Thursday, January 01, 2015

கிருஷ்ணனின் மதிநுட்பப் பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 1

The prudent speech of Krishna! - Udyoga Parva - Section 001 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வம்)
பதிவின் சுருக்கம் : விராடனின் அவைக்கு மன்னர்கள் வந்தது; பாண்டவர்கள் அனுபவித்த துயரையும், அவர்களுக்கு நேர்ந்த அநீதியையும் குறித்துக் கிருஷ்ணன் அந்த மன்னர்களுக்கு எடுத்துக் கூறி, ஒரு தூதுவரை அனுப்ப வேண்டும் என்று சொன்னது...

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்தக் குருவின் வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, தங்களைச் சேர்ந்தவர்களுடன் (விராடன் குடும்பத்தினருடன்), அபிமன்யுவின் திருமண விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடி, இரவில் இளைப்பாறி, விடியற்காலையில் விராடனின் அவைக்கு மகிழ்ச்சியாக வந்து சேர்ந்தனர். பல வண்ணங்களிலான ரத்தினங்களாலும், பெரும் மதிப்புடைய கற்களாலும், வரிசையாக இருந்த இருக்கைகளாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, நறுமணம் நிறைந்ததாக இருந்த அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} அவை {அரசவை}, எல்லா வளங்களாலும் நிறைந்திருந்தது. மனிதர்களில் வலிமைமிக்க ஏகாதிபதிகளான அவர்கள் {அந்த மன்னர்கள்} அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.


முகப்பில் இருந்த இருக்கைகளில் விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்கள் அமர்ந்திருந்தனர். பூமியின் முதிர்ந்த அந்த ஆட்சியாளர்களும் {விராடனும், துருபதனும்}, தங்கள் தந்தையுடன் கூடிய பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரும், {மற்றும்} அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர். பாஞ்சாலத்தின் மன்னனுக்கு {துருபதனுக்கு} அருகில் சினி குலத்தின் பெரும் வீரன் {சாத்யகி}, ரோகிணியின் மகனுடன் {பலராமனுடன்} அமர்ந்திருந்தான். மத்ஸ்ய மன்னனுக்கு {விராடனுக்கு} அருகருகே கிருஷ்ணன், யுதிஷ்டிரன், துருபத மன்னனின் அனைத்து மகன்கள், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, போரில் வீரமிக்கப் பிரத்யும்னன், சாம்பன் ஆகிய இருவர், அபிமன்யு, விராடனின் மகன்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். வீரம், வலிமை, கருணை, பராக்கிரமம் ஆகியவற்றில் தங்கள் தந்தையருக்குப் போட்டியாக இருந்த இளவரசர்களான திரௌபதியின் மகன்கள், தங்கத்தாலான அற்புத இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

ஒளிரும் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை அணிந்திருந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் அனைவரும் அமர்ந்ததும், அரசர்கள் நிறைந்த அந்தச் சபை, மின்னும் நட்சத்திரங்களால் நிறைந்த ஆகாயவிரிவைப் போன்று இருந்தது. அப்படி ஒன்றாகக் கூடியிருந்த வலிமை மிக்கவர்களான அவர்கள், ஒருவருடன் ஒருவர் பல்வேறு தலைப்புகளில் உரையாடி, கிருஷ்ணன் மீது தங்கள் நிலைத்த கண்களை வைத்து, சிந்தனையிலாழ்ந்த மனநிலையில் சிறிது நேரம் இருந்தனர். அவர்களது பேச்சின் முடிவில், பாண்டவர்கள் குறித்த காரியங்களில் அவர்களது கவனத்தைக் கிருஷ்ணன் ஈர்த்தான். அந்த வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பயனுள்ள, பொருள் பொதிந்த பேச்சைக் கேட்டனர்.

கிருஷ்ணன், “சுபலனின் மகனால் {சகுனியால்}, யுதிஷ்டிரர் எப்படி வஞ்சனையாக வெல்லப்பட்டார் என்பதையும், அவரது நாடு எப்படிப் பறிக்கப்பட்டது என்பதையும், காட்டில் தனது வனவாசம் குறித்த நிபந்தனை எப்படி அவரால் ஏற்கப்பட்டது என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தங்கள் சக்தியால் உலகை வெல்லும் திறனிருந்தும், அந்த அவலநிலையிலும் நம்பிக்கையில் உறுதியுடன் அவர்கள் {பாண்டவர்கள்} நீடித்தனர். அதன்படி, இந்த ஒப்பற்ற மனிதர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தக் கொடூரமான காரியத்தை, இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டனர். இறுதியான இந்தப் பதிமூன்றாவது வருடத்தைக் கழிப்பது இவர்களுக்கு மிகக் கடுமையானதாக இருந்தது. எனினும், நீங்கள் அறிந்தவாறே, தாங்கிக்கொள்ள முடியாத பல்வேறு கடினங்களையும் அனுபவித்து, ஒருவராலும் கண்டறியப்படாமல் இருந்தனர். இதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தச் சிறப்புமிக்க மனிதர்கள் {பாண்டவர்கள்}, பிறருக்கு அடிமைச்சேவகம் செய்யும் பணியில் இந்தப் பதிமூன்றாவது வருடத்தைக் கழித்தனர்.

இது இப்படி இருக்கையில், யுதிஷ்டிரன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவருக்கும் எது நன்மையானது என்பது குறித்தும், குருக்களையும் {கௌரவர்களையும்}, பாண்டவர்களையும் பொருத்தமட்டில், எது நீதியாகவும், பொருத்தமாகவும், அனைவருக்கும் இசைவானதாகவும் இருக்கும் என்பதைக் குறித்தும் நீங்கள் {இந்தச் சபை} கருத்தில் கொள்ள வேண்டும் {ஆலோசிக்க வேண்டும்}. அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரர், வானரசையும் {தேவலோக அரசையும்} அநீதியாக அடைய விரும்பமாட்டார். ஆனால், நீதியுடன் கிடைக்கும் ஒரு கிராமத்தின் ஆட்சியைக் கூட ஏற்றுக் கொள்வார். அவரது தந்தை {பாண்டுவின்} வழி அரசை, திருதராஷ்டிரன் மகன்கள் எவ்வாறு மோசடியான முறையில் கவர்ந்தார்கள் என்பதையும், தாங்க முடியாத கடின வாழ்வை அவர் எப்படி மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதையும், இங்கே கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்.

பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனனை, பலத்தால் வெல்ல இயலாதவர்களாகத் திருதராஷ்டிரன் மகன்கள் இருக்கிறார்கள். {தங்கள் பலத்தால் இவர்களது நாட்டை அவர்கள் அடையவில்லை}. எனினும் மன்னன் யுதிஷ்டிரரும் அவரது நண்பர்களும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நன்மையையே விரும்புகின்றனர். குந்தியின் வீரமிக்க மகன்களும், மாத்ரியின் இரு மகன்களும், மன்னர்களை வீழ்த்தி, போரில் தாங்கள் வென்று அடைந்தவற்றை {தாங்கள் ஈட்டியவற்றை} மட்டுமே கேட்கின்றனர். பாண்டவர்களுடைய அந்த எதிரிகள் {கௌரவர்கள்}, நாட்டைத் தாங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இவர்கள் {பாண்டவர்கள்} சிறுவர்களாக இருந்த போதே, இவர்களை அழிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் இவ்வளவு தீயவர்களாகவும், வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவுமே இருந்தனர்.

அவர்கள் எப்படித் தன்னலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், யுதிஷ்டிரர் எப்படி அறம் சார்ந்தவராக இருக்கிறார் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். அவர்களுக்குள் {கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்குள்} நீடிக்கும் உறவின்முறையையும் கருத்தில் கொள்ளுங்கள். {இது குறித்து}, தனித்தனியாகவும், ஒன்றாகச் சேர்ந்தும் ஆலோசிக்கும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

பாண்டவர்கள் எப்போதும் உண்மையைக் கருத்தில் கொள்பவர்கள். வாக்குறுதியில் உள்ள எழுத்துகள் முழுவதையும் இவர்கள் நிறைவேற்றிவிட்டனர். இப்போது திருதராஷ்டிரன் மகன்களால் அநீதி இழைக்கப்பட்டால், அவர்கள் அனைவரையும் இவர்கள் {பாண்டவர்கள்} மொத்தமாகக் கொல்வார்கள். பிறர் கைகளில் இவர்கள் {பாண்டவர்கள்} அடைந்த தீமை அறிவிக்கப்பட்டால், இவர்களின் அருகில் நின்று, இவர்களைத் துன்புறுத்தியவர்களுடன் போரிட்டு, தங்கள் உயிரே போனாலும் அவர்களைக் கொல்ல விரும்பும் நண்பர்களை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மிகச் சிலராக இருக்கிறார்கள்; இவர்களால் தங்கள் எதிரிகளை வெல்ல முடியாது என்று நீங்கள் நினைத்தால், நண்பர்களால் தொடரப்படும் இவர்கள் ஒற்றுமையாக இணைந்து, சந்தேகமற, தங்களால் முடிந்த வரை {பெருமுயற்சியைசெய்து} தங்கள் எதிரிகளை அழிக்கவே முயல்வார்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.

துரியோதனன் என்ன நினைக்கிறான், அல்லது அவன் என்ன செய்வான் என்பது {உள்ளபடி} சரியாகத் தெரியவில்லை. சிறந்ததே செய்யப்பட வேண்டும் எனும்போது, மறுபக்கத்தில் இருப்பவனின் எண்ணத்தை அறியாமல், உங்களால் என்ன கருத {ஆலோசிக்க} முடியும்? எனவே, யுதிஷ்டிரருக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி அவர்களை மென்மையாகத் தூண்ட {வேண்டிக்கொள்ள}, அறம், நேர்மை, மதிப்புக்குரிய பிறப்பு, எச்சரிக்கை {எச்சரைக்கையுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட தகுதி வாய்ந்த தூதர் ஒருவரைப் {இங்கிருந்து அங்கு} புறப்படச் செய்வீராக!” என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு, அமைதி மற்றும் பாரபட்சமற்ற உணர்வுடன் கூடிய கிருஷ்ணனின், மதிநுட்பமும், அறச்சார்பும் நிறைந்த பேச்சைக் கேட்ட அவனது அண்ணன் {பலராமன்}, தனது தம்பியின் {கிருஷ்ணனின்} சொற்களுக்கு அந்தச் சபையில் உயர்ந்த புகழுரை வழங்கினார்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்