Saturday, November 29, 2014

விராடப் படை அணிவகுப்பு! விராட பர்வம் பகுதி 31

The array of Virata’s force!
Virata Parva - Section 31 | Mahabharata In Tamil

(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 6)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : விராடனின் பசுமந்தைகளைத் திரிகார்த்தர்கள் கைப்பற்றிச் செல்வதை மன்னன் விராடனிடம் வந்து மந்தையாளர்கள் சொல்வது; விராடன், பாண்டவர்களையும் தன்னுடன் சேர்ந்து போராடச் சொல்வது; பாண்டவர்கள் உற்சாகத்தோடு போருக்குப் புறப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, மன்னன் விராடனுக்குச் சேவை செய்யப் புகுந்து, அவனது {விராடனின்} சிறந்த நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த அந்த அளவிலா பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பாண்டவர்கள், பிறரறியாமல் வாழ்வதாகத் தாங்கள் வாக்குறுதி அளித்திருந்த {அஜ்ஞாதவாச காலத்தை} காலத்தை நிறைவு செய்தார்கள். பகைவீரர்களைக் கொல்பவனான பலம்பொருந்திய மன்னன் விராடன், கீசகன் கொல்லப்பட்ட பிறகு, குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது தனது நம்பிக்கையை வைக்கத் தொடங்கினான். அவர்களது {பாண்டவர்களின்} வனவாச காலத்தின் பதிமூன்றாவது வருட நிறைவில்தான் விராடனின் கால்நடைகளை {பசுக்களை} அந்தச் சுசர்மன் ஆயிரக்கணக்கில் கைப்பற்றினான். கால்நடைமந்தைகள் அப்படிக் கைப்பற்றப்பட்ட போது, விராடனின் மந்தையாளர்கள் {இடையர்கள்} பெருவேகத்துடன் நகருக்கு வந்து, விவேகமுள்ள சபை உறுப்பினர்கள், மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} மற்றும் காதுகுண்டலங்களும், கடகங்களும் அணிந்திருந்த துணிச்சல் மிக்க வீரர்கள் ஆகியோரின் மத்தியில் மத்ஸ்யர்கள் மன்னனான தங்கள் ஆட்சியாளன் {விராடன்} அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.


தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை மேம்படுத்தும் மன்னன் விராடன், தனது சபையில் அமர்ந்திருந்தபோது, அவனுக்கு {விராடனுக்கு} முன்பு தோன்றிய அந்த மந்தையாளர்கள், அவனை {விராடனைப்} பணிந்து வணங்கி, அவனிடம் {விராடனிடம்}, “ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {விராடரே}, நண்பர்களோடு கூடிய எங்களை வீழ்த்தி அவமதித்த திரிகார்த்தர்கள் உமது மந்தைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் {அறுபதினாயிரம் என்கிறது ஒரு பதிப்பு} கைப்பற்றினர். எனவே, விரைந்து அவற்றை மீட்பீராக. ஓ!, அவற்றை {பசுமந்தைகளை} நீர் தொலைத்துவிடாதிருக்க ஆவன செய்யும்” என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {விராடன்}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும், கொடிக்கம்பங்களும் நிறைந்த மத்ஸ்ய படையை அணிவகுக்கச் செய்தான்.

ஒளிர்ந்து கொண்டிருந்த வீரர்கள் அணியத்தக்க அழகான கவசங்களை மன்னர்களும், இளவரசர்களும், அதனதன் சரியான இடங்களில் விரைவாகப் பொருத்தினர். விராடனின் அன்பிற்குரிய தம்பியான சதானீகன் {Satanika}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிளக்க இயலாத எஃகால் {எஃகு} செய்யப்பட்ட கவசத்தைத் தரித்தான். சதானீகனுக்கு அடுத்து பிறந்தவனான மதிராக்ஷன் {Madirakshya}, தங்கம் பூசப்பட்டு, அனைத்து ஆயுதங்களையும் தாங்கவல்ல வலுவான கவசத்தை அணிந்தான். மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்} அணிந்த கொண்ட கவசமானது, நூறு வட்டங்களும், நூறு புள்ளிகளும், நூறு கண்களும் கொண்டு நூறு சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட பிளக்கமுடியாத கவசமாக இருந்தது. சூரியதத்தன் {Suryadatta} [1] அணிந்த கவசமானது, சூரியனைப் போன்று பிரகாசமாகவும், தங்கத்தால் பூசப்பட்டதாகவும், மணமிக்க (கல்லார {Kahlar}) இனத்தைச் சார்ந்த நூறு தாமரைகளைப் {செங்கழுநீர் மலர்களைப்} போல அகன்று இருந்தது. விராடனின் மூத்த மகனும் வீரனுமான சங்கன் {Sanksha} ஆயிரங்கண் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் எஃகினால் செய்யப்பட்டதாகத் துளைக்கப்பட முடியாத கவசத்தை அணிந்தான்.

[1]. “சூரியதத்தன் விராடனின் தளபதிகளில் ஒருவன்” என்கிறார் கங்குலி.

இப்படியே தேவர்களைப் போன்றிருந்த அந்தப் பலமிக்க நூறு வீரர்களும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, போர் செய்யும் ஆர்வத்துடன், தங்கள் கவசங்களைப் பூட்டினர். பிறகு கவசம் பூட்டப்பட்ட வெள்ளை நிறக் குதிரைகளைத் தங்கள் அற்புதமான தேர்களில் பூட்டினர். பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசத்தில் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்த மத்ஸ்யனின் {விராடனின்} அற்புதமான தேரில் இருந்த {கொடிமரத்தில்} அவனது {விராடனது} மகத்தான கொடி ஏற்றப்பட்டது. பிறகு மற்ற க்ஷத்திரிய வீரர்களும், தங்கள் தங்கள் தேர்களில் உள்ள தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் பல்வேறு வடிவகளில், பல கருவிகளைக் கொண்டிருந்த கொடிகளை ஏற்றினர்.

பிறகு மன்னன் மத்ஸ்யன், தன் உடன்தம்பியான சதானீகனிடம், “பெரும் சக்தி கொண்ட கங்கன், வல்லவன், தந்திரீபாலன் மற்றும் தமக்கிரந்தி {கிரந்திகன் [நகுலன்]} ஆகியோர் போரிடுவார்கள் என்பது ஐயமின்றி எனக்குத் தெரிகிறது. கொடிகளுடன் கூடிய தேர்களை அவர்களுக்கு நீ கொடு. எளிமையாக அணிந்து கொள்ளும் வகையில் {எடை குறைந்த} பிளக்கமுடியாதவையான அழகான கவசங்களை அவர்கள் அணிந்து கொள்ளட்டும். அவர்கள் ஆயுதங்களைப் பெற {ஏற்பாடு} செய். {கவசம் போன்ற} தற்காப்பு வடிவங்களைத் தாங்கி, யானையின் பலமிக்கத் துதிக்கைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட அவர்களால் போரிட முடியாது என்று என்னால் சொல்ல முடியாது” என்றான் {விராடன்}.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சதானீகன், அரசமகன்களான யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய பிருதையின் மகன்களுக்கு {குந்தியின் மகன்களான பாண்டவர்களுக்கு} தேர்களை உடனே வரவழைத்தான். மன்னனால் உத்தரவு கொடுக்கப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மாறாபற்றைக் {விசுவாசத்தைக்} கருத்தில் கொண்ட தேரோட்டிகள் (பாண்டவர்களுக்காக) விரைந்து தேர்களைத் தயார் செய்தார்கள். பிறகு விராடனால் உத்தரவிடப்பட்ட வகையில், எளிமையாக அணிந்துகொள்ளத்தக்க, பிளக்கமுடியாதபடி இருந்த அழகிய கவசங்களை அந்தக் களங்கமற்ற புகழ் கொண்ட வீரர்கள் {பாண்டவர்கள்} அணிந்து கொண்டனர். நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறிய அந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், பகைக்கூட்டத் தலைவர்களை அடிப்பவர்களுமான பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள்}, மகிழ்ச்சிகரமான இதயத்துடன் புறப்பட்டனர்.

உண்மையில், போர்க்கலையில் நிபுணர்களான அந்தப் பெரும் பலம்வாய்ந்த வீரர்களும், குருகுலத்தின் காளையரும், பாண்டுவின் மகன்களும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமம் கொண்டவர்களுமான அந்த நான்கு வீரச் சகோதரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏறி, விராடனின் உத்தரவுக்கிணங்க ஒன்றாகப் புறப்பட்டனர். பயங்கர வடிவம் கொண்டவைகளும், மதப்பெருக்குடையவையும், அறுபது வயதைக் கடந்தவையும், நல்ல வடிவம் கொண்ட தந்தங்கள் கொண்டவைகளும், போரில் நிபுணர்களாக இருக்கும் வீரர்களால் ஏறப்பட்டவையும், மழைபொழிகின்ற மேகங்களைப் போன்றவையுமான யானைகளைப் போல, மன்னனைப் {விராடனைப்} பின்தொடர்ந்து, அசைந்து செல்லும் மலைகளைப் போல அவர்கள் {பாண்டவர்கள்}, சென்றார்கள்.

ஆவலுடன் மன்னனை {விராடனைத்} தொடர்ந்து சென்ற மத்ஸ்யனின் {விராடனின்} வீரர்களிடம், எட்டாயிரம் {8000} தேர்களும், ஆயிரம் {1000} யானைகளும், அறுபதினாயிரம் {60,000} குதிரைகளும் இருந்தன. மேலும், ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, விராடனின் அந்தப் படை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, கால்நடைகளின் பாதச்சுவடுகளைக் குறித்துக் கொண்டு அணிவகுத்துச் சென்ற காட்சியைக் காண மிக அழகாக இருந்தது. உறுதிமிக்க ஆயுதங்களைத் தாங்கிய வீரர்கள் நிறைந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்ததுமான விராடனின் படைகளில் முதன்மையான அந்தப் படையின் அணிவகுப்பைக் காண உண்மையில் அற்புதமாக இருந்தது.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்