Thursday, January 29, 2015

தன் நாட்டைக் கேட்ட யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 26

Yudhishthira asked for his kingdom! | Udyoga Parva - Section 26 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 26)
பதிவின் சுருக்கம் : போரை வெறுத்து அமைதியையே தான் விரும்புவதாகச் சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; ஆசையை மனிதர்கள் விடுவதில்லை; ஆசையை அனுபவிப்பதனால் அது தணிவதில்லை என்று சொல்வது; திருதராஷ்டிரன் விதைத்ததையே அறுப்பதாகச் சொல்வது; விதுரரைத் துரியோதனனும் திருதராஷ்டிரனும் தள்ளி வைத்ததைக் கண்டிப்பது; தனது மகனின் தீய செயல்களைத் திருதராஷ்டிரர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டுவது; அர்ஜுனனும் கர்ணனும் சமமல்ல என்று சொல்வது; இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிட்டால் தான் அமைதியடைவதாக யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...

யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “போரைச்சுட்டிக் காட்டும் விதமான என்னுடைய எந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! சஞ்சயரே, போரை நினைத்து ஐயுற்று நீர் அஞ்சுகிறீர். ஓ! அய்யா, போரைக்காட்டிலும் அமைதியே விரும்பத்தக்கது. ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, மாற்று இருக்கும்போது போரிட எவன் விரும்புவான்? ஓ! சஞ்சயரே, எதுவும் செய்யாமலே, ஒருவன் தன் இதய விருப்பம் அனைத்தையும் அடையலாம் என்றால், அவன், எதையும் செய்ய விரும்பமாட்டான். {போரிட்டாலும்கூட} சின்னப் பிரச்சனையைத் தான் அவன் சந்திக்க நேரிடும் என்றாலும் அவன் போரில் ஈடுபட விரும்பமாட்டான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எப்போதானாலும், ஒரு மனிதன் ஏன் போருக்குச் செல்ல வேண்டும்? போரைத் தேர்ந்தெடுக்கும்படி தேவர்களால் சபிக்கப்பட்டவன் எவன்?


பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் நடத்தை எப்போதும் நீதியாலும், உலக நன்மைக்கு உகந்ததாலும் குறிக்கப்படுகிறது. அவர்கள் நீதியினால் விளையும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். தனது புலன்களின் வழிகாட்டுதலை விருப்பத்துடன் தொடர்ந்து சென்று, துன்பத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியை அடைய விரும்புபவன், துன்பத்தின் சாரம் கொண்ட நடவடிக்கையைத் தவிர வேறு எதையும் மேற்கொள்வதில்லை. இன்பத்துக்குப் பின்னால் பேராவல் கொண்டு ஓடுபவன், தன் உடலுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறான்; இத்தகு பேராவலில் இருந்து விடுபட்டவன், துன்பம் என்பது என்ன என்பதை அறிவதில்லை. தூண்டப்பட்ட நெருப்பில் அதிக எரிபொருளை {விறகை} இடும்போது, மிகுந்த சக்தியுடன் அது மீண்டும் சுடர்விட்டு எரிகிறது. அதே போல, ஆசை, அதன் பொருளை அடைந்தாலும், தூண்டப்படாத நெருப்பில் தெளிந்த நெய்யைவிடுவது போல, அது {நெருப்பு போன்ற ஆசை} தணிவதில்லை, சக்தியே பெறுகிறது.

நாங்கள் கொண்டிருப்பவற்றோடு, மன்னர் திருதராஷ்டிரரிடம் உள்ள அபரிமிதமான மகிழ்ச்சியையும் நிதியையும் ஒப்பீடு செய்து பாரும். பேறற்றவன் வெற்றியடைவதில்லை. பேறற்றவன் இசையின் குரலை {இசை போன்ற குரலை} அனுபவிப்பதில்லை. பேறற்றவன் மலர்மாலைகளையும் நறுமணப் பொருட்களையும் அனுபவிப்பதில்லை. அதே போல பேறற்றவன், மணமிக்கக் குளிர்ந்த தைலங்களையும் அனுபவிப்பதில்லை. கடைசியாக, பேறற்றவன், நல்ல உடைகளை உடுத்துவதில்லை. இஃது இப்படி இல்லை என்றால், நாங்கள் குருக்களிடம் இருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டோம். இவை அனைத்தும் உண்மையே எனினும், இதுவரை யாரும் இதய வேதனைகளை அகற்றவில்லை.

மன்னர் {திருதராஷ்டிரர்}, தானே பிரச்சனையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் வலிமையில் பாதுகாப்பு தேடுகிறார். இது நல்லதில்லை. எனினும், பிறர் மீது அவர் {திருதராஷ்டிரர்} எந்த நடத்தையைக் கைக்கொள்கிறாரோ, அதையே அவர் மற்றவர்களிடமும் பெறட்டும்.

வசந்த காலத்தின் நடுப்பகல் வேளையில், புதர் நிறைந்த அடர்ந்த காட்டில் நெருப்பை வீசுபவன், காற்றின் துணையால் அந்நெருப்புச் சுடர்விட்டெரியும்போது, அத்தனைக்காகவும் வருத்தப்பட்டுத் தப்பிக்கவே விரும்புவான் என்பது நிச்சயம்.

ஓ! சஞ்சயரே, மன்னர் திருதராஷ்டிரர் இந்தச் செழிப்பனைத்தையும் கொண்டிருந்தும், ஏன் புலம்புகிறார்? ஏனென்றால், அவர் கோணலான வழிகளுக்கு அடிமையாகி, தீய ஆன்மா கொண்ட தனது தீய மகனின் அறிவுரைகளை முதலில் பின்பற்றி, தன் அறியாமையால் {மடத்தனத்தால்} அதை உறுதி செய்தார். தன் நலன்விரும்பிகளில் சிறந்தவரான விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு, ஏதோ அவர் தனக்கு எதிரி போல நினைத்துக் கொண்டு துரியோதனன் அவரை {விதுரரை} அலட்சியம் செய்தான்.

தனது மகன்களை மட்டுமே திருப்தி செய்ய விரும்பிய மன்னர் திருதராஷ்டிரர், தெரிந்தே அநீதியான பாதையில் நுழைபவராக இருந்தார். உண்மையில், தன் மகன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் {திருதராஷ்டிரர்}, குருக்கள் அனைவரைவிடவும் ஞானவானும், தன் நலவிரும்பிகளில் சிறந்தவரும், பெரும் கல்வி உடையவரும், புத்திசாலித்தனமாகப் பேசுபவரும், நீதியின்படி செயல்படுபவருமான விதுரருக்குச் செவி சாய்க்கவில்லை.

பிறரிடம் மதிப்பை நாடுபவனும், பொறாமை கொண்டவனும், வெஞ்சினம் கொண்டவனும், அறம் பொருளை அடைவதற்கான விதிகளை மீறுபவனும், முறைமீறும் நாக்குடையவனும் {முறைமீறிப் பேசுபவனும்}, எப்போதும் தன் கோபத்தின் ஆணைகளையே செய்பவனும், புலன்நுகர் இன்பங்களில் மூழ்கிய ஆன்மா கொண்டவனும், பலரிடம் பகைமை கொண்டவனும், எந்த விதிக்கும் கீழ்ப்படியாதவனும், இணங்காத இதயம் கொண்ட தீய வாழ்வு வாழ்பவனும், தீய புரிதல் கொண்டவனுமான தனது மகனை மனநிறைவு கொள்ளச் செய்யவே மன்னர் திருதராஷ்டிரர் விரும்புகிறார். இது போன்ற ஒரு மகனுக்காக, மன்னர் திருதராஷ்டிரர் அறிந்தே அறத்தையும், இன்பத்தையும் கைவிட்டார்.

ஓ! சஞ்சயரே, நான் பகடையாடிக் கொண்டிருக்கையில், விதுரரின் ஞானம் நிறைந்த அற்புதமான வார்த்தைகள் திருதராஷ்டிரரின் பாராட்டைப் பெறாத போதே, குருக்களின் அழிவு அருகில் இருக்கிறது என நான் நினைத்தேன். ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பிறகு, விதுரரின் வார்த்தைகளை அவமதித்தபோதே, குருக்களைப் பிரச்சனை வந்தடைந்துவிட்டது. அவரது {விதுரரின்} ஞானத்தின் தலைமையின் கீழ் அவர்கள் இருந்த வரை, அவர்களது நாடு மலர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.

ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பேராசை கொண்ட துரியோதனுக்கு இப்போது யார் ஆலோசகர்கள் என்பதை என்னிடம் கேளும். துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி}, சூதரின் மகனான கர்ணனுமே அவர்கள்! ஓ கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, அவனுடைய இந்த அறியாமையைப் பாரும்!

திருதராஷ்டிரர் பிறரிடம் இருந்து அவர்களது அரியணையை எடுத்துக் கொண்டபிறகு, விதுரர் பிற இடங்களுக்குத் துரத்தப்பட்ட பிறகு, குருக்களிடமும், சிருஞ்சயர்களிடமும் எந்தச் செழுமையையும் எப்படிக் காண முடியும்? எனவே, நான் நினைத்தாலும் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர் இப்போது முழு உலகத்தின் பரந்த ஆட்சி உரிமையையும் பகையில்லாமல் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே, முழுமையான அமைதி அடைய முடியாததாகும்.

ஏற்கனவே அவர் பெற்றிருப்பவற்றைத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கருதுகிறார். போருக்காக அர்ஜுனன் தனது ஆயுதத்தை எடுக்கும்போது, அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் எனக் கர்ணன் நம்புகிறான். இதற்கு முன்பு பல பெரிய போர்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம், ஏன் கர்ணனால் அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} எந்தப் பலனும் கிட்டவில்லை. கர்ணன், துரோணர், பாட்டனான பீஷ்மர் மற்றும் பிற குருக்களும், அர்ஜுனனுடன் ஒப்பிடத்தக்க வகையில் வில்லைத் தாங்குபவன் வேறு எவனும் இல்லை என்பதை அறிவார்கள். எதிரிகளை அடக்குபவனான அர்ஜுனன் உயிரோடு இருக்கும்போதே, துரியோதனன் ஆட்சியுரிமையை எப்படி அடைந்தான் என்பதை, பூமியில் கூடியிருக்கும் அனைத்து ஆட்சியாளர்களும் அறிவார்கள்.

போர்க்களத்திற்கு அவன் {துரியோதனன்} சென்ற போது, நாலு முழ வில்லைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத அர்ஜுனன், எப்படித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டான் என்பதை அறிந்தும், பாண்டு மகன்களின் உடைமைகளை அவனால் {துரியோதனனால்} கொள்ளையடிக்க இயலும் என்று அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனக்குப் பொருத்தமாகவே {மடத்தனமாக} நம்புகிறான். நீட்டி இழுக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காததாலேயே திருதராஷ்டிரன் மகன்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். பீமனின் கோபத்தைக் காணாத வரையில், தனது நோக்கம் ஏற்கனவே ஈடேறிவிட்டதாகவே துரியோதனன் நம்புவான். ஓ! அய்யா {சஞ்சயரே}, பீமன், அர்ஜுனன், வீரனான நகுலன், அமைதியான சகாதேவன் ஆகியோர் உயிருடன் இருக்கும் வரை இந்திரனும் கூட எங்கள் உடைமைகளைக் கொள்ளையிட அஞ்சுவான்.

ஓ! தேரோட்டுபவரே {சஞ்சயரே}, தன் மகனுடன் கூடிய முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! சஞ்சயரே, போர்க்களத்தில் பாண்டு மகன்களின் கோப நெருப்பில் எரியப் போகும் தன் மகன்கள் அழியமாட்டார்கள் என்றே கருதுகிறார். ஓ! சஞ்சயரே, நாங்கள் எத்தகு துன்பத்தை அனுபவித்தோம் என்பதையும் நீர் அறிவீர்! நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பால், அவர்கள் அனைவரையும் மன்னிப்பேன். எங்களுக்கும் குருவின் மகன்களுக்கும் இடையில் நடந்தது அத்தனையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறோம் என்பதையும் நீர் அறிவீர். பொருட்களின் நிலை இப்போது போலவே தொடரட்டும், நீர் அறிவுறுத்துவது போலவே நான் அமைதியை நாடுவேன். இந்திரப்பிரஸ்தம் எனது நாடாகட்டும், பாரதக் குலத்தின் தலைவனான துரியோதனன் எனக்கு இதைக் கொடுக்கட்டும்!" என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்