Saturday, October 11, 2014

அஸ்வ நதியில் மிதந்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 306

Karna floated in river Aswa!  | Vana Parva - Section 306 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

கவசத்துடனும் காதுகுண்டலங்களுடனும் குந்திக்குக் குழந்தை பிறந்தது; குந்தி குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து அஸ்வ நதிக்கு எடுத்துச்சென்று அழுது புலம்பியது; குந்தி அப்பெட்டியை அஸ்வ நதியில் விட்டது; பெட்டி அஸ்வநதியிலிருந்து கங்கைக்கு மிதந்து சென்று சம்பா என்ற நகரத்தை அடைந்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, வளர்பிறை முதல்நாளில் {பிரதமையில்}, வருடத்தின் பத்தாவது மாதத்தில் {தை மாதத்தில்}, {on the first day of the lighted fortnight during the tenth month of the year }, ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் தலைவன் {சூரியன்} மூலம் பிருதைக்குக் {குந்திக்கு} கருவுண்டானது. சிறந்த இடைகள் {excellent hips} கொண்ட அந்தக் காரிகை {குந்தி}, நண்பர்களிடம் கொண்ட பயத்தின் காரணமாக, யாரும் தன் நிலையை அறியாதவண்ணம் தான் கருவுற்றிருப்பதை மறைத்தாள். அந்தக் காரிகை {குந்தி}, தனது நிலையைக் கவனமாக மறைத்து, கன்னியருக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிலேயே முழுவதும் வாழ்ந்த போது, அவளது {குந்தியின்} செவிலியைத் {Nurse} தவிர {வளர்ப்புத்தாயைத் தவிர என்றும் சில பதிப்புகளில் இருக்கின்றன} வேறு யாரும் அந்த உண்மையை {அவளது உண்மை நிலையை} அறியவில்லை. தெய்வத்தின் அருளால், அந்த அழகிய கன்னிகை, குறித்த நேரத்தில் தேவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.


அக்குழந்தை, தனது தந்தையை {சூரியனைப்} போலவே கவசத்துடனும், பிரகாசமான காது குண்டலங்களுடனும் இருந்தான். அவன் சிங்கம் போன்ற கண்களும், காளையைப் போன்ற தோள்களும் கொண்டிருந்தான். குழந்தையைப் பெற்றவுடனேயே, அந்த அழகிய பெண், தனது செவிலியிடம் ஆலோசித்து, மென்மையான விரிப்பும், விலையுயர்ந்த தலையணையும் செடிநார் வேலைப்பாட்டுடனும் கூடிய ஒரு வசதியான {தாராளமான இடம் கொண்ட} மென்மையான பெட்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அதன் மேற்பரப்பு மெழுகால் {தேன்மெழுகால்} தீட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டியை ஒரு வளமான மூடி பொதிந்திருந்தது. கண்களில் கண்ணீருடன் அவள் {குந்தி} அந்தக் குழந்தையை அஸ்வ நதிக்குச் சுமந்து சென்று, அந்தக் கூடையை அதன் {அந்நதியின்} நீரில் அனுப்பினாள். திருமணமாகாத ஒரு பெண், குழந்தை பெறுவது முறையற்றது என்பதை அவள் {குந்தி} அறிந்திருந்தாலும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பெற்ற பாசத்தால் அவள் பரிதாபகரமாக அழுதாள். அப்படி அஸ்வ நதியின் நீரில் பெட்டியை அனுப்பிய போது அழுது கொண்டே குந்தி சொன்ன வார்த்தைகளை {ஜனமேஜயா} நீ கேட்பாயாக!”

“ஓ! குழந்தாய், நிலம், நீர், ஆகாயம் மற்றும் தெய்வீகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவர் கையாலும் உனக்கு நன்மையே நேரிடட்டும். உனது பாதைகள் அனைத்தும் மங்களகரமானவையாக இருக்கட்டும்! எந்த ஒருவரும் உன் வழியைத் தடை செய்யாதிருக்கட்டும்! ஓ! மகனே, உன்னைக் கடக்க நேரிடும் அனைவரின் இதயங்களும் உன்னிடம் பகை கொள்ளாதிருக்கட்டும்! நீர்நிலைகளின் தலைவன் வருணன், உன்னை நீரில் பாதுகாக்கட்டும்! வானத்தை அதிகாரம் செய்யும் தெய்வம் உன்னை வானத்தில் முழுவதும் பாதுகாக்கட்டும்! ஓ! மகனே, விதியால் விதிக்கப்பட்டதற்கேற்ப நான் யாரிடம் உன்னைப் பெற்றேனோ அந்த வெப்பம் வெளியிடுபவர்களில் சிறந்தவரும், உனது தந்தையுமான சூரியன், உன்னை அனைத்து இடங்களிலும் காக்கட்டும்! ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருதர்கள், திசைப்புள்ளிகளுடன் கூடிய பெரும் இந்திரன், அவர்களுக்குத் தலைமையாக ஆள்பவர்கள் ஆகியோரும், தேவர்கள் அனைவரும் உன்னை அனைத்து இடங்களிலும் பாதுகாக்கட்டும்! இந்த உனது கவசத்தால் நான் அந்நிய நிலங்களிலும் உன்னை அடையாளங்காண்பேன்!

ஓ! மகனே, உனது தந்தையும், பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வீகமானவருமான சூரியன், ஓடையில் சென்று கொண்டிருக்கும் உன்னைத் தனது தெய்வீகப் பார்வையால் காண்பவராக இருப்பதால் அவர் நிச்சயம் அருளப்பட்டவரே! ஓ! தேவனால் பெறப்பட்டவனே {மகனே}, நீ தாகமடையும்போது உனக்கு உறிஞ்சக் கொடுப்பவளும் {பால் கொடுப்பவளும்}, உன்னை மகனாகக் கொள்பவளுமான மங்கையும் அருளப்பட்டவளே. தெய்வீக கவசத்தாலும், தெய்வீக காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர்களைப் போன்ற அகன்ற கண்களும், மெருகிடப்பட்ட தாமிரத்தைப் போன்றோ, தாமரை இதழ்களைப் போன்ற நிறமும், அழகிய நெற்றியும், சுருள் முனை கொண்ட முடியும் கொண்ட உன்னைத் தனது மகனாக ஏற்கப் போகிறவள் எப்பேற்பட்ட நற்கனவைக் கண்டிருப்பாளோ. ஓ! மகனே, தரையில் தவழ்ந்து, புழுதி பூசி, விளங்காத இனிமையான மழலைச் சொற்களை உச்சரிக்கும் உன்னைக் காண்பவள் நிச்சயம் அருளப்பட்டவளே! ஓ! மகனே, இமயத்தின் காடுகளில் பிறந்த சிங்கத்தைப் போல உயர்ந்த இளமையை நீ அடைவதைக் காணப் போகும் அவள் நிச்சயம் அருளப்பட்டவளே!” {என்று சொல்லி அழுதாள் குந்தி}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி நீண்ட நேரம் பரிதாபகரமாகப் புலம்பியழுத பிருதை {குந்தி}, அந்தக் கூடையை அஸ்வ நதியின் நீரில் வைத்தாள். தன் மகன் நிமித்தமாகத் துயர் கொண்டு பெரிதும் அழுத அந்தத் தாமரைக்கண் காரிகை {குந்தி}, தனது மகனை அடிக்கடி காண விரும்பினாலும், நள்ளிரவில் அந்தக் கூடையை விட்டுவிட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்ன நடந்தது என்பதைத் தனது தந்தை அறிந்து விடுவானோ என்று பயந்து கொண்டே, தனது செவிலியுடன் மீண்டும் மாளிகையை அடைந்தாள். அதே வேளையில், அந்தக் கூடை அஸ்வ நதியில் இருந்து சர்மண்வதி நதிக்கும், பிறகு சர்மண்வதியில் இருந்து யமுனைக்கும், அங்கிருந்து கங்கைக்கும் என மிதந்து கொண்டே கடந்து சென்றது. குழந்தையைக் கொண்டிருந்த அந்தக் கூடை, கங்கையின் அலைகளால் சுமந்து செல்லப்பட்டுச் சூத குலத்தவன் ஆளும் சம்பா என்ற ஒரு நகரத்தை அடைந்தது. தன் உடல் அணிந்திருந்த அந்தச் சிறந்த கவசத்தாலும், அமிர்தத்தாலான அந்தக் காது குண்டலங்களாலும், விதியால் இப்படி விதிக்கப்பட்டதாலுமே உண்மையில் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்