Friday, March 27, 2015

இந்தக் கர்ணன் இழிந்தவன்! - உத்யோக பர்வம் பகுதி 49

This Karna is a wretch | Udyoga Parva - Section 49 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 9) {யானசந்தி பர்வம் - 3}
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் சொன்ன நர நாராயணர்களின் கதை; நர நாராயணர்களே அர்ஜுனனும் கிருஷ்ணனும் என்றது; கர்ணன், சகுனி, துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தை மட்டுமே உண்மையெனத் துரியோதனன் ஏற்பதாகப் பீஷ்மர் குற்றஞ்சாட்டுவது; தன்னை இழிவாகப் பேசுவது தகாது என கர்ணன் பீஷ்மரிடம் கேட்பது; கர்ணன் தற்பெருமைக்காரன் என்றும்; பாண்டவர்களில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவன் ஒப்பாக மாட்டான் என்று பீஷ்மர் சொல்வது; பீஷ்மரின் சொல்லை ஏற்கும்படி துரோணர் திருதராஷ்டிரனிடம் சொல்வது; திருதராஷ்டிரன் துரோணரையும், பீஷ்மரையும் அலட்சியம் செய்து சஞ்சயனிடம் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் விசாரித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர், துரியோதனனிடம், “ஒரு காலத்தில், பிருஹஸ்பதியும் சுக்ரனும் {சுக்ராச்சாரியரும்} [1] பிரம்மனிடம் சென்றார்கள். இந்திரனோடு சேர்ந்து மருதர்களும், அக்னியோடு சேர்ந்து வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யஸ்களும் {சாத்தியர்களும்}, ஏழு தெய்வீக முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, கந்தர்வர்களும், விஸ்வவசு மற்றும் அப்சரஸ்சுகளின் அழகிய குலமும் அந்தப் பழமையான பெரும்பாட்டனை {பிரம்மனை} அணுகினார்கள். அந்த அண்டத்தின் தலைவனை {பிரம்மனை} வணங்கிய சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, அவனை {பிரம்மனைச்} சுற்றி அமர்ந்தனர். அதே நேரத்தில், தங்கள் மனங்களால் தங்கள் சக்தியை தங்களுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, பழமையான இரு தெய்வங்களான முனிவர்கள் நரனும், நாராயணனும், அங்கே இருந்த அனைவரின் சக்திகளையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.


[1] இங்கே கங்குலியில் Sakra என்று இருக்கிறது. ஆனால் உடனே அதைத் தொடர்ந்து, The Maruts also with Indra என்ற சொற்களும் தொடர்வதால், அது Sukra என்றிருக்க வேண்டும் என்று கருதியே இங்கே சுக்ராச்சாரியர் என்று இட்டிருக்கிறேன். வேறு பதிப்புகளில் இங்கே சுக்கிராச்சாரியர் என்றே இருக்கிறது.

அதன்பேரில், பிருஹஸ்பதி பிரம்மனிடம், “உம்மை வழிபடாமல் இந்த இடத்தை விட்டுச் செல்லும் இந்த இருவரும் யார்? ஓ பெரும்பாட்டனே {பிரம்மனே}, எங்களுக்குச் சொல்லும். இவர்கள் யார்?” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மன், “தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களால் அவர்கள் உலகத்தின் மகிழ்ச்சிக்கு எப்போதும் பங்களித்து வருகிறார்கள். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படும் அவர்கள் {நரனும் நாராயணனும்}, அசுரர்களின் அழிவுக்காக மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்” என்றான் {பிரம்மன்}”

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன் {இந்திரன்}, அவ்விருவரும் {நரனும், நாராயணனும்} தவம்பயின்று கொண்டிருந்த இடத்திற்கு, பிருஹஸ்பதி முதலான அனைத்துத் தேவர்களுடன் சென்றான். அந்நேரத்தில், சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, தங்களுக்கும், அசுரர்களும் இடையில் ஏற்பட்டிருந்த போரின் விளைவை எண்ணி மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.

ஒப்பற்றிருந்த அந்த இருவரிடமும், இந்திரன் ஒரு வரத்தைத் தருமாறு வேண்டினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படிக் கேட்கப்பட்டதும், அந்த இருவரும், “வரத்தைக் கேள்?” என்றனர். அதற்குச் சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் {நரன் மற்றும் நாராயணனிடம்}, “எங்களுக்கு உங்கள் உதவியைக் கொடும்” என்றான். அதற்கு அவர்கள் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “நீ விரும்பியதை நாங்கள் செய்வோம்” என்றனர். பிறகு, அவர்களது உதவியைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, அதன் தொடர்ச்சியாகத் தைத்தியர்களையும், தானவர்களையும் [2] வீழ்த்தினான். எதிரிகளைத் தண்டிப்பவனான நரன், பௌலோமர்கள் மற்றும் காலகஞ்சர்கள் மத்தியில் இருந்த இந்திரனின் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றான்.

[2] திதியின் மகன் தைத்தியர்கள், தானுவின் மகன்கள் தானவர்கள். திதியும், தானுவும் தக்ஷனின் மகள்களாவர்.

அசுரன் ஜம்பன் தன்னை விழுங்க வந்த போது, சுழன்று வரும் தேரை நடத்தி, அகன்ற தலை கொண்ட கணைகளைக் கொண்டு அவனது {ஜம்பனுடைய} தலையைக் கொய்தவன் இந்த அர்ஜுனனே. அறுபதாயிரம் நிவாதகவசர்களை வீழ்த்தி, கடலுக்கு அக்கரையைத் (ஹிரண்யபுரம் எனும் தைத்தியர் நகரைத்) துன்புறுத்தியவன் {அழித்தவன்} அவனே {இந்த அர்ஜுனனே}. வலிய கரங்களைக் கொண்டவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அவனே {இந்த அர்ஜுனனே}, இந்திரன் தலைமையிலான தேவர்களையே வீழ்த்தி {காண்டவ வனத்தில்} அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்தவன் ஆவான்.

இதே போல, இவ்வுலகில், எண்ணிலடங்கா பிற தைத்தியர்களையும், தானவர்களையும் நாராயணனும் கொன்றான். வலிமைமிக்க சக்தியைக் கொண்ட அந்த இருவரை {நரனையும் நாராயணனையும்} போன்றவர்களே, இப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகக் காணப்படுபவர்கள் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஆவர். ஒருவருக்கொருவர் இப்போது ஒற்றுமையாகக் காணப்படும் இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அந்தப் பழங்கால தெய்வங்களான அதே தெய்வீக நரனும், நாராயணனுமே ஆவர்.

இவ்வுலகத்திலுள்ளோர் அனைவரைக் காட்டிலும், அசுரர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் அவர்களே {அர்ஜுனனும் கிருஷ்ணனுமே}. கிருஷ்ணனே அந்த நாராயணன். பல்குனனே {அர்ஜுனனே} அந்த நரன். உண்மையில், அவர்கள் ஈருடலில் இருக்கும் ஒரே ஆன்மா. அவர்கள் தங்கள் செயல்களால் {கர்மத்தால்}, அழிவடையாத நித்திய உலகங்களை அனுபவிக்கின்றனர். இவ்வுலகில் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்களுக்கான அவசியம் ஏற்படும்போது, அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். இதன் காரணமாகவே, போரே அவர்களது நோக்கமாக இருக்கிறது.

வேதங்களை அறிந்தவரான நாரதர், இதையே விருஷ்ணிகளிடம் சொல்லியிருக்கிறார். ஓ! துரியோதனா, கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் கேசவனையும் {கிருஷ்ணனையும்}, பயங்கர வில்லையும் {காண்டீவத்தையும்}, ஆயுதங்களையும் தாங்கியிருக்கும் அர்ஜுனனையும் எப்போது காண்பாயோ, நித்தியமான, ஒப்பற்றவர்களான அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்கள் என்று பொருளும் இங்கே வரும்} ஒரே தேரில் அமர்ந்திருப்பதை எப்போது காண்பாயோ, ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டில் இருந்தும் உனது அறிவு வீழ்ந்து விட்ட பிறகு, இத்தகு ஆபத்து, குருக்களை {கௌரவர்களை} ஏன் அச்சுறுத்தாது? எனது வார்த்தைகளுக்கு நீ செவிசாய்க்கவில்லையெனில், பலரின் படுகொலைகளை நீ கேள்விப்பட வேண்டியிருக்கும். ஏனெனில், குருக்கள் அனைவரும் உனது கருத்தையே ஏற்கின்றனர். {உன்னுடைய கொள்கையையே கௌரவர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர்}. ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, ராமரால் {பரசுராமரால்} சபிக்கப்பட்டவனும், இழிபிறப்பு கொண்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், சுபலனின் மகன் சகுனி, அற்பனும், பாவியுமான உனது தம்பி துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தே உண்மை என நீ மட்டுமே ஏற்கிறாய்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர்}.

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! அருளப்பட்டவரே! பாட்டா, என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பயன்படுத்துவது உமக்குத் தகாது. ஏனெனில், சொந்த வகையின் {சுயதர்மத்தின்} கடமைகளில் இருந்தும் வீழாமல், க்ஷத்திரிய வகைக்கான {க்ஷத்திரிய தர்மத்தின்} கடமைகளையும் நான் பின்பற்றி வருகிறேன். அதுதவிர, வேறு என்ன பொல்லாப்பு {துர்க்குணம்} என்னிடம் இருக்கிறது? திருதராஷ்டிரரின் மக்கள் யாரும் அறிய வண்ணம் பாவம் எதையும் நான் செய்யவில்லை. திருதராஷ்டிரரின் மகனுக்கு {துரியோதனனுக்கு} எந்தக் காயத்தையும் {தீங்கையும்} நான் செய்தவனில்லை; மறுபுறம், போரில் நான் பாண்டவர்கள் அனைவரையும் கொல்வேன். முன்பே {நம்மால்} காயம் பட்டவர்களிடம், அறிவுடையோர், எப்படி அமைதியை {சமாதானத்தை} மீண்டும் ஏற்படுத்த முடியும்? மன்னர் திருதராஷ்டிரருக்கும், பேரரசைக் கொண்டவனாதலால், குறிப்பாகத் துரியோதனனுக்கும் ஏற்புடைய அனைத்தையும் எப்போதும் செய்ய வேண்டியது எனது கடமையாகும்” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் திருதராஷ்டிரனிடம், ““நான் பாண்டவர்களைக் கொல்வேன்” என்று இவன் {கர்ணன்}, அடிக்கடி தற்பெருமை பேசி வந்தாலும், உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாக்களான} பாண்டவர்களின் பதினாறில் ஒரு பங்குக்கும் இவன் {கர்ணன்} ஈடாக மாட்டான். தீய ஆன்மாக்கள் கொண்ட உன் மகன்களுக்கு நேரப்போகும் பெரும் ஆபத்து, சூதனின் கேடுகட்ட மகனான இவனது {கர்ணனின்} செயல்களாலேயே ஏற்படப்போகிறது என்று அறிந்து கொள்வாயாக.

இவனை {கர்ணனை} நம்பி, தெய்வீக வழித்தோன்றல்களும் {வம்சாவளியினரும்}, எதிரிகள் அனைவரையும் தண்டிப்பவர்களுமான அந்த வீரர்களை {பாண்டவர்களை} உன் முட்டாள் மகனாகிய சுயோதனன் {துரியோதனன்} அவமதித்தான். எனினும், பாண்டவர்கள் ஒவ்வொருவராலும் பழங்காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளில் ஏதாவது ஒன்றுக்கு இணையாகவாவது இந்த இழிந்தவனால் முன்னர்ச் செய்யப்பட்ட கடினமான சாதனை என்ன? {பாண்டவர்களில் ஒருவர் சாதித்த ஏதேனும் ஒரு சாதனைக்கு இணையாகவாவது இந்த இழிந்தவன் என்ன செய்திருக்கிறான்?}

விராடனின் நகரத்தில், பெரும் ஆற்றலை வெளிப்படுத்திய தனஞ்சயனால் {அர்ஜுனனால்}, இவனது அன்பிற்குரிய தம்பி கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும் இவன் என்ன செய்தான்?

பசுமந்தையைக் காணச் சென்ற {கோஷ யாத்திரை சென்ற} உனது மகன் {துரியோதனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட போது, காளை போல இப்போது முழங்கும் இந்தச் சூத மகன் {கர்ணன்} எங்கே இருந்தான்?

பீமனும், ஒப்பற்ற பார்த்தனும் {அர்ஜுனனும்}, இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} தான் அங்கேயும் கந்தர்வர்களுடன் மோதி அவர்களை {கந்தர்வர்களை} வீழ்த்தினர்.

ஓ! பாரதகுலத்தின் காளையே, நீ அருளப்பட்டிருப்பாயாக. எப்போதும் அழகாகவும், எப்போதும் அறம் பொருள் ஆகிய இரண்டையும் கொண்டிராத இவை, இவனால் {கர்ணனால்} சொல்லப்படும் பல தவறான {பொய்} வார்த்தைகளே” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் உயர் ஆன்ம மகன் {துரோணர்}, திருதராஷ்டிரனுக்கும், அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பாரதர்களில் சிறந்தவரான பீஷ்மர் சொல்வதைச் செய். செல்வத்தில் பேராசை கொண்டோரின் வார்த்தைகளின்படி செயல்படுவது உனக்குத் தகாது. போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்ததாகத் தெரிகிறது. அர்ஜுனனால் சொல்லப்பட்டு, சஞ்சயனால் மீண்டும் உரைக்கப்பட்ட அனைத்தையும், பாண்டுவின் அந்த மகனால் {அர்ஜுனனால்} சாதிக்க இயலும் என்பதை நான் அறிவேன். ஏனெனில், மூவுலகிலும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான வில்லாளி யாரும் கிடையாது” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.

எனினும், துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் பாண்டவர்கள் குறித்துச் சஞ்சயனிடம் கேட்டான். பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருக்கு உரிய பதிலை மன்னன் {திருதராஷ்டிரன்} தெரிவிக்காத அந்தக் கணமே, வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் கௌரவர்கள் கைவிட்டனர் {உயிரில் ஆசையற்றவர்களானார்கள்}” என்றார் {வைசம்பாயனர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்