Thursday, November 13, 2014

கீசக வதம் - மழையைத் தருமா?


மின்னஞ்சல், முகநூல், தொலைபேசி மூலம் நண்பர்கள் தெரிவிக்கும் வாழ்த்து மழையில் நனைந்தபடியே மூன்று நாட்களாக மொழிபெயர்ப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், அதுவரை அறிமுகமில்லாத ஒரு நண்பரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அந்த நண்பர் நமது ஆடியோ கோப்புகளைக் குறித்துக் கேட்டார். நான், “ஆடியோ மட்டும் அல்ல நண்பரே, இப்போது வீடியோ புத்தகமாகவும் அளித்து வருகிறோம்” என்றேன். “வீடியோ புத்தகமா? அப்படியென்றால்…?” என்று கேட்டார் நண்பர்.


நான் அவரது அலுவலகத்தில் இருந்த கணினியைக் கேட்டு வாங்கி, விராடபர்வத்தின் 18வது பகுதியில் இருந்த காணொளி புத்தகத்தைக் காட்டினேன். பார்த்துக் கொண்டேயிருந்தபோது,  “ஏங்க. இது கீசக வதம் பகுதில. விராட பர்வத்தில் கீசக வதம் படிச்சா மழை வரும்னு ஓர் ஐதீகம் இருக்கு கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றார். நான், “இல்லையே!” என்றேன். “அப்படித்தான் சொல்வாங்கங்க.” என்று என்னைப் பார்த்தார். “அப்படியா! இதை நான் கேள்விப்பட்டது கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பிற விஷயங்களைப் பேசினோம். விடைபெறும் நேரம் வந்த போது, அவர், "கல்கியோட தியாக பூமினு நினைக்கிறேன். அதுல கூட கீசக வதம் மழையைத் தரும்னு ஒரு குறிப்பு இருக்குனு ஞாபகம். இன்னிக்கு பாருங்க மழை கொட்டப்போகுதுனு நினைக்கிறேன்" என்றார். "சரிங்க நல்லா பெய்யட்டும்!" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, நான்  அந்த நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

சிரித்துவிட்டு வந்தேனே தவிர, அந்த நண்பர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. கூகிளில் தேடினேன்.  ஏதோ ஒரு லிங்கில் "தமிழ்நாட்டில் பழங்காலங்களில் மழை வேண்டி கீசகவதம் தெருக்கூத்தாகவும் நிகழ்த்தப்பட்டு வந்தது" என்ற குறிப்பு கிடைத்தது.

மேலும், http://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்பட_வரலாறு என்ற லிங்கில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் {ஒலியில்லாத சலனப்படம்} “கீசக வதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1916ல் அது வெளிவந்திருக்கிறது. 1912லேயே "ஹரிச்சந்திரா" வெளிவந்திருந்தாலும், இந்தியாவின் முதல்படம்தான் “ஹரிச்சந்திரா”வாம். அது மும்பையில் தயாரிக்கப்பட்ட படமாம். இதற்கு மழைக்கும் சம்பந்தம் இல்லைதான். எனினும் தென்னகத்தின் முதல் சலனப்படமே கீசக வதமா என்ற திகைப்பு ஏற்பட்டது.

அடுத்ததாக, கல்கியின் தியாக பூமி குறித்து நண்பர் சொன்னது நினைவுக்கு வரவே, அது குறித்துத் தேடுகையில், http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/thiyaga_boomi_2_1.html#.VGTJ-mf4bcc என்ற லிங்கில், தியாக பூமியின் இரண்டாவது பாகத்தில்

 நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.

     "ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.

     சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.

     பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.

என்ற ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி அது ஒரு கற்பனைக் கதைதானே, நிஜத்திலா நிகழ்ந்துவிட்டது என்று நாளிதழ் செய்திகளில் ஏதாவது அப்படி வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.

அப்படித் தேடிப் பார்த்ததில், http://www.dinamalar.com/news_detail.asp?id=1045988&Print=1 என்ற லிங்கில் ஒரு செய்தி கிடைத்தது. 2014 ஆகஸ்ட் 14ல் வெளிவந்த செய்தி அது. அதன் விபரம் கீழே…

பரமக்குடி : பரமக்குடியில் மழை வேண்டி மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தி வரும் நிலையில், சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டி வருகிறது.
இங்கு மூன்று ஆண்டுகளாக மழை இன்றி, நிலத்தடி நீர் 150 அடிக்கு கீழே போய்விட்டது. மகாபாரதத்தில் "விராட பர்வம்' காதை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன், ஆக., 7 முதல் சொற்பொழிவு நடக்கிறது. அன்று முதல் தினமும் மழை பெய்கிறது. ஆக.,11ல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித்தீர்த்தது. அடுத்து இரு நாட்களும் சாரல் மழை பெய்தது.

என்று அச்செய்திக்குறிப்பில் இருந்தது.

மேலும் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/05/12/மகாபாரதம்-தொடர்-சொற்பொழிவு/article2219426.ece?service=print என்ற லிங்கில் - 2014 மே மாதம் 12 தேதியிட்ட தினமணி நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருக்கிறது..

காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் அரு. சோமசுந்தரன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வில்லி பாரதம் பத்துப் பருவங்கள் 4337 பாடல்கள். அவற்றில் விராட பருவம் 4ஆம் பருவம் 330 பாடல்கள்.

பகவான் கிருஷ்ணரைத் துதித்து முதல் பாடல் தொடங்குகிறது. 5 சருக்கங்கள் மகாபாரதத்தில் நிகழும் காட்சிகள் அனைத்தும் விராட பருவத்தில் நிகழும். ஆகவே இதனை மினி பாரதம் அல்லது பிள்ளை பாரதம் என்பர்.

மகாபாரதத்தில் துரியோதனாதியர் 100 பேர். தீயவர்கள் விராட பருவத்தில் கீசகன் மற்றும் அவன் தம்பியர் 104 பேர் தீயவர்கள். மகாபாரதத்தில் திரௌபதியை காந்தாரி துரியோதனனிடம் அனுப்புகிறாள். விராட பருவத்தில் மகாராணி சுதேஷ்னை திரௌபதியை கீசகனிடம் அனுப்புகிறாள். மகாபாரதத்தில் 18 நாள் போர். இதில் ஏராளமான மழைக்குறிப்புக்கள் உள்ளன. எனவே விராட பருவம் படித்தால் மழை பொழியும் என்றார்.

என்ற செய்திக்குறிப்பு இருந்தது.

இந்தச் செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. நண்பர் கீசக வத பர்வம் என்றார். ஆனால், நமக்குக் கிடைத்த தரவுகள் விராட பர்வம் என்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சரி.... திரு.அரு.சோமசுந்தரன் சொல்லியிருப்பதை தினமணியில் குறிப்பிட்ட்டிருப்பது போல, நமது மொழிபெயர்ப்பில் எங்காவது மழை சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறதா என்று பார்த்ததில் http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section14.html என்ற லிங்கில் மழையோடு சம்பந்தப்படுவது போல, திரௌபதியிடம் கீசகன் பேசும் கீழ்க்கண்ட வசனம் கிடைத்தது.

உன்னோடு சேர முடியும் என்று, எனது இதயம் கொள்ளும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு, எரியும் காட்டைப் போல, கடுமையாகச் சுடர்விட்டெரியும் ஆசைத்தீ {காமத்தீ} என்னைத் தீவிரமாக எரிக்கிறது. ஓ! பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ! நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன்னுடனான சேர்க்கை எனும் ஆசையால் கூராக்கப்பட்டு அடிக்கப்பட்ட மன்மதனின் கடும் கணை, வெறிகொள்ளச் செய்யும் தனது மூர்க்கமான போக்கில், இந்த எனது இதயத்தைத் துளைத்து, அதன் மையத்தில் ஊடுருவிவிட்டது.

என்பதே அவ்வசனம். இன்னும் விராடபர்வத்தில் நிறைய பகுதிகள் இருக்கின்றன. நாம் இதுவரை 18 பகுதிகள்தான் செய்திருக்கிறோம். அவற்றில் ஏதும் மழைக்குறிப்புகள் இருக்கின்றனவா என்பதை நோக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.

நமது இந்திய மரபின் தொன்மங்கள் அனைத்தும் உருவகங்கள்தானே. இதுவும் இயற்கை குறித்த ஓர் உருவகமோ? அந்த உருவகத்தை நினைவுகூர்வதால் ஏதேனும் சக்தி தூண்டப்படுமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்போது வெளியே மழை “சோ”வெனப் பெய்து கொண்டிருக்கிறது... இயற்கையல்லவா நம்மைப் பார்த்து சிரிக்கின்றது...

இது குறித்து விவாதிக்க விரும்பும் நண்பர்கள், விவாத மேடை பகுதியைப் பயன்படுத்தலாமே!

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்