Friday, January 02, 2015

பலராமன் சொன்ன ஆலோசனை! - உத்யோக பர்வம் பகுதி 2

The counsel of Balarama! | Udyoga Parva - Section 2 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 2)

பதிவின் சுருக்கம் : .கிருஷ்ணனின் சொற்களைப் பலராமன் பாராட்டுவது; யாராவது ஒருவரை கௌரவர்களிடம் தூதுவராக அனுப்பவேண்டும் என்று சொல்வது; அப்படிச் செல்லும் தூதரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது போல யுதிஷ்டிரனை இடித்துரைப்பது; சாத்யகி பலராமனின் பேச்சை இடைமறிப்பது...

பலதேவன் {Baladeva-பலராமன்} சொன்னான், “அறவுணர்வு, மதிநுட்பம், யுதிஷ்டிரனுக்கும் மன்னன் துரியோதனனுக்கும் நன்மை தரும் உணர்வு ஆகிய சொற்களில் அமைந்த, கதனின் அண்ணனுடைய {கிருஷ்ணனுடைய} பேச்சை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். குந்தியின் இந்த வீரமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டில் பாதியைத் தர சித்தமாக இருக்கிறார்கள். இந்தத் தியாகத்தை அவர்கள் {பாண்டவர்கள்} துரியோதனனுக்காகவே செய்கிறார்கள். எனவே, திருதராஷ்டிரன் மகன்களும் பாதி நாட்டைக் கொடுத்து, சச்சரவை நிறைவாகத் தீர்த்து, நம்முடன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, {அவர்களும்} இன்பமாக இருக்க வேண்டும்.


எதிர்த்தரப்பு {கௌரவர் தரப்பு} முறையாக நடந்து கொண்டால், இந்த வலிமைமிக்கவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டை அடைந்து கோபம் தணிந்து இன்பமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களும் {கௌரவர்களும்} மக்கள் நன்மையைக் கருதி அமைதியடைய வேண்டும். குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவரையும் அமைதிப்படுத்தும் நோக்கம் கொண்ட மனிதர்களில் யாராவது ஒருவர், துரியோதனனின் மனதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் {அறிந்து கொள்ளவும்}, யுதிஷ்டிரனின் நோக்கங்களை {அவனுக்கு} விளக்கவும் இங்கிருந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

குருகுலத்தின் வீரக்கொழுந்தான பீஷ்மர், விசித்திரவீரியனின் பெருமைமிக்க மகன் {திருதராஷ்டிரர்}, துரோணர் மற்றும் அவரது மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், கிருபர், சூத மகனுடன் {கர்ணனுடன்} சேர்ந்த காந்தார மன்னன் {சகுனி}, ஆகியோரை அவர் {தூது செல்பவர்} மரியாதையுடன் வணங்கட்டும். காலத்தின் குறிகளை அறிந்தவர்களும், வீரர்களும், முறையான {தங்கள்} கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களும், கல்விக்காகவும், பலத்திற்காகவும் அறியப்பட்டவர்களுமான திருதராஷ்டிரரின் பிற மகன்கள் அனைவருக்கும், அவர் {அத்தூதர்}, தனது மரியாதையைச் செலுத்தட்டும். இந்த {மேற்கண்ட} மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கும்போது, மூத்த குடிமக்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, யுதிஷ்டிரனின் விருப்பங்களைச் சொல்ல விரும்பும் அவர் {அத்தூதர்}, பணிவான வார்த்தைகளால் அவற்றைச் சொல்லட்டும். அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் வசம் அரசைக் கொண்டுள்ளதாலும், அவர்கள் {கௌரவர்கள்} தரப்பு வலுவாக இருப்பதாலும், எச்சந்தர்ப்பத்திலும் அவர்களது கோபம் தூண்டப்படாமல் இருக்கட்டும்.

யுதிஷ்டிரனிடம் அரியணை இருந்தபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்ததால், இவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்த நாட்டை அவர்கள் {கௌரவர்கள்} அபகரித்தனர். அஜமீட குல வழித்தோன்றலும், வீரமிக்கக் குருவுமான இந்த யுதிஷ்டிரன், தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், தனக்குப் பகடையில் திறமை இல்லையென்றாலும், சூதில் நிபுணனான காந்தார மன்னனை {சகுனியை} விளையாட்டில் சவாலுக்கழைத்தான். அப்போது அந்த இடத்தில், விளையாட்டில் {சூதில்} யுதிஷ்டிரன் வெல்லத்தக்க ஆயிரக்கணக்கான பகடையாட்டக்காரர்கள் {சூதாடிகள்} இருந்தனர். எனினும், அவர்களில் யாரையும் கவனிக்காத அவன் {யுதிஷ்டிரன்}, மற்ற ஆட்டக்காரர்களைத் தவிர்த்து சுபலனின் மகனுக்குச் {சகுனிக்குச்} சவால்விட்டான். பகடை அவனுக்கு எதிராக விழுந்தாலும், {பிடிவாதமாக} சகுனியையே தனது போட்டியாளனாகக் கொண்டிருந்தான். சகுனியுடன் விளையாடிய அவன் {யுதிஷ்டிரன்} படுதோல்வியை அடைந்தான். இதில் சகுனியைப் பழி சொல்ல எதுவுமில்லை.

விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சமரசம் நோக்கம் கொண்ட சொற்களையும், பணிவான சொற்களையும் அத்தூதர் பயன்படுத்தட்டும். இப்படியே அத்தூதர் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தனது நோக்கத்தின் பால் கொண்டு வரட்டும். குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிடத் துணியாமல், துரியோதனனிடம் சமாதானமான தொனியிலேயே பேச வேண்டும். போரினால், நோக்கம் நிறைவடையாமல் போகலாம், ஆனால் சமரசத்தால், அது நிறைவடையும். இவ்வழிகளில் சென்றால்தான் நீடித்த நன்மையைப் பெற முடியும்” என்றான் {பலராமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதுகுலத்தின் வீரக்கொழுந்து {பலராமன்}, இப்படித் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்த போதே, சினி குலத்தின் வீர மகன் {சாத்யகி}, திடீரென ஆவேசமாக எழுந்து, முன்னவன் {பலராமன்} சொன்ன சொற்களுக்காக, அவனைக் {பலராமனைக்} கண்டித்தான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்