Wednesday, May 13, 2015

இருள் விலகிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 90இ

Kunti dispelled from darkness! | Udyoga Parva - Section 90c | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –19)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் குந்தி தனது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு தனது மகன்களுக்குச் சொல்ல வேண்டியதைக் கிருஷ்ணனிடம் சொன்னது; குந்திக்கு ஆறுதலைச் சொன்ன கிருஷ்ணன், பாண்டவர்களின் நலத்தையும் மகிழ்ச்சியையும் சொன்னது; கிருஷ்ணனைப் புரிந்து கொண்ட குந்தி இருள் விலகி கிருஷ்ணனைப் புகழ்ந்தது...

{குந்தி கிருஷ்ணனிடம் தொடர்ந்தாள்}, "ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரனிடம், "ஓ! மகனே {யுதிஷ்டிரனே} உனது அறம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அறத்தகுதி அழிந்து போகாத வகையில் செயல்படுவாயாக" என்று {நான் சொன்னதாகச்} சொல்வாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பிறரைச் சார்ந்து வாழ்வது இழிவே. அற்பத்தனம் மூலம் {கெஞ்சி வாழ்வதன் மூலம்} வாழ்வாதாரத்தைப் பெறுவதைவிட மரணமே மேலானது.


தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, எப்போதும் தயாராக இருக்கும் விருகோதரனிடமும் {பீமனிடமும்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் எதை நோக்கமாகக் கொண்டு ஒரு மகனைப் பெறுகிறாளோ, அந்நிகழ்வுக்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதையும் சாதிக்காமல் நேரத்தை நழுவ விட்டீர்களேயானால், இப்போது உலகமனைத்தாலும் மதிக்கப்படும் நீங்கள், பின்பு, இழிந்ததாகக் கருதப்படும் ஒன்றையே செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இகழ்ச்சியை அடைந்தால், நான் உங்களை என்றென்றைக்கும் கைவிட்டுவிடுவேன். நேரம் வரும்போது, அன்பிற்குரிய {தனது} உயிர்கூட விடப்பட வேண்டும்" என்று சொல்வாயாக.

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுல சகாதேவனிடம்}, "க்ஷத்திரிய வழக்கங்களின் படி வாழ விரும்பும் மனிதனின் இதயத்தை, தன் ஆற்றலால் வெல்லப்பட்ட பொருட்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். எனவே, ஆற்றலால் {வீரத்தால்} அடையத்தக்க இன்ப {மகிழ்ச்சியைத் தரக்கூடிய} பொருட்களை வெல்ல முயலுங்கள்" என்று சொல்வாயாக.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அங்கே சென்று, ஆயுதம் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவனும், பாண்டுவின் வீரமகனுமான அர்ஜுனனிடம், "திரௌபதி சுட்டிக்காட்டும் பாதையில் நீ நடப்பாயாக" என்று சொல்வாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, அண்டத்தை அழிப்பவனைப் போன்ற பீமனும் அர்ஜுனனும், கோபத்தால் தூண்டப்படும்போது, தேவர்களையே கூட அவர்களால் கொல்ல இயலும் என்பது நீ அறிந்ததே. அவர்களது மனைவியான கிருஷ்ணையை {திரௌபதியை} துச்சாசனனும், கர்ணனும் சபைக்கு இழுத்து வந்து அவமதித்துப் பேசியது, அவர்களுக்கு {பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்} இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும்.

குரு {கௌரவத்} தலைவர்களின் முன்னிலையிலேயே பெரும்பலமிக்க சக்தி கொண்ட பீமனை துரியோதனனே அவமதித்திருக்கிறான். அந்த நடத்தைக்கான கனியை {பலனை} அவன் {துரியோதனனே} அறுவடை செய்வான் {அடைவான்} என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், எதிரியால் தூண்டப்பட்டால், விருகோதரன் {பீமன்} அமைதியை அறியமாட்டான். உண்மையில், ஒரு முறை தூண்டப்பட்டுவிட்டால், நீண்டகாலத்துக்கு அதைப் பீமன் மறக்க மாட்டான். அந்த எதிரியும், அவனது கூட்டாளிகளும் அழியும் வரை அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்} மறக்க மாட்டான். நாட்டை இழந்தது என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை; பகடையில் தோற்றதும் என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை. ஒற்றையாடை உடுத்தியிருந்தவளும், ஒப்பற்றவளும், அழகானவளுமான பாஞ்சால இளவரசி {திரௌபதி} சபைக்கு இழுத்துவரப்பட்டு, கசப்பான வார்த்தைகளைக் {அவள்} கேட்குமாறு செய்யப்பட்டதே என்னை மிகவும் துன்புறுத்தியது. ஓ! கிருஷ்ணா, இதைவிட எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?

ஐயோ, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு என்றும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், பெரும் அழகுடையவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, மேனி சுகமில்லாத போது {மாதவிலக்காய் இருந்த போது}, இப்படிக் கொடூரமாக நடத்தப்பட்டாளே. வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டவளாய் இருந்தாலும், யாருமற்றவளைப் போல, அப்போது ஆதரவற்று இருந்தாளே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னையும், பலமிக்க மனிதர்களில் முதன்மையான அந்த ராமனையும் {பலராமனையும்}, வலிமைமிக்கத் தேர் வீரனான பிரத்யும்னனையும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பாதுகாவலர்களாய்க் கொண்டிருந்தும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, எனது மகன்களான யாரும் வெல்லமுடியாத பீமன், புறமுதுகிடாத விஜயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உயிரோடு இருந்தும், நான் இத்தகு துயரைத் தாங்க வேண்டியிருப்பது நிச்சயம் விசித்திரமாகவே இருக்கிறது!" என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி அவளால் {குந்தியால்} சொல்லப்பட்டதும், பார்த்தனின் {அர்ஜுனனின்} நண்பனான சௌரி {கிருஷ்ணன்}, தன் மகன்களைக் குறித்த துயரில் பாதிக்கப்பட்டிருந்த தனது அத்தை {தந்தையின் சகோதரி} பிருதையைத் {குந்தியைத்} தேற்றினான். மேலும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஓ! அத்தை {குந்தி}, உன்னைப் போன்ற எந்தப் பெண் இந்த உலகில் இருக்கிறாள்? மன்னன் சூரசேனருக்கு மகளான நீ, திருமணத்தால் அஜமீட குலத்தை {குருகுலத்தை} அடைந்தாய். உயர்ந்த பிறப்பும், உயர்ந்த மணமும் கொண்ட நீ, ஒரு பெரிய தடாகத்தில் இருந்து மற்றொரு பெரிய தடாகத்திற்கு மாற்றப்பட்ட தாமரையைப் போன்றவளாவாய்.

செழிப்புகள் அனைத்தையும், பெரும் நற்பேறையும் பெற்ற நீ, உனது கணவரால் {பாண்டுவால்} வணங்கப்பட்டாய். அறங்கள் அனைத்தையும், பெரும் அறிவையும் உடைய நீ, இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்வதே உனக்குத் தகும். உறக்கம், தளர்வு, கோபம், மகிழ்ச்சி, பசி, தாகம், குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றில் இருந்து மீண்ட உனது பிள்ளைகள், வீரர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். பெரும் முயற்சியும், பெரும் பலமும் கொண்ட உனது மகன்கள், தாழ்ந்த மற்றும் சராசரியானவர்களுக்கு மட்டுமே மனநிறைவைத் தருகின்றதும், புலன்களால் பெறப்படுவதுமான வசதிகளால் பாதிக்கப்படாமல், வீரர்களுக்குத் தகுந்த இன்பத்தை எப்போதும் தொடர்ந்து செல்கிறார்கள். அதே போலச் சராசரி ஆசைகளைக் கொண்ட சிறிய மனிதர்களைப் போல, அவர்கள் மனநிறைவை அடைவதில்லை.

மகிழ்ச்சிகரமானதையும், துன்பகரமானதையும், அறிவுடையோர், அதே இன்பத்துடனோ துன்பத்துடனோ பெற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், குறைந்த அல்லது சராசரி மனிதர்களை மனநிறைவு கொள்ளச் செய்யும் வசதிகளால் பாதிக்கப்பட்டு, எந்த வகையான உற்சாகமும் அற்ற மந்த நிலைக்கு இணையான நிலையையே சாதாரண மனிதர்கள் விரும்புகின்றனர். எனினும், மேன்மையானவர்களோ, மனித துயரங்களில் தீவிரமானதையோ, அல்லது, மனிதனுக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சிகள் அனைத்திலும் உயர்ந்ததையோ தான் விரும்புகிறார்கள். அறிவுடையோர் எல்லை கடந்தவற்றிலேயே {அதீத [தீவிர] நிலைகளிலே} இன்புறுகின்றனர். இடைநிலைகளில் அவர்கள் இன்பத்தைக் காண்பதில்லை; எல்லை கடந்தவற்றையே {அதீதமான இரு நிலைகளையே} அவர்கள் இன்பமாகக் கருதுகிறார்கள். அதே வேளையில், {இரு நிலைகளுக்கும்} இடைநிலையைத் {அதீத நிலை இரண்டுக்கும் நடுவில் இருப்பதைத்} துயரமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள் என் மூலமாக உன்னை வணங்குகிறார்கள். தாங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லி, உனது நலத்தை விசாரிக்கிறார்கள். தங்கள் எதிரியைக் கொன்று, செழிப்பை முதலீடாக்கிக் கொண்டு, முழு உலகத்தின் தலைவர்களாக அவர்களை {பாண்டவர்களை} நீ விரைவில் காண்பாய்", என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிக் கிருஷ்ணனால் தேற்றப்பட்டவளும், தன் மகன்கள் குறித்த துயரத்தால் பாதிக்கப்பட்டவளுமான குந்தி, தனது புரிதலை தற்காலிகமாக இழந்திருந்ததால் விளைந்த இருளை விரைவாக அகற்றி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எதைச் செய்வது முறையானது என்று நீ கருதுகிறாயோ, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, சிறு கபடமும் இல்லாமல், நீதியைத் தியாகம் செய்யாமல் அது செய்யப்படட்டும். ஓ! கிருஷ்ணா, உனது உண்மை {சத்தியம்} மற்றும் உனது பரம்பரையின் பலம் என்ன என்பதை நான் அறிவேன். உனது நண்பர்கள் சம்பந்தமானவற்றைச் செய்து முடிக்க, என்ன தீர்ப்பையும், என்ன ஆற்றலையும் நீ வெளிப்படுத்துவாய் என்பதையும் நான் அறிவேன். எங்கள் குலத்தில், நீயே அறம் {தர்மம்}, நீயே உண்மை {சத்தியம்}, நீயே தவத்துறவுகளின் உருவகமும் ஆவாய். நீயே அந்தப் பெரும் பிரம்மம், அனைத்தும் உன் மீதே இருக்கின்றன. எனவே, நீ சொன்னது அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வலம் வந்து, அவளிடம் பிரியாவிடை பெற்றவனும் வலிய கரங்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, {அங்கிருந்து} துரியோதனனின் மாளிகைக்குப் புறப்பட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்