Wednesday, May 13, 2015

"கண்மணி நகுலனைக் காண்பேனா?" என்றாள் குந்தி - உத்யோக பர்வம் பகுதி 90அ

"Shall I behold again Nakula of mine?" asked Kunti | Udyoga Parva - Section 90a | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –19)

பதிவின் சுருக்கம் : விதுரனைச் சந்தித்த கிருஷ்ணன், பிற்பகலில் குந்தியைச் சந்தித்தது; நீண்ட காலத்திற்குப் பிறகு கிருஷ்ணனைக் கண்ட குந்தி அழுவது; தன் மகன்கள் எப்படியெல்லாம் ஆடம்பரமாக வளர்க்கப்பட்டார்கள் என்பதைச் சொல்வது; அப்படிச் சொகுசாக வளர்ந்தவர்கள் காட்டில் எப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லி குந்து அழுவது; பாண்டவர்கள் ஒவ்வொருவர் திறமைகளையும் குணங்களையும் கிருஷ்ணனிடம் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியிருக்கிறார்கள் என்று குந்தி கேட்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விதுரனைச் சந்தித்தபிறகு, பிற்பகலில், தனது அத்தையான {தந்தையின் சகோதரியான} பிருதையிடம் {குந்தியிடம்} சென்றான். சூரியனைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்ட கிருஷ்ணன், தனது இல்லத்திற்கு வந்ததைக் கண்ட அவள் {குந்தி}, தனது கரங்களால் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு தனது மகன்களை நினைத்து அழுது புலம்ப ஆரம்பித்தாள்.

தனது பெரும்பலமிக்க மகன்களின் துணைவனான விருஷ்ணி குலத்துக் கோவிந்தனை {கிருஷ்ணனை} நீண்ட காலம் கழித்துக் கண்டதால், பிருதையின் {குந்தியின்} கண்ணீர் வேகமாக வழிந்தது. வீரர்களில் முதன்மையான கிருஷ்ணன், விருந்தோம்பல் சடங்குகள் முடிந்து இருக்கையில் அமர்ந்த பிறகு, துயரால் சுண்டிய முகம் கொண்ட பிருதை {குந்தி - கிருஷ்ணனிடம்}, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "ஆரம்பக் காலத்திலிருந்தே பெரியோர்களுக்காக மரியாதையாக எப்போதும் காத்திருந்தவர்களும் {பணிவிடை செய்தவர்களும்}; தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நட்பால் இணைந்தவர்களும்; நண்பர்களுடனும் பணியாட்களுடனும் வாழத் தகுதியிருப்பினும், வஞ்சனையால் தங்கள் நாடு பறிக்கப்பட்டு விலகியவர்களும், கோபத்தையும் மகிழ்ச்சியையும் அடக்கி, அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களுமான எனது பிள்ளைகள், நாட்டையும், இன்பங்களையும் கைவிட்டு, துக்கத்தில் இருந்த என்னையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று எனது இதயத்தின் வேரையே பிடுங்கிப் போட்ட ஒப்பற்ற அந்தப் பாண்டுமகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துயரத்திற்குத் தகாதவர்களாக இருப்பினும் துன்பப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஐயோ, சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி வாழ்ந்தார்கள்?


குழந்தையாக இருந்தபோதே {சிறு வயதிலேயே} தந்தையைப் பறிகொடுத்து என்னால் மென்மையாக {அன்பாக} வளர்க்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், பெற்றோர் இருவரையும் காணாமல் அந்தப் பெருங்காட்டில் எப்படி வாழ்ந்தார்கள்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் தங்கள் சிறுவயதிலிருந்தே சங்குகள், பேரிகைகள் மற்றும் புல்லாங்குழல்களின் இசையால் தங்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள். வீட்டில் இருக்கும்போது, உயர்ந்த அரண்மனை அறைகளில் மென்மையான போர்வைகள் மற்றும் ரங்கு மான் தோல் ஆகியவற்றில் உறங்கியவர்கள். காலையில் யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, சங்கு, கைத்தாள {ஜால்ரா} ஒலியாலும், யாழ் மற்றும் குழலின் இசையாலும் எழுப்பப்பட்டவர்கள். அந்தணர்களால் உச்சரிக்கப்பட்ட புனித ஒலி கொண்ட பாடல்களால் அதிகாலையிலேயே துதிக்கப்பட்டு, அவர்களில் தகுந்தவர்களை ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் நகைகளால் வணங்கியவர்கள். மறுபிறப்பாள வகையின் ஒப்பற்ற உறுப்பினர்கள் {அந்தணர்கள்} அடைந்த விருந்தோம்பலுக்குப் பதிலாக, அவர்களிடம் மங்கல ஆசிகளைப் பெற்றவர்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்படிப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}; இரைதேடும் விலங்குகளின் கீச்சொலி மற்றும் அலறல்கள் போன்ற துன்பங்களுக்குத் தகாத அவர்கள்; ஆழமான காடுகளில் உறக்கம் கொண்டார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தொழில்முறை காரிகள் {ஓதுவார்கள்} மற்றும் பாணர்களின் துதிமுழக்கங்கள், பாடல் மகளிரின் தேன்குரலுடன் கூடிய கைத்தாளங்கள், பேரிகைகள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையால் படுக்கையில் இருந்து எழுப்பபட்டவர்கள், ஐயோ, காட்டு விலங்குகளின் அலறல்களுடன் கூடிய ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி எழுந்தார்கள்?

பணிவு கொண்டவனும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதி கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டவனும், காமத்தையும், தீமையையும் வீழ்த்தி, எப்போதும் நீதியின் பாதையில் நடப்பவனும், அம்பரீஷன், மாந்தாதா, யயாதி, நகுஷன், பரதன், திலீபன், உசீநரனின் மகனான சிபி மற்றும் பழங்கால அரசமுனிகள் தாங்கியது போலப் பெரும்பாரத்தைத் தாங்க இயன்றவனும், அற்புத குணமும், மனநிலையும் கொண்டவனும், அறத்தை அறிந்தவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தான் கொண்ட சாதனைகள் அனைத்தின் விளைவாக, மூவுலகத்திற்கும் ஏகாதிபதியாகக் கூடிய தகுதி கொண்டவனும், கல்வி மற்றும் மனநிலையால் நீதி நிறைந்த குருக்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அழகானவனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், எதிரியற்றவனும், சுத்தமான தங்கம் போன்ற நிறமுடையவனும் அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனுமான அந்த யுதிஷ்டிரன் எப்படி இருக்கிறான்?

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், காற்றின் வேகம் கொண்டவனும், பலமிக்கவனும், பாண்டு மகன்களில் எப்போதும் கோபம் நிறைந்தவனும், தனது சகோதரர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவனும், அதனால் அவர்கள் அனைவருக்கும் அன்பானவனும், உறவினர்கள் அனைவருடனும் கூடிய கீசகனைக் கொன்றவனும், குரோதவாசர்கள், ஹிடிம்பன் {இடும்பன்}, பகன் ஆகியோரைக் கொன்றவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலும், காற்று தேவனுக்கு {வாயுத்தேவனுக்கு} நிகரான வலிமையும் கொண்டவனும், பயங்கரமானவனும், மாதவனுக்கு இணையான கோபம் கொண்டவனும், அடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கோபம்நிறைந்த பாண்டு மகனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், கோபம், வலிமை, பொறுமையின்மை, ஆகியவற்றை ஒடுக்கி, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, தனது அண்ணனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பவனும், அளவற்ற வீரம் கொண்டவனும், விருகோதரன் {பீமன்} என்ற தனது பெயருக்கு நியாயம் கற்பிப்பவனும், கதாயுதத்தைப் போன்ற கரங்களைக் கொண்டவனும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பாண்டுவின் வலிமைநிறைந்த இரண்டாவது மகனுமான பீமசேனன் எப்படி இருக்கிறான்?

ஓ! கிருஷ்ணா, பழங்காலத்தின் ஆயிரங்கரங்கள் படைத்த அர்ஜுனனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} பெயரைக் கொண்டிருப்பதால், தன்னை எப்போதும் மேலானவனாகக் கருதும் அந்த இருகரங்கள் கொண்டவனும், ஒரே இழுப்பில் ஐநூறு {500} கணைகளை அடிக்கவல்லவனும், மன்னன் கார்த்தவீரியனுக்கு இணையாக ஆயுதங்களைப் பயன்படுத்தும் {மூன்றாவது} பாண்டுமகனும், சக்தியில் ஆதித்தியனுக்கு இணையானவனும், புலனடக்கத்தில் பெரும் முனிவருக்கு நிகரானவனும், பொறுமையில் பூமிக்கு நிகரானவனும், ஆற்றலில் இந்திரனுக்கு நிகரானவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தனது ஆற்றலால் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரைக்காட்டிலும் பரந்த நாட்டைக் குருக்களுக்கு உண்டாக்கிக் கொடுத்தவனும், பிரகாசத்தில் சுடர் விடுபவனும், கரங்களின் வலிமைக்காகப் பாண்டவர்களால் கொண்டாடப்படுபவனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தன்னிடம் போரிட்ட எதிரியை உயிருடன் தப்பவிடாதவனும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அனைவரையும் வென்றவனும், எவராலும் வெல்லப்படாதவனும், தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போலப் பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவனும், உனது சகோதரனும் {மைத்துனனும்} நண்பனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இப்போது எப்படி இருக்கிறான்?

அனைத்து உயிர்களிடமும் கருணையுள்ளவனும், பணிவு கொண்டவனும், பலமிக்க ஆயுதங்களை அறிந்தவனும், மென்மையானவனும் {மென்மையான மேனியும்}, நுட்பமானவனும் {நுட்பமான அறிவும்}, அறம் சார்ந்தவனும், எனக்கு அன்பானவனும், ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியும், வீரனும், சபைகளின் ரத்தினமும், வயதில் இளையவனும், தனது அண்ணன்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அறம், பொருள் அறிந்தவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தன் மனோநிலைக்காக, தனது அண்ணன்களால் மெச்சப்படுபவனும், நன்னடத்தை மற்றும் உயர்ந்த ஆன்மா கொண்ட எனது மகனும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, வீரர்களில் முதன்மையானவனும், தனது அண்ணன்களுக்கு அடக்கமாகக் காத்திருப்பவனும் {பணிவிடை செய்பவனும்}, என்னிடம் மரியாதை கொண்டவனும், மாத்ரியின் மகனுமான அந்தச் சகாதேவனைக் குறித்து எனக்குச் சொல்வாயாக.

மென்மையானவனும், வயதால் இளையவனும், வீரமுடையவனும், மேனி அழகு கொண்டவனும், நம் அனைவரிடமும் தனது சகோதரர்களிடமும் அன்புடன் இருக்கும் பாண்டுமகனும், {தனது சகோதரர்களைப் பொறுத்தவரையில்}, தனி உடல் கொண்டு நடக்கும் தங்கள் உயிர் போன்றவனும், பல்வேறு வகையான போர்முறைகளை அறிந்தவனும், பெரும் பலம் கொண்டவனும், வலிய வில்லாளியும், ஆடம்பரமாக வளர்க்கப்பட்டவனும், அன்புக்குரிய எனது மகனுமான அந்த நகுலன், ஓ! கிருஷ்ணா, இப்போது நல்ல உடல்நிலையும் மனநிலையும் கொண்டிருக்கிறானா? வலிமைமிக்கத் தேர்வீரனும், அனைத்து ஆடம்பரங்களிலும் வளர்க்கப்பட்டவனும், துயருறத் தகாதவனுமான எனது நகுலனை நான் மீண்டும் காண்பேனா? ஓ! வீரா {கிருஷ்ணா} கண்ணிமைக்கும் குறுகிய நேரம் கூட நகுலனிடம் இருந்து பார்வையை அகற்றினால் அமைதியடையாத நான், இன்றும் உயிருடன் இருப்பதைப் பார்" {என்றாள் குந்தி}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்