Wednesday, September 03, 2014

பாண்டவர்களை அறிந்த ஜெயத்ரதன்! - வனபர்வம் பகுதி 268

Jayadratha learnt about Pandavas!  | Vana Parva - Section 268 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களைக் கண்ட ஜெயத்ரதன் அஞ்சுவது; திரௌபதியிடம் அவளது கணவர்களைக் குறித்துச் சொல்லுமாறு ஜெயத்ரதன் கேட்பது; திரௌபதி ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி அவர்களது பெயர்களையும் தன்மைகளையும் சொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பீமசேனன் மற்றும் அர்ஜுனனைக் கண்டு எதிரி க்ஷத்திரியர்கள் ஆத்திரமடைந்து, அந்தக் காட்டில் உரத்த ஒலி எழுப்பினர். குரு குலக் காளைகளின் கொடிக்கம்பங்களைக் கண்ட தீய மன்னன் ஜெயத்ரதன், நம்பிக்கையிழந்தான். பிறகு பிரகாசத்துடன் தனது {ஜெயத்ரதனின்} தேரில் அமர்ந்திருந்த யக்ஞசேனியிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, வந்து கொண்டிருக்கும் அந்த ஐந்து வீரர்களும் உனது கணவர்கள் என நம்புகிறேன். ஓ! அழகான தலைமுடி கொண்டவளே, பாண்டுவின் மகன்களை நீ நன்கு அறிந்தவளாகையால், அவர்கள் பயணிக்கும் தேரைச் சுட்டிக்காட்டி, அவர்களை {பாண்டவர்களைக்} குறித்து ஒருவர் ஒருவராக விவரித்துச் சொல்!” என்றான் {ஜெயத்ரதன்}.


இப்படிச் சொல்லப்பட்ட திரௌபதி, “உனது வாழ்நாள் குறையும்படி இந்த வன்செயலைச் செய்த பிறகு, ஓ! முட்டாளே! இப்போது அந்தப் பெரும் வீரர்களின் பெயர்களை அறிவதால் உனக்கு என்ன பயன்? எனது வீரக் கணவர்கள் வந்துவிட்டார்கள், களத்தில் உள்ள உங்களில் ஒருவரது உயிரும் இப்போது மிஞ்சாது. எனினும் மரணத்தருவாயில் கேட்டுவிட்டாய். இது விதிக்கு இசைவானதாக இருப்பதால், நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். தன் தம்பிகளுடன் கூடிய மன்னர் யுதிஷ்டிரரைக் கண்ட பிறகு, உன் நிமித்தமாகச் சிறு கவலையையோ, அச்சத்தையோ நான் அடையவில்லை.

தலைக்கு மேலே உள்ள கொடுக்கம்பத்தில் நந்தம், உபநந்தம் என்ற நிற்காமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய இரு ஒலிமிக்க மிருதங்கங்களைக் கொண்ட வீரர், ஓ! சௌவீரத் தலைவா {ஜெயத்ரதா}, தனது செயல்களின் அறநெறிகளைக் குறித்துச் சரியாக அறிந்தவராவார். வெற்றியடைந்த மனிதர்கள் எப்போதும் இவரைத் தொடர்கிறார்கள். சுத்தமான தங்கத்தைப் போன்ற நிறமும், உயர்ந்த மூக்கும், அகன்ற கண்களும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த எனது கணவரை தர்மனின் மகனும், குரு குலத்தின் முதன்மையானவருமான யுதிஷ்டிரர் என்ற பெயரில் மக்கள் அறிவார்கள். மனிதர்களின் இந்த அறம்சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, சரணடைந்தவன் எதிரியாக இருந்தாலும் அவனுக்கு உயிரை அளிப்பவராவார். எனவே, ஓ! மூடா! உனது ஆயுதங்களைக் கீழே வீசி, உனது நன்மைக்காகக் குவிந்த கரங்களுடன் அவரிடம் ஓடிச்சென்று உனது பாதுகாப்பை நாடு.

நீண்ட கரங்களைக் கொண்டு, முழுதும் வளர்ந்த ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரத்துடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, நெற்றியைச் சுருக்கி, புருவங்களை ஒன்றிணைத்துத் தேரில் அமர்ந்திருக்கும் அவர் எனது கணவர் விருகோதரராவார் {பீமர்}. பருத்த, வலுவான, உன்னதமான இனத்தைச் சார்ந்த, நன்கு பழகப்படுத்தப்பட்ட பெரும் சக்திகொண்ட குதிரைகளே அந்த வீரரின் {பீமரின்} தேர்களை இழுக்கின்றன. இவரின் சாதனைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். எனவே அவர் பீமன் என்ற பெயரால் பூமியில் அறியப்படுகிறார். அவருக்குத் தீங்கிழைத்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். பகைவரை அவர் ஒருபோதும் மறப்பதில்லை. சில போலிக் காரணம் {pretext} கொண்டோ அல்லது வேறு வழியிலோ தனது பழியைத் தீர்த்துக் கொள்வார். பழிவாங்காமல் அவர் அமைதியடைவதில்லை.

வில்லாளிகளில் முதன்மையானவரும், புத்திகூர்மை கொண்டவரும், புகழ்பெற்றவரும், புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரியோரை மதிப்பவரும், யுதிஷ்டிரின் தம்பியும் சீடருமான எனது கணவர் தனஞ்சயர் {அர்ஜுனர்} அதோ இருக்கிறார். காமத்தாலோ, அச்சத்தாலோ, கோபத்தாலோ அறத்தை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. கொடுஞ்செயலை அவர் ஒருபோதும் செய்வதுமில்லை. நெருப்பின் சக்தி கொண்டு, எதிரியைத் தாக்கி அழிப்பவரான அவர் குந்தியின் மகனாவார்.

அறநெறி மற்றும் பொருள் குறித்த அனைத்துக் கேள்விகளை அறிந்தவரும், அஞ்சுபவர்களின் அச்சங்களை விலக்குபவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், இந்த முழு உலகிலும் உள்ள மனிதர்களிலேயே அழகானவராகக் கருதப்படுபவரும், பாண்டுவின் அனைத்து மகன்களாலும் பாதுகாக்கப்படுபவரும், தங்கள் மேல் அவர் கொண்ட பக்தியினால் தங்கள் உயிரை விட உயர்வாக அவர்களால் {மற்ற பாண்டவர்களால்} கருதப்படுபவருமான அந்த இளைஞர் எனது கணவரான நகுலராவார். கை லாவகம் கொண்டவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், சகாதேவனைத் தனது தம்பியாகக் கொண்டவருமான அவர், தனது கைகளின் திறமையால் வாள் கொண்டு போரிடுபவராவார். தைத்தியர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனின் செயல்திறனைப் போல, போர்க்களத்தில் அவரது செயல்திறனை முட்டாள் மனிதனான நீ இன்று காண்பாய்.

ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவரும், புத்திக்கூர்மையும், ஞானமும் கொண்டவரும், தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கம் உடையவரும், பாண்டவர்களில் இளையவரும் அனைவருக்கும் பிடித்தமானவருமான அந்த வீரர் எனது கணவரான சகாதேவராவார். வீரம், அறிவு, வெஞ்சினம் ஆகியவற்றைக் கொண்ட அவருக்கு நிகரான நுண்ணறிவு கொண்டவரோ, சொல்திறன் கொண்டவரோ ஞானிகளின் மத்தியிலும் கிடையாது. குந்தியால் தன் இன்னுயிரைவிட உயர்வாகக் கருதப்படும் அவர் {சகாதேவர்}, எப்போதும் க்ஷத்திரியக் கடமைகள் குறித்த மனத்தோடேயே இருப்பவர். அறம் மற்றும் அறநெறிகளுக்கு எதிராக எதையும் சொல்வதைவிடத் தனது உயிரைத் தியாகம் செய்வதையோ நெருப்புக்குள் புகுவதையோ சிறப்பென நினைப்பவர் அவர் {சகாதேவர்}.

போர்க்களத்தில் உனது வீரர்களைப் பாண்டுவின் மகன்கள் கொன்ற பிறகு, கடலில் நகைச்சரக்குகளுடன் செல்லும் கப்பல், திமிங்கலத்தின் முதுகில் மோதி சிதறுவதைப் போல உனது படை கலக்கப்படுவதை {சிதறுவதை} நீ காண்பாய். உனது முட்டாள்த்தனத்தால் அலட்சியப்படுத்திய பாண்டு மகன்களின் பராக்கிரமம் குறித்து இப்படியே விளக்கிவிட்டேன். சிறிதும் தீங்குறாமல் அவர்களிடம் தப்பினால், நீ புது வாழ்வை அடைவாய்" என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரர்களைப் போன்ற, பிருதையின் {குந்தியின்} அந்த ஐந்து மகன்களும், கோபத்தால் நிறைந்து, கருணைக்காக மன்றாடும் பீதி நிறைந்த காலாட்படையை மட்டும் விட்டுவிட்டு, தேரோட்டிகளை நோக்கி விரைந்து, அவர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் தாக்கினர். தங்கள் அடர்த்தியான கணை மழையால் அந்தப் பகுதியையே அவர்கள் {பாண்டவர்கள்} இருளாக்கினர்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்