Tuesday, October 14, 2014

யக்ஷனின் கேள்விகளும்! யுதிஷ்டிரனின் பதில்களும்! - வனபர்வம் பகுதி 311ஆ

Yaksha's questions and Yudhishthira's answers!  | Vana Parva - Section 311b | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனிடம் யக்ஷன், தனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு நீர் குடிக்குமாறு சொன்னது; யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்தது; யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், “கடும் மொழியில் அறிக்கையிடப்பட்ட, இந்தச் சபிக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {Yudhishthira}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கு நின்று கொண்டிருந்த யக்ஷனை {Yaksha }அணுகினான். பிறகு அந்தப் பாரதர்களில் காளை {யுதிஷ்டிரன்}, வழக்கத்திற்கு மாறான கண்களும், பனை மரம் போன்ற உயர்ந்த பெரிய உடலும், நெருப்பைப் போலவோ சூரியனைப் போலவோ இருப்பவனும், தாங்க முடியாத பெரும் உருவம் கொண்ட மலை போன்றவனுமான யக்ஷன், ஒரு மரத்தில் இருந்து கொண்டு, மேகங்களுக்கு ஒப்பான ஆழ்ந்த கர்ஜனையை உரக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} என்னால் திரும்பத் திரும்பத் தடுக்கப்பட்டும் உனது தம்பிகள் வலுக்கட்டாயமாக நீரை எடுக்க முயன்றனர். அதற்காகவே அவர்கள் என்னால் கொல்லப்பட்டனர்! வாழ விரும்பும் ஒருவன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த நீரைக் குடிக்கலாகாது! ஓ! பிருதையின்  மகனே {{Son of Pritha - குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, நீ விரும்புமளவுக்கு {நீரை} எடுத்துச் செல்!” என்றான் {யக்ஷன்}.


யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “ஓ! யக்ஷா, ஏற்கனவே உனது உடைமையாக இருக்கும் ஒன்றின் மேல் நான் ஆசை கொள்ளவில்லை! ஓ! ஆடவரில் காளையே, தன்னையே பாராட்டிக் கொள்ளும் ஒருவனை அறம் சார்ந்த மனிதர்கள் அங்கீகரிப்பதில்லை. (எனவே, தற்பெருமை பேசாமல் உனது கேள்விகளுக்கு எனது புத்திக்கூர்மையினால் பதிலளிக்கிறேன்). நீ என்னிடம் கேள்!” என்றான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது சூரியனை உதிக்கச் செய்கிறது? யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்? எது அவனை மறையச் செய்கிறது? எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது; தேவர்கள் அவனுக்குத் துணையாக இருக்கின்றனர்; தர்மமே அவனை மறையச் செய்கிறது; அவன் {சூரியன்} உண்மையில் {சத்தியத்தில்} நிலைத்திருக்கிறான்" [1] என்று பதிலளித்தான். 

     [1] {ஆதித்தியன் என்பது சம்ஸ்க்ருத மூலத்தில் உள்ள சொல், கங்குலியில் Sun என்று குறிப்பிட்டுள்ளதால், சூரியன் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்} //கேள்வியிலும், பதிலிலும் உள்ள வார்த்தைகளில் எளிமையாகவும் வெளிப்படையாகவும் தெரியும் பொருளைத்தவிர, அதற்கு ஆன்மிக வகைச் சார்ந்த ஆழ்ந்த கருத்தும் உண்டு. இந்த வாசகத்தை நீலகண்டர் சரியாகப் புரிந்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆதித்தியன் என்பது பொதுவாகச் சூரியன் என்று பொருள்பட்டாலும், அது சுத்திகரிக்கப்படாத ஆன்மாவைச் சுட்டுகிறது. அப்படிப் பார்த்தால்,

    முதல் கேள்விக்கு “சுத்திகரிக்கப்படாத ஆன்மாவை யார் மேன்மையடையச் செய்வது?” என்ற பொருள்  பொருந்தி வரும். உலகம் சார்ந்த தொடர்புகளில் இருந்து ஆன்மா எழுவதே மேன்மையான செயல் எனப்படும். இதற்கான பதில், “பிரம்மம், அதாவது வேதம் அல்லது சுய அறிவு" எனக் கொள்ளலாம். தொடர்ந்து வரும்

    இரண்டாவது கேள்வியை "சுத்திகரிப்புப் பணியின் போது அந்த ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவை எவை?"
என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கான பதிலை, "தேவர்களைப் போலத் தெய்வீக இயல்பு கொண்ட தன்னடக்கம் மற்றும் பிற குணங்கள்" எனக் கொள்ள வேண்டும்.

    மூன்றாவது கேள்வியை, “ஆன்மாவை யார் ஓய்வு (நிலைக்கு) அழைத்துச் செல்கிறார்?" என்று புரிந்து கொண்டால், அதற்கான பதிலை, “அறம் {தர்மம்}, அதாவது நன்னெறி, நடத்தை {ஒழுக்கப்பண்பு}, அறநோன்புகள்" எனக் கொள்ள வேண்டும். ஓய்வுநிலை, உண்மை {சத்தியம்}, பரிசுத்தமான ஞானம் ஆகியவற்றை அடைவதற்கு முன்னர் ஒருவன் (கர்மாவை) செயல்கள் மூலம் கடக்க வேண்டும் என்று பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது.

    கடைசிக் கேள்வியை "எதில் ஆன்மா நிறுவப்பட்டுள்ளது?” என்று புரிந்து கொண்டு, அதற்கான பதிலாக, ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, “உண்மை {சத்தியம்}, அல்லது பரிசுத்த ஞானம்" என்று பதிலாகக் கொள்ள வேண்டும். விடுதலையின் வடிவம் ஆன்மா என்பதாலும், அனைத்து உடல் தொடர்புகளிலிருந்தும் {ஆன்மா} உயர எழ வேண்டும் என்பதாலும், அது {ஆன்மா} நோன்புகளையும் செயல்களையும் இனியும் நம்பியிருக்கவில்லை என்றும் ஆனால் அது {ஆன்மா} {ஜனனம் என்ற} உண்மை ஞானத்தில் அசைவற்று நிலைத்திருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்// என்கிறார் கங்குலி

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எதனால் ஒருவன் கற்றவனாகிறான்? எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்? இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்? மேலும் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்; தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்; புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான். பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்" என்று பதிலளித்தான். [2]

[2] திருதி, துவிதியை ஆகிய இரண்டையும் நீலகண்டர் ஆன்ம உணர்வுடனேயே விளக்குகிறார். எனினும் இங்கே ஆன்மீக விளக்கம் தேவையில்லை. திருதி என்பது புத்திக்கூர்மை நிலைத்திருக்கும் தன்மை; துவிதியை என்பது இரண்டாவது என்பதாகும். யுதிஷ்டிரன் இங்கே சொல்வதென்னவென்றால் தடுமாறாத நிலைத்த புத்திக்கூர்மையே பயனுள்ள நோக்கங்களுக்கு உதவுகிறது. என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான பக்திச்செயல் {அறம்} எது? அந்தணர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “வேதகல்வியில் அவர்களது தெய்வீகம் அடங்கியிருக்கிறது. அவர்களது தவமே பக்திமான்களுக்கான பக்தியாக இருக்கிறது; இறப்புக்கு ஆட்படும் அவர்களது குணமே மனிதத்தன்மை. அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான நடைமுறை {அறம்} என்ன? அவர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல இருக்கும் அவர்களது நடைமுறை {மறம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கணைகளும் ஆயுதமும் அவர்களது தெய்வீகம் ஆகும். பக்திமான்களுக்கு இருப்பது போல, வேள்விகள் கொண்டாடுவதே அவர்களது பக்திச்செயல் {அறம்} ஆகும். அச்சத்திற்கு ஆட்படுவதே அவர்களது மனிதத்தன்மையாகும். {துன்பப்படுவோரைக்} காப்பதை மறுத்தலே அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வேள்விக்கான சாமம் {ஸாமம்} என்பது எது? வேள்விக்கான யஜுஸ் என்பது எது? ஒரு வேள்விக்கான புகலிடம் எது? எது இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “வாழ்வே {உயிரே} வேள்வியின் சாமமாகும்; மனமே வேள்வியின் யஜுஸ் ஆகும். வேள்வியின் புகலிடமாக ரிக்கு {வேத வாக்கு} இருக்கிறது. அந்த ரிக்கு இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது" என்று பதிலளித்தான் [3]

[3] //"வேள்வி என்பது பரிசுத்தமான ஞானத்தை அடைவதற்கான ஆன்மத் தியாகம்" என்று நான் {கங்குலி} கருதுவது போல நீலகண்டர் இதைச் சரியாக விவரிக்கிறார். ஒருவன் வேள்வியைக் கொண்டாடும் நோக்கத்திற்குச் சாமம், யஜுர் மற்றும் ரிக்கு மந்திரங்கள் அனைத்தும் அவசியம். புறநிலை வேள்விக்குச் சாம யஜுர் வேத மந்திரங்கள் தேவை என்பது போல, அகநிலை வேள்வியில் உண்மை ஞானத்தை அடைய, வாழ்வு {உயிர்} மற்றும் மனம் ஆகியவை அவசியம். எந்தப் புறநிலை வேள்வியையும் ரிக்கு இல்லாமல், அதை முக்கியமாகக் கருதாமல் செய்ய முடியாதது போல, உண்மை ஞானத்தை அடையக் கருதும் அகநிலை வேள்விளையும் துதிகள் இல்லாமல் செய்ய முடியாது என்றும், ரிக்குகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன என்றும் நான்  {கங்குலி} கருதுகிறேன். இந்தப் பத்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள அக்னிஷ்டோமா அல்லது பிற வகை வேள்விச் சடங்குகளின் நெருக்கமான அறிமுகம் தேவை.// என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு {அ} வைசியருக்கு} முதன்மையான மதிப்புடையது {மதிப்புமிக்கது = சிறந்தது} எது? விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது எது? இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது எது? [4a] பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு} முதன்மையான மதிப்புடையது மழை; விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது விதை; பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} [4b] " என்று பதிலளித்தான்.

[4a] இந்தக் கேள்விக்கான பதிலை யுதிஷ்டிரன் சொல்வதாக கங்குலியில் காட்டப்பட்டவில்லை. வேறு பதிப்புகளில் செழிப்படைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது பசு என்று யுதிஷ்டிரன் சொன்னதாக இருக்கிறது. "gāvaḥ" என்று பசுக்களைக் குறிக்கும் சொல் சம்ஸ்க்ருத மூலத்தில் இருக்கிறது.

[4b] சில பதிப்புகள் அபதத்தம் என்றும் உவபதம் என்றும் குறிக்கின்றன. முன்னது சரியாக இருப்பின், அதன் பொருள் "நேர்வதில் சிறந்த பொருள் எது?" என்றாகும். நீலகண்டர் அவபதம் நிவபதம் ஆகிய இரண்டையும் ஆன்ம உணர்வாக விவரிக்கிறார். முதலில் அவர் "தேவர்களுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்" என்றும் இரண்டாவதாக "பித்ருகளுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்" என்று புரிந்து கொள்கிறார். இருப்பினும், வெளிப்படையாகப் பார்த்தால் ஆன்மிக விளக்கத்திற்கான தேவை இதற்கு இல்லை.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானது எது? சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது? காற்றைவிட வேகமானது எது? புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானவள் தாய்; சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை; காற்றைவிட வேகமானது மனம்; புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உறங்கும்போது கண்களை மூடாதது எது? பிறந்த பிறகும் நகராதது எது? இதயம் இல்லாதது எது? தன் சொந்த உத்வேகத்தால் வீங்குவது {Swells} {அதிகரிப்பது} எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "உறங்கும்போது மீன் கண்களை மூடுவதில்லை; பிறந்தும் நகராமல் இருப்பது முட்டை; இதயமற்றிருப்பது கல்; தனது சொந்த உத்வேகத்தால் அதிகரிப்பது ஆறு {நதி}" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்? இல்லறத்தானுக்கு யார் நண்பன்? நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்? சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "நாடுகடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே [5] நண்பன்; இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே; நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்; சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்" என்று பதிலளித்தான்.

[5] சார்த்த {sārthaḥ} என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதத்தில் வழிப்போக்கர் கூட்டம் என்று பொருள் என்கிறார் கங்குலி. வித்தையே நண்பன் என்றும் வேறு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிர்களுக்கும் விருந்தினன் யார்? நித்திய கடமை என்பது யாது?! ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அமிர்தம் என்பது என்ன? இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "அக்னியே அனைத்து உயிர்களுக்கு விருந்தினன்; பசுவின் பாலே அமிர்தம்; ஹோமமே நித்திய கடமை; இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது" என்று பதிலளித்தான் [6].

[6] அண்டத்தில் வியாபித்துள்ள பூதம் காற்று {வாயுவே} என்று சொல்வதற்குச் சுருதிகளில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்கிறார் கங்குலி.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எவன் தனியாக உலவுகிறான்? பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்? குளிர்ச்சிக்கான தீர்வு என்ன? பெரிய களம் எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "சூரியன் தனியாக உலவுகிறான்; சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான். குளிருக்கான தீர்வு நெருப்பு; பூமியே பெரிய களம்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தின் உயர்ந்த புகலிடம் எது? புகழுக்கு எது? சொர்க்கத்திற்கு எது? மகிழ்ச்சிக்கு எது?" என்று கேட்டான். யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஈகையே {தானமளிப்பது; Liberality = தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்: புகழுக்குக் கொடை; சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்}; மகிழ்ச்சிக்கு நன்னடத்தை {ஆகியன உயர்ந்த புகலிடங்களாக இருக்கின்றன}" என்று பதிலளித்தான் யுதிஷ்டிரன்.

{யக்ஷனின் கேள்விகளும், யுதிஷ்டிரனின் பதில்களும் தொடரும்....}
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்