Tuesday, May 19, 2015

பாதாளத்தில் இருக்கும் முட்டை! - உத்யோக பர்வம் பகுதி 99

An egg in Patala! | Udyoga Parva - Section 99 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –28)

பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் பாதாளம் என்ற நகரைச் சுற்றிக் காட்டி விளக்குவது; அசுர நெருப்பு, ஹயக்ரீவன் எழுச்சி, பாதாளத்தில் இருக்கும் உயிரினங்கள், மழை உண்டாகும் விதம், யானைகளின் தோற்றம், கோ எனும் நோன்பு, பிரளயத்தின் போது அண்டத்தை அழிக்கக் காரணமாகும் முட்டை ஆகியவற்றைக் குறித்து மாதலியிடம் நாரதர் விளக்குவது...

நாரதர் {இந்திரனின் தேரோட்டி மாதலியிடம்} தொடர்ந்தார், "இங்கே, இந்த நாகர்கள் உலகத்தின் மத்தியிலே பாதாளம் என்ற பெயரில் அறியப்படும் ஒரு நகரம் அமைந்திருக்கிறது. அண்டம் அனைத்திலும் கொண்டாடப்படும் அது, தைத்தியர்களாலும், தானவர்களாலும் வழிபடப்படுகிறது. பூமியில் வாழும் உயிரினங்கள், நீரோட்டத்தின் வலிமையால் இங்கே அடித்துவரப்பட்டால், உரக்க அலறி பயத்தால் பீடிக்கப்படுகின்றன.

இங்கே அசுர நெருப்பு [1] என்ற பெயரால் அறியப்படுவதும், நீரால் மூட்டப்படுவதுமான நெருப்பு, தொடர்ந்து சுடர்விட்டு எரிகிறது. தேவர்களின் தளத்தால் நன்றாகப் பற்றப்பட்டுள்ளதால், கட்டுப்படுத்தப்பட்டு, தான் அடக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அது {அசுர நெருப்பு} அசையாமல் இருக்கிறது. இங்கேதான் தேவர்கள் முதலில் தங்கள் எதிரிகளை வீழ்த்தி, அமிர்தத்தைக் குடித்து, எச்சங்களை வைத்தனர்.


[1] வடவா நெருப்பு என்றும் இஃது அழைக்கப்படும் என்று கங்குலி சொல்கிறார். அசுரஜாதியான அக்னி என்று வேறு ஒரு பதிப்புக் கூறுகிறது.

இந்த இடத்தில் இருந்துதான் நிலவின் தேய்வும், வளர்ச்சியும் {க்ஷயமும் விருத்தியும்} காணப்படுகிறது [2]. ஒவ்வொரு மங்கலகராமன சந்தர்ப்பங்களிலும் மீண்டும் தோன்றும் குதிரைத்தலையன் (விஷ்ணு) {ஹயக்ரீவன்}, சுவர்ணன் [3] {ஆதித்தியன்} என்றும் அழைக்கப்படும் வேத பாடல்கள் மற்றும் மந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஒலியுடன் அண்டத்தை நிரப்பிக் கொண்டு இங்குதான் எழுகிறான். நீர் வடிவங்களான சந்திரன் முதலியவையும், பிறவும் தங்கள் நீரை இந்தப் பகுதியில் பொழிவதால் இந்த அற்புத இடம் பாதாளம் என்று அழைக்கப்படுகிறது [4].
[2] //பந்துவடிவிலான பூமியைச் சுற்றிவருகிற சூரியனும், சந்திரனும் பூமியின் ஒரு புறத்தால் மறைக்கப்படுவதால், சில சமயங்களில் அவை மனிதர்களின் கண்களுக்குத் தெரியாமல் போகின்றன. சூரியன் தெரியாத போது, பூமியின் ஒரு புறத்தில் இருப்பவர்களுக்கு அந்தப்பொழுது இரவாகிறது. பூமிப்பந்தின் உச்சியிலும் அடியிலுமிருப்பவர்கள் எப்பொழுதுமே சூரியன் முதலானவற்றைப் பார்க்கிறார்கள். அங்கே நீர்மயமாக இருக்கும் சந்திரமண்டலம் ஒளிவடிவமாக இருக்கும் சூரியனின் கதிர்களால் ஒளியூட்டப்படுகிறது. அவற்றுக்கும் {பூமிப்பந்தின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றிற்கும்}, சந்திரனுக்கும் எவ்வளவு தூரமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாகச் சந்திரன் பிரகாசிக்கிறான். எவ்வளவு நெருக்கமிருக்கிறதோ அவ்வளவு சந்திரன் மறைக்கப்படுகிறான். இதனால்தான், "முதல் கலையை அக்னி பருகுகிறது, இரண்டாவது கலையைச் சூரியன் பருகுகிறது" என்ற சாத்திரம் உண்டானது. இங்கு, பருகுதல் என்பது எதிரில் இருப்பதால் நிறைவடைகிறது என்ற பொருளைத் தரும். பூமியின் அடியில் இருப்பவர்களுக்கும், மேருவின் உச்சியில் இருப்பவர்களைப் போலவே, எப்போதும் சந்திரன் முழுமையாகவே தெரிகிறான். அவர்கள் பார்க்கும் இடத்தில் அக்னியால் மறைவு ஏற்படுவதில்லை.// என்று இந்த இடத்தில் பண்டிதர்களால் விளக்கம் கொடுக்கப்படுகிறது. இங்குப் பூமியைச் சூரியன் சுற்றுகிறது என்பது பூமியில் இருந்து அவற்றைப் பார்க்கும் பார்வையால் ஏற்படுகிறது எனக் கொள்க.

[3] //நீலகண்டன் அவர்கள் சுவர்ணாக்யம் ஜகத் {suvarnakhyam Jagat} என்பதை வேத பிராஞ்சம் {Veda prancha} என்று விளக்குகிறார். அஃதாவது, அனைத்து உள்ளடக்கங்களுடன் கூடிய முழுமையான வேதங்களே அஃது என்று நீலகண்டன் சொல்கிறார். நீலகண்டனைப் பொறுத்தவரை, மேற்கண்ட அந்தப் பத்தியின் பொருள், "அந்தணர்களால் ஓதப்படும் வேதக்குறிப்புகளை, விஷ்ணுவின் அந்த ஹயக்கிரீவத் தோற்றத்தில் தன் சொந்தக் குரலிலேயே அதிகரிக்கிறார்" என்பது ஆகும்// என்று கங்குலி சொல்கிறார்.

விஷ்ணுவே, தெய்வீக உருவமான ஹயக்ரீவர் உருவத்தில், வேத வாக்குகளால் உலகத்தை நிரப்பிக் கொண்டு, யுகம் மறைந்து தோன்றும் சந்தி காலங்களில் {சூரியனாக} அவதரிக்கிறார் என்பதே இங்குப் பொருள்.

[4] //பாதௌதி ஜலம் ஸ்ரவந்திதி பாதாளம் {Patauti Jalam sravantiti patalam} என்று நீலகண்டர் சொல்வதாககங்குலி சொல்கிறார்.// சந்திரனின் ஈர்ப்பைப் போல, அங்கே நீர் பெருக்குகிறது. எனவே, "பதஜ்ஜல" என்பது "பாதாள" என்று ஆனது என்றும் பண்டிதர்கள் விளக்கம் சொல்கிறார்கள். "அலம்" என்றால் "மிகுதி" என்றும் "பாத" என்றால் "விழுகின்றன" என்றும் பொருளைத் தருமாம். எனவே, "பாதாளம்" என்றால் "மிகுதியாக விழுவது", அதாவது "மிகுதியாக விழும் நீரைக் கொண்ட இடம்" என்றும் பொருள் கொள்ளலாம்.

அண்டத்தின் நன்மைக்காக, தெய்வீக யானையான ஐராவதம், இங்கிருந்துதான் குளிர்ந்த நீரை எடுத்து மேகங்களுக்குள் செலுத்துகிறது. அந்த நீரையே இந்திரன் மழையாகப் பொழிகிறான். இங்கே, சந்திரனின் கதிர்களால் வாழும், திமிகள் {Timi} மற்றும் பல்வேறு வடிவங்களிலான பல்வேறு வகைகளைச் சார்ந்த நீர் விலங்குகள் பிறவும் வசிக்கின்றன. ஓ! தேரோட்டி {மாதலி}, இந்த இடத்தில், பகலில், சூரியனின் கதிர்களால் துளைக்கப்பட்டு இறக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இரவில் மீண்டும் பிழைக்கின்றன. இந்த இடத்தில் சந்திரன் எந்நாளும் உதித்து, தனது கதிர்கள் எனும் கரங்களில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு, இறந்து கிடக்கும் அவ்வுயிரினங்களைத் தொடுவதே அதற்குக் {இறந்த உயிரினங்கள் பிழைப்பதற்குக்} காரணமாகும்.

வாசவனால் {இந்திரனால்} தங்கள் செழிப்பை இழந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களுமான பல தானவர்கள், அவனால் {இந்திரனால்} வீழ்த்தப்பட்டு, காலத்தால் பீடிக்கப்பட்டு, இங்கே தான் அடைந்திருந்தார்கள். இங்கேதான், உயிரினங்களின் தலைவனும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெரும் ஆசானுமான {பூதபதியுமான} மகாதேவன் {சிவன்}, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகக் கடுந்தவத்தைப் பயின்றான்.

"கோ" என்று அழைக்கப்படும் நோன்புகளை நோற்பவர்களும், வேதம் ஓதுதல் மற்றும் வேத கல்வி ஆகியவற்றால் உடல் மெலிந்திருப்பவர்களும், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றை விட்டு, தங்கள் தவங்களின் சக்தியால் சொர்க்கத்தை அடைந்தவர்களுமான மறுபிறப்பாளப் {பிராமண} பெருமுனிவர்கள் பலர் இங்கே வசிக்கின்றனர். கிடைத்த இடத்தில் உறங்கி, தனக்கு முன்பு பிறர் வைக்கும் எதையும் உண்டு, பிறர் தரும் ஆடைகளை உடுத்திக் கொண்டு வாழும் ஒரு மனிதன், "கோ" எனும் நோன்பைப் பின்பற்றும் ஒருவனாகச் சொல்லப்படுகிறான்.

ஐராவதம், வாமனம், குமுதம், தனது குலத்தின் முதல் மன்னனான அஞ்சனம் என்ற யானைகளில் சிறந்த யானைகள், கொண்டாடப்படும் யானையான சுப்ரதிகாவின் குலத்தில் இங்கேதான் பிறந்தன.

ஓ! மாதலி, மேன்மையான தகுதிகளால் தனித்துவமான ஏதாவது மணமகன் இங்கிருக்கிறானா என்று பார். அப்படியிருப்பின், உனது மகளை {குணகேசியை} ஏற்குமாறு வேண்டி நான் அவனிடம் மரியாதையுடன் செல்வேன்.

இந்த நீரில் சுடர்மிகும் அழகோடு கூடிய முட்டை ஒன்று கிடப்பதைப் பார். படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே இஃது {இந்த முட்டை} இங்கிருக்கிறது. இஃது அசைவதுமில்லை, வெடிப்பதுமில்லை. அதன் தோற்றம் அல்லது இயல்பு குறித்து யாரும் பேசுவதை நான் கேட்டதில்லை. இதன் தந்தை மற்றும் தாய் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள். ஓ! மாதலி, உலகின் முடிவு வரும்போது, பலமிக்க நெருப்பு அதனுள் இருந்து வெடித்துப் பரவி, அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் கொண்ட மூன்று உலகங்களையும் அஃது {இந்த முட்டை}  எரிக்கும் என்று சொல்லப்படுகிறது" என்றார் {நாரதர்}.

நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட மாதலி, அவரிடம், "தகுதி உடைய எவரும் இங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வோமாக" என்றான் {மாதலி}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்