே" என்றான் {விஷ்ணு}.

அந்தத் தெய்வத்தின் {விஷ்ணுவின்} வார்த்தைகளைக் கேட்ட மதுவும் கைடபனும், "நாங்கள் எப்போதும் பொய் பேசியதில்லை; கேலிக்காகக் கூடப் பொய்மை பேசியதில்லை; அப்படியிருக்கும்போது மற்ற நேரங்களைக் குறித்து நாங்கள் என்ன சொல்வோம்! ஓ! ஆண்மக்களில் முதன்மையானவனே {புருஷோத்தமா} {விஷ்ணுவே}, உண்மை மற்றும் அறநெறிகளில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். பலத்தில், உருவங்களில், அழகில், அறத்தில், துறவில், தானத்தில், நடத்தையில், நற்பண்புகளில், தன்னடக்கத்தில் எங்கள் இருவருக்கும் இணையான வேறு ஒருவன் கிடையாது. ஓ! கேசவா {விஷ்ணுவே}, ஒரு பெரிய ஆபத்து எங்களை {இப்போது} அணுகியிருக்கிறது. நீ சொன்னதைச் சாதித்துக் கொள். யாராலும் காலத்தை வெல்ல முடியாது. ஆனால், ஓ! தலைவா {விஷ்ணுவே}, உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் ஒன்றை விரும்புகிறோம். ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவனும் சிறந்தவனும் ஆனவனே {விஷ்ணுவே}, உண்மையில் மேல்மறைவே இல்லாத {மறைவில்லாத} இடத்தில் எங்களைக் கொல்வாயாக. ஓ! அற்புதமான கண்களைக் கொண்டவனே {விஷ்ணுவே}, நாங்கள் உனது மகன்களாகவும் விரும்புகிறோம். ஓ! தேவர்களின் தலைவா {விஷ்ணுவே} இதுவே நாங்கள் விரும்பும் வரம் என்பதை அறிந்து கொள். ஓ! தெய்வமே, நீ எங்களிடம் முதலில் உறுதி கூறியது பொய்யாக வேண்டாம்" என்றனர். அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, அவர்களுக்கு முறுமொழியாக, "ஆம். நான் நீங்கள் விரும்பியபடியே செய்வேன். அனைத்தும் நீங்கள் விரும்பியவாறே நடக்கும்!" என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு கோவிந்தன் {விஷ்ணு} சிந்தித்தான், மேல்மறைவு இல்லாத இடத்தை அவன் எங்கும் காணவில்லை. பூமியிலோ ஆகாயத்திலோ மேல்மறைவில்லாத இடத்தைக் காணாத அந்தத் தெய்வங்களில் முதன்மையானவன் {விஷ்ணு}, தனது தொடைகள் முழுதும் மறைவில்லாமல் இருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே வைத்து, அந்த ஒப்பற்ற தெய்வம் {விஷ்ணு}, தனது கூர்முனை கொண்ட சக்கரத்தால் மதுகைடபர்களின் தலைகளை அறுத்தான்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்