Wednesday, November 26, 2014

திரிகார்த்தன் சுசர்மன் ஆலோசனை! விராட பர்வம் பகுதி 30

The counsel of Trigarta's Susarma! | Virata Parva - Section 30 | Mahabharata In Tamil

(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 5)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: மத்ஸ்ய நாட்டை இப்போது தாக்குவது உசிதம் எனத் திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன் துரியனுக்கு ஆலோசனை வழங்கியது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மத்ஸ்யர்கள் மற்றும் சல்லியர்களின் துணை கொண்டு மத்ஸ்ய சூதனான கீசனால் அடிக்கடி பல முறை தோற்கடிக்கப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குச் சொந்தக்காரனும், பலம்பொருந்திய திரிகார்த்தர்களின் மன்னனுமான சுசர்மன், இச்சந்தர்ப்பத்தைச் சாதகமானதாகக் கருதி, நேரங்கடத்தாமல் இந்த வார்த்தைகளைக் கூறலானான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலமிக்கக் கீசகனால், தன் உறவினர்களோடு சேர்த்துப் பலவந்தமாகத் தோற்கடிக்கப்பட்ட மன்னன் சுசர்மன், கர்ணனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான். அவன் {சுசர்மன்}, “எனது நாடு மத்ஸ்யர்களின் மன்னனால் {விராடனால்} பல முறை பலவந்தமாகப் படையெடுக்கப்பட்டுள்ளது. பலமிக்கக் கீசகனே {அப்போது} மன்னனின் தளபதியாக இருந்தான். 


குறுக்குப்புத்தியும், வெஞ்சினமும் கொண்டு, உலகம் முழுவதும் அவனது {கீசகனது} பராக்கிரமத்திற்காகப் புகழ்பெற்று, பாவச்செயல்கள் செய்து வந்த மிகக் கொடூரமான அந்த ஈனன் {கீசகன்} எப்படியோ கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருக்கிறான். கீசகன் இறந்ததால், மன்னன் விராடன் கர்வமிழந்து, {கீசகன் என்ற} புகலிடம் இல்லாமல் தைரியத்தையும் அனைத்தையும் இழந்திருப்பான் என நான் நினைக்கிறேன். உங்களுக்கும், சிறப்புமிக்கக் கர்ணனுக்கும் மற்றும் கௌரவர்கள் அனைவருக்கும் விருப்பம் இருக்குமானால் இப்போதே நாம் அந்த நாட்டின் மீது படையெடுக்கலாம்.

நடந்த விபத்து {கீசகனின் மரணம்} நமக்குச் சாதகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே சோளம் நிறைந்த விராட நாட்டுக்கு நாம் {படையெடுத்துச்} செல்லலாம். நாம் {அங்கு} சென்று, அவனது {விராடனின்} ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவனது கிராமங்களையும் நாட்டையும், நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நாம் அவனது {விராடனது} நகரத்திற்குள் பலம்கொண்ட படையெடுப்படை நடத்தி, பல இனங்களிலான அவனது {விராடனின்} சிறந்த பசுக்களை ஆயிரக்கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவப் படைகளையும் திரிகார்த்தர்கள் படைகளையும் ஒன்றாகச் சேர்த்து அவனது {விராடனது} கால்நடை மந்தைகளைக் கவர்ந்து வருவோம். அல்லது நமது படைகளை இணைத்து, அவனே {விராடனே} வந்து சமாதானம் கோரும் வண்ணம் அவனது அதிகாரத்தைத் தடுக்கலாம். அல்லது அவனது {விராடனது} முழுப் படையையும் அழித்து, மத்ஸ்யனை அடிபணியச் செய்யலாம். நீதிக்குடன்பட்டு அப்படி அவனை {விராடனை} அடிபணியச் செய்ததும், நாம் நமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழலாம். அதே வேளையில் உனது பலமும் மேம்படுவதில் ஐயமில்லை” என்றான் {திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன்}.

சுசர்மனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “சுசர்மன் நன்று சொன்னான். சந்தர்ப்பம் சாதகமானதாகவும், உறுதியாக, நமக்கு லாபகரமானதாகவும் இருக்கிறது. எனவே, நீ விரும்பினால், ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, நமது படைகளை அணிவகுக்கச் செய்து, அவற்றைப் பிரிவுகளாகத் திரட்டி விரைந்து புறப்படுவோம். அல்லது, சரத்வானின் மகன் கிருபர், ஆசானான துரோணர், வயது முதிர்ந்த குருக்களின் ஞானியான பாட்டனாரும் {பீஷ்மரும்} சொல்வது போல இப்படையெடுப்பு நிர்வகிக்கப்படட்டும். ஒருவருடன் ஒருவர் ஆலோசித்து, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, நமது இலக்கை விரைந்து அடைய புறப்படுவோம். செல்வம், பலம், பராக்கிரமம் ஆகியவற்றை இழந்திருக்கும் பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நமக்கு ஆக வேண்டியது என்ன? அவர்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டனர், அல்லது யமனின் வசிப்பிடம் சென்றுவிட்டனர். ஓ! மன்னா {துரியோதனா}, துயரப்பட்டுக்கொண்டிராமல் நாம் விராடனின் நகரத்திற்குச் சென்று, அவனது கால்நடைகள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களையும் கொள்ளையடிப்போம்” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூரியனின் மகனான கர்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட மன்னன் துரியோதனன், தனது உடன்தம்பியும், தனது விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான தனது தம்பி துச்சாசனனை அழைத்து, “மூத்தவர்களுடன் ஆலோசித்து, தாமதமில்லாமல் நமது படைகளை அணிவகுக்கச் செய். கௌரவர்கள் அனைவருடன் கூடி, நாம் நிர்ணயித்த இடத்திற்குச் செல்வோம். பலம் பொருந்திய வீரனான மன்னன் சுசர்மன், திரிகார்த்தர்களுடனும் வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் கூடிய போதுமான படைகளுடனும் மத்ஸ்யனின் நாட்டுக்குப் புறப்படட்டும்.

தனது நோக்கத்தைக் கவனமாக மறைத்துக் கொண்டு, சுசர்மன் முதலில் செல்லட்டும். அதைத் தொடர்ந்து அவர்களறிய அடுத்த நாள் நெருக்கமான அணிகளுடன் நாம், மத்ஸ்ய மன்னின் செழிப்புமிக்க நாட்டுக்குப் புறப்படுவோம். திரிகார்த்தார்கள் விராட நகரத்திற்குத் திடீரெனச் சென்று, பசுக்கூட்டங்களையும், அபரிமிதமான செல்வங்களையும் கைப்பற்றட்டும். நாம் இரு பிரிவுகளாக அணிவகுத்துச் சென்று, மங்களக்குறிகள் கொண்ட அற்புதமான பசுக்களை ஆயிரக்கணக்கில் பிடிப்போம்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ பூமியின் தலைவா {ஜனமேஜயா}, கடும் பராக்கிரமம் கொண்ட தங்கள் காலாட்படை துணையுடன் தென்கிழக்குத் திசையில் அணிவகுத்துச் சென்று, அவனது {விராடனின்} பசுக்களைக் கைப்பற்ற விரும்பி, விராடனிடம் பகைதீர்க்க திரிகார்த்தர்கள் நினைத்தனர். தேய்பிறையின் ஏழாவது நாளில் பசுக்களைக் கைப்பற்ற சுசர்மன் புறப்பட்டான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேய்பிறையின் எட்டாவது நாளில், அனைத்து துருப்புகளின் துணைகளையும் கொண்ட கௌரவர்கள், பசுக்களை ஆயிரக்கணக்கில் கைப்பற்றத் தொடங்கினர்.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்