Sunday, October 12, 2014

கர்ணனின் இருப்பிடம் அறிந்த குந்தி! - வனபர்வம் பகுதி 307

Kunti knew whereabouts of  Karna!  | Vana Parva - Section 307 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

கங்கையில் மிதந்து வந்த பெட்டியை ராதை எடுப்பது; அதிரதன் அப்பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்தது; ராதை கர்ணனைத் தனது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டது; கர்ணன் அங்க தேசத்தில் வளர்வது; ஒற்றர்கள் மூலம் குந்தி கர்ணனைக் குறித்து அறிவது; இளைஞனானதும் கர்ணன் ஹஸ்தினாபுரம் வருவது; துரியோதனனுடன் கர்ணனுக்கு ஏற்பட்ட நட்பு; கர்ணன் பெரும் வில்லாளி என உலகம் புகழ்வது; அர்ஜுனனிடம் கர்ணனுக்கு ஏற்பட்ட போட்டி மனப்பான்மை; கர்ணனிடம் வந்த இந்திரன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் என்ற பெயர் கொண்ட ஒரு சூதன், தனது மனைவியுடன் கங்கையாற்றுக்கு வர நேர்ந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த அவனது {அதிரதனின்} மனைவியின் பெயர் ராதை ஆகும். அந்த உயர்ந்த அருள் பெற்ற காரிகை {ராதை}, ஒரு மகனை அடைய பெரும் முயற்சி செய்திருந்தாலும், ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, அப்படி ஒருவனைப் {ஒரு மகனைப்} பெறுவதில் தோல்வியுற்றிருந்தாள். கங்கையாற்றுக்கு வந்த அவள் {ராதை}, நீரோட்டத்தில் மிதந்து வரும் பெட்டியைக் கண்டாள். ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களுடனும், களிம்புகளுடனும் {மருந்துகளுடனும்} இருந்த அப்பெட்டியை ஜானவியின் {கங்கையின்} அலைகள் அவளிடம் {ராதையிடம்} கொண்டு வந்து சேர்த்தன. ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண் {ராதை}, அதைப் பிடிக்கச் செய்தாள். பிறகு அவள் தேரோட்டி சாதியைச் சேர்ந்த {தனது கணவன்} அதிரதனுக்கு அனைத்தையும் உரைத்தாள். இதைக்கேட்ட அதிரதன் நீர்நிலையில் இருந்து அப்பெட்டியை எடுத்து, {சில} கருவிகளைக் கொண்டு அதைத் திறந்தான். அவன் அதில் {அப்பெட்டியில்} காலைச் சூரியனைப் போன்ற பிள்ளையைக் கண்டான். அந்தக் குழந்தை தங்கக் கவசத்துடனும், காது குண்டலங்களுடன் கூடிய அழகிய முகத்துடன் இருந்தது. அதன்பிறகு அந்தத் தேரோட்டியும், அவனது மனைவியும் {ராதையும்} இத்தகு ஆச்சரியத்தால் தாக்கப்பட்டு, அதிசயத்தால் தங்கள் கண்களை அகல விரித்தனர். அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்திக் கொண்ட அதிரதன் தனது மனைவியிடம் {ராதையிடம்}, “ஓ! அச்சமுள்ள பெண்ணே {ராதை}, நான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற அதிசயத்தைக் கண்டதேயில்லை. நம்மிடம் வந்திருக்கும் இந்தக் குழந்தை தெய்வீகப் பிறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். உண்மையில், மகனற்ற எனக்குத் தேவர்களே இவனை அனுப்பி வைத்துள்ளனர்!” என்று சொல்லி, ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா} அந்தக் குழந்தையை ராதையிடம் கொடுத்தான்.


அதன்பிறகு ராதை, தேவவடிவமும், தெய்வீக பிறப்பும், தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசமும், சிறந்த அருளும் நிரம்பிய அக்குழந்தையை {கர்ணனை}, விதிப்படி {தன் மகனாக} தத்தெடுத்துக் கொண்டாள். அவளால் {ராதையால்} முறைப்படி வளர்க்கப்பட்ட அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்ட குழந்தை {கர்ணன்} வளரத் தொடங்கினான். கர்ணனைத் தத்தெடுத்த பிறகு அதிரதன், தனது மற்ற மகன்களைப் பெற்றான். பிரகாசமான கவசமும், பொன்மயமான காது குண்டலங்களும் பெற்ற அக்குழந்தைக்கு {கர்ணனுக்கு}, இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} வசுசேணன் என்று பெயரிட்டார்கள். இப்படியே பெரும் பிரகாசமும், அளவிடமுடியாத பராக்கிரமும் பெற்றவன் {கர்ணன்} தேரோட்டியின் {அதிரதனின்} மகனாகி, வசுசேணன் என்றும் விருஷன் என்றும் அறியப்பட்டான்.

தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை {குந்தி} தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை {கர்ணனை} யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்.

திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நட்பேற்பட்ட பிறகு, அவன் {கர்ணன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் காயமேற்படுத்தும் நோக்கம் கொண்டவனானான். உயர் ஆன்மா கொண்ட பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} சண்டை போடுவதையே {போரிடுவதையே} அவன் எப்போதும் விரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் {கர்ணனும் அர்ஜுனனும்} முதன்முதலாக ஒருவருக்கொருவர் பார்த்தபோதிலிருந்தே, கர்ணன் எப்போதும் அர்ஜுனனுக்குச் சவால் விடுவான். அர்ஜுனனும் அவனது பங்குக்கு  {கர்ணனிடம்} சவால் விடுவான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதுவே குந்தியிடம் தான் பெற்று, சூதர்கள் குலத்தால் வளர்க்கப்பட்ட கர்ணனைக் குறித்துச் சூரியன் அறிந்த ரகசியம் என்பதில் சந்தேகமில்லை.

காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் இருக்கும் அவனைக் {கர்ணனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனைப் {கர்ணனைப்} போரில் கொல்ல முடியாது என்று எண்ணி, அதனால் எப்போதும் {உள்ளத்தில்} பெரும் வலி கொண்டான். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நாளின் மத்திய வேளையில், கர்ணன் நீரில் இருந்து எழுந்ததும், கரங்கள் கூப்பி பிரகாசமிக்கச் சூரியனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் {கர்ணனிடம்} செல்வம் கேட்பதை அந்தணர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஒன்றைக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்கு ஏதுமில்லை. பிறகு, (இது போன்ற ஒரு சமயத்தில்) இந்திரன், அந்தண வேடம் பூண்டு அவன் {கர்ணன்} முன் தோன்றி, “எனக்குக் {பிட்சை} கொடு!” என்று கேட்டான். அதன் பிறகு ராதையின் மகன், “நீர் வரவேற்கப்படுகிறீர் {நல்வரவு}!” என்று மறுமொழி கூறினான்.



தேவி பாகவதத்தில் ஒரு இடத்தில்  தச்சன் என்றும், மறுஇடத்தில் தேரோட்டி என்றும்  அதிரதன் சொல்லப்படுகிறான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்