Friday, August 29, 2014

துர்வாசரை உபசரித்த துரியோதனன்! - வனபர்வம் பகுதி 260

Duryodhana entertained Durvasa!  | Vana Parva - Section 260 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வம்)

பத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? நான்  உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.

சில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்" என்று சொன்னார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ! அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்" என்று கோரினான் {துரியோதனன்}.

அதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்" என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்