Thursday, December 11, 2014

கர்ணனிடம் வாதிட்ட கிருபர்! - விராட பர்வம் பகுதி 49

Kripa’s argument with Karna! | Virata Parva - Section 49 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 24)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : கர்ணனை கிருபர் நிந்திப்பது; அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரித்து, அவற்றில் ஒன்றையாவது கர்ணன் செய்திருக்கிறானா என்று கிருபர் அவனை மட்டம்தட்டுவது; எனினும் அறுவரும் சேர்ந்து அர்ஜுனனுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று கிருபர் சொல்வது...

கிருபர் {கர்ணனிடம்} சொன்னார், “ஓ! ராதேயா {கர்ணா}, உனது கொடிய இதயம் எப்போதும் போரை விரும்புகிறது. பொருட்களின் உண்மை இயல்பை நீ அறிவதில்லை; அதனால் {போரினால்} ஏற்படும் பின்விளைவுகளையும் நீ கணிப்பதில்லை. ஊகித்தறியும்படி சாத்திரங்களில் பல்வேறு விதமான தகுமுறைகள் {expedients வழிமுறைகள்} உண்டு. கடந்த காலத்தை அறிந்தவர்கள் போர் மிகப்பாவகரமானது என்று கருதி, அதை அவற்றில் {சாத்திரங்களில்} சொல்லியிருக்கிறார்கள். காலமும் இடமும் சாதகமாக இருக்கும்போதுதான் படையெடுப்புகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.


எனினும், தற்போதைய நிகழ்வில், காலம் சாதகமற்று இருப்பதால், நல்ல முடிவுகள் இல்லாது போகும். சரியான காலத்திலும், இடத்திலும் காட்டப்படும் பராக்கிரமம் நன்மையைத் தரும். அதன் {காலம் மற்றும் இடம் ஆகியவற்றின்} சாதகம் மற்றும் பாதகமே ஒரு செயலுடைய வாய்ப்புகளின் தன்மையைத் தீர்மானிக்கிறது. தேர் செய்பவனின் கருத்துப்படி கற்றமனிதர்களால் செயல்பட முடியாது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} மோதல் நமக்கு நல்லதல்ல!

குருக்களை {கௌரவர்களை} (கந்தர்வர்களிடம் இருந்து) தனியாகவே அவன் {அர்ஜுனன்} காத்தான். தனியாகவே அவன் அக்னியை நிறைவு கொள்ளச் செய்தான். ஐந்து வருடங்கள் தனியாகவே அவன் (இமயத்தின் மார்பில்} பிரம்மச்சர்ய வாழ்வை நோற்றான். தனது தேரில் சுபத்திரையைக் கடத்திச் சென்ற அவன் {அர்ஜுனன்}, தனியாகவே கிருஷ்ணனை தனிப்போருக்கு அறைகூவி அழைத்தான். தன் முன் காட்டுவாசியாக நின்ற ருத்திரனுடன் {சிவனுடன்} தனியாகவே அவன் போரிட்டான்.

(ஜெயத்ரதனால்) கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியை} இதே காட்டில்தான் பார்த்தன் மீட்டான். இந்திரனுக்குக் கீழிருந்து ஐந்து வருடங்கள் ஆயுதங்களின் அறிவியலைக் கற்றவன் அவன் {அர்ஜுனன்} ஒருவனே. தனியாகவே அனைத்து எதிரிகளையும் வீழ்த்திய அவன் {அர்ஜுனன்} குருக்களின் {கௌரவர்களின்} புகழைப் பரப்பினான். அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {அர்ஜுனன்}, {ஒருகணத்தில்} கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனனையும், மறுகணத்தில் அவனது {சித்திரசேனனின்} ஒப்பற்ற துருப்புகளையும், தனியாகவே போர்க்களத்தில் வீழ்த்தினான். தேவர்களாலும் கொல்லமுடியாதவர்களான நிவாடகவசர்களையும், காலகஞ்சர்களையும் தனியாகவே அவன் தூக்கியெறிந்தான்.

எனினும், ஓ! கர்ணா, தனியாளாகவே இந்தப் பூமியின் பல தலைவர்களை அடக்கிய, அந்தப் பாண்டு மகன்களில் யாராவது ஒருவரைப் போலாவது, நீ என்ன செய்திருக்கிறாய்? போர்க்களத்தில் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதுவதற்கு இந்திரனே கூடத் தகுதியற்றவனே. எனவே, அர்ஜுனனுடன் போரிட விரும்பும் ஒருவன், மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைப் பொறுத்தவரை, நீ உன் வலக்கரத்தை விரித்து, உனது சுட்டுவிரலை நீட்டி, கொடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்பின் நச்சுப்பற்களைப் பிடுங்க விரும்புகிறாய். அல்லது தெளிந்த நெய்யை பூசிக் கொண்டு, {பட்டு போன்ற} மென்மையான ஆடை உடுத்திக் கொண்டு, கொழுப்பு, ஊனீர் {இறைச்சியில் கிடைக்கும் கொழுப்பு}, தெளிந்த நெய் ஆகியவற்றை உண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் {ஊடுருவி, அதைக்} கடந்து செல்ல விரும்புகிறாய்.

தனது கைகளையும், கால்களையும் கட்டிக் கொண்டும், கழுத்தைச் சுற்றி ஒரு பெருங்கல்லைக் கட்டிக் கொண்டும், வெறுங்கையால் கடலைக் கடக்க நினைப்பவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்? இத்தகு செயலில் இருக்கும் ஆண்மைதான் என்ன? ஓ! கர்ணா, ஆயுதங்களில் திறமையற்றுப் பலவீனமாக இருப்பவன், ஆயுதங்களில் பலமிக்கவனும் திறமைசாலியுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரிட விரும்பினால் அவன் மூடனே. நேர்மையற்ற முறையில் நம்மால் ஏமாற்றப்பட்டு, பதிமூன்று {13} வருட வனவாசத்தில் இருந்து விடுபட்ட அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்} நம்மை நிர்மூலமாக்கமாட்டானா? கிணற்றுக்குள் மறைந்திருந்த நெருப்பு போலப் பார்த்தன் {மறைந்து} இருந்த இடத்திற்கு அறியாமையின் காரணமாக வந்ததால், உண்மையில், நாம் பெருத்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டோம்.

அவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிர்க்கப்பட இயலாதவனாக இருப்பினும், நாம் அவனை எதிர்த்துப் போரிட்டே ஆக வேண்டும். எனவே, கவசமணிந்து அணிவகுக்கப்படும் நமது துருப்புகள், தாக்குவதற்குத் தயாராக இருக்கட்டும். துரோணர், துரியோதனன், பீஷ்மர், {கர்ணனாகிய} நீ, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நாம் ஆகிய அனைவரும் சேர்ந்து பிருதையின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். ஓ! கர்ணா, தனியாகப் போரிட்டு, இப்படித் துடுக்காகச் செயல்பட்டுவிடாதே! நாம் ஆறு தேர்வீரர்களும் ஒன்றுபட்டு, அவனுக்கு இணையானவர்களாகி, வஜ்ரதாங்கியைப் போலக் கடுமையாக இருப்பவனும், போரிடத் தீர்மானத்துடன் இருப்பவனுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். பெரும் வில்லாளிகளான நாம், அணிவகுக்கப்பட்ட நமது துருப்புகளின் உதவியைப் பெற்று, கவனமாக நின்று, தானவர்கள் வாசவனுடன் {இந்திரனுடன்} போரிடுவது போல {அர்ஜுனனிடம்} போரிடுவோம்” என்றார் {கிருபர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்