Wednesday, October 15, 2014

யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311இ

Yaksha's questions and Yudhishthira's answers!  | Vana Parva - Section 311c | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்...

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “மனிதனுடைய ஆன்மா எது? தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்? மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது? அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?” என்று கேட்டான்.
அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா; மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}; மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}; தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}” என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது? ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது? லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது? அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பாரட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் செயல்திறனே {skill} சிறந்தது; உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்; லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல்நலமே {ஆரோக்கியம்}; அனைத்துவகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மனநிறைவே" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது? எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது? அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காதது எது? கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}; மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன; மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காது; நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்?  எது துறக்கப்பட்டால், வருத்தத்துக்கு வழிவகுக்காது?  எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்? எது துறக்கப்பட்டால் ஒருவன் மகிழ்ச்சியடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது; கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழிவகுக்காது; ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது; பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்? நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காக {கொடுக்க வேண்டும்}? பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்காக {கொடுக்க வேண்டும்}? மன்னனுக்கு எதற்காக {கொடுக்க வேண்டும்}? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “அறத்தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்; நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்; பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்; அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உலகத்தை மூடியிருப்பது எது? தன்னைத்தானே ஒரு பொருள் கண்டறியமுடியாததற்குக் காரணமாக இருப்பது எது? நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது? சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “உலகம் இருளால் மூடியிருக்கிறது; ஒரு பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது; பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்; உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்? ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்; மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; அந்தணர்களுக்குத் தானம் இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வழி என்பது எது? நீராகப் பேசப்படுவது எது? உணவு எது? நஞ்சு எது? சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது? என்பதையும் சொல்லி, {நீரைக்} குடித்து, நீ விரும்பிய அளவு எடுத்துச்செல்!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “எது நன்மையோ அதுவே வழி [1]; வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது [2]; பசுவே உணவு [3]; வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம் {அந்தணர்களின் பொருள் விஷம் என்று வேறு பதிப்பில் இருக்கிறது}; ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம் [4]. ஓ! யக்ஷா, இவை அனைத்தையும் குறித்து நீ என்ன நினைப்பாய் என்பதை நான் அறிய மாட்டேன்" என்றான்.

[1] //இதற்கான கேள்வியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் {சம்ஸ்க்ருத மூலத்தில்} "திக்" என்பதாகும், அதன் பொருள் திசை என்பதாகும். நிச்சயமாக, இதன் தொடர்ச்சியாக வழி என்ற பொருளே வெளிப்படையாகத் தெரிகிறது. யுதிஷ்டிரனின் பதிலில் நன்மையான வழியில் நடப்பதே வழி என்ற பொருளே வருகிறது.// என்கிறார் கங்குலி

[2] //உண்மையில் நீரை, சுருதிகள் வெளி {ஆகாயம்} என்றே பேசுகின்றன. வேதத்தில் உள்ள அண்டவுற்பத்தியியல் {Vedic cosmogony} குறித்து யுதிஷ்டிரனின் ஞானத்தைச் சோதிப்பதற்கான கேள்விகள் இவை.// என்கிறார் கங்குலி.

[3] //பின்வரும் பொருளிலேயே பசுக்களே ஒரே உணவு என்று சுருதிகளில் பேசப்படுகிறது. பசுப் பால் கொடுக்கிறது. பால் நெய்யைக் கொடுக்கிறது. நெய் ஹோமத்தில் பயன்படுகிறது. ஹோமம் மேகங்களுக்குக் காரணமாகிறது. மேகங்கள் மழையைத் தருகின்றன. மழை, விதையை முளைக்கச் செய்து, உணவை உற்பத்தி செய்கிறது. நீலகண்டர் இதை ஓர் ஆன்மிக உணர்வுடன் தக்கபடி விளக்குகிறார். எனினும் அத்தகைய விளக்கம் இங்கே தேவையில்லை.// என்கிறார் கங்குலி.

[4] //இங்கே யுதிஷ்டிரன் சொல்ல நினைப்பது என்னவென்றால், சிராத்தத்திற்குக் குறித்த நேரம் என்பது இல்லை. எப்போது ஒரு நல்ல, திறன்மிக்கப் புரோகிதரை அடைய முடியுமோ அப்போது {சிராத்தம்} செய்யலாம்.// என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது? உண்மையான அடக்கம் {தமம்} எது? பொறுமை எனப்படுவது எது? வெட்கம் என்பது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு}; மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது; பகையைச் சகிப்பதே பொறுமை; தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} ஞானம் என்று சொல்லப்படுவது எது? அமைதி எது? கருணை எது? எளிமை என்று அழைக்கப்படுவது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்; இதய {மன} அமைதியே உண்மையான அமைதி; அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை; இதய அமைதி {மன அமைதியே} எளிமை" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வெல்லப்படமுடியாத எதிரி எது? மனிதனின் தீராத நோய் எது? எவ்வகை மனிதன் நேர்மையானவன்; எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கோபமே வெல்லப்பட முடியாத எதிரி; பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்; அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்; கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறியாமை என்பது எது? கர்வம் என்பது எது? சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது? துன்பமெனப் பேசப்படுவது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை. ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும். ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும். ஒருவனது அறியாமையே துக்கமாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "முனிவர்களால் நிலைமாறாஉறுதி எனச் சொல்லப்பட்டுள்ளது எது? பொறுமை எது? உண்மையான சுத்தம் என்பது எது? தானம் என்பது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமைமாறா உறுதியாகும். புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்; மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}. அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்? எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்? எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்? எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? ஆசையின் ஊற்றுக்கண்கள் எவை? பொறாமை எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும். ஞானமற்றவனே நாத்திகன், அது போலவே நாத்திகனே ஞானமற்றவன். உடைமைகளுக்குக் காரணமே ஆசை; இதய {மன} துக்கமே பொறாமை, வேறு எதுவுமில்லை" என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.

{யக்ஷனின் கேள்விகளும், யுதிஷ்டிரனின் பதில்களும் தொடரும்....}
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்