Sunday, August 10, 2014

விடைபெற்றான் கிருஷ்ணன்! - வனபர்வம் பகுதி 233

Krishna set out!  | Vana Parva - Section 233 | Mahabharata In Tamil

(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வத் தொடர்ச்சி)

சத்தியபாமா திரௌபதியிடம் அவளது பிள்ளைகளின் நலம் குறித்துச் சொன்னது; கிருஷ்ணனும் சத்தியபாமாவும் தங்கள் நகருக்குக் கிளம்பியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் மதுவைக் கொன்றவனான {மதுசூதனான} கேசவன் {கிருஷ்ணன்}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகன்களுடனும், மார்க்கண்டேயரின் தலைமையிலான அந்தணர்களுடனும் பல்வேறு ஏற்புடைய கதைகளைப் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் ஏறி சத்தியபாமாவை அழைத்தான்.

துருபதன் மகளை {திரௌபதியை} அணைத்துக் கொண்ட சத்தியபாமா, அவளிடம் {திரௌபதியிடம்} மனப்பூர்வமான வார்த்தைகளால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாள். அவள் {சத்தியபாமா}, "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, உனக்கு எந்தக் கவலையோ துயரமோ ஏற்படாதிருக்கட்டும்! தேவர்களுக்கு இணையான உனது கணவர்களால் வெல்லப்பட்ட பூமியை நீ நிச்சயம் திரும்ப அடைவாய், அதனால், உறக்கமில்லா இரவுகளை நீ கடக்க வேண்டிய காரணம் ஏதும் உனக்கு இல்லை. ஓ! கரிய கண்களையுடையவளே {திரௌபதி}, இது போன்ற நிலையையும், மங்களக்குறிகளையும் கொண்ட நீ நீண்ட நாட்களுக்குத் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாது. அனைத்து முட்களில் இருந்தும் விடுபட்டு, உனது கணவர்களுடன் நீ இந்த உலகை அமைதியாக அனுபவிப்பாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, திருதராஷ்டரன் மகன்கள் கொல்லப்பட்டு, அவர்களின் விரோதச் செயல்களுக்கான பழிதீர்க்கப்பட்ட பிறகு, இந்தப் பூமி யுதிஷ்டிரரால் ஆளப்படுவதை நீ நிச்சயம் காண்பாய். {வனவாசம் ஏற்று} நாட்டைவிட்டு வெளியேறும் வழியில் உன்னைக் கண்டு, கர்வத்தால் அறிவிழந்து சிரித்த கௌரவர்களின் மனைவியர், ஆதரவற்று விரக்தியுடன் இழிந்த நிலையை அடைவதை நீ விரைவில் காண்பாய். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ துன்பத்திலிருந்த போது உனக்குத் தீங்கிழைத்தவர்கள் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்தை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள். யுதிஷ்டிரருக்குப் பிறந்த பிரதிவிந்தியன், பீமருக்குப் பிறந்த சுதசோமன், அர்ஜுனருக்குப் பிறந்த ஸ்ருதகர்மா, நகுலருக்குப் பிறந்த சதாநீகன், சகதேவனுக்குப் பிறந்த ஸ்ருதசேனன் ஆகிய உன் மகன்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அபிமன்யுவைப் போலவே அவர்கள் அனைவரும் துவாராவதியில் {துவாரகையில்} இன்பமாகத் தங்கியிருக்கின்றனர்.

சுபத்திரையும் மகிழ்ச்சியாகத் தன் முழு ஆன்மாவோடு, உன்னைப் போலவே அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள். அவர்களைக் கண்டு உன்னைப் போலவே மகிழ்கிறாள். உண்மையில் அவர்களது துயரங்களில் துக்கப்பட்டு, மகிழ்ச்சியில் இன்பமும் கொள்கிறாள். பிரதியும்னனின் அன்னையும் {ருக்மிணியும்} அவர்களிடம் முழு ஆன்மாவோடு அன்பு செலுத்துகிறாள். தனது மகன்களான பானு மற்றும் பிறருடன் கேசவரும் {கிருஷ்ணரும்}, அவர்களைச் சிறந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். எனது மாமியார் {தேவகி} அவர்களை உண்ண வைத்து, உடுத்தி எப்போதும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். ராமரும் {பலராமர்}, மற்றும் பிறரும் சேர்ந்த அந்தகர்களும், விருஷ்ணிகளும் அவர்களைப் பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஓ! அழகிய மங்கையே {திரௌபதி}, பிரத்யும்னனிடம் அவர்கள் எப்படிப் பாசம் கொண்டிருக்கிறார்களோ அதற்குச் சமமாக உன் பிள்ளைகளிடமும் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஏற்றுக் கொள்ளும் வகையில், உண்மையான மனப்பூர்வமான வார்த்தைகளைப் பேசிய சத்தியபாமா வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேருக்குச் செல்ல விரும்பினாள். பிறகு அந்தக் கிருஷ்ணனின் மனைவி {சத்தியபாமா}, பாண்டவர்களின் ராணியை {திரௌபதியை} வலம் வந்தாள். இப்படிச் செய்த அழகிய சத்தியபாமா கிருஷ்ணனின் தேரில் ஏறினாள். திரௌபதிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவளைக்கண்டு சிரித்த யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, {தன்னைத் தொடர்ந்து வந்த} பாண்டவர்களைத் திரும்பி செல்லச் செய்து, (தனது தேரில் பூட்டப்பட்டிருந்த) வேகமான குதிரைகளில் தனது சொந்த நகரத்திற்குக் {துவாரகைக்குக்} கிளம்பினான்.

*********திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம் முற்றிற்று*********

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்