Wednesday, January 28, 2015

மன்னர் மற்றும் பீஷ்மரின் விருப்பம்! - உத்யோக பர்வம் பகுதி 25

The desire of the king and Bhishma! | Udyoga Parva - Section 25 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 25)
பதிவின் சுருக்கம் : மன்னர் சொல்லி அனுப்பிய அனைத்தையும் தங்களிடம் சொல்லும்படி யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் கோருவது; அனைவரையும் சஞ்சயன் வாழ்த்தியது; திருதராஷ்டிரன் அமைதியை விரும்புவதாகச் சஞ்சயன் சொன்னது; உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பாண்டவர்கள் தகாததைச் செய்யக் கூடாது என்று எச்சரிப்பது; வெற்றி தோல்வியால் எந்தப் பயனும் இல்லை என்பதைச் சொன்னது; இரத்த உறவினர்களைக் கொன்று கிடைக்கும் வாழ்வு மரணத்திற்கு ஒப்பானது என்பதைச் சொன்னது; பாண்டவர்கள் முன்பு பணிந்து சஞ்சயன் அமைதியை வேண்டியது; இதுவே திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் விருப்பம் என்று சொன்னது...

யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சூதர் கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், கிருஷ்ணன், யுயுதனன் {சாத்யகி}, விராடர் ஆகியோர் இங்கே ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறோம். திருதராஷ்டிரர் உம்மை என்ன சொல்ல வழிநடத்தினாரோ, அவை அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும்” என்றான்.

சஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்}, “யுதிஷ்டிரன், விருகோதரன் {பீமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சூரனின் வழித்தோன்றலான வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்}, பிருஷதனின் மகன் {பேரன்} திருஷ்டத்யும்னன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். குருக்களின் நலன் விரும்பி, நான் சொல்லும் வார்த்தைகளை அனைவரும் கேட்பீராக. அமைதிக்கான வாய்ப்பை ஆவலுடன் வரவேற்கும் மன்னர் திருதராஷ்டிரர், இங்கே வரும் எனது இந்தப் பயணத்திற்காக, என் தேரைத் தயார் செய்யத் துரிதப்படுத்தினார்.


தன் தம்பிகள், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரனுக்கு, இஃது ஏற்புடையதாகட்டும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} அமைதியை விரும்பட்டும். பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, உறுதி, மென்மை மற்றும் கபடற்ற தன்மையோடு கூடிய அனைத்து அறங்களையுந் தங்களிடம் கொண்டுள்ளனர். உயர்ந்த குடும்பத்தில் பிறந்த அவர்கள், மனிதாபிமானம், தாராளம், அவமானத்தைத் தரும் எந்தச் செயலையும் செய்ய ஆர்வமில்லாமை ஆகிய தன்மைகளைக் கொண்டவர்களாவர். எதைச் செய்வது சரி என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் உயர்ந்த மனம் கொண்டோராகவும், பின்தொடரும் பயங்கரத் துருப்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் தாழ்ந்த செயல்கள் உங்களுக்குப் பொருந்தாது.

நீங்கள் ஒரு பாவச் செயலைச் செய்தால், அது வெள்ளைத் துணியில் பட்ட மைத்துளி போல, உங்கள் நற்பெயரில் பட்ட கறையாக இருக்கும். ஒரு செயலைச் செய்தால், அது, பாவம் மற்றும் நரகத்திற்கு வழிவகுக்கும் என்றும், உலகளாவிய படுகொலையை விளைவிக்கும் என்றும், அது (மனிதர்களுக்கு) அழிவைக் கொண்டு வரும் என்றும், {அதில் கிடைக்கும்} வெற்றியோ தோல்வியோ, விளைவுகள் ஒரே மதிப்பைத்தான் தரும் என்றும் அறிந்த எவன் அச்செயலைச் செய்யும் குற்றவாளியாவான்? தங்கள் உறவினர்களின் காரியத்திற்குச் சேவையாற்றியவர்கள் {பாண்டவர்கள்} அருளப்பட்டவர்களே. பழிச்செயல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய உயிரை குருக்களின் நன்மையை உத்தரவாதப்படுத்துவதற்காக விடுபவர்களே, {குருக்குலத்தின்} உண்மையான மகன்களும், நண்பர்களும், உறவினர்களும் ஆவர்.

பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் எதிரிகள் அனைவரையும் வீழ்த்தி, கொன்று, குருக்களை {கௌரவர்களை} நீங்கள் தண்டித்தால், அதற்கடுத்து வரும் உங்களது வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாக இருக்கும். உண்மையில், இரத்த சம்பந்தமுடையவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, எதற்காக வாழ வேண்டும்?

ஒருவன், அனைத்து தேவர்களும் தன் பக்கம் நிற்கும் இந்திரனேயானாலும், அவனால், கேசவன் {கிருஷ்ணன்}, சேகிதானன், சாத்யகி ஆகியோரின் துணையுடன், திருஷ்டத்யும்னன் கரங்களால் பாதுகாக்கப்படும் உங்களை எப்படி வீழ்த்த இயலும்? மேலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, துரோணர், பீஷ்மர், அஸ்வத்தாமன், சல்லியன், கிருபர், கர்ணன், {பிற} க்ஷத்திரிய மன்னர்களின் படைகள் ஆகியோரால் காக்கப்படும் குருக்களைப் போர்க்களத்தில் யாரால் வீழ்த்த முடியும்?

எனவே, வெற்றியோ, தோல்வியோ எதிலும் நான் எந்த நன்மையையும் காணவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இழிந்த மனிதர்களைப் போலப் பிருதையின் {குந்தியின்} மகன்களால் {பாண்டவர்களால்} அநீதியான ஒரு செயலை எவ்வாறு செய்ய முடியும்? எனவே, கிருஷ்ணன் மற்றும் பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்} ஆகியோர் முன்பு நான் அடிபணிந்து நின்று அமைதிப்படுத்துகிறேன். குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் நன்மையடையும் வகையில் என் கரங்களைக் குவித்து நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருஷ்ணனோ, தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இந்த எனது வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியாது என்பதற்கு வாய்ப்பில்லை. (அவ்வாறு செய்ய) வேண்டிக் கொள்ளப்பட்டால், அவர்கள் இருவரும் தங்கள் உயிரையே கொடுப்பார்கள். {It is not likely that either Krishna or Dhananjaya will not act up to these my words. Either of them would lay down his life, if besought (to do so)}. எனவே, என் பணியின் வெற்றிக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களுக்குள் (குருக்களிடம்) அமைதி உறுதிப்பட வேண்டும் என்பதே மன்னர் {திருதராஷ்டிரர்} மற்றும் அவரது ஆலோசகரான பீஷ்மரின் விருப்பமாகும்” என்றான் {சஞ்சயன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்