Saturday, May 02, 2015

"நாங்கள் பணிவோம்" என்றான் பீமன்! - உத்யோக பர்வம் பகுதி 74

"We would be submissive" said Bhima! | Udyoga Parva - Section 74 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –3)

பதிவின் சுருக்கம் : கடுமையுடன் எப்போதும் பேசக்கூடிய பீமன் வழக்கத்திற்கு மாறாகத் துரியோதனனிடம் மென்மையாகப் பேசுமாறு கிருஷ்ணனை வேண்டுவது; துரியோதனன் பிடிவாதம் கொண்டவன் என்றும், தான் கொண்ட கருத்துக்காக உயிரையே கூட  விடுவான் என்றும் சொல்வது; துரியோதனன் பாரதக் குலத்தை அழிக்கவே பிறந்திருக்கிறான் என்று சொல்வது; பாரதர்கள் அனைவரையும் அழிக்காமல் இருப்பதற்காகத் தாங்கள் துரியோதனனுக்குப் பணிந்து போவது கூட நன்மையே என்று சொல்வது; பீஷ்மரிடம் துரியோதனன் சினத்தைத் தணிக்கச் சொல்லுமாறு வேண்டுவது; யுதிஷ்டிரனுக்கும், அர்ஜுனனுக்கும் கூட போரில் விருப்பம் இல்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொல்வது...

பீமன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, குருக்களிடம் அமைதியை ஏற்படுத்தும் அழுத்தத்துடன் பேசுவாயாக. போரைக் காட்டி அவர்களை அச்சுறுத்த வேண்டாம். தனது சொந்த நன்மைக்கு எதிராகவும், திமிருடனும், கோபத்தால் தூண்டப்பட்டும் அனைத்திலும் கோபம் காட்டும் துரியோதனனிடம் கடுமையாகப் பேச வேண்டாம். அவனிடம் நீ மென்மையாக நடந்து கொள்வாயாக. செழுமையின் செருக்கால் போதையுண்டிருக்கும் துரியோதனன், ஒரு திருடனைப் போல, இயல்பிலேயே பாவம் நிறைந்த இதயம் படைத்தவனும், பாண்டவர்களிடம் பகை கொண்டிருப்பவனும் ஆவான். தொலைநோக்குப் பார்வையின்றி, கொடும்பேச்சும், எப்போதும் பிறரை நிந்திக்கும் மனநிலையும், தீய ஆற்றலும், எளிதில் தணிக்கமுடியாத கோபமும் கொண்டவனாக, எளிதில் கற்பிக்கப்பட இயலாதவனாக, தீய ஆன்மாவும், ஏமாற்றுகர நடத்தையும் கொண்டவனாவான். அவன் {துரியோதனன்}, தனது கருத்தைக் கைவிடவோ, உடைக்கவோ விடாமல், அதற்காகத் {பிடிவாதமாக} தனது உயிரையே விடக்கூடியவனாவான்.


ஓ! கிருஷ்ணா, அப்படிப்பட்ட ஒருவனிடம் சமாதானம் பேசுவது மிகக் கடினமானது என நான் கருதுகிறேன். அவனின் {துரியோதனனின்} நலன்விரும்பிகளின் வார்த்தைகளைக்கூட மதிக்காமல், அறமற்று, பொய்மையை விரும்பும் அவன் {துரியோதனன்}, தனது ஆலோசகர்களின் வார்த்தைகளுக்கு எதிராகவே எப்போதும் செயல்பட்டு, அவர்களது இதயங்களைக் காயப்படுத்தி வருகிறான். புற்களுக்குள் மறைந்திருக்கும் பாம்பைப் போல, தனது சொந்த மனநிலையை ஒட்டியும், கோபத்தின் உந்துவிசைக்குக் கீழ்ப்படிந்தும், இயல்பாகவே பாவம்நிறைந்த செயல்களையே அவன் {துரியோதனன்} செய்கிறான். துரியோதனன் என்ன படையைக் கொண்டிருக்கிறான்? அவனது நடத்தை என்ன? அவனது இயல்பு என்ன? அவனது வலிமை என்ன? அவனது ஆற்றல் என்ன? ஆகிய அனைத்தையும் நீ நன்கு அறிவாய்.

இதற்கு முன்பு, கௌரவர்கள் தங்கள் மகனுடன் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினார்கள். நாங்களும், எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இந்திரனின் தம்பி {விஷ்ணு}, இந்திரனோடு மகிழ்ந்திருந்ததைப் போன்று இருந்தோம். ஐயோ, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பனிக்காலத்தின் இறுதியில் நெருப்பால் எரிக்கப்படும் காடு போல, துரியோதனனின் கோபத்தால், பாரதர்கள் அனைவரும் எரிக்கப்படுவார்களே. உறவினர்களையும், நண்பர்களையும், சொந்தங்களையும் அழித்த பதினெட்டு மன்னர்களும் நன்கு அறியப்பட்டவர்களே ஆவர்.

தர்மம் {அறம்} அரிதானபோது, செழுமையில் பிரகாசித்து, சக்தியில் சுடர்விட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் குலத்தில் கலி பிறந்ததைப் போலவே, ஹைஹயர்களில் உதாவர்தனும், நீபர்களில் ஜனமேஜயனும், தாலஜங்களர்களில் பஹூளனும், கிரிமிகளில் செருக்கு நிறைந்த வசுவும், சூவீரர்களில் அஜபிந்துவும், சூராஷ்டிரர்களில் ருஷர்ததிகனும், பலீஹர்களில் அர்க்கஜனும், சீனர்களில் தௌதமூலகனும், விதேகர்களில் ஹயக்ரீவனும், மஹௌஜஸாக்களில் வரயுவும், சுந்தரர்களில் பாஹுவும், தீப்தாக்ஷர்களில் புரூரவனும், சேதி மற்றும் மத்ஸ்யர்களில் ஸஹஜனும், பிரவீரர்களில் விருஷத்வஜனும், சந்திர-வத்ஸ்யர்களில் தாரணனும், முகுடர்களில் வீகாஹனனும், நந்திவேகர்களில் சமனும் பிறந்தார்கள்.

ஓ! கிருஷ்ணா, இந்தத் தீய நபர்கள் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் தங்களுக்குரிய குலங்களில், தங்கள் உறவினர்களின் அழிவுக்காகவே பிறக்கிறார்கள். அதே போலவே, பாவத்தின் உருவமும், தனது குலத்தின் அவமானமுமான துரியோதனன், யுகத்தின் முடிவில் குருக்களான எங்கள் மத்தியில் பிறந்திருக்கிறான்.

எனவே, ஓ! கடும் ஆற்றல் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ அவனிடம் மெதுவாகவும், மென்மையாகவும் பேசுவாயாக. அறமும் பொருளும் நிறைந்த கசப்பில்லாத இனிய வார்த்தைகளால், அவனது இதயத்தைக் கவரும் வகையில் பேசுவாயாக. ஓ! கிருஷ்ணா, அவமதிக்கப்பட்டவர்களாகி, பணிந்த நிலையில் நாங்கள் துரியோதனனைப் பின்பற்றியே கூட நடந்து கொள்கிறோம், ஆனால் பாரதர்கள் அழிக்கப்பட வேண்டாமே.

ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, நாங்கள் குருக்களுக்கு அந்நியர்களாகவே வாழ நேர்ந்தாலும் கூட, முழுக் குலத்தையும் அழித்த பாவம் அவர்களைத் {கௌரவர்களைத்} தொடாதிருக்கட்டும். ஓ! கிருஷ்ணா, சகோதரர்களுக்கிடையில் சகோதர உணர்வுகளைக் கொண்டு வரவும், திருதராஷ்டிரர் மகனைத் {துரியோதனனை} தணிக்கவும் முதியவரான பாட்டனும் {பீஷ்மரும்}, குருக்களின் {கௌரவர்களின்} பிற ஆலோசகர்களும் கேட்டுக்கொள்ளப்படட்டும். இதுவே நான் சொல்வதாகும். மன்னன் யுதிஷ்டிரரும் இதை அங்கீகரிக்கிறார், அர்ஜுனனுன் போருக்கு எதிராகவே இருக்கிறான். ஏனெனில் அவனிடம் பெரும் கருணை இருக்கிறது" என்றான் {பீமன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்