Friday, October 03, 2014

பெற்றோரை நினைத்து வருந்திய சத்யவான்! - வனபர்வம் பகுதி 295ஆ

The woe of Satyavan regarding his parents!  | Vana Parva - Section 295b | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

யமனிடம் வரங்களைப் பெற்ற சாவித்ரி, தனது கணவன் சத்யவான் சடலம் கிடந்த இடத்திற்குச் செல்வது; தூக்கத்தில் இருந்து எழுவது போலச் சத்யவான் எழுவது; தனக்கு என்ன நேர்ந்தது என்று சாவித்ரியிடம் கேட்பது; நாளை சொல்வதாக சாவித்ரி சொல்வது; இரவாகிவிட்டதால் அங்கேயே தங்குவதா அல்லது ஆசிரமத்தை நோக்கிச் செல்வதா என்று இருவரும் குழம்புவது; தன் பெற்றோரை நினைத்து வருந்திய சத்யவான் ஆசிரமத்திற்கு விரைந்து செல்ல வேண்டும் என்று கூறியது; இருவரும் ஆசிரமத்தை நோக்கிச் சென்றது...

சாவித்ரிக்கு இவ்வரங்களை அளித்து, அவளைத் தடுத்த யமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். யமன் சென்ற பிறகு, தனது கணவனின் {சத்யவானின்} சாம்பல் நிற சவம் கிடந்த இடத்திற்குச் சாவித்ரி திரும்பி, தனது தலைவன் தரையில் கிடப்பதைக் கண்டு, அவனை அணுகி, அவனைத் தூக்கி, அவனது தலையைத் தனது மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தாள். பிறகு தன் உணர்வுகள் மீண்ட சத்யவான், விசித்திரமான நிலத்தில் {அந்நிய தேசத்தில்} இருந்து சிறிது காலம் கழித்து வீடு திரும்பியவன் போலப் பாசத்துடன் சாவித்ரியை மீண்டும் மீண்டும் பார்த்து, அவளிடம், “ஐயோ, நீண்ட நேரம் தூங்கிவிட்டேனே! எதனால் நீ என்னை எழுப்பவில்லை? என்னை இழுத்துச் சென்ற அந்தக் கரிய மனிதன் எங்கே?” என்று கேட்டான். அவனின் {சத்யவானின்} வார்த்தைகளுக்குச் சாவித்ரி, “ஓ! மனிதர்களில் காளையே, நீர் நீண்ட நேரம் என் மடியில் தூங்கிவிட்டீர்! அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்துபவனான வணங்கத்தக்க யமன் சென்றுவிட்டான். ஓ! அருளப்பட்டவரே, நீர் {களைப்பாறி} புத்துணர்ச்சி அடைந்துவிட்டீர். ஓ! மன்னரின் மகனே {சத்யவானே}, உறக்கம் உம்மைக் கைவிட்டது! உம்மால் எழ இயலும் என்றால் எழுந்திரும்! இரவு ஆழ்ந்துவிட்டதைப் {இருளடர்ந்திருப்பதைப்} பாரும்!” என்றாள் {சாவித்ரி}.


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தன் நினைவை மீண்டும் அடைந்த சத்யவான், இனிய உறக்கத்தை அனுபவித்தவன் எழுவதைப் போல எழுந்து, எல்லாப்புறமும் வனத்தால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு {சத்யவான் சாவித்ரியிடம்}, “ஓ! கொடியிடை பெண்ணே {சாவித்ரியே}, பழங்களைக் கொள்வதற்காக நான் உன்னுடன் வந்தேன். பிறகு நான் மரத்தைப் பிளந்து கொண்டிருந்தபோது, என் தலையில் வலியை உணர்ந்தேன். என் தலையில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியாதவனாக இருந்தேன். எனவே, நான் உனது மடியில் உறங்கினேன். ஓ! மங்களகரமானவளே, இவை அனைத்தும் என் நினைவில் இருக்கிறது. பிறகு நீ என்னை அணைத்த போது, உறக்கம் எனது புலன்களைக் களவாடிவிட்டது. பிறகு சுற்றிலும் இருளாக இருப்பதை நான் கண்டேன். அதற்கு மத்தியில் மிகுந்த பிரகாசத்துடன் கூடிய ஒருவனை நான் கண்டேன். ஓ! கொடியிடையாளே, நீ அனைத்தையும் அறிவாயென்றால், நான் கண்டது கனவா அல்லது நனவா என்பதைச் சொல்!” என்றான் {.

அதன்பின், சாவித்ரி அவனிடம் {சத்யவானிடம்}, “இரவு ஆழமாகிறது. ஓ இளவரசே {சத்யவானே}, அனைத்தையும் நான் நாளை உமக்குச் சொல்கிறேன். எழும், எழுந்திரும், உமக்கு நன்மையே விளையட்டும்! ஓ! அற்புத நோன்புகள் கொண்டவரே {சத்யவானே}, உமது பெற்றோரைப் பாரும்! வெகுநேரத்திற்கு முன்னரே கதிரவன் இறங்கிவிட்டான். இரவும் ஆழமாகிறது. அச்சந்தரும் குரல் கொண்ட இரவு உலாவிகள் {ராட்சசகர்கள்} மகிழ்ச்சியுடன் நடந்து திரிகின்றனர். காட்டில் நடந்து செல்லும் கானக வாசிகளின் {விலங்குகளின்} காலடி ஓசைகள் கேட்கின்றன. தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் வரும் நரிகளின் பயங்கர ஊளைகளும் (அச்சத்தால்) எனது இதயத்தை நடுங்க வைக்கின்றன!” என்றாள். பிறகு சத்யவான் {சாவித்ரியிடம்}, “ஆழ்ந்த இருளால் மூடியிருக்கும் வனப்பகுதிகள் ஒரு பயங்கரத் தோற்றத்தை அணிந்திருக்கின்றன. எனவே, உன்னால் பாதையைக் கண்டுகொள்ள இயலாது. அதன் விளைவாக, {மேற்கொண்டு} செல்லவும் இயலாது!” என்றான் {சத்யவான்}.

அதற்குச் சாவித்ரி {சத்யவானிடம்}, “இன்று இந்தக் காட்டில் ஏற்பட்ட கடுந்தீயின் விளைவாக,  ஓர் உலர்ந்த மரம் {விழாமல்} எரிந்து கொண்டு நிற்கிறது. காற்றினால் தூண்டப்படும் நெருப்பு, இப்போதும் அப்போதும் நின்று நிதானித்து எரிந்து கொண்டிருக்கிறது. நான் சிறிது நெருப்பைக் கொண்டு வந்து சுற்றிலும் இருக்கும் இந்த விறகுகளை எரிக்கிறேன். நீர் அனைத்துக் கவலையும் விரட்டுவீராக. உமக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் காண்கிறேன். எனவே, நீர் போகத் துணியவில்லை என்றால், (இவை) அனைத்தையும் நானே செய்வேன். இருள் சூழ்ந்த இந்தக் கானகத்தில் உம்மாலும் வழியைக் கண்டுபிடிக்க இயலாது. நீர் விரும்பினால், நாளை இந்தக் காடு காணத்தக்க வகையில் இருக்கும்போது நாம் செல்லலாம். ஓ பாவமற்றவரே, இதுவே உமது விருப்பமென்றால், நாம் இந்த இரவை இங்கேயே கழிக்கலாம்!” என்றாள் {சாவித்ரி}.

இந்த அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான் {சாவித்ரியிடம்}, “என் தலைவலி நீங்கிவிட்டது; எனது அங்கங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறேன். உனது உதவியுடன், என் தந்தையையும், தாயையும் காண விரும்புகிறேன். இதற்கு முன் ஒருபோதும் நான் சரியான நேரம் கடந்த பின்னர் ஆசிரமம் திரும்பியது கிடையாது. மாலை வேளைக்கு முன்னரே என் தாய் என்னை ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லத் தடுப்பாள். காலையில் நான் வெளியே வந்தாலும், என்னைக் குறித்து எனது பெற்றோர் கவலை கொள்ளத் தொடங்குவர். பின்பு எனது தந்தை, காடுறை ஆசிரமங்களில் இருக்கும் கானகவாசிகளோடு சேர்ந்து என்னைத் தேடுவார். ஆழ்ந்த துயரத்தின் காரணமாக இதற்கு முன்னரே என் தந்தையும் தாயும், “நீ மிகவும் தாமதித்து வருகிறாய்!” என்று பல முறை என்னைக் கண்டித்துள்ளனர். என் நிமித்தம் அவர்களுக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன். என்னைக் காணாத போது அவர்கள் மிகுந்த துன்பத்தை அடைவார்கள். இந்த இரவுக்கு முந்தைய இரவில், என்னிடம் அன்பு கொண்ட அவ்விருவரும் ஆழ்ந்த வருத்தத்துடன் அழுது, என்னிடம், “ஓ! மகனே {சத்யவானே}, உன்னை இழந்தால், நாங்கள் இருவரும் ஒருக்கணமேனும் வாழ மாட்டோம்! நீ வாழும் காலம் வரைதான் நிச்சயம் நாங்கள் வாழ்வோம். இந்தக் குருடர்களுக்கு நீ தான் ஊன்றுகோல்; நமது குலம் அழியாமல் இருப்பது உன் கையிலேயே இருக்கிறது. எங்கள் ஈமப் பிண்டம், எங்கள் புகழ், எங்கள் வம்சம் ஆகியன உன்னை நம்பியே இருக்கின்றன” என்றனர்.

எனது தாய் முதிர்ந்தவள்; என் தந்தையும் அப்படியே. நிச்சயம் நானே அவர்களது ஊன்றுகோல். இரவில் என்னை அவர்கள் காணவில்லையென்றால், அவர்களது நிலைமை என்னவாகும்? குற்றமற்ற என் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஆபத்தில் இருப்பதற்கும், இதயம் பிளக்கும் துயரத்தில் நான் சிக்கவும் காரணமாக இருந்த எனது தூக்கத்தை நான் வெறுக்கிறேன். என் தந்தையும், தாயுமில்லாது என்னால் உயிரைத் தாங்க இயலாது. துன்பத்தால் ஆறுதலடையாத மனம் கொண்ட எனது குருட்டுத் தந்தை, இந்நேரம், ஆசிரமவாசிகள் அனைவரிடமும் என்னைக் குறித்துக் கேட்டுக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். ஓ! அழகான பெண்ணே {சாவித்ரியே}, நான் எனது தந்தைக்காகவும், தன் தலைவருக்கு எப்போதும் கீழ்ப்படியும் எனது பலவீனமான தாய்க்காகவும் வருந்துவது போல, எனக்காக வருந்த மாட்டேன். என்னைக் குறித்த வேதனையால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்கள் வாழும் வரையே நான் எனது உயிரைப் பிடித்திருப்பேன். அவர்களை நானே பராமரிக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே நான் செய்ய வேண்டும் என்பதையும் நான் அறிவேன்!” என்றான் {சத்யவான்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தன் பெற்றோரிடம் அன்பும் மதிப்பும் கொண்ட அந்த அறம் சார்ந்த இளைஞன் {சத்யவான்} இதைச் சொன்ன பிறகு, துக்கத்தால் பாதிக்கப்பட்டுத் தனது கரங்களை உயர்த்தி, துன்பக் குரலில் {அழுது} புலம்பத் தொடங்கினான். துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது தலைவனைக் கண்ட அறம்சார்ந்த சாவித்ரி, அவனது கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்து {சாவித்ரி சத்யவானிடம்},நான் நோன்புகள் நோற்றவளானால், கொடையளித்தவளானால், வேள்வி செய்தவளானால், எனது மாமனாருக்கும், மாமியாருக்கும், எனது கணவருக்கும் இந்த இரவு நன்மையானதாகட்டும்! கேலிக்காகக் கூட நான் ஒரு பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. எனது மாமனாரும், மாமியாரும் உண்மையின் அறத்தால் {சத்தியத்தால்} பிழைத்திருக்கட்டும்!” என்றாள். சத்யவான், “என் தந்தையையும், தாயையும் காண ஆவலோடு இருக்கிறேன்! எனவே, ஓ! சாவித்ரி, தாமதிக்காமல் புறப்படு. ஓ! அழகான காரிகையே, என் தந்தைக்கோ தாய்க்கோ ஏதும் தீங்கு நேர்ந்திருந்தால், நான் வாழமாட்டேன் என்று என்மேல் சத்தியமாகச் சொல்கிறேன். உனக்கு அறத்தின் மீது ஏதாவது மதிப்பிருந்தால், நான் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், எனக்கு ஏற்புடையதைச் செய்வது உனது கடமை என்றால் ஆசிரமத்திற்குப் புறப்படு!” என்றான் {சத்யவான்}.

பிறகு அந்த அழகிய சாவித்ரி எழுந்து, தனது கூந்தலை முடிந்து, தனது கணவனைக் கரங்களால் தூக்கி நிறுத்தினாள். அப்படி எழுந்த சத்யவான், தன் கைகளால் தனது அங்கங்களைத் துடைத்தான். அப்படியே அவன் சுற்றிலும் ஆய்வு செய்தபோது, அவனது கூடையில் அவனது கண்கள் விழுந்தன. பிறகு சாவித்ரி அவனிடம் {சத்யவானிடம்}, “நாளை நீர் பழங்களைச் சேகரிக்கலாம். உமது வசதிக்காக நான் உமது கோடரியைச் சுமந்து வருவேன்" என்றாள். பிறகு அந்தக் கூடையை ஒரு மரத்தின் கிளையில் தொங்கவிட்டு, கோடரியை எடுத்துக் கொண்ட அவள், தனது கணவனை மீண்டும் அணுகினாள். அழகிய தொடைகள் கொண்ட அந்தப் பெண், தனது கணவனின் இடது கரத்தைத் தனது இடது தோளில் வைத்து, தனது வலக்கரத்தால் அவனை அணைத்துக் கொண்டு, யானை போல நடக்கத் தொடங்கினாள்.

பிறகு சத்யவான் {சாவித்ரியிடம்}, “ஓ! பயந்தவளே, பழக்கத்தினால் (காட்டு) வழிகளை நான் அறிந்திருக்கிறேன். மேலும், மரத்தினூடே வரும் நிலவின் ஒளியால் அதை நான் காண முடிகிறது. இப்போது நாம், பழங்கள் சேகரிக்கக் காலையில் வந்த அதே பாதையை அடைந்திருக்கிறோம். ஓ! மங்களகரமானவளே, நாம் வந்த வழியிலேயே செல்; இனியும் நீ நமது பாதையைக் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. பலாச மரம் அடர்ந்த இந்தப் பாதையின் அருகில் இரண்டு வழிகள் பிரிகின்றன. அதற்கு வடக்கே இருக்கும் பாதையில் நீ செல்வாயாக. நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். எனது பலத்தையும் மீண்டும் அடைந்துவிட்டேன். என் தந்தையையும், தாயையும் காண விரும்புகிறேன்!” என்றான். இதைச் சொன்ன சத்யவான் ஆசிரமத்தை நோக்கி விரைவாகச் சென்றான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்