Sunday, November 16, 2014

“கீசகனைக் கொல்வீர்!” என்ற திரௌபதி - விராட பர்வம் பகுதி 21

“Slay thou Kichaka!” said Draupadi | Virata Parva - Section 21 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 8)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: பீமன் தனது சகோதரர்களை நிந்திக்க வேண்டாம் என்று திரௌபதியைக் கேட்டுக் கொண்டது; கீசகனால் எற்படும் துன்பங்களைத் திரௌபதி பீமனிடம் சொல்லி, அவனைக் கொல்லச் சொல்வது…

பீமன் {திரௌபதியிடம்}  சொன்னான், “உனது இந்தக் கரங்கள் முன்பு சிவந்திருந்தன, இப்போதோ அவற்றில் ஆணித்தழும்புகள் பரவியிருக்கின்றன. எனது கரங்களின் வலிமைக்கு இகழ்ச்சி; பல்குனனின் {அர்ஜுனனின்} காண்டீவத்துக்கு இகழ்ச்சி. விராடனின் அவையில் நானொரு படுகொலையைச் செய்திருப்பேன், (ஆனால் அதைத் தடுக்கும் வண்ணம்) குந்தியின் மகன் {யுதிஷ்டிரர்} வலிமைமிக்க யானையைப் போல என்னைப் பார்த்தார். இல்லையெனில் அரசு அதிகாரம் கொடுத்திருக்கும் கர்வத்தால் போதையிலிருக்கும் கீசகனின் தலையைச் சந்தடியில்லாமல் நசுக்கியிருப்பேன்.


ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கீசகனால் நீ உதைக்கப்பட்டதை நான் கண்ட அந்தச் சமயத்தில் மத்ஸ்யர்கள் அனைவரையும் மொத்தமாகப் படுகொலை செய்ய நினைத்தேன். எனினும் யுதிஷ்டிரர் தனது பார்வையால் என்னைத் தடுத்துவிட்டார். ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, அவரது {யுதிஷ்டிரனின்} நோக்கத்தைப் புரிந்து கொண்ட நான் அமைதியடைந்தேன். நாம் நாட்டை இழந்திருக்கிறோம், நான் இன்னும் குருக்களைக் கொல்லவில்லை. கர்ணன், சுயோதனன் {துரியோதனன்}, சுபலனின் மகன் சகுனி, தீய துச்சாசனன் ஆகியோரின் தலைகளை நான் இன்னும் எடுக்கவில்லை. ஓ! பெண்ணே {திரௌபதி}, இந்தச் செயல்களும், விடுபட்ட செயல்களும் எனது ஒவ்வொரு அங்கத்தையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. எனது இதயத்தில் பதிந்த எறிவேலாக இந்த எண்ணம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஓ! அழகிய இடைகள் கொண்டவளே {திரௌபதி}, அறத்தைத் துறக்காதே. ஓ! உன்னத இதயம் படைத்த பெண்ணே {திரௌபதி}, உனது கோபத்தை அடக்கு. இதுபோன்ற உனது கடிந்துரைகளை மன்னர் யுதிஷ்டிரர் கேட்டால், நிச்சயம் தனது உயிருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்வார். நீ இப்படிப் பேசுவதை, தனஞ்சயனோ {அர்ஜுனனோ}, இரட்டையரோ {நகுல சகாதேவனோ} கேட்டால், அவர்களும் தங்கள் உயிரைத் துறப்பார்கள். ஓ! கொடியிடை கொண்ட பெண்ணே {திரௌபதி}, அவர்கள் தங்கள் உயிரை விட்டால், என்னால் எனது உயிரைத் தாங்கிக் கொள்ள இயலாது.

பழங்காலத்தில் சர்யாதியின் மகளான அழகிய சுகன்யை, தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டு சியவனரைச் சுற்றி எறும்புகள் புற்றைக் கட்டிய போதும், மனதை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருந்த அந்தப் பிருகு குலத்தவரைக் காட்டில் தொடர்ந்து சென்றாள். அழகில் நாராயணியைப் போன்ற இருந்த இந்திரசேனை {நளாயனி} ஆயிரம் வயது கொண்ட தனது கணவரைத் தொடர்ந்து சென்றாள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பாய். விதேக இளவரசியும், ஜனகனின் மகளுமான சீதை தனது தலைவனை {ராமனைப்} பின்பற்றிச் சென்று அடர்ந்த காட்டில் வாழ்ந்தாள் என்பதை நீ கேள்விப்பட்டிருப்பாய். அந்த அழகிய இடைகொண்ட பெண்ணான ராமனின் அன்புக்குரிய மனைவி {சீதை} துயரங்களால் பீடிக்கப்பட்டு, ராட்சசர்களால் துன்புறுத்தப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகே ராமனை அடைந்தாள். ஓ! அச்சமுள்ளவளே {திரௌபதி}, இளமையும் அழகும் கொண்ட லோபாமுத்திரை மனிதர்களால் அடையத்தக்க அனைத்து இன்பநுகர் பொருட்களையும் துறந்து அகத்தியரைத் தொடர்ந்து சென்றாள். புத்திக்கூர்மையும், களங்கமற்ற குணமும் கொண்ட சாவித்ரி, தியுமத்சேனனின் மகனான வீரன் சத்யவானைத் தொடர்ந்து சென்று, யமனின் உலகத்திற்கே தனியாகச் சென்றாள். ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, இந்தக் கற்புடைய அழகிய பெண்களைப் போலவே நீயும் அனைத்து அறங்களிலும் மலர்ந்திருக்கிறாய் என்று நான் சொல்கிறேன். அளவிட்டால் பாதி மாதம் கூட இல்லாத இந்தக் குறுகிய காலத்தைக் கழித்துவிடு. பதிமூன்றாம் வருடம் முடிந்ததும், (மீண்டும்] நீ மன்னனின் பட்டத்தரசியாவாய்” என்றான் {பீமன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {பீமனிடம்}, “ஓ! பீமரே, என்னால் எனது துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துயரத்தின் காரணமாக மட்டுமே நான் இந்தக் கண்ணீரைச் சிந்தினேன். நான் யுதிஷ்டிரரை நிந்திக்கவில்லை. கடந்த காலத்திலேயே வசிப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஓ! வலிமை கொண்ட பீமரே, இந்த மணிநேரத்தின் வேலையை எதிர்கொள்ள விரைந்து வாரும். ஓ! பீமரே, மன்னன் {விராடன்} என்னிடம் மயங்கிவிடக்கூடாது என்று {நினைத்துக் கொண்டு}, எனது அழகில் பொறாமை கொண்டுள்ள கைகேயி {சுதேஷ்ணை} எடுக்கும் முயற்சிகள் எனக்கு எப்போதும் வலியைத் தருகின்றன. அவளது நிலையைப் புரிந்து கொண்ட தீய ஆன்மா கொண்ட முறைகேடனான கீசகன் விடாமல் என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டேயிருக்கிறான்.

இதனால் அவனிடம் கோபமடைந்த நான் எனது கோபத்தை அடக்கிக் கொண்டு, காமத்தால் புத்தியிழந்த அந்த இழிந்தவனிடம், “ஓ! கீசகா, உன்னைப் பாதுகாத்துக் கொள். நான் ஐந்து கந்தர்வர்களின் மனைவியும், அவர்களின் அன்புக்குரிய ராணியுமாவேன். அந்த வீரர்கள் கோபமடைந்தால், தீயவனான உன்னைக் கொன்று போடுவார்கள்” என்று பதிலளித்தேன். இப்படிச் சொல்லப்பட்ட தீய ஆன்மாகக் கொண்ட கீசகன், என்னிடம், “ஓ! இனிய புன்னகை கொண்ட சைரந்திரி {மாலினி}, கந்தர்வர்களிடம் எனக்கு எந்தப் பயமும் கிடையாது. போர்க்களத்தில் அவர்களுடன் மோதும் நான் ஒரு லட்சம் கந்தர்வர்களைக் கூடக் கொல்வேன். எனவே, ஓ! அச்சமுள்ளவளே, நீ ஒப்புதல் அளிப்பாயாக!” என்று மறுமொழி கூறினான் {கீசகன்].

இவை யாவற்றையும் கேட்ட நான் காமத்தால் பீடிக்கப்பட்ட அந்தச்சூதனிடம் {கீசகனிடம்} மீண்டும், “ஒப்பற்ற அந்தக் கந்தர்வர்களுக்கு நீ {திறனில்} தகுந்தவன் கிடையாது. மரியாதைக்குரிய நல்ல நிலையில் இருக்கும் நான், எப்போதும் அறத்தைக் கடைப்பிடிப்பவளாவேன். நான் யாருடைய மரணத்தையும் விரும்புவதில்லை. இதற்காகவே நான் உன்னைப் பொறுத்துக் கொள்கிறேன்” என்றேன். அதற்கு அந்தத் தீய ஆன்மா கொண்ட பாதகன் {கீசகன்} சத்தம்போட்டு வெடித்துச் சிரித்தான். இதற்கெல்லாம் முன்பே, தன் சகோதரனிடம் பாசம் கொண்ட கைகேயி {சுதேஷ்ணை} என்னிடம், “ஓ! சைரந்திரி, கீசகனிடத்தில் இருந்து மதுவைக் கொண்டு வா” என்று சொல்லி என்னை அவனிடத்திற்கு அனுப்பி வைத்தாள். என்னைக் கண்ட அந்தச் சூதனின் மகன் {கீசகன்}, முதலில் என்னிடம் இனிமையான சொற்களில் பேசினான். தோல்வியுற்றபிறகு, மிகவும் கோபமடைந்து, வன்முறையைக் கைக்கொண்டான்.

தீய கீசகனின் நோக்கத்தை அறிந்த நான், விரைந்து மன்னர் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வந்தேன். என்னைத் தரையில் வீழ்த்திய அந்த இழிந்தவன், மன்னன்{விராடனின்} முன்னிலையிலும், கங்கரின் {யுதிஷ்டிரரின்} கண்களுக்கு முன்பும், தேரோட்டிகள், அரசனுக்குப் பிடித்தமானவர்கள், யானைப் பாகன்கள், குடிமக்கள், இன்னும் பிறர் முன்பும் என்னை எட்டி உதைத்தான். நான் மன்னனையும், கங்கரையும் நிந்தித்தேன். எனினும் மன்னன் {விராடன்}, கீசகனைத் தடுக்கவோ, தண்டிக்கவோ இல்லை. போரில் விராட மன்னனுக்கு முக்கியக் கூட்டாளியும், அறமற்றவனுமான அந்தத் தீய கீசகன், மன்னன் மற்றும் ராணி ஆகிய இருவருக்கும் அன்புக்குரியவனாக இருக்கிறான். ஓ! மேன்மையானவரே {பீமரே}, துணிச்சல், கர்வம், ஒழுக்கங்கெட்டத்தனம் {விபச்சாரம்}, அனைத்து இன்ப நுகர் பொருட்களிலும் மூழ்குதல் ஆகிய குணங்களைக் கொண்ட அவன் {கீசகன்}, (மன்னனிடம் இருந்து) பெரும் செல்வத்தை ஈட்டியும் கூட, பிறர் துயரத்தால் அழுதாலும் கூட அவர்களின் உடைமைகளைத் திருடிச் செல்கிறான்.

அவன் எப்போதும் அறத்தின் பாதையில் நடப்பதில்லை. எந்த ஓர் அறச்செயலையும் அவன் செய்தது கிடையாது. தீய ஆன்மாவும், தீய மனநிலையும், கர்வமும், வில்லத்தனமும், எப்போதும் காமனின் கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான அவனை {கீசகனை} மீண்டும் மீண்டும் தடுத்து விரட்டி விட்டாலும், மீண்டும் அவன் {கீசகன்} என்னைப் பார்த்தால், என்னிடம் சீற்றமடைவான். அப்போது நிச்சயம் நான் எனது உயிரை விட்டுவிடுவேன். அறத்தை அடைய முயன்றாலும் (எனது மரணத்தால்) உங்கள் உயர்தகுதி கொண்ட செயல்கள் அனைத்துப் பலனற்றுப் போகும். இப்போது உங்கள் வாக்குறுதிக்குப் பணிந்து நடக்கும் நீங்கள், உங்கள் மனைவியை இழக்க நேரிடும். ஒருவனது மனைவியைக் காப்பதால், ஒருவன் தனது வாரிசுகளைக் காக்கிறான். வாரிசுகள் காக்கப்படுவதால் ஒருவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன்னையே தன் மனைவியிடம் பெற்றுக் கொள்வதால்தான் மனைவி ஜெயா [1] என்று அழைக்கப்படுகிறாள். “எனது கருவறையில் அவர் எப்படிப் பிறவியை அடைவார்?” என்று நினைத்து ஒரு மனைவியும் தனது கணவனைக் காக்க வேண்டும்.

[1] இங்கு, “ஜெயதே அஸ்யாஸ் {Jayate asyas} என்றால் “எவளிடம் இருந்து பிறந்தானோ அவள்” என்ற பொருள் வரும்” என்கிறார் கங்குலி

பல்வேறு பிரிவினரின் கடமைகளை விரித்துச் சொல்லும் அந்தணர்கள், க்ஷத்திரியர்களுக்குக் கடமை எதிரிகளை அடக்குவது என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஐயோ, கீசகன் நீதிமானான யுதிஷ்டிரர் முன்னிலையிலும், பெரும் பலமிக்கப் பீமசேனரான உமது முன்னிலையிலும் என்னை உதைத்தானே. ஓ! பீமரே, பயங்கரமான ஜடாசுரனிடம் இருந்து நீரே என்னைக் காத்தீர். உமது சகோதரர்களுடன் சேர்ந்து நீரே ஜெயத்ரதனை வீழ்த்தினீர். இப்போது என்னை அவமதித்த இந்தப் பாவியைக் கொல்லும். மன்னனுக்கு {விராடனுக்கு} பிடித்தமானவனாகத் தன்னை ஊகித்துக் கொள்ளும் கீசகன், ஓ! பாரதரே {பீமரே}, எனது துயரத்தையே மேம்படுத்தியிருக்கிறான். எனவே, மண் குடத்தைத் தரையில் மோதி உடைப்பது போல இந்தக் காமாந்தகப் பாதகனை நொறுக்கும். ஓ! பாரதரே {பீமரே}, எனது துயரங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் அவன் {கீசகன்} மேல் நாளைய சூரியக் கதிர் படுமேயானால், நான் நிச்சயம் (எந்தப் பானத்திலாவது) நஞ்சைக் கலந்து குடித்துவிடுவேன். என்னால் கீசகனை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓ! பீமரே, அதற்குப் பதில் நான் உம் முன்னிலையில் இறந்து போவதே சிறந்தது” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன கிருஷ்ணை {திரௌபதி}, பீமனின் மார்பில் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள். பிறகு பீமன் அவளை அணைத்துக் கொண்டு, தனது சக்திக்குத் தக்க அவளுக்குச் சமாதானம் கூறினான். துருபதன் மகளான அந்தக் கொடியிடையாளுக்கு {திரௌபதிக்கு}, கடும் வார்த்தைகளின் மூலம் பெரும் ஆறுதல் அளித்த அவன் {பீமன்}, தனது கரங்களைக் கொண்டு, அவளது முகத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தான். கீசகனைக் குறித்து நினைத்துக் கொண்டே, கடைவாய் ஓரத்தை நக்கிய கோபம் கொண்ட பீமன் அந்தப் பெண்ணிடம் {திரௌபதியிடம்} பேசத் தொடங்கினான்.” {என்றார் வைசம்பாயனர்}.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்