Saturday, May 02, 2015

"உண்மை உணர்த்துவேன்" என்றான் கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 73

"I will make feel the truth" said Krishna! | Udyoga Parva - Section 73 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –2)

பதிவின் சுருக்கம் : வெற்றியும் மரணமும் க்ஷத்திரியனின் கடமை; கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல என்று யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொல்வது; கௌரவர்களிடம் மிதமாக, மென்மையாக நடந்து கொண்டால் யுதிஷ்டிரனால் தனது நாட்டைத் திரும்பப் பெற முடியாது என்று சொன்னது; தீச்செயல் செய்துவிட்டு அதற்காக வெட்கப்படாத துரியோதனன், அதன் காரணமாக முன்பே இறந்து விட்டான் என்று சொன்னது; பாண்டவர்கள் அனாதரவாக விடப்பட்டத்தையும், திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தையும் நினைவூட்டி, துரியோதனன் கொல்லத்தக்கவன் என்று சொன்னது; குருக்களிடம் சென்று, அங்கே கூடியிருக்கும் மன்னர்களிடம் யுதிஷ்டிரனின் அறச்செயல்களையும், துரியோதனனின் தீமைகளையும் எடுத்துரைக்கப் போவதாகச் சொன்னது; தான் சென்று விரைந்து திரும்பி விடுவதாகவும், பாண்டவர்களின் படையைப் போருக்குத் தயாராக நிறுத்தும்படியும் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "நான் சஞ்சயரின் வார்த்தைகளைக் கேட்டேன். இப்போது உம்முடையவற்றையும் கேட்டேன். அவரது {சஞ்சயரின்} நோக்கங்களையும் உம்முடையவற்றையும் குறித்த அனைத்தையும் நான் அறிவேன். உமது இதயம் அறத்தை நோக்குகிறது, அதே வேளையில் அவர்களது {கௌரவர்களது} இதயமோ பகைமையை நோக்கி இருக்கிறது. போரில்லாமல் கிடைக்கும் எதுவும் உமக்கு மதிப்பு மிக்கதே.


ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, நீண்ட நாள் பிரம்மச்சாரியாக இருப்பது க்ஷத்திரியனின் கடமையாகாது. உண்மையில், க்ஷத்திரியர்கள் பிச்சையால் தங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாது என்றே நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களும் சொல்லியிருக்கின்றனர். போர்க்களத்தில் வெற்றி அல்லது மரணம் என்பது படைப்பாளனால் நிலையானதாக விதிக்கப்பட்டுள்ளது; அதுவே க்ஷத்திரியனின் கடமையும் கூட. (க்ஷத்திரியரில்) கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல. ஓ! யுதிஷ்டிரரே, ஓ! வலிய கரங்கள் கொண்டவரே, கோழைத்தனத்தால் வாழ்வாதாரம் சாத்தியமல்ல. உமது வீரத்தை வெளிப்படுத்தி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளை வீழ்த்துவீராக.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரரின் பேராசை கொண்ட மகன் {துரியோதனன்}, (பல மன்னர்களுடன்) நீண்ட காலம் வாழ்ந்ததால், {அவர்களுடன் ஏற்பட்ட} பாசத்தாலும் நட்பாலும் மிகுந்த பலவானாகி விட்டான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்முடன் அவன் {துரியோதனன்} சமாதானம் கொள்வான் என்பதில் {எனக்கு} நம்பிக்கையே இல்லை. பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறர் தங்களோடு இருப்பதால், அவர்கள் {கௌரவர்கள்} தங்களைப் பலவான்களாகக் கருதுகிறார்கள்.

ஓ! மன்னா, ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வளவு காலம் அவர்களோடு மென்மையாகப் பழகுகிறீரோ, அவ்வளவு காலம் உமது நாட்டை அவர்களே வைத்துக் கொள்வர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, {நீர் காட்டும்} கருணையாலோ, மென்மையாலோ, நீதியுணர்வின் காரணத்தாலோ, திருதராஷ்டிரர் மகன்கள் உமது விருப்பங்களை நிறைவேற்ற மாட்டார்கள்.

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உம்மோடு சமாதானம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சியாகும். உம்மைக் கோவணத்துடன் {Kaupina} தள்ளி, உமக்கு ஆழ்ந்த வலியை உண்டாக்கிய அவர்கள் {கௌரவர்கள்}, அதற்காக வருத்தமடையவில்லை. ஈகை, மென்மை, சுயக்கட்டுபாடு, அறம், கடும் நோன்புகள் ஆகியவற்றைக் கொண்ட உம்மை, பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், ஞானியான விதுரர், மற்றும் பல புனிதமான அந்தணர்கள், மன்னன் {திருதராஷ்டிரர்}, குடிமக்கள் மற்றும் கௌரவர்களில் முக்கியத் தலைவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்திய கொடூரனான துரியோதனன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} தனது அந்தத் தீயச் செயலுக்காக வெட்கப்படவில்லையே.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இத்தகு மனநிலை கொண்ட அந்த இழிந்தவனுக்கு {துரியோதனனுக்கு} நீர் எந்த இரக்கத்தையும் காட்டாதீர். அனைவரின் கைகளாலும் மரணத்தைப் பெற அவர்கள் தகுந்தவர்களே எனும்போது, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கொல்லப்பட அவர்கள் எவ்வளவு தகுந்தவர்கள்? ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மகிழ்ச்சியுடன் பல தற்பெருமைப் பேச்சுகளில் ஈடுபட்டவனும், தனது தம்பிகளுடன் கூடியவனுமான துரியோதனன், எப்படிப்பட்ட முறையற்ற பேச்சுகளால் உம்மையும் உமது தம்பிகளையும் துன்புறுத்தினான்?

அவன் {துரியோதனன்}, "இந்தப் பரந்த பூமியில் இப்போது பாண்டவர்கள் தங்களுக்கென்று எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்களது {பாண்டவர்களது} குலமும் பெயர்களும் கூட அழிந்து போகும். முடிவிலா காலத்தில், தோல்வி மட்டுமே அவர்களுடையதாகும். அவர்களது அறங்கள் அனைத்தும் என்னில் கலந்து, ஐம்பூதங்களாக அவர்கள் குறைக்கப்பட்டுவிட்டனர்." என்று சொன்னான்.

பகடையாட்டம் நடந்து கொண்டிருந்த போது, பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரின் முன்னிலையில், தீய ஆன்மா கொண்ட இழிந்தவனான துச்சாசனன், பாதுகாப்பற்ற ஒருத்தியைப் போல, அழுது கொண்டிருக்கும் மங்கையான திரௌபதியின் கூந்தலைப் பற்றி மன்னர்களின் சபைக்கு இழுத்து வந்து, மீண்டும் மீண்டும் அவளை {திரௌபதியை} "மாடே, மாடே" என்று அழைத்தான். பயங்கர ஆற்றல்படைத்த உமது சகோதரர்கள், உம்மால் தடுக்கப்பட்டு, அறத்தின் கட்டுகளுக்குக் கட்டுப்பட்டு, பழிதீர்க்க எதுவும் செய்யவில்லை; அதன் பிறகு, நீங்கள் காட்டிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகும், தனது உறவினர்களுக்கு மத்தியில் இத்தகு வார்த்தைகளையும், மேலும் கொடும் வார்த்தைகளைச் சொல்லி, துரியோதனன் தற்பெருமை பேசினான்.

நீர் {குற்றமற்ற) அப்பாவி என்பதை அறிந்தும், அங்கே கூடியிருந்தவர்கள் அந்தச் சபாமண்டபத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அடைபட்ட குரலுடன் அழுது கொண்டிருந்தார்கள். அந்தணர்களோடு அங்கே கூடியிருந்த மன்னர்கள் இதற்காக அவனை {துரியோதனனை} மெச்சவில்லை. உண்மையில், அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} நிந்திக்கவே செய்தனர்.

ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நற்குலத்தில் பிறந்தவனுக்கு நிந்தனையே கூட மரணமாகும். பழி நிறைந்த வாழ்வை வாழ்வதை விட மரணமே பல மடங்கு சிறந்ததாகும். பூமியின் மன்னர்கள் அனைவராலும் நிந்திக்கப்பட்டும், வெட்கமடையாத அவன் {துரியோதனன்}, அப்போதே இறந்துவிட்டான். தனது குணத்தை இவ்வளவு அருவருக்கத்தக்கதாக அமைத்துக் கொண்ட ஒருவன், ஒரே பலவீனமான வேரில் நிமிர்ந்து நிற்கும் வேரற்ற மரத்தைப் போல எளிதில் அழிவடைவான். பாவம் நிறைந்த, தீய மனம் படைத்த துரியோதனன், பாம்பைப் போல அனைவர் கையாலும் சாகத் தகுந்தவனாவான். எனவே, எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அவனை {துரியோதனனைக்} கொன்றுவிடும். சற்றும் தயங்காதீர்.

ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது தந்தையான திருதராஷ்டிரருக்கும், பீஷ்மருக்கும் நீர் மரியாதை செலுத்துவதை நானும் விரும்புகிறேன், உமக்கும் அது தகும். துரியோதனனின் தீமைகளைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் இருக்கும் மனிதர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் நான் அங்கே {ஹஸ்தினாபுரம்} சென்று நீக்கிவிடுவேன். அங்கே, நான், மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், அனைத்து மனிதர்களிடமும் காண முடியாதவையும், உம்மில் இருப்பவையுமான அறங்கள் அனைத்தையும், மேலும், துரியோதனனின் தீமைகள் அனைத்தையும் பட்டியலிடுவேன்.

அறம் மற்றும் பொருள் நிறைந்த நல்ல வார்த்தைகளை நான் பேசுவதைக் கேட்கும் பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள், {யுதிஷ்டிரனாகிய} உம்மை, அறம்சார்ந்த ஆன்மா கொண்டவராகவும், உண்மையைப் பேசுபவராகவும் கருதுவார்கள். அதே வேளையில், துரியோதனன் எவ்வளவு பேராசை கொண்டவன் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அங்கே கூடியிருக்கும் குடிமக்கள் மற்றும் அந்த நாட்டில் வசிப்பவர்கள் ஆகிய இருவரிடமும், இளையவர் மற்றும் முதியவர் ஆகிய இருவரிடமும், நால் வகை மக்கள் அனைவரிடமும், துரியோதனனின் தீமைகளை எடுத்துச் சொல்வேன்.

நீர் சமாதானத்தைக் கேட்பதால் யாரும் உம்மைப் பாவம் நிறைந்தவன் என்று குற்றஞ்சாட்டமாட்டார்கள். அதே வேளையில், பூமியின் தலைவர்கள் அனைவரும் குருக்களையும் {கௌரவர்களையும்}, திருதராஷ்டிரரையும் நிந்திப்பார்கள். மனிதர்கள் அனைவராலும் கைவிடப்பட்டதன் விளைவால் துரியோதனன் கொல்லப்பட்டால், மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இருக்காது. எனவே, செய்ய வேண்டியதை இப்போதே செய்வீராக.

குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் அமைதியேற்படுத்த முயன்று, அவர்களது போர் எண்ணத்தையும், அவர்களது ஏற்பாடுகளையும் குறித்துக் கொண்டு, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது வெற்றிக்காக நான் விரைந்து வருவேன். எதிரியிடம் போர் நிச்சயம் என்றே நான் நினைக்கிறேன். நான் காணும் சகுனங்கள் அனைத்தும் அதையே குறிக்கின்றன. முன்னிரவு நேரத்தில், பறவைகளும், விலங்குகளும் பயங்கமாக அலறுகின்றன. யானைகள் மற்றும் குதிரைகளில் முதன்மையாவை கொடூர உருவங்களைக் கொள்கின்றன. நெருப்பே கூடப் பல்வேறு வகைகளில் பயங்கர வண்ணங்களை வெளிப்பட்டுத்துகின்றன! உலகத்தை அழிக்கப்போகும் பேரழிவு நமக்கு மத்தியில் வந்திருப்பதாலேயே வழக்கத்திற்கு மாறான இவற்றை நாம் காண்கிறோம்.

ஆயுதங்கள், பொறிகள், கவசங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தயார் செய்தபடி உமது வீரர்கள் அனைவரும் போருக்குத் தயாராக இருக்கட்டும். அவர்கள், தங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களைக் கவனித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வரப்போகும் போரில் உமக்குத் தேவையான அனைத்தையும் சேகரித்துக் கொள்ளும். துரியோதனன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ, அவ்வளவு காலம் அவனால் உமக்கு எவ்வழியிலும் {நாட்டைத்} திருப்பிக் கொடுக்க இயலாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செழிப்பு மிகுந்த உமது நாட்டை அவன் {துரியோதனன்} பகடை கொண்டு உம்மிடம் கைப்பற்றினான்" என்றான் {கிருஷ்ணன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்