Saturday, March 21, 2015

வாசுதேவன் என் கூட்டாளி! - உத்யோக பர்வம் பகுதி 48இ

Vasudeva is my ally! | Udyoga Parva - Section 48c | Mahabharata In Tamil

 (சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 8) {யானசந்தி பர்வம் - 2}


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனால் வழிநடத்தப்படும் தேரைக் காணும்போதும், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்கும்போதும், தன்னால் கணைகள் அடிக்கப்படும்போதும், தனது தம்பிகள் வீழ்வதைக் காணும்போதும் , கிருஷ்ணன், பாஞ்சஜன்யம், அர்ஜுனன், அம்பாறத்தூனிகள், தேவதத்தம், வெண்குதிரைகள் ஆகியவற்றைத் தனது தேரில் காணும்போதும் துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான் என்று அர்ஜுனன் சொன்னது...

{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “தங்கம் மற்றும் ஒளி பொருந்திய ரத்தினங்களின் பிரகாசத்துடன் கூடியதும், வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படுவதும், குரங்கு {அனுமன்} இலச்சனை பொறித்த பதாகை {கொடி} தாங்கியதும், கேசவனால் {கிருஷ்ணனால்} வழிநடத்தப்படுவதுமான எனது பயங்கரத் தேரை எப்போது காண்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.


தோலுறைகளால் பாதுகாக்கப்படும் விரல்களைக் கொண்டு, எப்போதும் வளைத்தே வைக்கப்பட்டிருக்கும் எனது வில்லான காண்டீவத்தின் நாண் கயிற்றில் இடி உருளுவது போன்று உரத்து உண்டாக்கும் பயங்கர ஒலியை எப்போது கேட்பானோ, பசுக்களைப் போலப் போர்க்களத்தின் எல்லாப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் தனது துருப்புகளால் தான் கைவிடப்பட்டதை எப்போது காண்பானோ, அப்போது எனது அம்பு மழையால் உண்டாகும் இருளில் மூழ்கும் அந்த இழிந்த துன்மார்க்கான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.

அழகிய இறகுகள் படைத்தவையும், உயிர்நிலையையே துளைக்கவல்லவையும், காண்டீவத்தின் நாணில் இருந்து அடிக்கப்படுபவையும், மேங்களில் இருந்து உமிழப்படும் பயங்கரமான கடுமையான மின்னல்க்கீற்றுகளைப் போன்றவையுமான எண்ணிலடங்கா கூரிய கணைகள், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழித்தபடி, கவசம் பூண்ட யானைகளையும், எண்ணிலடங்கா குதிரைகளையும் விழுங்கியபடி செல்வதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

எதிரியால் அடிக்கப்படும் கணைகள், எனது கணைகளால் அணைக்கப்பட்டோ, திருப்பப்பட்டோ, அல்லது எனது கணைகளால் குறுக்கு வெட்டாக வெட்டப்பட்டுத் துண்டுகளாக்கப்பட்டோ போவதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது மூடனான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

எனது கைகளால் அடிக்கப்படும் அகன்ற தலை கொண்ட கணைகள், மர உச்சிகளில் இருக்கும் கனிகளைப் பறவைகள் கொய்வதைப் போல, இளம் போர்வீரர்களின் தலைகளை எப்போது கொய்யுமோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

தங்கள் தேர்களில் இருந்தும், யானைகளில் இருந்தும், குதிரைகளில் இருந்தும் எனது அம்புகளால், களத்தில் உயிரற்று உருளும் அற்புத போர்வீரர்களை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

போரில் எதையும் சாதிக்காமலே, பகைவனின் {என்னுடைய} ஆயுத எல்லைக்குள் வரும் முன்பாகவே, சுற்றிலும் தனது தம்பிகள் இறந்து விழுவதை எப்போது காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

விரிந்த வாயுடைய மரணத்தைப் {காலனைப்} போன்ற எனது சுடர்மிகும் கணைகளைத் தடையில்லாமல் பொழிந்து, அனைத்துப் புறங்களிலும் உள்ள தேர்க்கூட்டங்களையும், காலாட்படை வீரர்களையும் எப்போது நான் அழிப்பேனோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.

அனைத்துப்புறங்களிலும் உலவும் எனது தேர் எழுப்பும் புழுதியால் மூடப்பட்டும், எனது காண்டீவத்தால் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டும், தன் படைகள் மதிமயங்கி நிற்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.

உறுப்புகள் சிதைக்கப்பட்டும், உணர்வுகள் இழந்தும், அச்சத்தால் தனது படைகள் எல்லாப்புறங்களிலும் ஓடுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தனது குதிரைகள், யானைகள் மற்றும் தனது வீரர்களில் முதன்மையானோர் கொல்லப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தங்கள் விலங்குகள் அழிந்ததும், தாகத்துடன் பீதியடைந்தும், உரக்க அழுது, இறந்தும், இறந்து கொண்டும் இருக்கும் தனது படைகள், படைப்பாளனின் {பிரம்மனின்} முடிவடையாத வேலைகளைப் [1] போல, மயிர், எலும்புகள், மண்டையோடுகள் ஆகியன சுற்றிலும் குவியலாகக் கிடப்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.

[1] பிரஜாபதியைத் தேவதையாகக் கொண்ட வாஜபேய வேள்வியில் பதினேழு பசுக்கள் [அதாவது குதிரை, மான் போன்ற வேள்வி விலங்குகள். இங்கே பசு என்பது விலங்கு என்றே பொருள்படும்] கொல்லப்பட்டுச் சிதறிக் கிடப்பதைப் போல.

காண்டீவம், வாசுதேவன் {கிருஷ்ணன்}, தெய்வீகச் சங்கான பஞ்சஜன்யம், {அர்ஜுனனாகிய} நான், எனது இரு வற்றாத அம்பறாத்தூணிகள், தேவதத்தம் என்றழைக்கப்படும் எனது சங்கு, எனது வெண்குதிரைகள் ஆகியவற்றை என் தேரில் எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.

யுகமுடிவில், மற்றொரு யுகத்தின் ஆரம்பத்தில், கூடியிருக்கும் எண்ணிலடங்கா தீய ஆன்மாக்களை எரிக்கும் அக்னி போல, கௌரவர்களை நான் எப்போது எரிப்பேனோ, அப்போது திருதராஷ்டிரர் தனது மகன்கள் அனைவருடனும் வருந்துவார்.

தனது தம்பிகளுடனும், படைகளுடனும், தொண்டர்களுடனும் கூடியவனும், கோபம் நிறைந்த தீய இதயம் கொண்டவனுமான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எப்போது செழிப்பை இழப்பானோ, அப்போது கர்வத்தை இழந்து, இதயம் {உற்சாகம்} இழந்து, மேனி முழுதும் நடுக்கம் கொள்ளும் அந்த மூடன் {துரியோதனன்} வருந்துவான்.

எனது நீர்ச்சடங்குகளையும், துதிகளையும் {பிரார்த்தனைகளையும்} முடித்த ஒரு காலைப்பொழுதில், ஓர் அந்தணர் என்னிடம் இந்த இனிமையான வார்த்தைகளில், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ மிகக் கடினமான ஒரு பணியை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, நீ உன் எதிரிகளுடன் போராட வேண்டியிருக்கும். போர்க்களத்தில் உனக்கு முன்பாக, வஜ்ரத்தைக் கையில் கொண்டு குதிரையில் வரும் இந்திரனோ, அல்லது சுக்ரீவத்தின் தலைமை கொண்ட குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வரும் வசுதேவரின் மகனான கிருஷ்ணன், உனக்குப் பின்னால் இருந்தோ காப்பார்கள்” என்றான்.

அந்த வார்த்தைகளை நம்பிய {அர்ஜுனனாகிய} நான், இந்தப் போர்க்களத்தில் வஜ்ரதாங்கியான இந்திரனை விட்டுக் கடந்து, வாசுதேவனையே {கிருஷ்ணனையே} எனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்தேன். தீயோரை அழிக்கவே நான் கிருஷ்ணனை அடைந்தேன். இவை அனைத்திலும் தேவர்களின் கையை நான் காண்கிறேன். ஒரு மனிதனின் வெற்றிக் கிருஷ்ணனால் விரும்பப்பட்டால், பின்னவன் {அந்த கிருஷ்ணன்} உண்மையில் தன் சார்பாக ஆயுதத்தை எடுக்கவில்லையெனினும்,  இந்திரனின் தலைமையிலான தேவர்களாவே அந்த எதிரிகள் இருந்தாலும் கூட, அவர்கள் அனைவரையும் விட அவன் {அந்த மனிதன்} விஞ்சியே நிற்பான். அப்படியிருக்கையில், மனிதர்கள் காரியத்தில் கவலையே கிடையாது”

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்