Friday, August 29, 2014

சொர்க்கத்தை மறுத்த முத்கலர்! - வனபர்வம் பகுதி 259

Mudgala declined heaven!  | Vana Parva - Section 259 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சொர்க்கம், நிலையற்றது என்றெண்ணிய முத்கலர் சொர்க்கத்தை ஏற்க மறுத்தது; முத்கலரின் கதையைச் சொன்ன வியாசர் திரும்பிச் சென்றது...

தேவர்களின் தூதுவன் {முத்கலரிடம்}, "ஓ! பெரும் தவசியே {முத்கலரே}, நீர் குறைந்த அறிவுள்ளவராக இருக்கிறீர்; பெரும் புகழைத் தரத்தக்க தெய்வீக அருளை அடைந்தும், ஞானமற்ற மனிதரைப் போல இன்னும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர். ஓ! முனிவரே {முத்கலரே}, சொர்க்கம் என்று அறியப்படும் பகுதி, நமக்கு மேலே இருககிறது. கோபுரத்தின் உயரங்களுக்கு மேலே இருக்கும் அது, ஓ! தவசியே {முத்கலரே}, எப்போதும் தெய்வீகத் தேர்கள் பயணிக்கும் அற்புதமான பாதைகளைக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள், உண்மையற்றவர்கள், தவம் பயிலாதவர்கள், பெரும் வேள்விகளைச் செய்யாதவர்கள் ஆகியோர் அங்குச் செல்ல முடியாது. அறம்சார்ந்த ஆன்மா கொண்டவர்கள், மனதை அடக்கியவர்கள், தங்கள் உணர்வுகளை அடக்கியவர்கள், தங்கள் புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தீமை விலக்கியவர்கள், தானம் செய்வதில் முனைப்புடன் இருப்பவர்கள், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் வென்று, போர்வடுக்களை மேனியில் தாங்கிய மனிதர்கள் மட்டுமே அந்தப் பகுதிகளை அடைய முடியும். ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்கள் செய்பவர்களால் அடையப்படும் அவ்வுலகங்களில் பக்திமான்களே வசிக்கின்றனர்.




தேவர்கள், சத்யசுகள், வைஸ்வசுகள், பெரும் தவசிகள், யமன்கள், தர்மர்கள், கந்தர்வர்கள் மற்றும் அப்சரசுகளுக்குச் சொந்தமான, விரும்பிய அனைத்துப் பொருட்களையும் வழங்கவல்ல, அழகான, பளபளப்பான மற்றும் பிரகாசமான உலகங்கள் அங்கே {சொர்க்கத்தில்} இருக்கின்றன. அங்கேதான், மலைகளின் ஏகாதிபதியான பொன் மேரு முப்பத்துமூவாயிரம் யோஜனைகள் பரப்பிற்குப் பரந்திருக்கிறது. ஓ! முத்கலரே, அங்கேதான், நற்செயல்கள் புரிந்த மனிதர்கள் விளையாடும் நந்தனத்தைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் தோட்டங்கள் இருக்கின்றன. அங்கே {சொர்க்கத்தில்} பசி, தாகம், சோர்வு, அச்சம், அருவருக்கத்தக்கவை, அமங்களமானவை ஆகியன கிடையாது. அந்த இடத்தின் நறுமணம் இனிமையானது. அங்கே இருக்கும் தென்றல் தீண்டலுக்கு அருமையானது. ஓ! தவசியே {முத்கலரே}, செவி மற்றும் இதயத்தைக் கொள்ளையிடும் அனைத்து ஒலிகளும் அங்கே இருக்கின்றன. துக்கம், மூப்பு, உழைப்பு, பின்னிரக்கம் {தான் செய்த குற்றத்திற்காக வருந்துவது} ஆகியன அங்கே கிடையாது.

ஓ! முனிவரே {முத்கலரே}, ஒருவரது சொந்தச் செயல்களின் கனியாகப் பெறப்படும் அவ்வுலகம், இந்த இயல்பைக் கொண்டதாகவே இருக்கிறது. தாங்கள் செய்யும் நற்செயல்களின் காரணமாக மனிதர்கள் அங்கே செல்கிறார்கள். அங்கே வசிக்கும் மனிதர்கள், ஓ! முத்கலரே, தந்தையர் மற்றும் தாய்மார்களின் தகுதியால் அல்லாமல், தான் செய்யும் செயல்களில் உள்ள நற்தன்மையினாலேயே பிரகாசமாக இருக்கின்றனர். அங்கே வேர்வையோ, துர்நாற்றமோ, சிறுநீரோ கிடையாது. ஓ! முனிவரே {முத்கலரே}, அங்கே ஒருவரது ஆடைகளில் தூசு ஒட்டுவதில்லை. அவர்களது தெய்வீக மணம் கமழும் அற்புதமான {மலர்} மாலைகள், நறுமணமிக்கதாக இருக்கிறது. அவை ஒருபோதும் வாடுவதில்லை. ஓ! அந்தணரே {முத்கலரே}, அவர்கள் (நான் கொண்டு வந்திருக்கும்) இத்தகு தேர்களிலேயே பயணிக்கின்றனர். ஓ! வலிமைமிக்கத் தவசியே {முத்கலரே}, பொறாமை, துன்பம், களைப்பு, அறியாமை, துர்க்குணம் ஆகியவற்றைக் களைந்து, சொர்க்கத்தை அடைந்த மனிதர்கள், அப்பகுதிகளில் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். ஓ! முனிவர்களில் காளையே {முத்கலரே}, இத்தகு பகுதிகளுக்கு மேலே, அதற்கும் மேலே எனப் பிற உயர்ந்த தெய்வீக அறம் நிறைந்தவர்கள் உள்ள உலகங்கள் இருக்கின்றன. இவற்றில், அழகும், பிரகாசமும் மிக்கப் பிரம்ம லோகம் முதன்மையானதாக இருக்கிறது.

அங்கே, ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்களால் புனிதமடைந்த முனிவர்கள் செல்கின்றனர். அங்கே ருபுக்கள் என்ற பெயர் கொண்ட குறிப்பிட்ட சிலர் வசிக்கின்றனர். அவர்கள் {ருபுக்கள்} தேவர்களுக்கும் தேவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய பகுதிகள் மிகவும் அருள் நிறைந்தவையாக இருக்கின்றன. அவை தேவர்களாலும் வழிபடப்படுகின்றன. அவை தங்கள் சுய ஒளியால் பிரகாசித்து, விரும்பும் அனைத்துப் பொருட்களையும் கொடுக்கின்றன. அவர்களுக்கு {ருபுக்களுக்கு} பெண்களால் ஏற்படும் துன்பங்கள் இல்லை; அவர்கள் செல்வங்களை அடைவதில்லை; அவர்கள் சூதற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தானங்களாலோ, அமுதத்தாலோ வாழவில்லை. அவர்கள் புலன்களுக்குப் புலப்படாத தெய்வீக உருவங்களைக் கொண்டிருக்கின்றனர். தேவர்களுக்கு நித்தியமான தேவர்களான இவர்கள் மகிழ்ச்சியின் நிமித்தமாக மகிழ்ச்சியை விரும்புவதில்லை. கல்ப புரட்சியின் போதும் அவர்கள் மாற்றமடைவதில்லை. அவர்களுக்கு {ருபுக்களுக்கு} இன்பமுமில்லை, துன்பமுமில்லை. அப்படி இருக்கும்போது, ஓ! முனிவரே {முத்கலரே}, அவர்களுக்குக் கோபமோ, வெறுப்போ எப்படி ஏற்படும்?

ஓ! முத்கலரே, அவர்களது இந்த உயர்ந்த நிலை தேவர்களாலும் பேராசையுடன் விரும்பப்படுகிறது. அடைய கடினமான அந்த முடிசூட்டப்பட்ட விடுதலையை, விருப்பங்களுக்கு ஆட்படும் மனிதர்களால் அடையவே முடியாது. அந்தத் தேவர்களின் {ருபுக்களின்} எண்ணிக்கை முப்பத்துமூன்று {33} ஆகும். அவர்களது பகுதிகளுக்கு, அற்புத நோன்புகள் நோற்றவர்களும், விதிப்படி தானங்கள் அளித்தவர்களும் செல்கிறார்கள். நீரும் உமது தானங்களின் வெற்றியால் அவற்றை எளிதாக அடைந்துவிட்டீர். நீரும் உமது நற்செயல்களால் அடைந்த நிலையை, உமது தவத்துறவுகளால் அடைந்த அறத்தின் பிரகாசத்தைக் கொண்டு அனுபவிப்பீராக. ஓ! அந்தணரே {முத்கலரே}, பல உலகங்களைக் கொண்ட சொர்க்கத்தின் அருள்நிலை இதுவே.

இப்படியே தெய்வீக உலகங்களின் அருள்நிலையை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இப்போது அங்கே {சொர்க்கத்தில்} இருக்கும் சில குறைபாடுகளையும் கேளும். தெய்வீக உலகங்களில் இருக்கும் ஒரு மனிதன், தனது செயல்களுக்கான கனியை அறுத்துக் கொண்டிருக்கும்போது {செயல்களின் பலனைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது}, எந்தப் பிறவற்றிலும் ஈடுபடமுடியாது. தன் முந்தைய பிறவியின் பலன்களை, அவை தீரும் வரை அனுபவிக்க வேண்டும். பிறகு, தன் தகுதிகளை இழந்த உடன், அவ்வளவு பெரிய உயர்ந்த நிலையில் இருந்து அவர்கள் விழ நேரிடும். அதுவே சொர்க்கத்தின் குறைபாடு என்பது எனது கருத்து. ஓ! முத்கலரே, இன்பத்தில் மூழ்கிய மனம் கொண்ட மனிதன் விழ நேர்வது களங்கம் என்றே சொல்ல வேண்டும். மிக மங்களகரமான பிரகாசமான பகுதியில் இருந்து, தாழ்ந்த நிலை செல்லும் ஒருவன் அதிருப்தியும் வருத்தமும் கொள்வது, தாங்கிக் கொள்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கும். அப்படி விழுபவனின் மனம் அறியாமையில் மூழ்கி, உணர்ச்சிகளால் கலங்கடிக்கப்படுகிறது. {அங்கிருந்து} விழுவதற்கு முன்னால் மாலைகள் வாடுகிறது. அது அவர்களது இதயத்திற்கு அச்சத்தை ஊட்டுகிறது. ஓ! முத்கலரே, இந்தப் பெரும் குறைபாடுகள் பிரம்ம லோகம் வரை கூட நீள்கிறது.

இந்தத் தெய்வீக உலகங்களில், மனிதர்களின் நற்செயல்களால் செய்யப்பட்ட அறங்கள் எண்ணற்றவையாகும். ஓ! முனிவரே, அப்படி விழுபவர்கள், மனிதர்களிடையே தங்கள் பிறப்பை அடைவது, அவர்கள் பெற்றிருக்கும் தகுதிகளாலேயே ஆகும். பிறகு அவர்கள் பெரும் நற்பேறையும் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள். எனினும், இங்கே ஞானத்தை அடைய முடியாதவர்களால், தாழ்ந்த பிறப்பு அடையப்படுகிறது. இந்த உலகத்தில் செய்யப்படும் செயல்களின் கனிகள், அடுத்த உலகத்தில் அறுக்கப்படுகின்றன. ஓ! அந்தணரே {முத்கலரே}, இது {இவ்வுலகம்} செயல்களின் உலகம் என்றும், மற்றவை கனிகளின் {பலன்களின்} உலகம் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே, ஓ! முத்கலரே! நீர் கேட்டது அனைத்தும் குறித்து விவரித்துவிட்டேன். இப்போது, ஓ! பக்திமானே {முத்கலரே}, உமது கருணையால், நாம் இங்கிருந்து விரைவாகக் கிளம்புவோம்" என்றான் {தேவ தூதன்}.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்பேச்சைக் கேட்ட முத்கலர், மனதில் ஆலோசித்தார். ஆழ்ந்து ஆராய்ந்த பிறகு, அந்த முனிவர்களில் சிறந்தவர் {முத்கலர்}, அந்தத் தேவ தூதனிடம், “ஓ! தேவர்களின் தூதா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தந்தையே, நீ இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. எனகு இன்பத்தாலோ, இத்தகு பெரிய குறைபாடுகள் உடைய சொர்க்கத்தாலோ அடைய வேண்டியது ஒன்றுமில்லை. சொர்க்கத்தில் இன்புற்றிருக்கும் மனிதர்கள், அனைத்திற்கும் பிறகு, இவ்வுலகில் துன்பத்தையும், எல்லையற்ற வருத்தத்தையும் அடைகின்றனர். எனவே, நான் சொர்க்கம் செல்ல விரும்பவில்லை. எந்த உலகங்களில் மனிதர்கள் புலம்பத் தேவையில்லையோ, வலியடைய வேண்டியதில்லையோ, கிளர்ச்சியடைய வேண்டியதில்லையோ, அத்தகு வீழாத உலகை அடைய நான் முயல்வேன். தெய்வீக உலகங்களின் பெரும் குறைகளை நீ எனக்கு விவரித்தாய். இப்போது குறைகளற்ற உலகத்தை எனக்கு விவரிப்பாயாக" என்றார் {முத்கலர்}.

அதன் பேரில் தேவ தூதுவன் {முத்கலரிடம்}, “பிரம்மனின் வசிப்பிடத்திற்கு மேலே பரப்பிரம்மம் என்று அழைக்கப்படும் சுத்தமான, நித்தியமான, ஒளிரும் தன்மையை உடைய விஷ்ணுவின் இடம் இருக்கிறது. ஓ! அந்தணரே {முத்கலரே}, புலன்நுகர் பொருட்களுடன் தொடர்புடைய எந்த மனிதரும் அங்கே செல்ல முடியாது. ஆணவம், பேராசை, அறியாமை, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றுக்கு ஆட்படும் எந்த மனிதனும் அங்கே செல்ல முடியாது. பாசத்திலிருந்து விடுபட்டு, தற்பெருமையில் இருந்து விடுபட்டு முரண்படும் உணர்வுகளில் இருந்து விடுபட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, சிந்தனையிலும் யோகத்திலும் ஆழ்ந்து செல்லும் மனிதர்களே அங்கே {விஷ்ணுலோகத்திற்குச்} செல்ல முடியும்" என்றான் {தேவதூதன்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர் {முத்கலர்}, தேவ தூதனை வழியனுப்பினார். பிறகு உஞ்ச வகை வாழ்வு வாழும் அந்த அறம் சார்ந்தவர் {முத்கலர்}, முழு மனநிறைவை அடைந்தார். பிறகு, புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அவருக்குச் சமமானது; செங்கற்கட்டியும், கல்லும், தங்கமும் ஒரே அம்சமாக அவரது கண்களுக்குத் தெரிந்தது. பிரம்மத்தை எட்டுவதற்கான வழிகளைப் பெற்ற அவர், முழுதும் தியானத்திலேயே ஈடுபட்டார். பிறகு ஞானத்தால் சக்தியை அடைந்த அவர், அற்புதமான புரிதலை அடைந்து, நித்தியமாகக் கருதப்படும் உச்சநிலையான விடுதலையை {முக்தியை} அடைந்தார்.

எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் வருந்தக்கூடாது, உண்மையில் வளமான பேரரசை இழந்தாய். ஆனால், உனது தவத்தின் காரணமாக நீ அவற்றை மீட்பாய். அச்சில் சுழலும் ஒரு சக்கரத்தின் சுற்றளவில் இருக்கும் புள்ளியைப் போல, இன்பத்திற்குப் பின்பு துன்பமும், துன்பத்திற்குப் பின்பு இன்பமும், மாறி மாறி மனிதர்களுக்கு வருகின்றன. பதிமூன்றாவது {13} வருடத்தைக் கடந்த பிறகு, அளவிடமுடியாத வலிமைகொண்ட நீ, உன் தந்தை மற்றும் பாட்டனின் நாட்டை மீண்டும் பெறுவாய். எனவே, உனது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்" என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இதைச் சொன்ன வழிபடத்தகுந்த வியாசர், தவம் பயில்வதற்காகத் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.”

*********கோஷ யாத்ரா  பர்வம் முற்றிற்று*********


அடுத்த பகுதியில் இருந்து திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்க வேண்டும். ஆனால் Sacred texts வலைத்தளத்தில் தவறாக இருக்கிறதா? அல்லது கங்குலியே தவறாக இட்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை. கங்குலியின் புத்தகத்தில் திரௌபதி ஹரணப் பர்வம் 261ல்தான் ஆரம்பிக்கிறது (http://sacred-texts.com/hin/m03/m03261.htm).

நாம் அடுத்த பகுதியில் இருந்தே {அதாவது 260வது பகுதியில் இருந்தே} திரௌபதி ஹரணப் பர்வம் என்று கொள்வோம்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்