Saturday, November 15, 2014

மனைவியைக் கண்டு அழுத பீமன்! - விராட பர்வம் பகுதி 20

Bhima wept seeing his wife! | Virata Parva - Section 20 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 7)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: திரௌபதி பீமனிடம் தனது துயர் நிறைந்த நிலையை எடுத்துரைப்பது; அரசியான தான் அடிமை நிலையை அடைந்து கீழானவர்களுக்குச் சேவகம் செய்யும் நிலை வந்ததை எடுத்துரைப்பது; தனது மனைவியின் தழும்பேறிய கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பீமன் அழுவது…

திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஐயோ, அந்த வெறிகொண்ட சூதாடியின் {யுதிஷ்டிரரின்} நிமித்தமாக, சைரந்திரி என்ற ஒரு வேடத்தில் அரண்மனையில் வாழ்ந்து கொண்டு, இப்போது, சுதேஷ்ணையின் கட்டளைக்குக் கீழ் {அடிமையாக} இருக்கிறேனே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, ஓர் இளவரசியான நான் இப்போது அடைந்திருக்கும் சோகம் நிறைந்த கசப்பான நிலையைப் பாரும். குறித்த இந்தக் காலம் முடிவதை எதிர்பார்த்து நான் வாழ்ந்து வருகிறேன் [1]. எனவே, அதீத துயரம் என்னுடையதே {எனக்கே}.

[1] “காலத்தைத் தன்னுடன் நிலையான ஒன்றாக இருக்க வைக்க இயன்றவளானாலும், தனது நாட்களை இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க முடியாமல், துயரத்தின் விளைவால், காலம் விரைவாகக் கடக்க வேண்டும் என்று விரும்பும் கட்டாய நிலையில் தான் இருப்பதாகத் திரௌபதி இங்குச் சொல்ல வருகிறாள்” என்று கங்குலி சொல்கிறார்.


மனிதர்களைப் பொறுத்தவரை நோக்கம் நிறைவேறுவது, வெற்றி, தோல்வி ஆகியன தோன்றி மறைவனவாகும் {நிலையற்றனவாகும்}. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, எனது கணவர்களின் செழுமை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். செழுமையும், வறுமையும் சக்கரத்தைப் போலச் சுழல்கின்றன. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, எனது கணவர்களின் செழுமை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் நான் வாழ்ந்து வருகிறேன். வெற்றியைக் கொண்டு வரும் அதே காரணமே தோல்வியையும் கொண்டு வரலாம். நான் இந்த நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். {அப்படியிருக்கும்போது}, ஓ! பீமசேனரே, நீர் ஏன் இறந்தவளாக என்னைக் கருதக்கூடாது? தானமளித்த மனிதர்கள் பிச்சையெடுத்ததையும், கொல்பவர்கள் கொல்லப்படுவதையும், பிறரை வீழ்த்துபவர்கள், எதிரிகளால் வீழ்ந்து போவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விதிக்கு எதுவும் கடினமானது அல்ல. எவராலும் விதியை வெல்ல முடியாது. இதன் காரணமாகவே நான் சாதகமான நற்பேறு திரும்புவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். காய்ந்த குளம் மீண்டும் நிறையும்; எனவே, சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துச் செழுமை திரும்பும் என நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றாக இருக்கும் ஒருவனின் தொழில் கலங்கிப் போவதைக் {அழிந்து போவதைக்} கண்டு வருவதால், எப்போதும் ஒரு விவேகி நற்பேறை மீண்டும் கொண்டுவர போராடக்கூடாது. {நன்றாக முயற்சி செய்தாலும், தெய்வத்தால் தொழில் அழிக்கப்பட்டால், விவேகமுள்ளவன் தெய்வத்தின் அருளைப் பெற எப்போதும் முயற்சிக்க வேண்டும்}. நான் துயரத்தில் இருக்கிறேன். நான் பேசும் வார்த்தைகளின் நோக்கத்தை நீர் கேட்டாலும், கேட்காவிட்டாலும், நான் அனைத்தையும் உமக்குச் சொல்வேன். இத்தகு துயரத்தில் விழுந்த பிறகும், பாண்டு மகன்களின் ராணியான துருபதனின் மகளைத் தவிர {திரௌபதியான என்னைத் தவிர} வேறு யார் வாழ விரும்புவார்கள்? ஓ! எதிரிகளை நசுக்குபவரே {பீமரே}, எனவே, எனக்கு நேரிட்ட பெருந்துன்பம், உண்மையில், மொத்த குரு குலத்தையும், பாஞ்சாலர்களையும், பாண்டுவின் மகன்களையும் தான் சிறுமைப்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சிக்கான காரணங்களான - எண்ணிலடங்கா சகோதரர்களும், மாமனாரும், மகன்களும் சூழ்ந்தபடி இருந்தும், என்னைத்தவிர வேறு எந்தப் பெண் இத்தகு துயரத்தால் பீடிக்கப்படுவாள்? என் பிள்ளைப்பருவத்தில் நான் தத்ரிக்கு {பிரம்மனுக்கு} விருப்பமில்லாத பெருங்குற்றத்தை நிச்சயமாகச் செய்திருக்க வேண்டும். அதனால்தான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீமரே}, அவனுடைய {பிரம்மனுடைய} வெறுப்பால் நான் இத்தகு விளைவுகளைச் சந்திக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, பெரும் துயரத்தில் கழிக்கப்பட்ட கானக வாழ்வு கூடக் கொடுக்காத மாற்றமான எனது தோல்நிறமிழப்பை நீர் குறித்துக் கொள்ளும்.

ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே, பீமரே}, முன்பு எனது மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை நீர் அறிவீர். அப்படிப்பட்ட நான் கூட அடிமைத்தனத்தில் இப்போது மூழ்கிவிட்டேன். மிகுந்த மன உளைச்சல் அடைந்திருப்பதால், என்னால் ஓய்வைப் பெற {மன அமைதி காண} முடியவில்லை. வலிய கரங்கள் கொண்டவரும், பயங்கர வில்லாளியுமான பிருதையின் மகன் தனஞ்சயர் {குந்தியின் மகன் அர்ஜுனர்}, அணைந்த நெருப்பைப் போல இப்போது வாழ நேர்வதால், இவை அனைத்தும் விதியால் ஏற்பட்டதே என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே, பீமரே}, (இவ்வுலகின்) உயிரினங்களின் விதியை மனிதர்கள் புரிந்து கொள்வது இயலாததாகும். எனவே, உங்களுடைய இந்த வீழ்ச்சி முன்யோசனையால் தவிர்க்கப்பட முடியாதது என்றே நான் நினைக்கிறேன்.

ஐயோ, இந்திரர்களை நிகர்த்த உங்கள் அனைவரின் வசதிகளைக் கவனித்து வந்த கற்புடைய, மேன்மையானவளே கூட {திரௌபதியான நானே கூட}, தன்னைவிட {என்னைவிட} தகுதியில் குறைந்தவர்களின் வசதிகளைக் கவனிக்கும் நிலையை அடைய நேரிட்டதே. ஓ! பாண்டவரே {பீமரே} எனது நிலைமையைப் பாரும். இதற்கு நான் தகுதியானவள் இல்லை {இது எனக்குத் தகுந்ததன்று}. நீங்கள் உயிரோடு இருந்தாலும், காலம் கொண்டு வந்த தலைகீழ் மாற்றத்தை இதோ பாரும். கடல் நுனிவரையுள்ள மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவள், சுதேஷ்ணையின் கட்டுப்பாட்டில், அவளுக்கு அஞ்சி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாள். முன்னும் பின்னும் தொடர்ந்து வரும் பணியாட்களைக் கொண்டிருந்தவள், ஐயோ, இப்போது சுதேஷ்ணைக்கு முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறாள்.

ஓ! கௌந்தேயரே {பீமரே}, இது தாங்க முடியாத எனது மற்றொரு துயரமாகும். ஓ! அதைக் கேளும். உமக்கு நன்மை விளையட்டும். குந்திக்கு அல்லாது, தனது பயன்பாட்டுக்குக் கூட வாசனைத் தைலங்களைச் அரைக்காதவள், இப்போது, (பிறருக்காக) சந்தனத்தை அரைத்துக் கொண்டிருக்கிறாள். எனது இந்தக் கரங்களைப் பாரும். அவை இதற்கு முன்னர் இப்படி இருந்ததில்லை.” என்று சொல்லியவள் {திரௌபதி} ஆணிகளால் தன் கரங்களில் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டியபடி தொடர்ந்தாள். “மத்ஸ்யன் பிறரால் அரைக்கப்படும் சந்தனத்தை விரும்புவதில்லை என்பதால், குந்திக்கோ, உமக்கோ, உமது சகோதரர்களுக்கோ பயப்படாதவள், வாசனைத் தைலங்களின் தயாரிப்பைக் குறித்து அந்த மன்னர் மன்னன் {விராடன்} என்ன சொல்வானோ என்று நினைத்துக் கொண்டே, விராடனின் முன்பு அடிமையாகப் பயத்துடன் இப்போது நின்று கொண்டிருக்கிறாள்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது துயரங்களைப் பீமசேனனிடம் இப்படி உரைத்த கிருஷ்ணை {திரௌபதி}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது பார்வையைப் பீமன் மீது செலுத்தியவண்ணம் அமைதியாக அழத்தொடங்கினாள். பிறகு கண்ணீரால் தடைபட்ட குரலுடன், மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, அவனது {பீமனது} இதயத்தைப் பலமாகக் கிண்டும்படி பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னாள். “ஓ! பீமரே, முற்காலத்தில் தேவர்களுக்கு நான் ஏதாவது குற்றமிழைத்திருக்க வேண்டும் என்பதையே பேறற்ற எனது நிலை குறிக்கின்றது. ஓ! பாண்டவரே {பீமரே}, நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே, நான் எப்போது சாவது?” என்று கேட்டாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு எதிரி வீரர்களைக் கொல்பவனான விருகோதரன் {பீமன்}, ஆணித்தழும்புகளைக் கொண்ட தனது மனைவியின் {திரௌபதியின்} மென்மையான கரங்களால் தனது முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினான். பிறகு, குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, திரௌபதியின் கரங்களைத் தனது கரங்களில் பற்றிக் கொண்டு  பெரும் கண்ணீர் வடித்தான். பிறகு, பெருந்துயரத்திற்கு ஆட்பட்ட அவன் {பீமன்} {பின்வரும்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்