Thursday, March 12, 2015

‘தத்’ எனும் விதை! - உத்யோக பர்வம் பகுதி 46அ

The seed called ‘Tath’! | Udyoga Parva - Section 46a | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 6)
பதிவின் சுருக்கம் : ஆத்மா, பராமத்மா, தத் எனும் விதை குறித்து சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு உரைப்பது…

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “மஹாயசஸ் என்று அழைக்கப்படும் (அண்டத்தின்) முதன்மை {ஆதி} விதை, விபத்துகளற்றதும், தூய அறிவானதும், சுடர்மிகும் பிரகாசம் கொண்டதுமாகும்.





அதுவே {ஆதி விதையே/ Cosmic egg} புலன்களை வழிநடத்துகிறது. அந்த விதையின் விளைவாலேயே சூரியனும் ஒளிர்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) {Yogins (by their mental eye)} காணப்படுகிறான்.


(இன்பத்தின் உருவமாக இருக்கும்) அந்த விதையின் விளைவாலேயே, பிரம்மம் படைப்புத் திறனைப் பெறுகிறது. அதன் வழியாகவே பிரம்மம் தன்னை விரிவு படுத்திக் கொள்கிறது. ஒளிரும் பொருட்களுக்குள் நுழையும் அந்த விதையே ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. வேறு ஒரு பொருளில் இருந்து ஒளியையும் வெப்பத்தையும் பெறாத அந்தத் தன்னொளி {சுய ஒளி}, அனைத்து ஒளிரும் பொருட்களுக்கும் பயங்கரத்தை அளிக்கும் பொருளாக இருக்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

திரளான {நிலம், நீர், காற்று, பூமி, நெருப்பு ஆகிய} ஐம்பூதங்கள், ஐந்து நுட்பமானவற்றில் {நுட்பமான துகள்களில்} இருந்து உதித்திருக்கின்றன. பிந்தையவை {நுட்பமான துகள்கள்}, பிரம்மம் என்று அழைக்கப்படும் ஒரேவிதமான பொருளில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். உணர்வு நிலையில், உயிருடன் கூடிய உயிரினத்தின் ஆத்மா மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டும் பிரம்மம் என்றே (உணரப்பட்டு) உறுதிப்படுத்தப்படுகிறது. (உறக்கத்தின் போதும், பிரளயத்தின் போதும், இவ்விரண்டும் உணர்வற்றுப் போகின்றன). மறுபுறம், பிரம்மமோ உணர்வற்றுப் போவதேயில்லை. சூரியனைச் சூரியனாக, பூமி மற்றும் சொர்க்கம் ஆகிய இரண்டும் உறுதிப்படுத்துகின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பூமி மற்றும் சொர்க்கம், திசைகள் மற்றும் அண்டம் முழுமையும், ஆகியவற்றின் இரு தேவர்களை இந்த விதை உறுதிப்படுத்துகிறது. அந்த விதையில் இருந்தே திசைகளும், நதிகளும் உற்பத்தியாகின்றன. பரந்த கடல்களும் தங்கள் தோற்றத்தை அந்த விதையிலேயே பெறுகின்ற. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

அழிவடைய விதிக்கப்பட்ட தேர் போன்றதே உடல். ஆனால் அதன் செயல்களோ அழிவற்றவையாகும். (கடந்த வாழ்வுகளின் {முன்ஜென்ம} செயல்களைக் குறிக்கும்) அந்தத் தேரின் சக்கரங்களில், புலன்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவையே {புலன்களே} குதிரைகளாகி, உணர்வு என்ற பகுதியின் வழியாக ஞானம் கொண்ட மனிதனை பிறப்பற்ற, மாற்றமற்றவனை {பரமாத்மாவை} நோக்கி அழைத்துச் செல்கின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

அந்த ஒருவனின் {நித்தியமானவனின்} வடிவத்தை எந்தவித ஒப்பீட்டினாலும் வெளிக்காட்ட முடியாது. யாரும் அவனைக் கண்ணால் கண்டதில்லை. ஆழ்ந்த மெய்மறந்த சிந்தனை, மனம், இதயம் மூலமாக அவனை அறிபவர்கள் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாகிறார்கள் {முக்தியடைகிறார்கள்}. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

மாயையின் ஓடை கொடூரமாக இருக்கிறது; தேவர்களால் பாதுகாக்கப்படும் அது {மாயை}, பனிரெண்டு கனிகளை {பலன்களைக்} கொண்டது [1]. அதன் {மாயையின்} நீரைப் பருகி, அதன் மத்தியில் உள்ள பல இனிமையான பொருட்களைக் கண்டு, மனிதர்கள் அதனுடனேயே முன்னும் பின்னுமாக நீந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓடையும் அந்த விதையில் இருந்தே பாய்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

[1] 1. சித்தம் , 2. நினைவு, 3. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள் =மெய், வாய், கண், மூக்கு, செவி}, 4. ஞானம், 5. செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள் = வாய், கை, கால், மலவாய், கருவாய்}, 6. காரியம், 7. தன்மாத்திரைகள் {விஷயம் = சுவை, ஒளி, ஊறு, உணர்வு, ஓசை, நாற்றம்}, 8. ஐம்பூதங்கள், 9. பிராணன், 10. சுவாசம், 11. பழைய வாசனைக்கூட்டம், 12. பாவ புண்ணியங்கள் {பார்க்க: தத்துவங்கள் 96 : இவையாவும் அடக்கம் என்றே நினைக்கிறேன்}

முன்னும் பின்னும் செல்ல விதிக்கப்பட்ட ஓர் உயிரான்மா {ஜீவாத்மா}, (பிற உலகத்தின்) இன்பங்களை நினைத்துப் பார்த்து, தனது செயல்களின் பாதிக் கனிகளையே {பலன்களையே) அனுபவிக்கிறது. அந்த உயிராத்மா, அண்டத்தின் அனைத்திலும் ஊடியிருக்கும் ஈஸ்வரனாகவே இருக்கிறது. அந்த ஈஸ்வரனே வேள்விகளை விதித்திருக்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

விபத்துகளற்ற ஆன்மாக்கள், தங்க இலைகள் கொண்ட மரத்தைப் போன்ற அவித்யையில் {கல்வியற்ற [அ] கல்வியல்லாதவற்றில்} ஈடுபட்டு, விபத்துகளை நினைத்து, தங்கள் பற்றுதலுக்கேற்றபடி {ஆசைக்கேற்றபடி} பல்வேறு வகைப் பிறப்புகளை எடுக்கின்றன. (யாரிடம் அனைத்து ஆன்மாக்களும் ஒன்றுபடுமோ, அந்தத்) தெய்வீகத்தன்மை கொண்ட நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

முழுமையாக இருக்கும் பிரம்மத்தால் பரிபூரணமடையும் அண்டத்தின் விளைவாக விபத்துகள் (பிரம்மத்தின் தொடர்பு ஏற்படுவதால் பல வடிவங்களைப் பெற்று) எழுகின்றன. அந்த விபத்துகளும், தங்கள் நிறைவால் பரிபூரணப் பிரம்மத்தில் இருந்து எழுகின்றன. ஒருவன், எப்போதும் பரிபூரணமாக இருக்கும் பிரம்மத்திடம் இருக்கும் அனைத்து விபத்தையும் வெல்லும்போது, பரிபூரணப் பிரம்மத்தில் எஞ்சியிருக்கும் தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

அந்த விதையிலிருந்தே ஐம்பூதங்களும் உதித்தன. அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி அவற்றின் உள்ளேயே இருக்கிறது. (அக்னி என்றும் சோமம் என்றும் அழைக்கப்படும்) நுகர்வோன் மற்றும் நுகர்பொருள் ஆகிய இரண்டும் இந்த விதையில் இருந்தே எழுந்தன. புலன்களுடன் கூடிய உயிரினங்கள் அதனுள்ளேயே ஓய்ந்திருக்கின்றன. அனைத்தும் இதில் இருந்து எழுந்தன எனவே கருதப்பட வேண்டும். வேதங்களில் தத் {THAT (Tad)} என்று அழைக்கப்படும் அந்த விதையை நாம் விளக்கும் திறனற்றவர்களாக இருக்கிறோம். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

அபானன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்று, பிராணன் என்று அழைக்கப்படும் காற்றால் விழுங்கப்படுகிறது. பிராணன் விருப்பத்தால் {மனம் எனும் சந்திரனால்} விழுங்கப்படுகிறது, விருப்பம் {மனம்} அறிவாலும் {புத்தியான சூரியனாலும்}, அறிவு {புத்தி} பரமாத்மாவாலும் {பிரம்மத்தாலும்} விழுங்கப்படுகின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், தூய உணர்வு {துரியம்} {Turiya} [2] ஆகியவற்றைத் தனது நான்கு கால்களாகக் கொண்ட பரமாத்மா, உலகளாவிய விவகாரங்கள் எனும் அளவிட முடியாத கடலின் மேல் நடந்து செல்லும் அன்னம் போலத் தனது கால்களில் ஒன்றை ஆழ மறைக்கிறான். மீதம் மூன்று கால்களை வழிநடத்தும் காரணத்திற்காக விடப்பட்ட (துரியம் என்ற) அந்தக் காலைக் காண்பவனுக்கு இறப்பும் முக்தியும் ஒன்றாகவே இருக்கும். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகியரால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

[2] இந்து தத்துவ மரபின்படி, துரியம் என்றால் சம்ஸ்க்ருதத்தில் நான்காவது என்று பொருள். இது சதுரியம், சதுர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தூய உணர்வு நிலையை அனுபவிப்பது என்று இது பொருள் தரும். விழிப்புணர்வு, கனவு காணுதல், கனவற்ற உறக்கம் ஆகிய உணர்வுகளின் மூன்று பொதுவான நிலைகளுக்குள் அடங்கியிருக்கவும், அவற்றைக் கடந்து செல்லவும் பின்னணியாக இருப்பதே துரியமாகும்.

கட்டைவிரலளவு உள்ள அஃது, எப்போதும் பரிபூரணமாக இருந்து, அழியாத உயிரினங்களில் இருந்து வேறுபட்டு, உயிர் காற்றுகள் {வாயுக்கள்}, விருப்பம் {மனம்}, அறிவு {புத்தி}, பத்துப் புலன்கள் {அறிவுப் புலன்கள் 5 மற்றும் செயற்புலன்கள் 5} ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு, இங்கும் அங்கும் அசைகிறது. புகழத்தக்க பாடல்களுக்குத் தகுந்தவனும், அனைத்தையும் செய்யும் திறன்வாய்ந்தவனுமான பரமாத்மா, விபத்துகள் நேரும் போது, அனைத்துக்கும் காரணமாகியவன் {பரமாத்மா}, உயிரினங்களின் ஆன்மாக்களில் அறிவாக வெளிப்படுகிறான். முட்டாள்கள் மட்டுமே அவனைக் காண்பதில்லை; தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகியரால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்