Tuesday, September 02, 2014

தொடர்ந்து சென்ற பாண்டவர்கள்! - வனபர்வம் பகுதி 267

The Pandavas pursued!  | Vana Parva - Section 267 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் தீய சகுனங்களைக் காண்பது; தங்கள் இருப்பிடம் விரைவது; திரௌபதியின் பணிப்பெண் அழுது கொண்டிருப்பதைக் காண்பது; திரௌபதி கடத்தப்பட்டதைச் சொன்ன பணிப்பெண்; பாண்டவர்கள் திரௌபதியைத் தேடி பின்தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் படையைக் கண்டடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பூமியின் மேல் இருக்கும் வில்லாளிகளில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} தனித்தனியாக எல்லாப்புறங்களிலும் சென்று, பல மான்களையும், எருமைகளையும் கொன்று நீண்ட நேரம் கழித்துச் சந்தித்துக் கொண்டனர். மான்கூட்டங்களாலும், வனவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் அப்பெரும் கானகத்தில், உரத்த குரலில் பறவைகள் அழுவதையும், வன விலங்குகளின் அலறல் மற்றும் கதறல்களையும் அவர்கள் கேட்டனர். யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், "சூரியனால் ஒளியூட்டப்பட்ட அத்திசையில் ஓடும் இந்த விலங்குகளும் பறவைகளும் பொருந்தாமல் கதறி, தீவிர பதட்டத்தைக் காட்டுகின்றன. இப்பெரும் கானகம் விரோதிகளால் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பதை இவையனைத்தும் இயம்புகின்றன. ஒரு நொடியும் தாமதியாமல் நமது {வேட்டைக்கான} துரத்தலைக் கைவிடுவோம். நமக்கு இந்த விளையாட்டு {வேட்டை} இன்னும் தேவையில்லை. என் இதயம் வலிக்கிறது. அது {இதயம்} எரிவது போலவும் தெரிகிறது. எனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறிவை அடக்கி, வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கருடனற்ற தடாகத்தில் பெரும்பாம்பு வசிப்பதைப் போல, தாகம் மிகுந்த மனிதர்களால் குடத்தின் உள்ளடக்கம் {குடத்தில் உள்ள நீர்} காலியாவதைப் போல, மன்னனையும், செழிப்பையும் இழந்த நாட்டைப் போல, இந்தக் காம்யக வனம் எனக்குத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, மிக வேகமாகச் செல்லும் சைந்தர்வ {Saindharva} வகைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட அழகிய பெரும் தேர்களை, சூறாவளியைப் போன்ற வேகத்துடன் தங்கள் வசிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அப்படித் தாங்கள் {வீடு} திரும்பிக் கொண்டிருந்த வழியில், சாலையோரத்தில் தங்கள் இடதுபக்கமாகப் பயங்கரமாக ஊளையிடும் ஒரு குள்ளநரியைக் கண்டனர். மன்னன் அதைக் கவனமாகக் கருதிப் பார்த்து, பீமனிடமும், தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, “விலங்கு வகைகளில் மிகவும் தாழ்வான இனத்தைச் சார்ந்த இந்தக் குள்ளநரியின் மொழி, நம்மை அவமதிக்க எண்ணும் பாவிகளான குருக்கள், வன்முறையில் ஈடுபட்டு நம்மை ஒடுக்குவதற்காக இங்கே வந்திருப்பதையே தெளிவாகக் குறிக்கிறது" என்றான். வேட்டையைக் கைவிட்ட பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டே, தங்கள் ஆசிரமம் இருந்த தோப்புக்குள் நுழைந்தனர். அங்கே தங்கள் அன்புக்குரியவளின் {திரௌபதியின்} பணிப்பெண்ணான தாத்ரேயிகை புலம்பி அழுது கொண்டிருப்பதைக் கண்டனர். 

தேரைவிட்ட விரைவாக இறங்கிய இந்திரசேனன், வேகமாக நடந்து அவளை அடைந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துயரத்தில் இருந்த அவளிடம் {தாத்ரேயிகையிடம்}, "தரையில் கிடக்கிறாயே, எது உன்னை இப்படி அழ வைக்கிறது? ஏன் உனது முகம் நிறமற்று போய் வறட்சியுடன் இருக்கிறது? ஒப்பற்ற அழகும், நீண்ட கண்களும், அந்தக் குரு குலக் காளைகளின் {பாண்டவர்களின்} இரண்டாம் உருவமுமான இளவரசி திரௌபதிக்கு எந்தக் கொடூர பாவியாலும் தீங்கு நேர்ந்ததா?

அந்த இளவரசி பூமியின் குடலுக்குள் நுழைந்தாலும், சொர்க்கத்திற்குப் பறந்தாலும், ஆழ்கடலுக்குள் பாய்ந்தாலும், கவலையில் இருக்கும் தர்மனின் மகனும் {யுதிஷ்டிரரும்}, அவரது தம்பிகளும் அவளைத் தொடர்ந்து செல்வார்கள். எதிரிகளைக் கொன்று எப்போதும் வெற்றிபெறக்கூடிய பலம் பொருந்திய பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமானவளும், அவர்களது உயிர்களுக்கு ஒப்பாகக் கருதியிருந்தவளுமான ரத்தினம் போன்ற இளவரசியை {திரௌபதியைக்} கடத்திச் செல்லத்தக்க மூடன் யார்?

இத்தகு வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} இதயங்களின் வெளி உருவமாக நடந்து கொண்டிருந்த அந்த இளவரசியைக் கடத்திச் செல்ல நினைத்த மனிதன் எவன் என்பதை நான் அறியவில்லையே? அவனது இதயத்தைத் துளைக்கும் கடும் கணைகள், பூமியில் இன்று விழப்போகின்றன? ஓ! மருட்சியுடைய மங்கையே, கிருஷ்ணை {திரௌபதி} இன்றே திரும்பிவிடுவாள். அவளுக்காக அழாதே. பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் எதிரிகளைக் கொன்று, மீண்டும் யக்ஞசேனியுடன் {திரௌபதியுடன்} இணைவார்கள்" என்றான்.

இப்படி அவனால் {இந்திரசேனனால்} சொல்லப்பட்ட தாத்ரேயிகை, தனது அழகிய முகத்தைத் துடைத்துக் கொண்டு, தேரோட்டியான இந்திரசேனனிடம், "ஐந்து இந்திரர்களைப் போன்ற பாண்டுவின் மகன்களை அலட்சியம் செய்து, கிருஷ்ணையை {திரௌபதியை} ஜயத்ரதன் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றான். அவன் சென்ற பாதை இன்னும் மறையவில்லை; இதோ மரங்களின் உடைந்த கிளைகள் இன்னமும் வாடவில்லை பாருங்கள். எனவே, உங்கள் தேர்களைத் திருப்பி அவளைப் பின் தொடருங்கள். இந்நேரத்திற்குள் அந்த இளவரசி வெகுதூரம் சென்றிருக்க முடியாது!

இந்திரனின் பராக்கிரமம் கொண்ட வீரர்களே {பாண்டவர்களே}, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் அடங்கி, தன் உணர்வையும், கன்னங்களின் நிறத்தையும் அவள் {திரௌபதி} இழந்தாள். வேள்விக் கரண்டி மூலம், சாம்பற்குவியலின் மேல் ஊற்றப்படும் புனிதமான காணிக்கையைப் போல, தகுதியற்ற மனிதனுக்குத் அடங்கி அவள் {திரௌபதி} சென்றாள். அழகாகச் செய்யப்பட்ட உங்கள் ஆடம்பர விற்களைத் {கவசங்களை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்} தரித்துக் கொண்டு, விற்களையும், அம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, அவளை {திரௌபதியை} விரைவாகப் பின்தொடருங்கள்.

ஓ!, தெளிந்த நெய், எரியாத நெல் உமியின் மேல் ஊற்றப்படாமலும்; மலர்களாலான மாலை இடுகாட்டில் வீசப்படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். ஓ!, வேள்வியைச் செய்யும் புரோகிதர்களின் கவனக்குறைவால், வேள்விக்கான சோமச்சாற்றை நாய் நக்கி விடாமல் {நாவினால் தொட்டுவிடாமல்} கவனமாக இருங்கள். ஓ!, நுழைய முடியாத காட்டில் இரை தேடிய அலையும் குள்ள நரியால் அல்லிமலர் முரட்டத்தனமாகக் கிழிக்கப்படாதிருக்கட்டும். ஓ!, தெளிந்த நெய் இருக்கும் வேள்விக்கான குடத்தை நாய் நக்குவதைப் {நாவினால் தொடுவதைப்} போல, அழகிய கண்களும், நேர்த்தியான மூக்கும் {நாசியும்}, சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறமும், அழகிய முகமும் கொண்ட உங்கள் மனைவியை {திரௌபதியை}, அந்த இழிந்த மனிதன் {ஜெயத்ரதன்} தனது நாவால் தொடாதிருக்கட்டும். இவ்வழியில் விரைவாகச் செல்லுங்கள். நேரம் உங்களைக் கடக்காதிருக்கட்டும் {நேரம் கடந்துவிடப்போகிறது}" என்றாள் {தாத்ரேயிகை}.

யுதிஷ்டிரன், "நன்மங்கையே {கல்யாணி}, இருப்பிடம் செல், உனது நாவை அடக்கு. எங்கள் முன்னிலையில் இது போன்று பேசாதே. யாராக இருப்பினும், அதிகாரத்தால் போதையுண்ட மன்னர்களும் இளவரசர்களும் துக்கம் வருவது நிச்சயம்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்}, பாம்புகளின் இரைப்பைப் போல அடிக்கடி ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியும், தங்கள் பெரிய விற்களின் நாணைச் சுண்டியபடியும், தங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் தொடர்ந்து சென்றனர். ஜெயத்ரதன் படைக்குச் சொந்தமான குதிரைகளின் குளம்படிகள் ஏற்படுத்திய தூசிப்படலத்தை அவர்கள் கண்டார்கள். குடிகெடுத்தவனின் {ஜெயத்ரதனின்} காலாட்படைக்கு {ravisher's infantry} மத்தியில் இருந்து கொண்டு, பீமனை விரைந்து செயல்படும்படி அறிவுறுத்திய தௌமியரைக் கண்டார்கள். பிறகு தாழாத மனம் கொண்ட அந்த இளவரசர்கள் (பாண்டுவின் மகன்கள்), அவருக்கு {தௌமியருக்கு} உற்சாகம் கொடுத்து, "மகிழ்ச்சியுடன் திரும்பி வாரும்" என்றனர்.

அதன் பின்னர்ப் பருந்துகள் தங்கள் இரையை நோக்கி கீழே பாய்வதைப் போல,  பெருஞ்சீற்றத்துடன், அவர்கள் {பாண்டவர்கள்} அப்படையை நோக்கி விரைந்தனர். இந்திரனின் பராக்கிரமத்தைக் கொண்ட அவர்கள், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தால் பெரும் கோபம் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜெயத்ரதனையும், அவனது தேரில் அமர்ந்திருந்த தங்கள் அன்புக்குரிய மனைவியையும் {திரௌபதியையும்} கண்ட பிறகு அவர்களது கோபம் எல்லையைக் கடந்தது. அந்தப் பெரும் வில்லாளிகளான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன்} மற்றும் மன்னன் {யுதிஷ்டிரன்} ஆகியோர் உரத்தவொலியுடன் ஜெயத்ரதனை நிற்கச் சொன்னார்கள். இதனால் அந்த எதிரி {ஜெயத்ரதன்} மனக்குழப்பமடைந்து, திசைகளின் அறிவை இழந்தான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்