Saturday, December 27, 2014

இரத்தம் தரையில் விழுந்திருந்தால்? - விராட பர்வம் பகுதி 68

If blood had dropped on the ground? | Virata Parva - Section 68 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 43)






பதிவின் சுருக்கம் : சபைக்குள் நுழைந்த உத்தரன், இரத்தம் சொட்ட ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் கங்கனைக் கண்டு பயந்து விராடனை அதட்டுவது; கங்கனிடம் விராடனை மன்னிப்பு கோரச் சொல்வது; விராடன் யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரியது; யுதிஷ்டிரனுக்கு இரத்தம் சொட்டுவது நின்றதும், அர்ஜுனன் உள்ளே நுழைவது; அர்ஜுனன் கேட்கும்படி விராடன் உத்தரனைப் புகழ்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னனின் {விராடனின்} மூத்த மகனான பூமிஞ்சயன் {உத்தரன்}, உள்ளே நுழைந்து, தனது தந்தையின் {விராடனின்} பாதங்களை வழிபட்டு, கங்கனை {யுதிஷ்டிரனை} அணுகினான். இரத்தத்துடன் இருக்கும் கங்கன், சபையின் ஒரு மூலையில், தரையில் அமர்ந்திருப்பதையும், சைரந்திரி {திரௌபதி} அவனுக்காகக் காத்திருப்பதையும் அவன் {உத்தரன்} கண்டான். இதைக் கண்ட உத்தரன், தனது தந்தையிடம் {விராடனிடம்} அவசரமாக, “ஓ! மன்னா {விராடரே}, இவர் யாரால் அடிக்கப்பட்டார்? இந்தப் பாவச்செயல் யாரால் மேற்கொள்ளப்பட்டது?” என்று கேட்டான்.


அதற்கு விராடன் {உத்தரனிடம்}, “இந்த இழிந்த பிராமணன் என்னாலேயே தாக்கப்பட்டான். இதைவிட இன்னும் அதிகம் பெற இவன் {கங்கன்} தகுந்தவனே. நான் உன்னைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, இவன் {கங்கன்} அந்த மூன்றாம் பாலினத்தவனைப் {பிருஹந்நளனைப்} புகழ்ந்தான்” என்றான் {விராடன்}.

உத்தரன் {விராடனிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, நீர் முறையற்ற செயலைச் செய்துள்ளீர். கடும் நஞ்சான ஓர் அந்தணச்சாபம், உமது வேர் வரை உம்மை எரித்துவிடாமலிருக்க, விரைவாக அவரை {கங்கரை} அமைதிப்படுத்தும்!” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தும் விராடன், தனது மகனின் {உத்தரனின்} இச்சொற்களைக் கேட்டு, சாம்பலில் மறைந்திருக்கும் நெருப்பு போல இருந்த குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} {அணுகி}, அவனிடம் மன்னிப்பைப் பெறும் வகையில் அமைதிப்படுத்தத் தொடங்கினான். தனது மன்னிப்பைப் பெற விரும்பும் மன்னனிடம் {விராடனிடம்}, அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! மன்னா {விராடரே}, நான் நீண்ட நேரத்திற்கு முன்னரே அதை மன்னித்துவிட்டேன். எனக்குக் கோபம் இல்லை. எனது மூக்கிலிருந்து இந்த இரத்தம் தரையில் விழுந்திருந்தால், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது நாட்டுடன் நீரும் அழிவுக்குள்ளாகியிருப்பீர் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {விராடரே}, ஓர் அப்பாவியை அடித்துவிட்டீர் என்று நான் உம்மைக் குற்றஞ்சாட்ட மாட்டேன். ஏனென்றால், ஓ! மன்னா {விராடரே}, சக்தி வாய்ந்தவர்கள் பொதுவாகவே காரணமற்ற தீவிரத்துடனேயே செயல்படுவார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இரத்தப்பெருக்கு நின்றதும், விராடனையும், கங்கனையும் வணங்கியவாறு பிருஹந்நளை (சபை அறைக்குள்) நுழைந்து அமைதியாக நின்றாள். குருக்களின் தலைவனை {யுதிஷ்டிரனை} அமைதிப்படுத்திய மன்னன் {விராடன்}, சவ்யசச்சின் {அர்ஜுனன்} கேட்கும்படி, போர்க்களத்தில் இருந்து திரும்பியிருந்த உத்தரனைப் புகழ ஆரம்பித்தான். அந்த மன்னன் {விராடன்}, “ஓ! கேகேய இளவரசியின் {சுதேஷ்ணையின்} மகிழ்ச்சியை அதிகரிப்பவனே {உத்தரா}, உண்மையில், உன்னிலேயே நான் என் மகனைக் கொண்டிருக்கிறேன். {உன்னால் நான் மகனுள்ளவன் ஆனேன்}. உனக்கு நிகரான மகன் எனக்கு இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதுமில்லை! உண்மையில், ஓ! குழந்தாய் {உத்தரா}, ஒரே நேரத்தில் ஆயிரம் குறிகளை அடித்தாலும், ஒரு குறியும் தவறாமல் அடிப்பவனான கர்ணனுடன், எப்படி நீ மோதினாய்? ஓ! குழந்தாய், மொத்த உலகத்தில் உள்ள மனிதர்களிலும் தனக்கு நிகரில்லாத பீஷ்மரிடம், எப்படி நீ மோதினாய்? ஓ! குழந்தாய், அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் ஆசானாகக் கருதப்படும் இருபிறப்பாளரும் {பிராமணரும்}, கௌரவர்கள் மற்றும் விருஷ்ணிகளின் ஆசானும், ஆயுதம் தாங்கும் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணரிடம், எப்படி நீ மோதினாய்? கொண்டாடப்படும் அஸ்வத்தாமனைப் போர்க்களத்தில், எப்படி நீ சந்தித்தாய்? ஓ! குழந்தாய், தனது வலிமைமிக்கக் கணைகளால் மலையைக் கூடத் துளைக்கவல்ல இளவரசனான துரியோதனனிடம், எப்படி நீ மோதினாய்? எனது எதிரிகள் அனைவரும் அடிக்கப்பட்டுவிட்டனர். இனிமையான தென்றல் என்னைச் சுற்றி வீசுவது போலத் தோன்றுகிறது. குருக்களால் கைப்பற்றப்பட்ட எனது செல்வமனைத்தையும் நீ மீட்டு வந்துவிட்டமையால், அந்த வலிமைமிக்க வீரர்கள் அனைவரும் பீதியால் தாக்கப்பட்டார்கள் என்றே தெரிகிறது. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, புலியிடம் இருந்து அதன் இரையைப் பறிப்பதைப் போல, எனது செல்வங்களான பசுக்களை என்னிடம் இருந்து பறித்துச் சென்ற எதிரியை முறியடித்துவிட்டாய் என்பதில் ஐயமில்லை” என்றான் {விராடன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்