Friday, December 12, 2014

கர்ணனைக் கண்டித்த அஸ்வத்தாமன்! - விராட பர்வம் பகுதி 50

Aswatthama censured Karna! | Virata Parva - Section 50 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 25)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் :தற்பெருமை பேசும் கர்ணனை அஸ்வத்தாமன் கண்டித்தது; துரியோதனன் பாண்டவர்களை ஏமாற்றியதைச் சுட்டிக் காட்டுவது; தான் அர்ஜுனனுடன் போரிட மாட்டேன் என்று சொன்னது...…...

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, இந்தப் பசுக்கள் இன்னும் வெல்லப்படவில்லை. அல்லது அவை (தங்கள் உரிமையாளரின் ஆட்சிக்குட்பட்ட) எல்லையைக் கடக்கவில்லை. அல்லது அவை இன்னும் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை. எனவே, ஏன் நீ தற்பெருமை பேசுகிறாய்? எண்ணிலடங்கா போர்களை வென்று, அபரிமிதமான செல்வத்தை அடைந்து, எதிரிப்படைகளை வீழ்த்திய உண்மையான வீரர்கள் தங்கள் பராக்கிரமம் குறித்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார்கள். நெருப்புப் பேசாமல் எரிகிறது. பேசாமல்தான் சூரியனும் ஒளிர்கிறான். பேசாமல்தான் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை இந்தப் பூமி சுமக்கிறது. கண்டனம் இல்லாமல் ஒவ்வொருவரும் செல்வத்தை அடைய நான்கு வகையினருக்குமான அலுவல்கள் சுயம்புவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

வேதங்களைக் கற்கும் ஓர் அந்தணன், தானே வேள்விகள் செய்து கொண்டு, பிறரது வேள்விகளையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன், தனது வில்லை நம்பி, தனது வேள்விகளை மட்டும் செய்ய வேண்டும். அவன் மற்றவர்களுக்காக வேள்விகளை நடத்தக்கூடாது. செல்வங்களை ஈட்டும் ஒரு வைசியன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளைத் தனக்காக மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு சூத்திரன் பிற மூன்று வகையினருக்கும் சேவை செய்து அவர்களுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். மலர்கள் மற்றும் இறைச்சி விற்பதைத் தொழிலாகக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஏமாற்றியும் மோசடியும் செய்து அவர்கள் தங்கள் செல்வத்தை ஈட்டிக் கொள்ளலாம்.

எப்போதும் சாத்திரங்களின் விதிப்படி நடந்து கொள்ளும் மேன்மிக்கப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த முழு உலகத்தின் ஆட்சியையும் பெற்றார்கள். பெரியவர்கள் அவர்களிடம் பகைகொண்டாலும், அவர்களிடம் {அந்தப் பெரியவர்களிடம்} எப்போதும் மரியாதையுடனே அவர்கள் {பாண்டவர்கள்} நடந்து கொள்கிறார்கள். வெட்கங்கெட்ட இந்தத் தீய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தின் மூலம் அடைந்த நாட்டைப் பார்த்து எந்த க்ஷத்திரியன் மகிழ்ச்சி கொள்வான்? இறைச்சி விற்பவன் போல ஏமாற்றுத்தனத்தாலும், மோசடியாலும் செல்வத்தை அடைந்தால், எந்த விவேகியால் அது குறித்துத் தற்பெருமையாகப் பேசிக் கொள்ள முடியும்? {[அதாவது] நீ விவேகி இல்லை என்று கர்ணனிடம் சொல்கிறான் அஸ்வத்தாமன்}

{இதுவரை அஸ்வத்தாமன் கர்ணனிடம் பேசுவது போல இருந்தாலும், இதன்பிறகு துரியோதனன் மற்றும் கர்ணனிடம் மாறி மாறிப் பேசுவதாகத் தெரிகிறது}

அவர்களது செல்வத்தைத் திருடிக் கொண்டாலும், தனஞ்சயனையோ {அர்ஜுனனையோ}, நகுலனையோ, சகாதேவனையோ எந்தத் தனிப்போரில் {ஒற்றைக்கு ஒற்றையான எந்த மோதலில்} நீ வென்றாய்? யுதிஷ்டிரனையோ, பலசாலிகளில் முதன்மையான பீமனையோ எந்தப் போரில் நீ வென்றாய்? இந்திரப்பிரஸ்தத்தை எந்தப் போரில் நீ வென்றாய்? ஓ! இழிந்த செய்கைகள் செய்பவனே, நீ செய்ததெல்லாம், நோய்வாய்ப்பட்டு ஒற்றையாடையுடன் இருந்த இளவரசியை {திரௌபதியைச்} சபை நடுவே இழுத்து வந்ததுதான். சந்தனம் போன்று மென்மையான பாண்டவ மரத்தின் வேரை நீ வெட்டிவிட்டாய்.

செல்வத்தின் மீது கொண்ட ஆசையால் செயல்பட்டு, பாண்டவர்களை அடிமைகளைப் போல நீ நடத்திய போது, விதுரர் என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பார்! மனிதர்களும் பிறரும், ஏன் பூச்சிகளும் எறும்புகளும் கூடத் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பொறுத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். {[அதாவது] ஒரு கட்டத்திற்கு மேல் அவையும் தங்கள் சக்திக்கேற்ற கோபத்தை வெளிப்படுத்தும் என்பதைப் பார்க்கிறோம்}. எனினும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} திரௌபதியின் துன்பங்களைப் பொறுக்க இயலாது. திருதராஷ்டிரன் மகன்களின் அழிவுக்காகவே தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான் என்பது நிச்சயம். பெருஞானம் பாதிப்படையும் வகையில் உரையாற்றுவதற்கே நீ தகுந்தவன். ஆனால் எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, நம் அனைவரையும் நிர்மூலமாக்கிவிடுவான் என்பதே உண்மை. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராட்சசர்களோ, {வந்திருப்பது} எவராக இருப்பினும் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} பீதியடைந்து போரில் இருந்து விலகிவிடுவானா?

கோபத்துடன் அவன் யார் மீது விழுகிறானோ, கருடனின் பாரத்தில் அழுந்தும் மரத்தைப் போல அவனை வீழச் செய்வான். பராக்கிரமத்தில் உன்னைவிட மேன்மையானவனும், தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான வில்லாளியும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} யார் தான் புகழ மாட்டார்கள்? தெய்வீக ஆயுதங்களை தெய்வீக ஆயுதங்களாலும், மனித ஆயுதங்களை மனித ஆயுதங்களாலும் முறியடிக்கும் அர்ஜுனனுக்கு எந்த மனிதன் இணையாக முடியும்? மகன் என்ற ஸ்தானத்திற்குச் சீடன் எவ்வகையிலும் குறைவில்லாதவன் என்று சாத்திரங்களை அறிந்தவர்கள் தீர்மானிக்கின்றனர். {ஒரு மகனைக் காட்டிலும் சீடன் குறைந்தவனல்ல என்று சாத்திரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்}. அதனால்தான் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} துரோணருக்குப் பிடித்தமானவனாக {மகனைப் போன்று பிடித்தமான சீடனாக} இருக்கிறான்.

பகடையாட்டத்தின் போது கைக்கொண்ட அதே வழிகளை இப்போது கைக்கொள். இந்திரப்பிரஸ்தத்தைக் கவர்ந்ததைப் போல, திரௌபதியை சபைக்கு நீ இழுத்து வந்ததைப் போல அதே வழிகளைக் கைக்கொள்! க்ஷத்திரிய வகைக் கடமைகளை நன்கு அறிந்தவனும் விவேகம் நிறைந்தவனும், காந்தார இளவரசனும், ஏமாற்றுகரச் சூதாடியுமான இந்த உனது மாமன் சகுனி இப்போது போரிடட்டும்! எனினும், காண்டீவம், கிருதம் {பகடைக்காயின் நான்கு எண்ணுள்ள பக்கம்} என்றும், துவாபரம் {பகடைக்காயின் இரண்டு எண்ணுள்ள பக்கம்} என்றும் பகடைக்காய்களை வீசாது. ஆனால் அது {காண்டீவம்} சுடர்விட்டெரியும் கூரிய முனை கொண்ட எண்ணற்ற கணைகளை அடிக்கும்.

காண்டீவத்தில் இருந்து அடிக்கப்படும் கழுகு இறகு கொண்டதும் சக்திமிக்கதுமான கடும் கணைகள் மலைகளைக் கூடத் துளைக்கும். யமன் என்ற பெயரைக் கொண்ட அனைத்தையும் அழிப்பவனும், வாயுவும், குதிரை முகம் கொண்ட அக்னியும் கூடச் சில மிச்சங்களை விட்டுச் செல்வார்கள். ஆனால் கோபம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} அதைக் கூட விடமாட்டான் {மிச்சமில்லாமல் அழிப்பான்}. உனது மாமனின் {சகுனியின்} துணை கொண்டு, எப்படிச் சபையில் பகடை விளையாடினாயோ, அதே போல அந்தச் சுபலனின் மகனால் {சகுனியால்} பாதுகாக்கப்பட்டு இந்தப் போரில் நீ போரிட்டுக் கொள். போரிடுவதாகத் தீர்மானித்தால் ஆசான் {கிருபர்} போரிட்டுக் கொள்ளட்டும். எனினும், நான் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். பசுக்களின் பாதையைப் பற்றிக் கொண்டு மத்ஸ்ய மன்னன் வந்தால், அவனுடன் போர் புரிய வேண்டும் என்பதற்காகவே உண்மையில் நாம் வந்தோம்” என்றான் {அஸ்வத்தாமன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்