Friday, May 15, 2015

விதுரனின் அன்பு ! - உத்யோக பர்வம் பகுதி 92

The love of Vidura! | Udyoga Parva - Section 92 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –21)

பதிவின் சுருக்கம் : திரண்டிருக்கும் படைகளால் செருக்குற்றிருக்கும் துரியோதனன் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்க மாட்டான் என்றும்; கிருஷ்ணனின் வருகையைத் திட்டமிடப்படாத ஒன்றாகத் தான் கருதுவதாகவும், கௌரவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணன் செல்லாதிருப்பதே நலம் என்றும் விதுரன் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கேசவன் {கிருஷ்ணன்} (உணவு)உண்டு புத்துணர்ச்சி பெற்றதும், இரவில், விதுரன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த உனது வருகை நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இல்லை. ஏனெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டின் விதிகளையும் மீறுபவனாவான். புகழை விரும்புபவனாக இருப்பினும், தீயவனாகவும், கோபம் நிறைந்தவனாகவும் இருந்து கொண்டு, பிறரை அவமித்து வருகிறான். முதியோர் கட்டளைகளுக்கு அவன் {துரியோதனன்} கீழ்ப்படிவதில்லை.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்}, சாத்திரங்களை மீறுபவனும், அறியாமை கொண்ட தீய ஆன்மா கொண்டவனும், ஏற்கனவே விதியில் மூழ்கியவனும், எளிதில் வசப்படுத்த முடியாதவனும், அவனுக்கு நன்மை செய்ய முயல்பவர்களுக்குத் தீமை செய்யும் மனநிலை கொண்டவனும் ஆவான். அவனின் {துரியோதனனின்} ஆன்மா, ஆசையாலும் காமத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவன் {துரியோதனன்} தன்னைத்தானே அறிஞன் என மூடத்தனத்தால் கருதிக் கொள்கிறான். உண்மையான தனது நண்பர்கள் அனைவருக்கும் அவன் எதிரியாக இருக்கிறான். எப்போதும் சந்தேகத்துடன், தனது ஆன்மா மீது எவ்விதக் கட்டுபாடுமின்றி, நன்றி கெட்டவனாகி, அறம் அனைத்தையும் கைவிட்ட அவன் {துரியோதனன்}, இப்போது பாவத்துடன் காதலில் இருக்கிறான்.


பண்படுத்தப்படாத புரிதலைக் கொண்ட மூடனான அவன் {துரியோதனன்}, புலன்களுக்கு அடிமையாய், காமம் மற்றும் பேராசையின் தூண்டுதலுக்கு எப்போதும் அடிபணிந்தவனாய், செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு செயலிலும் தயக்கம் உள்ளவனாய் இருக்கிறான். இவற்றையும், இன்னும் பல தீமைகளையும் அவன் {துரியோதனன்} கொண்டிருக்கிறான். அவனுக்கு நன்மை யாதென நீ சுட்டிக் காட்டினாலும், செருக்காலும் கோபத்தாலும் அவன் அவற்றை அலட்சியப்படுத்துவான்.

பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன் ஆகியோரிடம் அவன் {துரியோதனன்} பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சமாதானத்தில் தன் இதயத்தை அவன் செலுத்தவில்லை. கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் {கௌரவர்கள்}, 'பீஷ்மர், துரோணர் மற்றும் பிற வீரர்களைப் பாண்டவர்களால் {எதிர்த்துப்} பார்க்கக்கூட இயலாது எனும் போது, அவர்களுடன் {இந்த கௌரவர்களுடன்} அவர்கள் {அந்த பாண்டவர்கள்} போரிடுவதைக் குறித்து என்ன சொல்வது' என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள். மட்டுப்பட்ட பார்வை கொண்டவனான முட்டாள் துரியோதனன், ஒரு பெரிய படையைக் கூட்டிவிட்டதால், தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறான்.

அவனது {துரியோதனனின்} எதிரிகளை, கர்ணன், தனியாளவே வெல்லத் தகுந்தவன் என்ற தீர்மானத்திற்குத் திருதராஷ்டிரரின் முட்டாள் மகன் {துரியோதனன்} வந்திருக்கிறான். எனவே, அவன் {துரியோதனன்} சமாதானத்திற்கு உடன்படமாட்டான்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீயோ இருதரப்புக்கும் இடையில் சமாதானத்தையும், சகோதர உணர்வுகளையும் நிறுவ விரும்புகிறாய். உண்மையில், பாண்டவர்களுக்கு உரிமையிருந்தாலும் கூட, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு அவர்களது பங்கைக்} கொடுப்பதில்லை என்ற முடிவுக்குத் திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் வந்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வாயாக. அப்படிப்பட்ட தீர்மானத்துடன் இருக்கும் அவர்களிடம் {கௌரவர்களிடம்} உனது வார்த்தைகள் வீணாவது நிச்சயம். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கே நல்ல வார்த்தைகளுக்கும், தீய வார்த்தைகளுக்கும் ஒரே விளைவு இருக்கிறதோ, அங்கே, காது கேளாதவன் முன்பு பாடுபவன் போல, அறிவுள்ள ஒரு மனிதன், தனது மூச்சைக்கூட வீணாக்க மாட்டான்.

சண்டாளர்கள் கூட்டத்திற்கு முன்பான ஓர் அந்தணன் போல, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறியாமைகொண்டவர்களும், இழிந்தவர்களும், தீயவர்களும், மதிப்புக்குரிய அனைவரையும் மதிக்காதவர்களுமான அவர்களுக்கு மத்தியில் உனது வார்த்தைகளுக்கு மரியாதை இருக்காது. அவனிடம் நீ எந்த வார்த்தைகளைப் பேசினாலும் அது முற்றிலும் பலனற்றதாகவே இருக்கும். ஓ! கிருஷ்ணா, தீய மனம் கொண்ட இந்த இழிந்தவர்களுக்கு மத்தியில் அவர்களுடன் ஒன்றாக நீ அமர்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஓ! கிருஷ்ணா, எண்ணிக்கையில் வலுவாக, நீதியற்றவர்களாக, மூடர்களாக, தீய ஆன்மா கொண்டவர்களாக இருக்கும் அவர்களை {கௌரவர்களை} எதிர்த்து அங்கே நீ பேசப்போவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.

அவர்கள் முதியோரை வழிபடாததன் விளைவாகவும், செழிப்பு, செருக்கு ஆகியவற்றால் குருடானதன் விளைவாகவும், இளமையின் செருக்கு மற்றும் கோபத்தாலும், அவர்களுக்கு முன்னிலையில் நீ வைக்கப் போகும் நல்ல அறிவுரையை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்} பலமான படையைத் திரட்டியிருக்கிறான். மேலும், அவன் {துரியோதனன்} உன்மீது சந்தேகம் கொண்டிருக்கிறான். எனவே, அவன் உனது எந்த ஆலோசனைக்கும் கீழ்ப்படியவே மாட்டான்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தற்போதைய நிலையில், இந்திரன் தலைமையிலான தேவர்களே வந்தாலும், போர்க்களத்தில் தங்களை வீழ்த்த முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில் திருதராஷ்டிரர் மகன்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். எப்போதும் விளைவுகளை உண்டாக்கும் உனது வார்த்தைகள், இது போன்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டவர்களிடமும், காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதல்களை எப்போதும் பின்பற்றுபவர்களிடமும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தனது யானைப் படை, தேர்ப்படை மற்றும் வீரமிகுந்த காலாட்படை ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் மூடனான தீய துரியோதனன், அச்சங்கள் அனைத்தும் விலகிய நிலையில், முழு உலகமும் ஏற்கனவே தன்னால் அடக்கப்பட்டதாகக் கருதுகிறான். உண்மையில், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எந்த எதிரிகளும் அற்ற பரந்த பேரரசுக்காகப் பேராசைப் படுகிறான். எனவே, அவனிடம் சமாதானம் கொள்வது என்பது அடையப்பட முடியாதது ஆகும்.

தன் உடைமையாக இருக்கும் அனைத்தும் மாற்றமில்லாமல் தனதே என அவன் {துரியோதனன்} கருதுகிறான். ஐயோ, துரியோதனனுக்காகப் பூமியில் ஏற்படப்போகும் அழிவு அருகிலிருப்பதாகத் தெரிகிறதே. ஏனெனில், க்ஷத்திரிய வீரர்கள் அனைவருடன் கூடிய பூமியின் மன்னர்கள், விதியால் உந்தப்பட்டு, பாண்டவர்களுடன் போரிட விரும்பி ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த மன்னர்கள் அனைவரும் உன்னுடன் பகை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, அவர்கள் அனைவரும் உன்னால் தங்கள் உடைமைகளை இழந்தவர்களாகவும் இருக்கின்றர். உன்னிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்த வீர ஏகாதிபதிகள் அனைவரும் கர்ணனுடன் சேர்ந்து கொண்டு, திருதராஷ்டிரன் மகன்களுடன் {கௌரவர்களுடன்} ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றனர். தங்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனுடன் இணைந்திருக்கின்றனர்.

ஓ! தாசார்ஹ குலத்து வீரா {கிருஷ்ணா}, அவர்களுக்கு மத்தியில் நீ நுழைவது மெச்சத்தகுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, தீய ஆன்மாக்களைக் கொண்ட எண்ணற்ற உனது எதிரிகள் ஒன்றாக அமர்ந்திருக்கையில், அவர்களுக்கு மத்தியில் நீ எப்படிச் செல்வாய்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உண்மையில், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவன் நீ என்பதையும், ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, உனது ஆண்மை மற்றும் புத்திக்கூர்மையையும் நான் அறிவேன். ஓ! மாதவா {கிருஷ்ண}, உன்னிடம் நான் கொண்ட அன்பானது, பாண்டுவின் மகன்களிடம் நான் கொண்டிருப்பதற்கு ஈடானதாகும். எனவே, நட்பு, மரியாதை மற்றும் எனது பாசத்தினாலேயே நான் இந்த வார்த்தைகளை உனக்குச் சொல்கிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே {கிருஷ்ணா}, உடல்படைத்த அனைத்து உயிர்களின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கும் உன்னைக் காண்பதில் நான் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்ன தேவைதான் இருக்கிறது?" என்றான் {விதுரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்