Friday, May 15, 2015

என்னைக் காயப்படுத்த முயன்றால்!" கிருஷ்ணன் ! - உத்யோக பர்வம் பகுதி 93

"If they seek to injure me!" said Krishna! | Udyoga Parva - Section 93 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –22)

பதிவின் சுருக்கம் : விதுரன் சொன்னதைப் புகழ்ந்த கிருஷ்ணன், தான் ஹஸ்தினாபுரம் வந்த நோக்கத்தைச் சொன்னது; சமாதானம் ஏற்பட்டால் புண்ணியம் கிட்டும், ஏற்படாவிட்டால் மனசாட்சிக்கு நிறைவேற்படும் என்று சொன்ன கிருஷ்ணன்...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் விதுரனிடம்} சொன்னான், "உண்மையில், பெரும் ஞானம் கொண்டவர் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், பெரும் முன்னறிவு கொண்டவர் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், உம்மைப் போன்ற ஒருவன், என்னைப் போன்ற நண்பனுக்குச் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை நன்கு அறிந்த உம்மால் சொல்லத்தகுந்ததே அஃது; ஓ! விதுரரே, எனக்குத் தந்தையும் தாயும் போன்ற உம்மால் சொல்லத்தகுந்ததே அஃது. நீர் என்னிடம் கூறியது நிச்சயம் உண்மையானது; பாராட்டுக்குத் தகுதியானது; மற்றும் அறிவுக்கு இசைவானது. எனினும், ஓ! விதுரரே, நான் வந்ததற்கான காரணத்தைக் கவனமாகக் கேளும்.


ஓ! விதுரரே, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} தீய தன்மையையும், அவன் தரப்பை அடைந்திருக்கும் க்ஷத்திரியர்களின் பகையையும் நன்கு அறிந்தே குருக்களிடம் நான் வந்திருக்கிறேன். யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளுடன் கூடிய முழு உலகமும் பேராபத்தில் மூழ்கி மரணவலைக்குள் அகப்படுவதில் இருந்து அதை விடுவிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவான். ஓர் அறச்செயலைச் செய்யத் தன் திறமைகளில் சிறந்தவற்றால் {இயன்றவரை} முயன்று, ஒரு மனிதன் தோற்றாலும், ஒருபுறம் அது தோல்வியாக இருந்தாலும், அந்தச் செயல் ஈட்டிய தகுதி {புண்ணியம்} அவனுடையதாகிறது, என்பதில் சிறு ஐயத்தையும் நான் கொள்ளவில்லை. ஒரு மனிதன் பாவம்நிறைந்த ஒரு செயலைச் செய்ய மனதில் நினைத்திருந்தாலும், அவன் அதை உண்மையில் செய்யவில்லையென்றால், அந்தச் செயலின் கெட்ட தகுதி {பாவம்} அவனுடையதாகாது என்பதைச் சாத்திரம் மற்றும் அறம் ஆகியவற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.

ஓ! விதுரரே, போரில் கொல்லப்படப்போகும் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டுவர நான் உள்ளப்பூர்வமாக முயல்வேன். (அவர்கள் அனைவருக்கும் மேல் தொங்கிக் கொண்டிருக்கும்) பயங்கரமான பேராபத்து, குருக்களின் நடத்தையில்தான் தன் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், துரியோதனன் மற்றும் கர்ணன் ஆகியோரின் நேரடி செயல்பாட்டின் காரணமாகவே, இந்த இருவரின் தலைமையில் பிற க்ஷத்திரியர்கள் அதைப் {அந்தப் பேராபத்தைப்} பின்தொடர்கிறார்கள். ஆபத்தில் மூழ்கப்போகும் ஒரு நண்பனைத் தனது வேண்டுதலின் மூலம் காக்க முயலாத ஒருவனை, இழிந்தவனாகவே கற்றோர் கருதுகின்றனர். தனது வலிமையில் சிறந்ததால் {இயன்றவரை} முயன்று, தன் நண்பனின் முடியைப் பற்றி இழுக்கும் அளவுக்குச் சென்றாவது, முறையற்ற செயலில் இருந்து அந்த நண்பனை விலகச்செய்ய முயல வேண்டும். இப்படி ஒருவன் {அந்த மனிதன்} செயல்படும்போது, அவனுக்குப் பழி நேராமல், புகழை அறுவடை செய்கிறான்.

எனவே, ஓ! விதுரரே, அறம் மற்றும் பொருளுக்கு ஏற்புடையதும், தற்போதைய பேரிடரை விலக்கவல்லதுமான நன்மையை விளைவிப்பதுமான எனது நல்ல ஆலோசனைகளைத் தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து ஏற்பதே திருதராஷ்டிரர் மகனுக்குத் {துரியோதனனுக்குத்} தகும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களுக்கும், பாண்டவர்களுக்கும், பூமியில் உள்ள அனைத்து மன்னர்களுக்கும் நன்மையைக் கொண்டு வரவே நான் உள்ளப்பூர்வமாக முயற்சி செய்வேன். (எனது நண்பர்களுக்கான) நன்மையைக் கொண்டுவர நான் முயலும்போது, துரியோதனன் என்னைத் தவறாக எடுத்துக் கொண்டால், நான் எனது மனசாட்சிக்கு நிறைவுடன் இருப்பேன். உறவினர்களுக்கிடையில் சச்சரவு உண்டாகும்போது, இடைநிலை வேலைகளை {மத்தியஸ்த வேலைகளை} ஏற்பவனே உண்மையான நண்பனாவான்.

நீதியற்றவர்களும், மூடர்களும், பகையாளர்களுமான அவர்கள் {கௌரவர்கள்}, 'கோபக்கார குருக்களும், பாண்டவர்களும், தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்வதைத் தடுக்கத் தன்னால் {கிருஷ்ணனால்} முடியுமென்றாலும், கிருஷ்ணன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை' என்று பின்னர்ச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உண்மையில், இருதரப்புக்கும் உதவி செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். சமாதானத்தைக் கொண்டுவர நான் முயற்சி செய்வதால், நான் மன்னர்கள் அனைவரின் நிந்தனையில் இருந்து தப்புவேன்.

அறம் மற்றும் பொருள் நிறைந்த எனது மங்கலகரமான வார்த்தைகளைக் கேட்ட பிறகும், மூடனான துரியோதனன் அதை ஏற்கவில்லையென்றால், அவன் {துரியோதனன்} தன் விதியையே {மரணத்தையே} அழைத்துக் கொள்வான். ஓ! உயர்ந்த ஆன்மா கொண்டவரே {விதுரரே}, பாண்டவர்களின் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல், என்னால் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சமாதானத்தை உண்டாக்க முடியுமென்றால், எனது நடத்தை உயர்ந்த தகுதியைப் {புண்ணியத்தைப்} பெற்றதாகக் கருதப்படும், கௌரவர்களும் மரண வலைகளில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

கெடுதியில்லாததும், நீதிக்கு இசைவானதும், அறிவு நிறைந்ததுமான நான் சொல்லப்போகும் வார்த்தைகளைத் திருதராஷ்டிரர் மகன்கள் கவனமாகக் கேட்டால், எனது நோக்கமான சமாதானம் எட்டப்படும். (அதற்குத் தூதனாக இருந்த) என்னைக் கௌரவர்கள் வழிபடுவார்கள். மறுபுறம், அவர்கள் {கௌரவர்கள்} எனக்குக் காயமேற்படுத்த முயன்றால், பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் ஒன்றாகக் கூடி வந்தாலும், கோபமடைந்திருக்கும் சிங்கத்திற்கு முன் நிற்க இயலாத மான் கூட்டம் போல, அவர்கள் எனக்கு ஈடாக இருக்கமாட்டார்கள் என்பதை நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "யாதவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விருஷ்ணி குலத்துக் காளை {கிருஷ்ணன்} இவ்வாறு சொல்லிவிட்டு, தனது மென்மையான படுக்கையில் உறங்குவதற்காகப் படுத்தான்."

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்