Friday, December 19, 2014

தேரொடிந்த கிருபர்! - விராட பர்வம் பகுதி 57

Kripa’s car was broken! | Virata Parva - Section 57 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 32)






பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்...


வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியும் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.


பிறகு, தனது பெயரை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன், தேவதத்தம் என்று அழைக்கப்பட்ட சங்குகளில் சிறந்த சங்கை எடுத்து வலுவுடன் ஊதி, உரத்த சங்கொலியை ஒலித்தான். வலிமைமிக்க ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்}, போர்க்களத்தில் ஒலிக்கப்பட்ட சங்கொலி, மலையைப் பிளப்பது போலக் கேட்கப்பட்டது. அர்ஜுனனால் ஊதப்படும்போது அந்தச் சங்கு நூறு துண்டுகளாக உடைந்து போகாததைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, தங்கள் வீரர்கள் அனைவருடன் சேர்ந்து அதை உயர்வாக மெச்சத் தொடங்கினர். சொர்க்கத்தை அடைந்த அவ்வொலி, திரும்பி வரும்போது, மலையின் மார்பில் மகவத்தால் {இந்திரனால்} வீசப்படும் வஜ்ரத்தின் ஒலி {இடியோசை} போலக் கேட்கப்பட்டது.

அதன்பின்பு, வீரரும், துணிச்சல்மிக்கவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், பலமும் பராக்கிரமும் நிறைந்தவருமான சரத்வானின் மகன் கிருபர், அவ்வொலியைத் தாங்கொணாது, அர்ஜுனன் மீது கோபம் கொண்டு, {அவனுடன்} போரிட விரும்பி, கடலில் பெறப்பட்ட தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினார். அவ்வொலியால் மூன்று உலகங்களையும் நிரப்பிய அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {கிருபர்}, தனது பெரிய வில்லை எடுத்து, அந்த வில்லின் நாணைப் பலமாகச் சுண்டி நாணொலி எழுப்பினார். இரு சூரியன்களுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை எதிர்த்து மற்றவர் நின்றபோது, இலையுதிர்கால மேகங்களின் பெருந்திரளைப் போல அவர்கள் பிரகாசித்தனர்.

பிறகு, எதிரி வீரர்களைக் கொல்பவரான சரத்வானின் மகன் {கிருபர்}, உயிர் நிலைகளில் நுழையவல்லவையும். வேகமானவையுமான கூரிய பத்து கணைகளால், விரைவாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தார். அந்தப் பிருதையின் மகனும் {குந்தியின் மகன் அர்ஜுனனும்}, தனது பங்குக்கு, உலகத்தால் கொண்டாடப்படும் ஆயுதங்களில் முதன்மையான காண்டீவத்தை இழுத்து, உடலின் முக்கியமான பகுதிகளைத் துளைக்கவல்ல எண்ணிலடங்கா இரும்புக் கணைகளை அடித்தான். அதன்பேரில், கிருபர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகள் {தன்னிடம்} வருமுன்பே கூரிய கணைகளைக் கொண்டு, அவற்றை நூறாகவும் {100}, ஆயிரமாகவும் {1000} வெட்டிப் போட்டார். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோபத்தில் பல்வேறு தந்திரங்களை வெளிப்படுத்தி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மூடினான். முழு வானத்தையும் தனது கணைகளால் மறைத்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரனான பிருதையின் மகன் {அர்ஜுனன்}, நூறு கணைகளால் கிருபரைச் சூழந்தான். தீச்சுடர்களைப் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துன்புற்ற கிருபருக்குக் கோபம் பெருகியதால், அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பார்த்தனை {அர்ஜுனனை}, பத்தாயிரம் கணைகளால் விரைவாகப் பீடிக்கச் செய்து, அந்தப் போர்க்களத்தையே அவர் {கிருபர்} கர்ஜிக்கச் செய்தார்.

பிறகு வீரனான அர்ஜுனன், தனது எதிரியின் {கிருபரின்} நான்கு குதிரைகளை, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டவையும், கூரானவையும், நேரானவையும், தங்க இறகுகள் கொண்டவையுமான நான்கு மரணக்கணைகளால் துளைத்தான். தீச்சுடர் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் குதிரைகள் திடீரெனப் பின்வாங்கின. அதன் விளைவாகக் கிருபர் தனது இடத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். கௌதமர் {கிருபர்} தனது இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதைக் கண்ட குருகுலத் தோன்றலான அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, எதிராளியின் {கிருபரின்} கண்ணியத்தை மதித்த காரணத்தால், அவர் மீது கணைகள் தொடுப்பதை நிறுத்தினான்.

பிறகு, மீண்டும் தனது இடத்தை அடைந்த கௌதமர் {கிருபர்}, கங்கப் பறவையின் இறகுகளைக் கொண்ட பத்து கணைகளால் சவ்யசச்சினை {அர்ஜுனனை} விரைவாகத் துளைத்தார். பிறகு பார்த்தன், கூரிய முனை கொண்ட ஒரு பிறை வடிவ கணையைக் கொண்டு, கிருபரின் வில்லையும், கையுறைகளையும் வெட்டியெறிந்தான். உயிரையும் துளைக்கவல்ல கணைகளால் கிருபரின் கவசத்தையும் வெட்டியெறிந்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவரது உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தவில்லை. கவசத்தை இழந்த அவரது {கிருபரின்} உடல், பருவகாலத்தில் சதுப்பு நிலத்தைவிட்டகன்ற பாம்பை ஒத்திருந்தது. தனது வில் பார்த்தனால் வெட்டப்பட்டவுடன், மற்றொன்றை எடுத்த கௌதமர் {கிருபர்}, அதில் மூன்று நாண்கயிறுகளைச் சேர்த்துக் கட்டினார்.

சொல்வதற்கே அதிசயமாக இருந்தாலும், அந்த அவரது வில்லும், குந்தி மகனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் வெட்டப்பட்டது. எதிரி வீரர்களைக் கொல்பவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகனால் {கிருபரால்} ஒன்றன் பின் ஒன்றாக {மேலும்} பிற விற்கள் எடுக்கப்பட்ட போதெல்லாம், அவற்றையும் இவ்வழியிலேயே வெட்டியெறிந்தான். தனது அனைத்து விற்களும் வெட்டியெறியப்பட்ட பிறகு, அந்த வலிமைமிக்க வீரர் {கிருபர்}, தனது தேரில் இருந்து வஜ்ரம் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஓர் எறிவேலை வீசினார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த எறிவேல், எரிகல்லைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு காற்றில் வந்த போது, அர்ஜுனன் அதைப் பத்துக் கணைகள் கொண்டு வெட்டியெறிந்தான்.

புத்திசாலியான அர்ஜுனனால் தனது எறிவேல் இப்படி வெட்டப்பட்டதைக் கண்ட கிருபர், மற்றுமொரு வில்லை விரைந்து எடுத்து, எண்ணற்ற பிறைவடிவ கணைகளைத் தொடர்ச்சியாக அடித்தார். எனினும், பார்த்தன், கூரிய முனை கொண்ட தனது பத்து {10} கணைகளால் அவற்றை வெட்டியெறிந்தான். பிறகு அந்தப் போர்க்களத்தில் மிகவும் கோபம் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும் தீச்சுடர்களுக்கு ஒப்பானவையுமான பதிமூன்று {13} கணைகளை அடித்தான். அவற்றில் ஒன்றைக் கொண்டு, எதிரி {கிருபருடைய} தேரின் நுகத்தடியை வெட்டினான். {அவற்றில்} நான்கைக் கொண்டு நான்கு குதிரைகளைத் துளைத்தான். ஆறாவதைக் கொண்டு தனது எதிரியுடைய {கிருபருடைய} தேரோட்டியின் தலையை அவனுடைய உடலில் இருந்து துண்டித்தான். {அவற்றில்} மூன்றைக் கொண்டு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், அந்த மோதலில் கிருபருடைய தேரின் மூங்கில் திரிதண்டத்தையும், {அவற்றில்} இரண்டைக் கொண்டு {தேரின்} சக்கரங்களையும் தாக்கினான். பனிரெண்டாவது கணையைக் கொண்டு கிருபரின் கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்.

இந்திரனைப் போல ஏளனமாகச் சிரித்த பல்குனன் {அர்ஜுனன்}, பதிமூன்றாவதைக் கொண்டு கிருபரின் மார்பைத் துளைத்தான். பிறகு, தனது வில் வெட்டப்பட்டு, தேர் உடைக்கப்பட்டு, குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டதையும் கண்ட கிருபர் கீழே குதித்து, ஒரு கதாயுதத்தை எடுத்து விரைவாக அர்ஜுனன் மீது வீசினார். ஆனால், கிருபரால் வீசப்பட்ட அந்தக் கனமிக்கப் பளபளப்பான கதாயுதம், அர்ஜுனனின் கணைகளால் தாக்குண்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

பிறகு, சரத்வான் மகனை {கிருபரைக்} மீட்க விரும்பிய வீரர்கள் (கிருபர் இருந்த படைப்பிரிவின் வீரர்கள்) அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதி, அவனைத் தங்கள் கணைகளால் மூடினர். குதிரைகளை இடதுபுறம் திருப்பிய விராடன் மகன் {உத்தரன்}, யமகம் என்றழைக்கப்பட்ட சுற்றிவளைக்கும் பரிணாமத்தைச் செய்யத் தொடங்கி, அதன் காரணமாக அவ்வீரர்களின் எதிர்ப்பைத் தடுத்தான். பிறகு அந்த மனிதர்களில் ஒப்பற்ற காளைகள், தேரை இழந்த கிருபரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, குந்தியின் மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகில் இருந்து {தூரமாக} அவரை {வேறுபக்கம்} வழிநடத்திச் சென்றனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்