Friday, March 20, 2015

அஞ்சாத சிங்கம் சாத்யகி! - உத்யோக பர்வம் பகுதி 48ஆ

Satyaki, the dauntless lion! | Udyoga Parva - Section 48b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன் அபிமன்யு, பிரபத்ரகர்கள், விராடன், துருபதன் ஆகியோரது வீரம் வெளிப்படும்போதும், பீஷ்மரை நோக்கிச் சிகண்டி விரையும்போதும், துரோணரை நோக்கித் திருஷ்டத்யும்னன் விரையும்போதும் துரியோதனன் வருந்த நேரிடும் என்றும், கிருஷ்ணனையும்,  திருஷ்டத்யும்னனையும் படையின் முன்னணியில் கொண்டோரை எதிரிகளால் எப்படி வீழ்த்த முடியும்? என்றும், எனவே, அரசாட்சியில் துரியோதனன் பேராசை கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்குமாறு சஞ்சயனிடம் அர்ஜுனன் சொன்னது; மேலும் சாத்யகியின் திறன்களைச் சொல்லி, சிங்கத்தைக் கண்ட பசுக்களைப் போல, சாத்யகியைக் கண்ட எதிரிகள் போர்க்களத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என்றும் அர்ஜுனன் எச்சரித்தது...

{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “கடும் நஞ்சு கொண்ட பாம்புகள் போல, பெரும் வில்லாளிகளும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், தேர்ச்சண்டைகளின் முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான திரௌபதியின் மகன்கள், எதிரிகளைத் தாக்குவதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.


பகை வீரர்களைக் கொல்பவனும், கிருஷ்ணனைப் போன்றே ஆயுதங்களில் திறன்மிக்கவனுமான அபிமன்யு, எதிரிகள் மீது அடர்த்தியான கணைகளை மேகங்களைப் போலப் பொழிந்து, எப்போது அவர்களை வீழ்த்துவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

ஆயுதங்களில் திறன்மிக்கவனும், இந்திரனைப் போன்றவனும், வயதில் குழந்தையானாலும் சக்தியில் அப்படியல்லாதவனுமான {குழந்தையல்லாதவனுமான} சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எதிரிகளின் மீது மரணத்தைப் போல விழுவதை எப்போது காண்பானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

பெரும் சுறுசுறுப்புடையவர்களும், போர்க்களத்தை நன்கு அறிந்தவர்களும்,சிங்கங்களின் சக்தியை உடையவர்களுமான பிரபத்ரகர்கள் {Prabhadrakas}, படைகளுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்களை எப்போது வீழ்த்துவார்களோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

மூத்த தேர்வீரர்களான விராடரும், துருபதரும், தங்கள் தங்களின் படைப்பிரிவுகளுக்குத் தலைமையேற்று, திருதராஷ்டிரர் மகன்களையும், அவர்களது படையணிகளையும் எப்போது தாக்குவார்களோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

தனது தேரில் அமர்ந்திருக்கும் ஆயுதங்களில் திறன்மிக்கத் துருபதர், இளம் போர்வீரர்களின் தலைகளைக் கொய்ய விரும்பி, தனது வில்லில் இருந்து அம்புகளை அவர்கள் {எதிரணிப் போர்வீரர்கள்} மீது கோபத்துடன் எப்போது அடிப்பாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

பகைவீரர்களைக் கொல்பவரான விராடர், வீரமிக்கத் தனது மத்ஸ்ய போர்வீரர்களின் துணை கொண்டு, எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவி, அவர்களை {எதிரணிப் போர்வீரர்களை} எப்போது கலங்கடிப்பாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

சிறந்த முகம் கொண்டவனும், பெரும் வீரனுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மூத்த மகன் {உத்தரன்}, தனது தேரில் அமர்ந்து கொண்டு, பாண்டவர்களின் சார்பாகக் கவசம் பூண்டு, {எங்கள்} படையின் முன்னணியில் வருவதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

கௌரவ வீரர்களில் முதன்மையானவரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தில் சிகண்டியால் கொல்லப்படும்போது, எங்கள் எதிரிகள் அனைவரும் அழிந்து போவார்கள் என்பதில் ஐயமில்லை என்று நான் உமக்கு உண்மையாகச் சொல்கிறேன்.

நன்றாகப் பாதுகாக்கப்பட்ட தன் தேரில் அமர்ந்தபடி, எண்ணற்ற தேர்வீரர்களை வீழ்த்தி, வலிமைமிக்கத் தனது குதிரைகளைக் கொண்டு (பகையாளிகளின்) தேர்க்கூட்டங்களை நொறுக்கிபடி, பீஷ்மரை நோக்கி எப்போது சிகண்டி முன்னேறுவானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

ஆயுத அறிவியலின் புதிர்களை யாருக்குத் துரோணர் அளித்தாரோ, அந்தத் திருஷ்டத்யும்னன், ஸ்ரீன்ஜயர் {ஸ்ருஞ்சயர்} படையணியின் முன்னணியில் பிரகாசத்துடன் இருப்பதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

பாண்டவப் படையின் தலைவனும் {சேனாதிபதியும்}, அளவிலா ஆற்றல் கொண்டவனும், விரைந்து வரும் எத்தகு சக்தியையும் தாக்குப்பிடிக்கக்கூடிய திறன் கொண்டவனுமான அவன் {திருஷ்டத்யும்னன்}, தனது கணைகளால் திருதராஷ்டிரர் படையணிகளை நொறுக்கியபடி, போர்க்களத்தில் துரோணரை நோக்கி எப்போது விரைவானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

“எளிமையானவனும், அறிவார்ந்தவனும், வலிமை கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனைத்து வகைச் செழிப்புகளால் அருளப்பட்டவனுமான அந்தச் சோமகர்களின் தலைவனையும் {திருஷ்டத்யும்னனையும்}, விருஷ்ணி குலத்தின் சிங்கத்தையும் {சாத்யகியையும்}, தனது படையின் முன்னணியில் போரிடக்கூடியவர்களாகக் கொண்டிருக்கும் ஒருவனை எந்த எதிரியால் தாங்கிக் கொள்ளமுடியும்? என்பதையும், {எனவே}, (ஆட்சியின் மீது) பேராசை கொள்ளாதே” என்பதையும் (துரியோதனனுக்குச்) சொல்லும்.

ஆயுதங்களில் திறன் பெற்றவனும், உலகத்தில் தனக்கு நிகரற்றவனும், அச்சமற்றவனும், பெரும் பலமிக்கத் தேர்வீரனும், சினியின் பேரனுமான சாத்யகியை நாங்கள் எங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அகன்ற மார்பு மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், போர்க்களத்தில் ஒப்பற்றவனும், சிறந்த ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அவற்றில் திறன்பெற்றவனும், அச்சமற்றவனுமான {மிகுந்த துணிச்சல் கொண்டவனுமான}  அந்தச் சினியின் பேரன் {சாத்யகி}, முழுதாக நான்கு முழ நீளம் கொண்ட வில்லைக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரனாவான்.

எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சினிகளின் தலைவன் {சாத்யகி}, என்னால் தூண்டப்பட்டு, எதிரியின் மீது தனது கணைகளை மேகம் போலப் பொழிந்து, அந்தப் பொழிவால் அவர்களது {எதிரிகளது} தலைவர்களை முழுவதுமாக எப்போது வீழ்த்துவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

நீண்ட கரங்களுடையவனும், வில்லை உறுதியாகப் பிடிப்பவனுமான அந்த ஒப்பற்ற போர் வீரன் {சாத்யகி}, போருக்கான தீர்மானத்தை எப்போது திரட்டுவானோ, அப்போது, சிங்கத்தின் மணத்தை நுகர்ந்த பசுக்களைப் போல, போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே எதிரிகள் அவனிடம் {சாத்யகியிடம்} இருந்து ஓடிவிடுவார்கள். நீண்ட கரங்களையுடையவனும், வில்லை உறுதியாகப் பிடிப்பவனுமான அந்த ஒப்பற்ற போர்வீரன் {சாத்யகி}, மலைகளைப் பிளக்கவும், மொத்த அண்டத்தை அழிக்கவும் வல்லவனாவான்.

ஆயுதங்களைப் பயின்று, (போர்களத்தில்) திறன்பெற்று, மிகுந்த இலகுவான {வேகமான} கரங்களைக் கொண்ட அவன் {சாத்யகி}, வானத்தில் சூரியன் போல, போர்க்களத்தில் ஒளிர்பவனாவான். மேன்மையான பயிற்சி பெற்றவனும், யது பரம்பரையின் கொழுந்தும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான அவன் {சாத்யகி}, மாறுபட்ட, அற்புதமான மற்றும் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கிறான்.

உண்மையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவோரில் உயர்ந்த அற்புத நிலையை அடைந்திருப்போர் கொண்டிருக்கும் அறிவு அத்தனையையும் சாத்யகி கொண்டிருக்கிறான். நான்கு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படும் தங்கத் தேரில் மது குலத்தின் சாத்யகி வருவதை எப்போது பார்ப்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட இழிந்தவனான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்