Saturday, October 11, 2014

கர்ணனுக்காக கவசகுண்டலங்கள் பெற்ற குந்தி! - வனபர்வம் பகுதி 305

Kunti obtained the ear-rings and the coat of mail for Karna!  | Vana Parva - Section 305 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

சூரியனைச் சமாதானப்படுத்த முயன்ற குந்தி; சூரியன் அவளுக்குக் காது குண்டலங்களும், கவசமும் கொண்ட மகன் பிறப்பான் என்று சொன்னது; குந்தி சூரியனை ஏற்றது; குந்தி மயங்கி விழுந்தது; சூரியன் அவளது கன்னித்தன்மையை அழிக்காது, தன்னை அவளது கருவறையில் வைத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த உன்னதமான பெண் {குந்தி} அவனிடம் {சூரியனிடம்} இனிய வார்த்தைகளில் பேசினாலும், அவளால் ஆயிரங்கதிர் கொண்ட தெய்வத்தின் {சூரியனின்} கருத்தை மாற்ற முடியவில்லை. இருளை அகற்றுபவனின் கருத்தை மாற்றுவதில் தோல்வியுற்ற அவள் {குந்தி}, கடைசியாகச் சாபத்துக்கஞ்சி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “என் காரியமாக எனது அப்பாவி தந்தையும் {குந்திபோஜனும்}, அந்தப் அந்தணரும் {துர்வாசரும்}, கோபக்கார சூரியனின் சாபத்தில் இருந்து எப்படித் தப்புவார்கள்? சக்தியும், தவமும் பாவங்களை அழிக்கவல்லதாயினும், முதிராத வயது கொண்ட நேர்மையானவர்கள், முட்டாள்தனமாக அவற்றை அணுக முடியாது. அது போன்ற வழியில் முட்டாள் தனமாக நடந்ததால்தான் நான் இன்று இந்த அஞ்சத்தக்க நிலையில் நிறுத்தப்பட்டுள்ளேன். உண்மையில் நான் இந்தத் தெய்வத்தின் {சூரியனின்} பிடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளேன். இருப்பினும், நானாகவே என் உடலை இவருக்கு {சூரியனுக்கு} கொடுத்து, பெரும் பாவத்தை எப்படிச் செய்ய முடியும்?” என்று நீண்ட நேரம் சிந்தித்தாள்.”


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சாபம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டு, அவளுக்குள்ளாகவே நிறையச் சிந்தித்ததால் புலன்களின் முழு உணர்வு மழுக்கம் {உணர்வு தெரியாத நிலை} அவளுக்கு ஏற்பட்டது. எதைத் தீர்மானிப்பது என்று அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். அந்தத் தெய்வத்திற்கு {சூரியனுக்குக்} கீழ்ப்படிந்தால் ஏற்படும் நண்பர்களின் நிந்தனை குறித்து ஒரு புறம் அஞ்சிய அவள் {குந்தி}, ஓ மன்னா {ஜனமேஜயா}, மறுபுறம் மறுத்தால் ஏற்படும் சாபத்தைக் குறித்தும் சிந்தித்த அந்தக் கன்னிகை கடைசியாக, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவனிடன் {சூரியனிடம்}, நடுங்கும் வார்த்தைகளின் நாணத்துடன், “ஓ! தேவரே {சூரியா}, என் தந்தை, தாய், நண்பர்கள் ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நான் கடமையை மீறுதல் என்பது நடக்கக்கூடாது. ஓ! தேவரே {சூரியனே}, உம்முடன் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்தேனானால், என் நிமித்தமாக எனது குலத்தின் மதிப்பு இவ்வுலகத்தில் தியாகம் செய்யப்பட வேண்டும். எனினும், ஓ! வெப்பமளிப்பவர்களில் முதன்மையானவரே {சூரியனே}, நீர் இதைத் தகுதியுடைய செயல் என்று கருதினால், எனது உறவினர்கள் என்னை உமக்கு அளிக்கவில்லையெனினும் நான் உமது விருப்பத்தை நிறைவேற்றுவேன்! நான் உமக்கு என்னை அளித்த பிறகும் நான் கற்புடன் நீடிக்க வேண்டும்! அறம், மதிப்பு, புகழ், ஒவ்வொரு உயிரினத்தின் உயிர் ஆகியன உம்மில் நிறுவப்பட்டுள்ளன என்பது நிச்சயம்!” என்றாள் {குந்தி}.

அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உனது தந்தையோ, தாயோ அல்லது மற்ற பிற பெரியோரோ உன்னை எனக்குக் கொடுக்கத் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை. ஓ! அழகான காரிகையே, உனக்கு நன்மையே விளையட்டும்! எனது வார்த்தைகளைக் கேள்! ஒரு கன்னிப் பெண் அனைவரின் துணையையும் விரும்புவதாலேயே, ஆசை என்ற பொருள் கொண்ட காமம் என்ற வேரில் இருந்து {வேர்ச்சொல்லில் இருந்து} அவளுக்குக் கன்னிகை {kanya} என்ற பெயர் உண்டானது. எனவே, ஓ! சிறந்த இடைகளும், அழகிய நிறமும் கொண்டவளே, ஒரு கன்னிகை, இவ்வுலகில் இயற்கையாகவே சுதந்திரமானவளாக இருக்கிறாள். ஓ! பெண்ணே, எனது கோரிக்கைக்கு உடன்படுவதால் நீ எந்தப் பாவத்திற்கான குற்ற உணர்வையும், எந்த வகையிலும் அடைய மாட்டாய். அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விரும்பும் நான் எவ்வாறு ஒரு அநீதியான செயலைச் செய்வேன்? ஆண்கள் பெண்கள் அனைவரும் எந்தத் தடைகளாலும் கட்டுப்படக்கூடாது என்பதே இயற்கையின் நியதி. இயற்கைக்கு மாறானதே {தவறானதே} எதிர் நிலை ஆகும். எனக்கு மனநிறைவளித்த பின்னரும் நீ கன்னியாகவே நீடிப்பாய். உனது மகனும் வலிய கரங்கள் கொண்டவனாகவும் சிறப்புமிக்கவனாகவும் இருப்பான்" என்றான் {சூரியன்}.

அதற்குப் பின்னர் குந்தி {சூரியனிடம்}, “ஓ! இருளை அகற்றுபவரே {சூரியனே}, நான் உம்மிடம் இருந்து மகனை அடைந்தால், அவன் கவசத்துடனும், காது குண்டலங்களுடனும், வலிய கரங்கள் கொண்டவனாகவும், பெரும் சக்தி நிறைந்தவனாகவும் இருக்கட்டும்!” என்றாள். அவளது {குந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “ஓ மேன்மையான கன்னிகையே {குந்தி}, எனது மகன் வலிய கரங்கள் கொண்டவனாகவும், காதுகுண்டலங்கள் மற்றும் கவசம் அணிந்தவனாகவும் இருப்பான். அவனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இரண்டும் அமிர்தத்தால் ஆனவையாக இருக்கும். அவனது கவசம் துளைக்க முடியாததாக இருக்கும்" என்றான் {சூரியன்}.

பிறகு குந்தி {சூரியனிடம்}, “நீர் என்னிடம் பெறும் மகனுடைய அந்தச் சிறந்த கவசமும், காதுகுண்டலங்களும் அமிர்தத்தாலானவை என்றால், ஓ! தேவரே, ஓ! வழிபடத்தகுந்த தெய்வமே {சூரியனே}, உமது நோக்கம் நிறைவடையட்டும்! அவன் {அந்த மகன்}, உம்மைப் போலவே சக்தியுள்ளவனாகவும், வலுவானவனாகவும், ஆற்றலுடையவனாகவும், அழகானவனாகவும் இருக்கட்டும்! அவன் அறம் நிறைந்தவனாக இருக்கட்டும்!” என்றாள். பிறகு சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இளவரசி, ஓ! சிறந்த காரிகையே {குந்தி}, இந்தக் காது குண்டலங்களை அதிதி எனக்குக் கொடுத்தாள். ஓ! அச்சமுள்ள பெண்ணே {குந்தி}, நான் இவற்றையும், சிறப்பான கவசத்தையும் உனது மகனுக்கு அளிப்பேன்!” என்றான். பிறகு குந்தி, “ஓ! வழிபடத்தகுந்தவரே, ஓ! ஒளியின் தலைவரே {சூரியனே}, எனது மகன் நீர் சொல்வது போல இருப்பானாகில், நான் உம்மை மனம் நிறையச் செய்வேன்!” என்றாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளது வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான். சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான அந்த விண்ணதிகாரி {சூரியன்}, தனது ஆன்மாவை யோகத்தில் நிலைக்க வைத்து, குந்திக்குள் நுழைந்து அவளது தொப்புளைத் தொட்டான். இதனால், சூரியனின் சக்தியின் நிமித்தமாக அந்தக் காரிகை {குந்தி}, மயங்கி விழுந்தாள். அந்த மதிப்பிற்குரிய பெண் பிறகு தனது கட்டிலில் விழுந்து, உணர்வுகளையும் இழந்தாள். பிறகு சூரியன் அவளிடம் {குந்தியிடம்}, “ஓ! அருள்நிறைந்த இடை கொண்டவளே {குந்தி}, ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக வரும் ஒரு மகனை நீ பெறுவாய். அதே வேளையில் நீ கன்னியாகவே இருப்பாய்" என்றான் {சூரியன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பெரும் பிரகாசம் கொண்ட சூரியன் செல்லத்தொடங்கிய போது, அந்தப் பெண் {குந்தி} நாணத்துடன், “அப்படியே ஆகட்டும்" என்றாள். இப்படியே மன்னன் குந்திபோஜனின் மகள் {குந்தி}, சூரியனால் தொந்தரவு செய்யப்பட்டு {importuned by Surya}, அவனிடம் {சூரியனிடம்} இருந்து ஒரு மகனை அடைந்து, உடைந்த கொடி போல அந்தச் சிறந்த படுக்கையில் மயங்கி விழுந்தாள். இப்படியே கடுங்கதிர்களைக் கொண்ட தெய்வம் {சூரியன்}, அவளை மயங்கச் செய்து, யோக சக்தியின் அறத்தால் அவளுக்குள் நுழைந்து, அவளின் {குந்தியின்} கருவறையில் தன்னையே வைத்தான். எனினும், அந்தத் தெய்வம் {சூரியன்}, சதையால் கன்னித் தன்மையழித்து அவளை {குந்தியை} மாசுபடுத்தவில்லை. சூரியன் சென்றதும், அந்தப் பெண் {குந்தி} தனது உணர்வை மீண்டும் பெற்றாள்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்