Friday, March 13, 2015

அனைத்தும் நானே! - உத்யோக பர்வம் பகுதி 46ஆ

I am all! | Udyoga Parva - Section 46b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 6)
பதிவின் சுருக்கம் : அனைவரினுள்ளும் பரமாத்மா சமமாகவே வசிக்கிறான் என்றும், முக்தி அடைந்தவர்கள் மட்டுமே அவனை அடைகிறார்கள் என்றும்; தூய அறிவு என்பது பரமாத்மாவின் மற்றொரு பெயர் என்றும்; மனதை அடக்கியவர்கள் மட்டுமே பரமாத்மாவை அடைகிறார்கள் என்றும்; அனைத்துப் பொருட்களும் பரமாத்மாவிடமே இறுதியில் இணைகின்றன என்றும்; பரமாத்மாவுக்குக் காணத்தக்க உருவம் கிடையாது என்றும்; தீயவர்களால் வழிநடத்தப்படுபவர்கள் நரகத்தை அடைகிறார்கள் என்றும்; பிரம்மத்தை அறிந்தவன் இரட்டைகளில் சம நிலையுடன் இருப்பான் என்றும்; ஒருவன் தன்னில் அனைத்தையும் காண வேண்டும் என்றும்; அனைத்திலும் நானே இருக்கிறேன் என்பதை உணர வேண்டும் என்றும் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

{சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “தனி நபர்களுக்கு மத்தியில், தங்கள் மனங்களை அடக்க தேர்ச்சி அடைந்தவர்களும், அப்படி {தேர்ச்சி} அடையாதவர்களும் உண்டு. எனினும், பரமாத்மா மனிதர்கள் அனைவரிலும் சமமாகக் காணப்படுகிறான். உண்மையில், முக்தி அடைந்தவனிடமும், {முக்தி} அடையாதவனிடமும் அவன் {பரமாத்மா} சமமாகவே வசிக்கிறான் {இருக்கிறான்}. அவர்களுக்குள் இருக்கும் இந்தச் சிறு வேறுபாடான முக்தியை அடைந்தவர்கள் மட்டுமே அடர்த்தியான தேனூற்றை {பேரின்பத்தை} அடைகிறார்கள். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.


வாழ்க்கைப்பயணத்தை மேற்கொள்ளும் ஒருவன், தான் மற்றும் தானற்றவற்றில் {சுயம் மற்றும் சுயமற்றவற்றில்} அறிவை {ஞானத்தை} அடைந்தால், அவனது அக்னி ஹோத்ரம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பது ஒரு பொருட்டே இல்லை.


ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, “நான் உனது அடிமை” என்பது போன்ற வார்த்தைகள் அவர்கள் {பரமாத்மாவை அடைய முயற்சிப்பவர்கள்} வாயில் இருந்து வராதிருக்கட்டும். தூய அறிவு {சுத்தஞானம்} என்ற மற்றொரு பெயரும் பரமாத்மாவுக்கு உண்டு. மனதை அடக்கியவர்கள் மட்டுமே அவனை {பரமாத்மாவை} அடைகின்றனர். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

அவன் அப்படியே இருக்கிறான். நீக்கமற பரிபூரணமாய் நிறைந்திருக்கும் அவனிடம் {பரமாத்மாவிடம்}, அனைத்து உயிரினங்களும் இணைகின்றன. பரிபூரணத்தின் உருவகத்தை அறிபவன், தனது நோக்கத்தை (விடுதலை என்ற முக்தியை) இங்கேயே {இவ்வுலகிலேயே} அடைந்துவிடுகிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

ஆயிரம் சிறகுகளை விரித்து மனோ வேகத்துடன் பறக்கும் ஒன்று {ஆத்மா}, வாழும் உயிரினத்திற்குள் உள்ள (வெகு தொலைவில் இருக்கும் பொருட்களும் எதன் உள்ளே வசிக்குமோ அந்த) மைய ஆவியிடமே {பரமாத்மாவிடமே} திரும்பி வர வேண்டும். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பரமாத்மா யோகிகளால்
காணப்படுகிறான்
அவனது {பரமாத்மாவின்} உருவம் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க இயலாது. தூய இதயங்கள் கொண்டோர் மட்டுமே அவனைக் {பரமாத்மாவைக்} காண இயலும். அனைவரின் நன்மையையும் ஒருவன் நாடும்போது, {அவன்} தனது மனதைக் கட்டுப்படுத்துவதில் வெல்கிறான். அவனது மனம் எப்போதும் துயரத்திற்கு ஆட்படாது. அப்படியிருப்பவன் தனது இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த உலகத்தையும் அதன் பயன்களையும் கைவிடத்தக்கவர்கள் அழியா {இறவா} நிலையை அடைகிறார்கள். (இறப்புக்கு ஆட்படாத பரமாத்மாவான) தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

துளைகளில் தங்களை மறைத்துக் கொள்ளும் பாம்புகளைப் போல, {தீய} ஆசான்களின் ஆணைகளைப் பின்பற்றும் மனிதர்கள், தங்கள் தன்னடத்தையால், கூர்மையான ஆய்வுகளின் பார்வையில் இருந்து தங்கள் தீமைகளை மறைத்துக் கொள்கின்றனர். இவர்களால் சிறு மதி கொண்டோர் {மூடர்கள்} வஞ்சிக்கப்படுகிறார்கள். உண்மையில், எந்த ஒழுங்கு முறைகளுமின்றி வெளிப்படையாகத் தங்களைத் தாங்கிக் கொள்ளும் இவர்கள் {மூடர்கள்}, {யாரால்} பாதிப்படைந்தார்களோ அவர்களால் வஞ்சிக்கப்பட்டு நரகத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள். (எனவே, இதற்கு நேர் எதிராக இருக்கும் மனிதர்களின் துணையை அடைபவர்கள் அவனை {பரமாத்மாவை} அடையலாம்). அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

“தோன்றி மறையும் {இயல்புடைய} உயிரினங்களால் {உடலால்} எனக்கு மகிழ்ச்சியையும் துயரத்தையும், அது தொடர்பான பிற பண்புகளையும் அளிக்க முடியாது; அதே போல எனது வழக்கிலும் இறப்புப் பிறப்பு போன்ற எதுவும் கிடையாது; மேலும், விரோதிக்க எந்த எதிர்ப்பு சக்தியும் அற்றதும், அனைத்து நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒரே போன்று இருப்பதுமான பிரம்மம், உண்மைகள் மற்றும் பொய்மைகள் ஆகிய இரண்டும் ஓய்ந்திருக்கும் இடத்தில் இருக்கும்போது, முக்தி எவ்வாறு எனதாகும்? அனைத்து காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் தோற்றமாக நானே இருக்கிறேன்” (நான் அல்லது சுய வடிவமாக {பிரம்மம் இருக்கிறது}) என்று முக்தியடைந்த ஒருவன் நினைக்கிறான். அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பிரம்மத்தை அறிந்த, அந்தப் பிரம்மத்துக்கு நிகரான மனிதன் நற்செயல்களால் சிறப்படைவதோ, தீய செயல்களால் அசுத்தமடைவதோ இல்லை. சாதாரண மனிதர்களுக்கு {பிரம்மத்தை அறியாதவர்களுக்கு} மட்டுமே நல்ல அல்லது தீய செயல்கள் வேறுபட்ட விளைவுகளை உண்டாக்குகின்றன. பிரம்மத்தை அறிந்த மனிதன் அமிர்தத்துக்கு ஒப்பாகவோ, நன்மை அல்லது தீமைகளால் பாதிக்கப்படாத கைவல்யம் {Kaivalya} என்று அழைக்கப்படும், நிலையடைந்தவனாகக் கருதப்பட வேண்டும். எனவே, ஒருவன், சுட்டிக்காட்டப்பட்ட வழியில் மனதை அகற்றி, அந்தச் சாரத்தின் இனிமையை (பிரம்மத்தை) அடைய வேண்டும். அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பிரம்மத்தை அறிந்த மனிதனின் இதயம், “நான் (வேதங்களைக்) கற்கவில்லை, அல்லது நான் அக்னி ஹோத்ரம் செய்ய வில்லை” என்ற நிந்தை எண்ணத்துக்கு வருந்தாது. மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் மட்டுமே அடையும் அறிவை {ஞானத்தை}, பிரம்ம அறிவு கொண்டவன் விரைவில் அடைகிறான். (துயரம் மற்றும் அறியாமையில் இருந்து ஆன்மாவை விடுவிக்கும் அந்தப் பிரம்மம் என்ற) அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

எனவே, தன்னில் அனைத்தையும் கண்ட ஒருவன் அதற்கு மேலும் வருந்த தேவையில்லை. பல்வேறு வகையான உலகத் தொழில்களில் ஈடுபடுவோரே வருந்த வேண்டியிருக்கும். பரந்த விரிவு அல்லது பெரிய நீர்த்தேக்கம் ஒருவனின் (தாகத் தணிப்பு முதலிய) நோக்கத்திற்கு உதவுவது போல, கிணற்றிலும் உதவி கிடைக்கிறது. அது போலவே, வேதங்களின் பல்வேறு நோக்கங்களும் ஆத்மாவை அறிந்தவனால் பெறப்படுகிறது.

பார்க்கத்தக்க ஒரு பொருளல்ல
இதயத்தில் வசிக்கும் கட்டைவிரல் அளவுள்ளவனும், பரிபூரணத்தின் உருவகமும் ஆன அந்த ஒப்பற்றவன் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க மாட்டான். பிறப்பற்ற அவன் இரவும் பகலும் விழிப்பான நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறான். அவனை {பரமாத்மாவை} அறிந்தவர்கள், கற்றவர்களாகவும் இன்பம் நிறைந்தவர்களாகவும் ஆகிறார்கள். நானே தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கப்படுகிறேன். மேலும் நானே மகனாகவும் இருக்கிறேன். இருந்த அனைத்தும், இருக்கப்போகும் அனைத்தும் ஆத்மாவாக இருப்பவன் நானே. ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நானே பாட்டன், நானே தந்தை, நானே மகனுமாக இருக்கிறேன். நீங்கள் எனது ஆத்மாவிலேயே வசிக்கிறீர்கள், எனினும் நீங்கள் என்னுடையவர்களல்ல, நானும் உங்களுடையவன் கிடையாது!

கடவுள் துகள்-எலக்ட்ரான் -அணு- மூலக்கூறு-
DNA-இனப்பெருக்கம்-வம்சவிருத்தி
பிறப்புக்கும், இனப்பெருக்கத்திற்கும் {வம்ச விருத்திக்கும்} எனது ஆன்மாவே காரணமாக இருக்கிறது. நானே இந்த அண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாகவும் {தொகுப்பாகவும்}, ஊடு இழையாகவும் இருக்கிறேன்.
நான் ஓய்ந்திருக்கும் இடம் அழிவற்றதாக இருக்கிறது. பிறப்பற்றவனான நான் பகலும் இரவும் விழித்திருக்கிறேன். என்னை அறிந்த ஒருவனே கற்றவனாகவும் இன்பம் நிறைந்தவனாகவும் ஆகிறான்.

நுட்பமானதினும் நுட்பமானவன்
நுட்பமானவற்றைவிட நுட்பமானவனாக, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கும் திறன் பெற்ற அற்புதமான கண்களுடன் கூடி அனைத்து உயிர்களிலும் பிரம்மம் விழிப்புடன் இருக்கிறது. அவனை {பிரம்மத்தை} அறிந்தவர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இதயத்திலும் வசிக்கும் அண்டத்தின் தகப்பனை {பரமாத்மாவை} அறிகிறார்கள். 


வேறு பதிப்புகளில் இங்கே "சனத்சுஜாத பர்வம்" நிறைவடைந்து "யானசந்தி பர்வம்" ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலியில் உத்யோக பர்வம் பகுதி 41 தொடங்கி 71 வரை சனத்சுஜாதபர்வம் நீள்கிறது. நாம் கங்குலியின் வழியிலேயே செல்கிறோம்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்