Monday, October 06, 2014

நாட்டை மீண்டும் அடைந்த சால்வன்! - வனபர்வம் பகுதி 297

The Salwa regained his country!  | Vana Parva - Section 297 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

தியுமத்சேனின் எதிரி, அவனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்று சால்வ நாட்டு மக்கள் வந்து சொல்வது; தியுமத்சேனன், தனது மகன் சத்யவான் மருமகள் சாவித்ரி மற்றும் மனைவி சைப்பியுடம் தனது நாட்டுக்குத் திரும்புவது; பட்டமேற்பது; சாவித்ரிக்கு தான் பெற்ற வரங்கள் பலிதமாவது; சாவித்ரியின் கதையைக் கேட்பதால் விளையும் நன்மை...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இரவு கழிந்து, சூரிய உருண்டை உதித்த போது, அந்தத் துறவிகள், தங்கள் காலைச் சடங்குகளை முடித்து ஒன்றாகக் கூடினார்கள். அந்த வலிமைமிக்கத் துறவிகள் என்னதான் மீண்டும் மீண்டும் சாவித்ரியின் உயர்ந்த நற்பேறைக் குறித்துத் தியுமத்சேனனிடம் பேசினாலும் அவர்கள் மனநிறைவு கொள்ளவே இல்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அப்போது, சால்வத்திலிருந்து பெரிய மக்கள் கூட்டம் ஒன்று அந்த ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. தியுமத்சேனனின் எதிரி, தனது சொந்த அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்ற செய்தியை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். நாட்டை அபகரித்தவன் தனது நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் சேர்ந்து, தனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான், அவனது துருப்புகளும் ஓடின என்பதைக் கேள்விப்பட்ட குடிமக்கள் அனைவரும் (முறைவழியிலான தங்கள் மன்னனின் சார்பில் நின்று), “கண்ணுள்ளவனோ, அது இல்லாதவனோ {குருடனோ}, அவனே {தியுமத்சேனனே} எங்கள் மன்னனாக இருக்க வேண்டும்" என்று எப்படி ஒருமனதுடன் சொல்லினர் என்பதையும் அவர்கள் சொன்னார்கள்.


மேலும் அவர்கள், “அந்தத் தீர்மானத்தின் விளைவாகவே நாங்கள் உம்மிடம் அனுப்பப்பட்டுள்ளோம். இந்தத் தேரும், நால்வகை அணிகளைக் கொண்ட இந்தப் படையும் உமக்காகவே இங்கே வந்திருக்கின்றன! ஓ! மன்னா {தியுமத்சேனா}, உமக்கு நன்மை விளையட்டும். வருவீராக! நீரே நகரில் {மன்னனாக} அறிவிக்கப்பட்டிருக்கிறீர்! உமது தந்தைக்கும், பாட்டனுக்கும் சொந்தமான உமது நிலையை {அரியணையை} எப்போதும் நிரப்புவீராக!” என்றனர். பார்வை அடைந்து, நல்ல உடல்நிலை கொண்டிருக்கும் மன்னனைக் {தியுமத்சேனனைக்} கண்ட அவர்கள், தங்கள் சிரம் தாழ்த்தினர்; அவர்களது விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. பிறகு அந்த ஆசிரமத்தில் வசித்த முதிர்ந்தவர்களையும் அந்தணர்களையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் வணங்கப்பட்ட அந்த மன்னன் {தியுமத்சேனன்} தனது நகருக்குக் கிளம்பினான். சைப்யை, சாவித்ரி மற்றும் படைவீரர்களால் சூழப்பட்டு, மனிதர்களின் தோளால் தாங்கப்பட்ட, நல்ல விரிப்புகள் கொண்ட வாகனத்தில் {பல்லக்கில்} அவன் {தியுமத்சேனன்} சென்றான்.

மகிழ்ச்சி நிறைந்த இதயங்கள் கொண்ட புரோகிதர்கள் அரியணையில் தியுமத்சேனனையும், பட்டத்து இளவரசனாக அவனது {தியுமத்சேனனின்} உயரான்ம மகனையும் {சத்யவானையும்} நிறுவினர். பிறகு நீண்ட காலம் சென்றதும், சால்வ குலத்தின் புகழை மேம்படுத்தும் வகையில் போர்க்களத்தில் பின்வாங்காத போர்க்குணமிக்க நூறு மகன்களைச் சாவித்ரி பெற்றாள். மேலும் அவள் {சாவித்ரி}, {தனது தாய்} மாளவியிடம் மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான {தனது தந்தை} அஸ்வபதி மூலம் பிறந்த நூறு பலமிக்க உடன்பிறப்புகளான {தனது} சகோதரர்களையும் அடைந்தாள். இப்படியே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, சாவித்ரி, தன்னையும், தன் தந்தை மற்றும் தாயையும் தனது மாமனார் மற்றும் மாமியாரையும், தனது கணவனின் குலத்திதையும் பரிதாபகரமான அவலநிலையில் இருந்து உயர்ந்த நற்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தினாள். அந்த மென்மையான பெண்ணான சாவித்ரியைப் போலவே, அற்புத குணம் கொண்ட இந்த மங்களகரமான துருபதன் மகளும் {திரௌபதியும்}, உங்கள் அனைவரையும் மீட்பாள்" என்றார் {மார்க்கண்டேயர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வாறு அந்த உயர் ஆன்ம {மகாத்மாவான} துறவியால் {மார்க்கண்டேயரால்} தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துன்பத்திலிருந்து மனம் விடுபட்டு, காம்யக வனத்தில் தொடர்ந்து வாழலானான். சாவித்ரி குறித்த இந்தச் சிறந்த கதையை மதிப்புடன் கேட்கும் ஒரு மனிதன், அனைத்திலும் வெற்றியையும், மகழ்ச்சியையும் அடைந்து, துன்பத்தை எப்போதும் சந்திக்காமல் இருப்பான்!” என்றார் {வைசம்பாயனர்}.



பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் இந்தப் பகுதியுடன் முடிந்து, அடுத்தப் பகுதியிலிருந்து குண்டலா ஹரணப் பர்வம் தொடங்க வேண்டும். ஆனால் கங்குலி பதிவிரதா மஹாத்மியப் பர்வம் என்றே தொடர்கிறார். குண்டலா ஹரணம் என்ற பர்வத்தையே அவர் சுட்டவில்லை. எனவே, நாமும் கங்குலியின் வழியே செல்கிறோம்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்