Tuesday, December 30, 2014

விராட பர்வச் சுவடுகளைத் தேடி


“என்னங்க.. நல்ல மழையா?” என்று நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டேன். “ஓ… விராடபர்வம் முடிச்சிட்டீங்களாக்கும்…” என்றார். “ஆமாங்க முடிஞ்சிடுச்சு” என்றேன். “அதான் மழை பெய்யுதா? ஏற்கனவே மழைக்கும் விராட பர்வத்துக்கும் உள்ள சம்பந்தம்னு, வழக்கத்தில் உள்ள நம்பிக்கையான விராடபர்வம் வாசித்தால் மழைவரும் என்று ஒரு பதிவு போட்டோமே!” என்றார். “அட நீங்க வேற… கடைசிப் பதிவு போட்டவுடன சொல்லுங்க, திருத்தணும்னு சொன்னீங்களே! அதான் ஃபோன் பண்னேன்!” என்றேன். “காலைலேயே திருத்தியாச்சுங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன்!” என்றார். “மழை பெய்யுதே” என்று நான் சொல்வதற்குள், “நான் சிக்னல்ல இருக்கேங்க!” என்றார். “சரி வாங்க” என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.


அடுத்த அரைமணிநேரத்தில் என் வீட்டுக்கு வந்தார். வந்ததும் வராததுமாகக் கையில் வைத்திருந்த கவரைக் கொடுத்தார். என் தம்பி மனைவி திருமதி.ஜெயா அருண் அவர்களிடம், ஜெயவேலன் அவர்கள் என்னிடம் கவரைத்தரும் போது அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கூறினேன். “ஏங்க இப்படிலாம் செய்யக்கூடாதுங்க” என்றார். “அதெல்லாம் செய்யலாம். நீங்க கொடுக்குறீங்க… நான் வாங்குறேன்றது வெளிப்படையா இருக்கணுங்க!” என்று சொல்லி புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன். பிறகு, கவரை வாங்கிக் கிருஷ்ணன் காலடியில் வைத்தேன்…

“ஏங்க… நாம போடுற வீடியோ புக்குங்கள யாரும் பாக்குறது மாறியே தெரியல… விராட பர்வம் வீடியோக்கள மொத்தமாவே 2000 பேர்தான் பாத்துருக்காங்க. நீங்க ஃபேஸ்புக்குல வீடியோ லிங்குகளையும் ஷேர் செஞ்சு பாருங்க. வியூஸ் கூடுதானு பாப்போம்” என்றார். “மகாபாரதம் மொழிபெயர்ப்ப ஆரம்பிச்ச போது, அஞ்சு மாசத்துக்கு மொத்தமா 3000 பேர்தான் பாத்திருந்தாங்க. இப்போ… அது ஒரு நாளைலேயே நடக்குது… காணொளி கொடுக்க இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம்… பாப்போம்.. ஃபேஸ்புக்குலயும் போடுறேன். வேற ஏதாவது செய்ய முடியுமானும் பாப்போம்… இது கண்டிப்பா வயதானவங்களுக்குப் பயன்படுங்க…” என்று சொன்னேன்.

தீபா நடராஜன் அவர்கள் ஆதிபர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். திருமதி.ஜெயலட்சுமி அருண் சபா பர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். தீபா அவர்கள் ஒலிக்கோப்புகள் செய்வதற்கு முன்னரே, திரு.ஜெயவேலன் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆலோசித்திருந்தார். ஆனால் குரல்வளம் மிக்க நண்பர்கள் யாரும் எங்களில் இல்லை. நானேகூட படிக்க சிறு முயற்சி செய்து பார்த்து, தோற்றிருந்தேன். பிறகுதான் தீபா தன்னார்வமாகப் படித்து ஒலிக்கோப்புகள் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு ஜெயலட்சுமி வந்தார். இந்தச் செப்டம்பர் மாதம்தான் ஜெயவேலன் அவர்களுக்குத் திருமணம் முடிந்தது. இதோ டிசம்பருக்குள் அவரது மனைவி திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் விராட பர்வத்தில் அனைத்துப் பதிவுகளையும், வன பர்வத்தில் நூறு பதிவுகளையும் ஒலிக்கோப்புகளாக்கி எனக்கு அனுப்பிவிட்டார். நான் அவற்றைக் காணொளியாக மாற்றி, யூடியூபில் பதிவேற்றி, வலைப்பூவில் இணைப்பு கொடுத்து வருகிறேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று முதன் முதலாகக் கனவு கண்ட நண்பரே “காணொளிகளைப் பலர் பார்க்கவில்லையே” என்று சொன்னது வருத்தமாகவே இருந்தது.

விராட பர்வத்தை மொழிபெயர்த்ததற்கிடையில் மனதில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் என்றால், குறிப்பாக மூன்றைச் சொல்லலாம். ஒன்று சென்னையில் நடந்த வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா, மற்றொன்று மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது. மூன்றாவது நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்களின் தொலைபேசி உரையாடல்.

வெண்முரசு விழாவில் சற்றும் எதிர்பாராமல் மேடையில் அழைத்து, பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு நினைவுப்பரிசை வழங்கிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. முழுமஹாபார மொழிபெயர்ப்பைச் செழுமையாக்க நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்குச் செலுத்தும் எனது நன்றியாக அமைய வேண்டும் என்று பரமனை வேண்டுகிறேன். ஜெயமோகன் அவர்களது பிரயாகை அருமையாக வந்து கொண்டிருக்கிறது.

மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு என நினைக்கிறேன். நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். நமது முழுமஹாபாரதம் குறித்துப் பாராட்டினார். ஏன் இன்னும் முழுமஹாபாரதம் புத்தக வடிவில் வரவில்லை என்று கேட்டார். நான் "புத்தக வடிவமைப்பு தயாராக இருக்கிறது. நண்பரின் அச்சகமும் தயாராக இருக்கிறது. மூலதனம்தான் இல்லை. தற்போதைய நிலையில் ஆதிபர்வம் மட்டும் 1000 புத்தகங்கள் அச்சிடவேண்டுமென்றால் 2 1/2 லட்சம் வரை ஆகும்” என்றும் சொன்னேன். அதற்கு நாமக்கல் திரு.ரவிக்குமார் அவ்ர்கள்,“எழுத்துகள் சிறியதாக இருக்கக்கூடாது. முதியவர்களும் படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்” என்று சொன்னார். “அப்படியென்றால் 900 முதல் 1000 பக்கங்கள் வரை வரும். செலவு இன்னும் அதிகமாகும்” என்றேன். “இப்படி ஒரு நல்ல காரியம் செய்வதற்கு, முழுத் தொகையையும் நானே தருகிறேன். இருப்பினும் மற்ற வாசகர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் தரும் சிறு நன்கொடையைக் கூடப் பெற்றுக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிடலாம்” என்றார். அறிமுகம் இல்லாத நபர் இப்படி ஒரு பெருந்தொகை தர முன்வருவதை என் வாழ்வில் நான் கண்டதில்லை. அவருக்கு என் நன்றி.

இது சம்பந்தமாக ஜெயவேலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். “அவர் சொல்ற மாதிரி, நம்ம பிளாக்ல ஒரு கோரிக்கை வச்சுப் பாருங்க. தப்பில்லைங்க” என்றார். வலைப்பூவில் பதிவிட்டு முகநூலில் பகிர்ந்ததில், மொத்தம் பதினைந்து நண்பர்கள் எனது வங்கிக் கணக்கெண்ணைக் கேட்டுப் பணம் தர முன்வந்தனர். நான் அவற்றை மறுத்து, நண்பர்களின் முடிவான கருத்து என்ன என்பதைக் கேட்டு முடிவெடுத்த பிறகு தருகிறேன் என்று சொன்னேன். அப்படிக் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது அக்கறை கொண்ட நெருக்கமான நண்பர்கள் சிலர், “இப்போதைக்கு இது வேண்டாம். முதலில் முழு மஹாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். தொண்டு என்பது போய், வணிகத்திற்காகவும் நடைபெறும் செயல் என்று முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு பழிக்கு ஆளாகக்கூடாது” என்று தொலைபேசியிலும், முகநூல் அகப்பேழையிலும் கருத்து தெரிவித்தனர். ஜெயவேலன் அவர்களிடம் இந்தக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டேன். “சரி. அப்ப நாம பிறகு பாத்துக்கலாங்க. முதலில் மொழிபெயர்ப்பை மட்டும் கருத்தா பாப்போம்!” என்றார்.

புத்தகம் அச்சிடுவது சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்த போது, திரு.ஹரன்பிரசன்னா அவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் புத்தகம் அச்சிடுவது குறித்துச் சில தகவல்களையும், வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் சொல்லி விட்டு, “உங்க பதிவுகள்ல டெக்ஸ்ட {Text} கலர் கலரா போடுறீங்களே. அதனால படிக்கிறது சிரமமாயிடுது. நார்மலாவே போடலாமே” என்று ஒரு கருத்தைச் சொன்னார். “பதிவ திருத்தும்போது நண்பர் ஜெயவேல் கலர்கலரா எழுத்துங்கள மாத்துறாரு. நான் உங்க கருத்த அவர்கிட்ட சொல்றேன்” என்று சொன்னேன். பிறகு ஜெயவேலன் அவர்களிடம் இது குறித்து இன்றுதான் அதுகுறித்துப் பேசினேன். “ஏங்க… படிக்கிறது கஷ்டமாயிருக்கும்னுதான் நானும் நினைச்சேன்…. ஆனா… நான் என்ன செய்றேன் தெரியுமா…? ஒவ்வொரு பதிவுலயும் உள்ள பெயர்ச்சொற்கள்ல மனிதர்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், இடங்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், உவமைகளை ஒரு கலர்லயும், நீதிகள ஒரு கலர்லயும், முக்கியமான வரிகள ஒரு கலர்லயும், சாத்தியக்கூறுகள்ல சந்தேகம் வர்ற மாதிரி உள்ள வரிகள ஒரு கலர்லயும் மாத்துறேன். நாளைக்குப் பின்ன இது குறிச்சுத் தேடுறவங்களுக்கு, ஈசீயா இருக்கும்… நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார். “சரிதான். செய்யுங்க! ஆனா எழுத்துக்குப் பின்னாடி வர்ற {Background} கலர் வேண்டாமே” என்றேன் நான். அவர், “சரி!” என்றார்.

“அப்புறம், உத்யோக பர்வம் எப்போ ஆரம்பிக்கிறீங்க?” என்று கேட்டார். “ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி அன்று ஆரம்பிக்கப் போறேன்” என்றேன். “அதுவரை!” என்றார். “விராட பர்வத்துக்கான “சுவடுகளைத் தேடி” பதிவு எழுதணும். உங்க வைஃப் தேவகி அனுப்பி வச்சிருக்கும், விராட பர்வ ஆடியோ பதிவுகள் பகுதி 56 முதல் 72 வரை வீடியோ புக்கா மாத்தாமலேயே இருக்கு. அதை மாத்தி யூடியூபில போடணும். வனபர்வம் 100 பதிவுங்க ஆடியோ அனுப்பியிருக்காங்க அது இப்ப முடியலனாலும், பின்னயாவது வீடியோ புக்கா மாத்தணும். ஆதிபர்வ பதிவுங்க எதுக்குமே “பதிவின் சுருக்கம்” இல்ல. அதப் போடணும். இது வரை உள்ள நாலு பர்வத்தையும் பிரிண்ட் எடுத்து எங்கப்பாக்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லிருந்தேன். நிறையப் பிழை சுட்டிக்காட்டியிருக்காங்க. அதையெல்லாம் திருத்தணும். நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் விராடபர்வப் பதிவுகள எல்லாம் திரட்டி இமெயில் அனுப்பிச்சிருக்காரு. அதுக்கு ஒரு ராப்பர் {முகப்பு அட்டை} டிசைன் செய்து, விராட பர்வ பிடிஎஃப்க்கான வேலைய ஆரம்பிக்கணும். வேலையாங்க இல்ல. நிறைய இருக்கு. ஆனா இதையெல்லாம் மூணு நாள்ல செஞ்சுட முடியாது. பொறுமையாத்தான் செய்யணும். பாப்போம்” என்றேன்.

ஜெயவேலன் அவர்களுக்கு இன்று நிறைய வேலைகள் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும், எனக்காக நேரத்தை ஒதுக்கி வந்திருந்தார். அதனால், அதிகம் பேசமுடியவில்லை. உடனே கிளம்பிவிட்டார். ஒவ்வொரு பர்வம் முடிந்தவுடனும் என்னை உற்சாகபடுத்தும் விதமாக மகாபாரதப் பர்வத்தில் வரும் பகுதிகளின் எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுத்து வருகிறார்.மாலை வரை அவர் தந்த கவர் கிருஷ்ணன் காலடியிலேயே இருந்தது. என் மனைவி, “கவரை இன்னும் பிரிச்சுக் கூடப் பாக்கல” என்றாள். “இல்ல... சாமிகிட்ட வச்சேன், பிறகு வேலைல மறந்துட்டேன். நீ பாத்திருக்கலாமே” என்றேன். “நீங்க வந்து எடுத்துக் கொடுப்பீங்கனு நினைச்சேன்” என்றாள். “சரி… பிரி” என்று சொல்லி கவரை எடுத்துக் கொடுத்தேன். ரூ.7,200 இருந்தது. “அவரு குடுக்குறார்னு, நீங்களே வாங்கிட்டே இருக்கீங்களே! தப்பில்லையா” என்றாள். “தப்புதான். வாங்கலேனா அவர் மனசு புண்படும். நான் வேற யாருகிட்டயும் வாங்கல. என் நண்பர் நமக்கு மகிழ்ச்சியா கொடுக்கிறார். வாங்கிக்கிறேன்” என்றேன். “ஏங்க… நாம இதுவரை யாருக்காவது இப்படிப் பணம் கொடுத்திருக்கோமா… இல்ல கொடுக்கத்தான் செய்வோமா… இவருக்கு எப்படிங்க மனசு வருது” என்றாள். “அதுதான் ஜெயவேல்” என்றேன். இதையேதான் என் சித்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வனபர்வம் 313 பகுதிகள்  முடிந்தபோதும்  கேட்டார். ஜெயவேலன் பணம் தருவது பெரிதல்ல. முழுமஹாபாரதத்திற்கும் அவர் செலுத்தி வரும் உழைப்பே பெரிது. இன்னும் பெரிதினும் பெரிது, அவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஈடுபாட்டுடன் உதவுவது.

அக்டோபர் மாதம் 22ந்தேதி, தீபாவளி அன்று விராட பர்வ மொழி பெயர்ப்பை ஆரம்பித்தேன். டிசம்பர் மாதம் 28ந்தேதி நிறைவடைந்திருக்கிறது. 68 நாட்களில் 72 பகுதிகளின் மொழிபெயர்ப்பு முடிந்திருக்கிறது. அடுத்து உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வேண்டும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்.
29.12.2014 

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்