Wednesday, May 13, 2015

குந்தியின் சோகம்! - உத்யோக பர்வம் பகுதி 90ஆ

The sorrow of Kunti | Udyoga Parva - Section 90b | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –19)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் கைகளில் திரௌபதி அடைந்த அவமானத்தைக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது; அதைவிடப் பெரிய துயரம் தனக்கு வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டது; சூதும் வேட்டையும் பாண்டவர்களுக்குத் தகுமா என்று கேட்டது; தர்மத்தின் நிமித்தமாகப் பாண்டவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்று சொன்னனது; அர்ஜுனன் பிறந்தபோது அசரீரி செய்த அறிவிப்பைச் சொன்னது; நீண்ட நாளாகக் காணாதிருப்பதால் தனக்குத் தன் பிள்ளைகளும், தன் பிள்ளைகளுக்குத் தானும் இறந்ததற்குச் சமமாக இருப்பதாகக் கிருஷ்ணனிடம் குந்தி சொன்னது...

{குந்தி தொடர்ந்தாள்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது மகன்களுக்கு மேலாக, துருபதனின் மகள் {திரௌபதி} எனது அன்புக்குரியவள் ஆவாள். உயர்குலப் பிறப்பும், பெரும் அழகும் கொண்ட அவள் {திரௌபதி} அனைத்து சாதனைகளையும் கொண்டவளாவாள். உண்மை நிறைந்த பேச்சுடன் கூடிய அவள் {திரௌபதி}, தனது மகன்களின் துணையை விட்டு, தனது தலைவர்களின் துணையைத் தேர்ந்தெடுத்தாள். உண்மையில், தனது அன்புக்குரிய மகன்களை விட்டுவிட்டு, பாண்டுவின் மகன்களைப் பின்தொடர்ந்து சென்றாள். ஒரு காலத்தில் பணியாட்களின் பெரிய வரிசையால் காக்கப்பட்டவளும் {பணிவிடை செய்யப்பட்டவளும்}, இன்ப நோக்கம் அனைத்திலும் தனது கணவர்களால் புகழப்பட்டவளும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, மங்கலக்குறிகள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் கொண்டவளுமான அந்தத் திரௌபதி இப்போது எப்படி இருக்கிறாள்?


அக்னிக்கு நிகரான சக்தியைக் கொண்டவர்களும், எதிரிகளை அடிப்பவர்களும், வலிய வில்லாளிகளுமான ஐந்து வீரக் கணவர்களைக் கொண்டிருந்தும், ஐயோ, துருபதன் மகள் {திரௌபதி} அடைந்த துன்பம் பெரியதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பதினான்கு {14} நீண்ட வருடங்களாகப் பாஞ்சால இளவரசியான எனது மருமகளை {திரௌபதியை} நான் காணவில்லை. தொடர் இடர்களுக்கு இரையான அவளும், அவ்வளவு காலம் தன் மகன்களைக் காணவில்லை. இப்படிப்பட்ட நிலையைக் கொண்ட துருபதனின் மகளே {திரௌபதியே}, தடங்கலில்லா இன்பத்தை அனுபவிக்க இயலாத போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, ஒருவன் அனுபவிக்கும் மகிழ்ச்சி, அவனது செயல்களின் கனி அல்ல என்றே தோன்றுகிறது.

வலுக்கட்டாயமாகச் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்ட திரௌபதியை நினைக்கும்போது, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, யுதிஷ்டிரனோ, பீமனோ, நகுலனோ, சகாதேவனோ என் பற்றுக்கு ஆட்படவில்லை. கோபமும், பேராசையும் கொண்ட இழிந்த துச்சாசனன், மாதவிலக்கான காலத்தில் ஒற்றையாடையுடுத்தியிருந்த திரௌபதியை, அவளது மாமனார் {திருதராஷ்டிரரின்} முன்னிலையிலேயே இழுத்துவந்து, குருக்கள் அனைவரின் பார்வைக்கும் அவளை {திரௌபதியை} வெளிப்படுத்தியபோது ஏற்பட்டதைவிடக் கனமான துயரம் எனக்கு வேறு எதுவும் கிடையாது.

அங்கே இருந்தவர்களில் மன்னன் பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன் ஆகியோர் இந்தக் காட்சியால் துளைக்கப்பட்டனர் என்பது அறியப்பட்டதே. ஆனால், அந்தச் சபையில் இருந்தோர் அனைவரைக்காட்டிலும் நான் விதுரனையே வழிபடுகிறேன். கல்வியாலோ, செல்வத்தாலோ ஒருவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவனாகமாட்டான். ஒருவன் தனது மனநிலையாலேயே மதிப்புக்குரியவன் ஆகிறான். ஓ! கிருஷ்ணா, பெரும் புத்திசாலித்தனமும், ஆழ்ந்த ஞானமும் கொண்ட ஒப்பற்ற விதுரனின் குணம், இந்த முழு உலகத்தையும் (அவன் அணிந்திருக்கும்) ஆபரணம் போல அலங்கரிக்கிறது" என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வரவால் மகிழ்ச்சியையும், (தனது மகன்கள் நிமித்தமான) சோகத்தாலும் பாதிக்கப்பட்ட பிருதை {குந்தி}, தனது பல்வேறு துயரங்களுக்குமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள். அவள் {குந்தி}, "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பழங்காலத்துத் தீய மன்னர்கள் அனைவரின் தொழிலான சூதும், மான்வேட்டையும், பாண்டவர்களின் மகிழ்ச்சிக்குகந்த தொழிலாகுமா? ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகன்களால் தங்கள் சபையில் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் முன்னிலையில் இழுத்துவரப்பட்டு, மரணத்தைவிடக் கொடுமையான அவமானங்கள் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மீது குவிக்கப்பட்டதையும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது மகன்கள் தங்கள் தலைநகரில் இருந்து விரட்டப்பட்டுக் காட்டில் உலவியதையும், இன்னும் எனது பல்வேறு துயரங்களையும் நினைக்கும்போதெல்லாம் எனக்கு {எனது மனம்} எரிகிறது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு அந்நியரின் வீட்டில் அடைந்து கிடந்து, தங்கள் காலத்தை மறைந்திருந்து கழிக்க வேண்டிய நிலையைக் காட்டிலும் எனக்கோ, எனது மகன்களுக்கோ வேறு எதுவும் அதிக வலியைத் தராது.

என் மகன்களைத் துரியோதனன் துரத்தியது முதல் பதினான்கு {14} வருடங்கள் முழுமையாக முடிந்திருக்கிறது. பாவங்களின் கனிகளை {பலன்களை} துன்பம் அழிக்கும், அறத்தகுதியைச் சார்ந்தே மகிழ்ச்சி இருக்கும் என்றால், இவ்வளவு துன்பங்களுக்குப் பிறகு, மகிழ்ச்சி என்பது எங்களுடையதே ஆகும். (தாய்ப்பாசத்தைப் பொறுத்தவரை) நான் திருதராஷ்டிரர் மகன்களிடமும் எனது மகன்களிடமும் எந்தப் பாகுபாட்டையும் காட்டவில்லை. அந்த உண்மையின் காரணமாகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களது எதிரிகள் கொல்லப்பட்டு, அவர்களால் நாடும் மீட்கப்பட்டு, தற்போதைய கலவர நிலையில் இருந்து வெளியே பாதுகாப்பாக வரும் அவர்களோடு {பாண்டவர்களோடு} உன்னையும் நான் நிச்சயம் காண்பேன். அறத்தை ஒட்டியிருக்கும் உண்மைநிறைந்த நோன்பை நோற்றப் பாண்டவர்கள், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எனினும், தற்போதைய எனது சோகங்களின் காரியத்தில் நான் என்னையோ, சுயோதனனையோ {துரியோதனனையோ} பழி கூறாமல் எனது தந்தையை {சூரசேனரை} மட்டுமே கூறுவேன். செல்வந்தன் ஒருவன் பணத்தைக் கொடையாகக் கொடுப்பது போல, என் தந்தை {சூரசேனர்}, என்னைக் குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். சிறுபிள்ளையாகக் கைகளில் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த என்னை, உனது பாட்டன் {சூரசேனர்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, தனது நண்பரான ஒப்பற்ற குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். எனது தந்தையாலும், எனது மாமனாராலும் கைவிடப்பட்ட நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, ஓ! மாதவா, தாங்கமுடியாத துயரங்களால் பீடிக்கப்பட்டு, வாழ்வதில்தான் என்ன பயன் இருக்க முடியும்? {பிறந்த இடத்திலும் கைவிடப்பட்டேன், புகுந்த இடத்திலும் கைவிடப்பட்டேன். அப்படிப்பட்ட நான் வாழ்ந்துதான் என்ன பயன்?}.

சவ்யசச்சின் {அர்ஜுனன்} பிறந்த அன்றிரவு, பிரசவ அறையில், உருவமற்ற ஒரு குரல், "இந்த உனது மகன் உலகம் முழுதையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே எட்டும். பெரும் போரில் குருக்களைக் கொன்று, நாட்டை மீட்கும் உனது மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் சேர்ந்து, மூன்று பெரிய வேள்விகளை நடத்துவான்" என்றது. நான் அந்த அறிவிப்பை சந்தேகிக்கவில்லை. படைப்பைத் தாங்கிப்பிடிக்கும் தர்மத்தை {அறத்தை} நான் வணங்குகிறேன். தர்மம் {அறம்} என்பது கட்டுக்கதை {தொன்மம்} அல்ல என்றால், ஓ! கிருஷ்ணா, அந்த உருவமற்ற குரல் சொன்ன அனைத்தையும் நீ சாதிப்பாய்.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனது பிள்ளைகளின் பிரிவைப் போன்ற வலிநிறைந்த துயரை, எனது கணவரின் இழப்போ, செல்வத்தின் இழப்போ, குருக்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட பகையோகூட எனக்கு அளிக்கவில்லை. ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை}, அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை} என் முன்னே காணாமல், என் இதயம் என்ன சமாதானத்தை அடையும்? ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, யுதிஷ்டிரன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} ஆகியோரை பதினான்கு {14} வருடங்களாக நான் காணவில்லை. நீண்ட நாட்கள் காணாமல் போனவர்களை [1] இறந்ததாகக் கருதி மனிதர்கள் ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். நடைமுறைப்படி, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனக்கு எனது பிள்ளைகள் அனைவரும் இறந்தவராவர். அதே போல, நானும் அவர்களுக்கு இறந்தவளாவேன்" {என்றாள் குந்தி}

[1] பழங்காலத்தில் பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக ஒருவரைக் காணவில்லையென்றால், அவரை இறந்தவராகக் கருதுவார்களாம்.



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்