Monday, August 11, 2014

திருதராஷ்டிரன் புலம்பல்! - வனபர்வம் பகுதி 234

The lament of Dhritarashtra!  | Vana Parva - Section 234 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வம்)

துவைதவனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த ஓர் அந்தணர், திருதராஷ்டிரனிடம் சென்று பாண்டவர்களின் நிலையைக் குறித்துச் சொன்னது; பாண்டவர்களின் நிலையையும், அதற்கான காரணங்களையும் நினைத்து திருதராஷ்டிரன் புலம்பியது ...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, குளிர், கோடை, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றின் கடுமைத் தன்மைக்கு அக்கானகத்தில் முழுவதும் ஆட்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், துவைதம் என்ற பெயர் கொண்ட தடாகத்தோடு கூடிய வனத்தை அடைந்த பிறகு என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அத்தடாகத்திற்குப் பாண்டுவின் மகன்கள் வந்த பிறகு, மனிதர்கள் வசிக்காத ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு வசித்தனர். இனிமையான கானகத்திலும், எப்போதும் அழகாக இருக்கும் மலைகளிலும், அழகிய ஆறுகள் கொண்ட பள்ளத்தாக்குகளிலும் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்ட பிறகு, வேத கதைகள் அறிந்த பல மதிப்பிற்குரிய துறவிகள் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண அங்கே அடிக்கடி வந்து சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்}, வேதமறிந்த முனிவர்களால் எப்போதும் மதிக்கப்பட்டனர். ஒரு நாள், தனது பேச்சின் சக்திக்காக உலகத்தால் நன்கு அறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட அந்தணர் அந்தக் கௌரவ இளவரசர்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தார். பாண்டவர்களுடன் சிறிது நேரம் பேசிய அவர், தனது விருப்பத்தின்படி விசித்திரவீரியனுடைய அரசமகனின் {திருதராஷ்டிரனின்} அரசவைக்குச் சென்றார்.




குருக்களின் தலைவனான அந்த முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால} உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்ட அந்த அந்தணர் தனக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} கேட்டுக் கொண்டதற்கிணங்க, காற்றுக்கும் சூரியனுக்கும் தங்களை வெளிப்படுத்தி, மெலிந்து போய்க் கடும் துன்பத்தில் விழுந்திருக்கும் தர்மன் {யமன்}, பவனன் {வாயு}, இந்திரன் மற்றும் {அஸ்வினி} இரட்டையர்களின் மகன்களைக் குறித்துப் பேசினார். பிறகு அந்த அந்தணர், வீரர்களைக் கணவர்களாகக் கொண்டிருந்தும் துயரத்தில் மூழ்கி, முழுதும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} குறித்தும் பேசினார். அந்த அந்தணரின் வார்த்தைகளைக் கேட்ட விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, அரச பரம்பரையில் பிறந்து துன்பம் எனும் ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கும் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} நினைத்துத் துயரால் தாக்குண்டான். அனைத்தும் தனது சொந்தத் தவறால் நடந்தனவே என்று நினைத்து, தனது உள்ளார்ந்த ஆத்மா சோகத்தில் மூழ்கியதால், பெருமூச்சுவிட்டும் நடுங்கியும், பெரும் முயற்சியை மேற்கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டான் {திருதராஷ்டிரன்}.

அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, "ஐயோ, உண்மையானவனும், பக்திமானும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், ஒரு எதிரியும் இல்லாதவனும், முன்பு மென்மையான ரங்கு தோல்களாலான மெத்தைகளில் {ஹம்ஸதூளிகாசயனம்} படுத்தவனும், எனது மகன்களின் மூத்தவனுமான யுதிஷ்டிரன் இப்போது வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? ஐயோ, தினமும் காலையில் சூதர்களாலும் மாகதர்களாலும், பிற பாடகர்களாலும் இனிமையாகப் பாடப்பட்ட தன் புகழ் துதியைக் கேட்டு எழும்பிய, இந்திரனுக்கு நிகரான அந்தக் குருகுல இளவரசன் {யுதிஷ்டிரன்}, இப்போது, இரவின் சில மணிநேரத்தில் {விடியற்காலையில்} பறவைக்கூட்டங்களால் வெறுந்தரையில் இருந்து எழுவானே!

காற்றுக்கும் வெயிலுக்கும் உடலை வெளிப்படுத்தி, இளைத்துப் போய்க் கோபத்தால் நிறைந்திருக்கும் சிரமப்படத்தகாத விரிகோதரன் {பீமன்}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} முன்னிலையில் வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், புத்திசாலியுமான அர்ஜுனன், யுதிஷ்டிரனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தாலும், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைத்து இரவெல்லாம் உறங்கமாட்டானே! இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்}, கிருஷ்ணை, யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் துன்பத்தில் மூழ்கியிருப்பதைக் காணும் அர்ஜுனன், ஐயமின்றி, கடும் சக்தி கொண்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடி கோபத்தால் இரவெல்லாம் உறங்க மாட்டானே!

சொர்க்கத்தில் உள்ள அருளப்பட்ட இரு தேவர்களைப் போல இருக்கும் இரட்டையர்கள் {நகுலன் சகாதேவன் ஆகியோர்}, அருள் நிலைக்குத் தகுதியிருப்பினும், அறம் மற்றும் உண்மைக்குக் கட்டுப்பட்டு, (தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழிவாங்குவதைக் கட்டுப்படுத்திக் கொண்டு) விழிப்புடன் ஓய்வில்லாமல் தங்கள் இரவுகளைக் கழிப்பார்களே! வாயுத்தேவனின் பலத்திற்கு இணையான பலம் கொண்ட வாயு தேவனின் மகன் {பீமன்}, தனது அண்ணனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, பெருமூச்சுவிட்டபடி சந்தேகமற தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பான். அனைத்து போர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக இருப்பினும், அவன் {பீமன்} இப்போது, அறத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டுத் தரையில் அமைதியாகக் கிடக்கிறான். எனது பிள்ளைகளைக் கொல்ல நினைத்திருக்கும் அவன் நேரத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறான்.

ஏமாற்றுகரமாக யுதிஷ்டிரன் பகடையில் வீழ்த்தப்பட்ட போது, துச்சாசனன் பேசிய கொடும் வார்த்தைகள், விருகோதரனின் {பீமனின்} இதயத்தில் ஆழமாக மூழ்கி, எரிந்து கொண்டிருக்கும் வைக்கோல் கட்டு காய்ந்த விறகை உட்கொள்வது போல அவனை எரித்துக் கொண்டிருக்குமே! தர்மனின் மகன் எப்போதும் பாவ வழியில் செயல்படமாட்டான்; தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிவான்; ஆனால், நாடுகடத்தப்பட்ட வனவாழ்வின் விளைவாக, காற்றின் துணையோடு எரியும் காட்டுத்தீ போல, பீமனின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்குமே! வீரனான அவன் {பீமன்} அந்தக் கோபத்தினால் பிளக்கப்பட்டு, கைகளைப் பிசைந்து கொண்டு என் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் எரித்துவிடுவதைப் போல, மிகக் கோரமான சூடான பெருமூச்சை விட்டுக் கொண்டிருப்பானே! காண்டீவத்தைத் தாங்குபவனும் {அர்ஜுனனும்} விருகோதரனும் {பீமனும்} கோபப்படும்போது, யமனும் காலனும் போன்று, வஜ்ரங்களைப் போன்ற தங்கள் கணைகளைச் சிதறவிட்டு, எந்தத் தகுதி படைத்த எதிரியையும் கொன்று விடுவார்கள்.

ஐயோ, துரியோதனன், சகுனி, சூதனின் மகன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்ட துச்சாசனன் ஆகியோர், பகடை வழியாகப் பாண்டவர்களின் நாட்டைக் களவு செய்து, கொடூரமான அழிவின் குறியைக் கவனிக்காமல் தேனை மட்டும் காண்பதாக அல்லவா தெரிகிறது. சரியாகவோ, தவறாகவோ நடந்து கொண்ட மனிதன் தனது அச்செயலுக்கான கனியை {பலனை} எதிர்பார்க்கிறான். எனினும், அக்கனி {அந்தப் பலன்} அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தி, முழுமையாக அவனை முடக்கிவிடுகிறது. பின்பு அம்மனிதன் எப்படி விடுபடுவான்? நிலம் நன்கு உழப்பட்டு, அதில் விதைகளைத் தூவி, காலத்தில் {மழையின்} தேவன் {இந்திரன்} {மழையைப்} பொழிந்தாலும், அந்தப் பயிர் விளையாமல் போகலாம். இதைத்தான் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். உண்மையில், இங்கே எல்லாம் விதி சார்ந்தே நடக்கிறது என்கிறது பழமொழி; நான் நினைப்பதுபோல் அல்லாமல் இருந்தால் அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? {இதற்கு தெய்வத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?}

சூதாடியான சகுனி, எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளும் பாண்டுவின் மகனிடம் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டான். எனது தீய மகன்களின் மேல் கொண்ட பாசத்தினால் நானும் அது போலவே நடந்து கொண்டேன். ஐயோ, இதன் காரணமாகவே குருக்களுக்கு அழிவு காலம் வந்துவிட்டதே! ஓ!, ஒருவேளை, தவிர்க்க முடியாத அது {அழிவு} நடந்து விடுமோ! உந்தப்பட்டாலும் இல்லையென்றாலும் காற்று நகர்ந்தே தீரும். கருவுற்ற பெண் பிரசவிக்கத்தான் செய்வாள். வைகறை {விடியல்} இருளை விலக்கத்தான் செய்யும். பகல் மாலையில் மறைந்துதான் போகும்! நம்மாலோ, பிறராலோ ஈட்டப்பட்டது எதுவாயினும் {எந்தப் பொருளாயினும்}, மனிதர்கள் அதைச் செலவு செய்தாலும், செய்யாவிட்டாலும், நேரம் வரும்போது, அந்த நமது உடைமைகள் நமக்குத் துன்பத்தைக் கொண்டு வருகின்றன. இருந்தும் ஏன் மக்கள் செல்வத்தை ஈட்டுவதில் இவ்வளவு ஆவலாக உள்ளனர்?

உண்மையில், எதை அடைந்தாலும், அது விதியின் பயன் என்றால், அது பிரிக்கப்படாதபடி சிறுகச் சிறுக இழக்காமல் உடனே வெளியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டாமா? அது பாதுகாக்கப்படாமல் இருந்தால் நூறு துண்டுகளாக உடைந்து போகுமே! {பிரிக்கப்படாமல், சிறிது சிறிதாகச் செலவாகாமல் பொருள் பாதுகாக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்} ஆனால், நமது உடைமைகளின் தன்மை எதுவாக இருந்தாலும், இவ்வுலகில் நமது செயல்களின் வினை தொலைந்து போவதில்லை. {செய்த வினை பலன் கொடுக்காமல் போவதில்லை}.

வனத்தில் இருந்து இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்ற அர்ஜுனனின் சக்தியைப் பாரும்! நால்வகைத் தெய்வீக ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த அவன் {அர்ஜுனன்}, மீண்டும் உலகத்திற்குத் திரும்பிவிட்டான்! மனித உருவத்தோடு சொர்க்கத்திற்குச் சென்ற எந்த மனிதன், மீண்டும் திரும்பி வர விரும்புவான்? காலத்தால் அடிக்கப்பட்டு, மரணத்திற்கு ஆட்பட்டிருக்கும் எண்ணற்ற குருக்களைக் {கௌரவர்களைக்} கண்ட காரணத்தாலேயே அவன் {அர்ஜுனன்} திரும்பியிருக்கிறான். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் திறன் பெற்ற அர்ஜுனனே வில்லாளி! அவன் கையாளும் வில்லான காண்டீவம், கடும் ஊக்கம் கொண்டது. இது தவிர, அவன் தனது தெய்வீக ஆயுதங்களையும் வைத்திருக்கிறான்! இந்த மூன்றின் {தெய்வீக ஆயுதங்கள், காண்டீவம், அர்ஜுனன்} சக்தியை யாரால் தாங்க முடியும்?" என்றான் {திருதராஷ்டிரன்}.

அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுபலனின் மகன் {சகுனி}, கர்ணனுடன் அமர்ந்திருந்த துரியோதனனிடம் சென்று, அனைத்தையும் தனிமையில் சொன்னான். துரியோதனன் சிறு புத்தி கொண்டிருந்தவன் ஆனாலும், அவன் கேட்டதை நினைத்து துயரத்தால் நிறைந்தான்."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்